NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Wednesday, August 30, 2017

குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு ஒரு மடல்: கொஞ்சம் அழுகையை நிறுத்துங்கள் குர்மீத் சிங்


அசைக்க முடியாத உங்கள் செல்வாக்கு, சங்பரிவார் அமைப்பை செயலிழக்கச் செய்தது. அதன் அரசியல் பிரிவு பாஜக ஹரியாணாவில் முற்றிலும் செயலிழந்து போனது. லட்சக்கணக்கான உங்கள் அபிமானத்துக்குரிய வன்முறையாளார்கள் வீதிகள் இறங்கி பேயாட்டம் போட்டனர். அப்பாவி மனித உயிர்களைப் பறித்தனர். விலைமதிப்பற்ற நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடினர். தீக்கிரையாக்கினர். சட்டம், ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து போன நேரம் அது... ஒரு குஜராத்தைப் போல..! >>> இக்வான் அமீர் <<<
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

குர்மீத் ராம், ரஹீம் சிங்குக்கு,

முதலில் கொஞ்சம் அழுகையை நிறுத்துங்கள் குர்மீத். ஏனெனில் இறைவனின் திருசந்நிதியில் உங்கள் தவறுகளை முன்வைத்து பாவமன்னிப்பு கேட்டு அழ மிச்சம் மீதி இருக்கும் கண்ணீர் துளிகள் உங்களுக்கு உதவலாம்.

ஆஹா..! அந்தக் காட்சியை நான் என்னவென்பேன்? குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி கேட்டு நீதிபதியிடம் நீங்கள் கெஞ்சியதும், சிறைவளாகத்திலேயே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நீதிமன்றத்தைவிட்டு வெளியேறாமல் ஒரு குழந்தையைப் போல அடம் பிடித்து அழுததும் எப்படி மறக்க முடியும்? நீங்கள் ஒரு போலியான ஆன்மிகவாதி என்று உங்கள் முகத்திரையை விலகிய நிமிடங்கள் அல்லவா அவை..!

நீங்கள் கடவுளாகக் காட்டி அபலைப் பெண்களை உங்கள் உடற்பசிக்கு இரையாக்கிக் கொண்டது கடைசியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பலப்பட்டது.

கடவுள் ஒருபோதும் பலவீனமானவர் அல்ல. குற்றம், குறையுடையோனும் அல்ல என்பதுகூட உங்களுக்கு தெரியவில்லை என்பது எவ்வளவு துரதிஷ்டம்!

ஆண்டான் வெள்ளையனின் சட்டங்களை தூக்கியெறிந்து, ஒருவேளை இந்தியாவிலுள்ள எல்லா மதநம்பிக்கையாளர்களின் சட்டங்களையும் ஒன்று திரட்டி, ஆரோக்கியமான ஒரு அமர்வில், எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமல் பரிசீலித்து தொகுக்கப்படும் பொதுசிவில் சட்டம் அமலில் இருக்குமேயானால், அந்த இஸ்லாமிய சட்டத்தின் உட்பிரிவின்படி இந்நேரம் நீங்கள் உங்கள் கழுத்தைப் பறிக்கொடுக்க வேண்டியிருந்திருக்கும்.

அதனால், தப்பித்தேன் என்று கொஞ்சம் அமைதியாக இருங்கள் குர்மீத்.

உங்கள் ஆசிரமத்தின் பாதாளலோக நிலவறைக்குள் பெண் சீடர்களை மட்டுமே பாதுகாப்புப் பணிகளில் அமர்த்தி கொண்டு அவர்களின் வறுமையையும், அறியாமையையும் மூலதனமாக்கிக் கொண்டு கடவுளின் அவதாரமாக நீங்கள் அரங்கேற்றிய லீலைகளின் இரண்டு அத்தியாயங்கள் இப்போது வெளிப்பட்டுள்ளன. கிருஷ்ணர்-கோபியர் என்றும், ‘மன்னிப்பு’ என்ற பெயரிலும் நீங்கள் துகில் உரித்த பெண்களின் பட்டியல் நீண்ட, நெடியது என்பது நீங்கள் அறிவீர்கள். 15 ஆண்டுகள் நீடித்த வழக்கில் உண்மையின் வீரியம் இப்போதுதான் வெளிப்பட்டிருக்கிறது.

அசைக்க முடியாத உங்கள் செல்வாக்கு, சங்பரிவார் அமைப்பை செயலிழக்கச் செய்தது. அதன் அரசியல் பிரிவு பாஜக ஹரியாணாவில் முற்றிலும் செயலிழந்து போனது. லட்சக்கணக்கான உங்கள் அபிமானத்துக்குரிய வன்முறையாளார்கள் வீதிகள் இறங்கி பேயாட்டம் போட்டனர். அப்பாவி மனித உயிர்களைப் பறித்தனர். விலைமதிப்பற்ற நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடினர். தீக்கிரையாக்கினர். சட்டம், ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து போன நேரம் அது... ஒரு குஜராத்தைப் போல..!

கடைசியில், நீதிமன்றமே களத்தில் இறங்கி, அரசியல் ஆதாயத்துக்காக சரணாகதியா என்று ஹரியாணா மாநில பாஜக அரசை கண்டிக்க வேண்டிய ஒரு சூழலை உருவாக்கிய உங்கள் செல்வாக்கு சாதாரணமானதா குர்மீத்! இதற்கு போய் நீங்கள் அழலாமா..? 
 
 
அதிலும் மாநில பாஜக அரசு கலவரக்காரர்களை அடக்க பின்பற்றிய அணுகுமுறையில்கூட உங்கள் செல்வாக்கல்லவா வெளிப்பட்டது.

கடவுள் குர்மீத் பெயரால் நடைப்பெற்ற கலவரத்தில் 32 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள். ஆனாலும் அவர்கள் அனைவரும் நமது இராணுவமும், காவல்துறையினரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டவர்கள் அல்ல!

வன்முறையாளர்களை நோக்கி திரும்ப வேண்டிய துப்பாக்கிகள் வானத்தை நோக்கியல்லவா திரும்பி சுட்டன.

கலவரத்தில் சிக்கி கொல்லப்பட்ட சாமான்ய மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணம் நீங்களாக இருக்க அதற்கு யார் தண்டனை தருவது குர்மீத்?

நமது மற்றுமோர் மாநில காஷ்மீர் உமர் அப்துல்லாஹ்,

ஹரியாணா வன்முறையாளர்களை இராணுவ ஜீப்பில் கட்டிவைத்து மனிதக் கேடயமாகப் பயன்படுத்திக் கலவரத்தை ஏன் அடக்கவில்லை?

கண்களைத் துளைத்து பார்வையைப் பறிக்கும் குண்டுகளை ஏன் சுடவில்லை?”

– என்றெல்லாம் கேள்வி கேட்கும் அளவுக்கு உங்கள் விசுவாசிகளிடம் பாஜக மென்மையுடன் நடந்து கொண்டது உங்களுக்குத் தெரியாதா?

அட, அதையெல்லாம் விடுங்கள்...

மனதோடு கொஞ்சம், அதுதான் மன்கீபாத்தில், நமது பிரதமர் மோடி சர்க்கார் உங்களைக் குறித்தும், உங்கள் அட்டூழியங்களைக் குறித்தும், உங்களது ஆதரவாளர்களின் வன்முறைகள் குறித்தும் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லையே..! ஒரு இம்மியளவும் கண்டனம் தெரிவிக்கவில்லையே இதெல்லாம் உங்கள் செல்வாக்கின்றி வேறென்ன?

ஓட்டறுவடைக்கு மனித உயிர்கள்தான் உரம் என்பது சங்பரிவார் தத்துவம் என்பதை உல்லாச லோகியான நீங்கள் அறிந்திருக்க நியாமில்லைதான்..!

சகலவசதிகளோடு கூடிய சொகுசு சிறைவாழ்க்கையில் உங்களுக்கு என்னதான் கவலையிருக்கிறது குர்மீத் சிங்?

இந்திய ஜனநாயக அமைப்பில், குற்றவாளிகள் நிரபராதிகளாவதும், நிரபராதிகள் குற்றவாளிகளாக்கப்படுவதும் சகஜம்தானே குர்மீத் சிங்?

நாட்டில் நீதிக்காக ஏங்கும் ஆயிரக்கணக்கான சங்கரராமன்களிருக்க நீங்கள் ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள் குர்மீத் சிங்..?

மறதியுள்ளவர்கள் மிகைத்துப் போன நாட்டில், நீங்கள் மீண்டும் உல்லாச புரியில் உலாவர கொஞ்சம் நாளாகலாம். அதுவரை கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா பாபா?
 
 




Share:

Monday, August 28, 2017

பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை


'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு சிபிஐ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30 லட்சம் அபராதமும் விதித்தது. >>> இக்வான் அமீர் <<< 

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' 

சீக்கிய மதத்தில் ஒரு பிரிவான தேரா சச்சா சவுதாவின் தலைமை ஆசிரமம் ஹரியாணா மாநிலம் சிர்ஸாவில் உள்ளது. அங்கு தங்கியிருந்த 2 பெண் துறவிகளை அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சுமார் 15 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் கடந்த 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்றும் அவருக்கான தண்டனை விவரம் 28-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு ரோட்டக் சிறையில் அடைக்கப்பட்டார்.


குர்மீத் ராம் ரஹீம் சிங் வழக்கைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் இவை:

• தேரா சச்சா சவுதா ஆதரவாளர்கள் ஹரியாணா, பஞ்சாப், டெல்லியில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

• தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பஞ்ச்குலா நீதிமன்ற வளாகம் முன்பு குவிந்திருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தேரா சச்சா ஆதரவாளர்கள் அந்த நகரை சூறையாடினர். அரசு, தனியார் கட்டிங்களையும் வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர்

• தேரா சச்சா சவுதா தலைமை ஆசிரமம் அமைந்துள்ள சிர்ஸா நகரிலும் மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது.

• பஞ்ச்குலாவில் 30 பேரும் சிர்ஸாவில் 8 பேரும் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

• இந்த கலவரத்தைத் தொடர்ந்து ஹரியாணாவில் சிர்ஸா ஆசிரமம் உட்பட பல பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

• பாதுகாப்பு கருதி பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தற்காலிகமாக ரோட்டக் சிறைக்கு மாற்றப்பட்டது.

• நீதிபதி ஜெகதீப் சிங் நேற்று ஹெலிகாப்டர் மூலம் அந்த சிறைக்கு சென்றார். தண்டனை விவரம் தொடர்பாக சிபிஐ மற்றும் பாபா தரப்பினர் தங்கள் வாதங்களை எடுத்துரைக்க தலா 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

• இந்த பாலியல் வழக்கு அரிதினும் அரிதான வழக்கு என்பதால் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ வலியுறுத்தியது.

• பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாபாவின் உடல் நிலை, வயது, சமூக சேவைகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுகோள் விடுத்தார்.

• இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெகதீப் சிங், பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30 லட்சம் அபராதமும் விதித்தார்.

• இரண்டு பலாத்கார வழக்குகள் என்பதால் ஒவ்வொரு வழக்கிற்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

• இந்தத் தொகையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பு இது. ஆயினும் இந்த தீர்ப்பின் நிலைத்த தன்மையும், அரசியல் தலையீடுகளின் வன்மையும், போகப் போகத்தான் தெரியவரும்.


Share:

Friday, August 25, 2017

சிறந்த வீடு எது?

 
ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்தார். “இறைவனின் திருத்தூதரே, நானோ வறிய நிலையில் உள்ளவன். ஆனால், எனது பராமரிப்பில் ஒரு ஆதரவற்ற சிறுவன் உள்ளான். அவனைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவுக்காக அச்சிறுவனின் சொத்தை நான் பயன்படுத்தலாமா?” என்று கேட்டார்~இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
யாரோடெல்லாம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்றொரு வழிகாட்டும் பட்டியலை முன்வைக்கிறது இஸ்லாம். அப்பட்டியலில் முதன்மை இடம் பிடிப்பவர்கள் ஆதரவற்றவர்கள்.

ஆதரவற்றவர்களிடம் மிகச் சிறந்த முறையில் நடந்துகொள்ள வேண்டும். அவர்களிடம் இரக்கம் கொள்ள வேண்டும். தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் நீள்கின்றன. இந்தச் செயல்கள் எல்லாம் மிகத் தூய இறைவணக்கமாகக் கருதப்படும் என்றும் இறைநம்பிக்கையாளர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இத்தகைய நற்பண்புகளை மேற்கொள்ளும் வழிகேடர்கள்கூட நேர்வழி பெற்ற நிலைக்குத் திரும்பிவிடுவார்கள் என்ற ஊக்கமும் தரப்படுகிறது.

ஒருமுறை நபிகளாரின் திருச்சபைக்கு வந்த ஒருவர் தனது கல்நெஞ்சம் குறித்து எடுத்துரைத்து அறிவுரை வேண்டி நின்றார்.

அதற்கு நபிகளார், “சகோதரரே! நீங்கள் உங்கள் இதயத்தை மென்மையானதாக்க விரும்பினால்... அந்த இலக்கை அடைய விரும்பினால்... ஆதரவற்றவர்களிடம் இரக்கத்துடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களின் தலையைக் கருணையோடு நீவிவிடுங்கள். நீங்கள் உண்ணும் உணவை அவர்களுக்குக் கொடுங்கள். உங்கள் இதயம் மென்மையாகிவிடுவதைக் காண்பீர்கள்” என்று அறிவுறுத்தி அனுப்பினார்.

மற்றொரு முறை, ஆதரவற்றவர்கள், தேவையுடையோர் ஆகியோரைப் பராமரிப்பவரும் நானும் சுவனத்தில் அருகருகில் இருப்போம் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக நடுவிரலையும் சுட்டுவிரலையும் உயர்த்திக் காட்டினார். ஆதரவற்றவர்களைப் பராமரிப்பவர்கள் மட்டுமல்லாமல் திக்கற்ற ஏழைகளைப் பராமரிப்பவரும் சுவனத்தில் தன்னோடு இருப்பர் என்பதையும் அப்போது விளக்கினார்.

“ஆதரவற்றவர்களை நல்லமுறையில் பராமரிக்கும் வீடே சிறந்த வீடு. ஆதரவற்றவர்களைத் தீயமுறையில் நடத்தும் வீடே மிக மோசமான வீடு” என்றும் எச்சரிக் கிறார்.

நபிகளார் அடிக்கடி இறைவனின் திருமுன் இப்படி முறையிடுவார் என்கிறது வரலாறு:

“இறைவா! பலவீனர்களின் உரிமைகளைக் கண்ணியத்திற்குரியதாகக் கருதுகிறேன். அருள்புரிவாயாக!” என்கிறார் நபி.

ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்தார். “இறைவனின் திருத்தூதரே, நானோ வறிய நிலையில் உள்ளவன். ஆனால், எனது பராமரிப்பில் ஒரு ஆதரவற்ற சிறுவன் உள்ளான். அவனைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவுக்காக அச்சிறுவனின் சொத்தை நான் பயன்படுத்தலாமா?” என்று கேட்டார்.

அதற்கு நபிகளார், “சகோதரரே! தங்கள் ஏழ்மைநிலையைக் கருத்தில் கொண்டு ஆதரவற்றசிறுவனைப் பராமரிக்கும் செலவுக்காக அவனது சொத்தைப் பயன்படுத்தலாம். அதேநேரத்தில் வீண் செலவு செய்வதோ அந்தச் சொத்தை அபகரித்துக்கொள்வதோ ஒருபோதும் கூடாது!” என்று எச்சரித்தும் அனுப்பினார்.

தன் பொறுப்பிலிருக்கும் ஆதரவற்றவர்களை எந்தெந்தக் காரணங்களுக்காகக் கண்டிக்கலாம் என்று வினா எழுப்பிய ஒருவரின் சந்தேகத்துக்கு நபிகளாரின் அழகிய வழிகாட்டுதல் இது:

“கல்வி கற்பிக்க... ஒழுக்கம் போதிக்க... என்று எந்தெந்தக் காரணங்களுக்காக உங்கள் குழந்தையைக் கண்டிப்பீர்களோ அதே காரணங்களுக்காக மட்டும் ஆதரவற்றவர்களைக் கண்டிக்கலாம்” என்ற வரம்பிட்டுக் காட்டினார் நபிகளார்.

(தி இந்து, ஆனந்த ஜோதியில், 24.08.2017 அன்று  வெளியான எனது கட்டுரை) 

 
Share:

Thursday, August 24, 2017

சொல்வதை செய்யுங்கள்! வெற்றிப் பெறுவீர் இளைஞர்களே..!



"பாசிசத்துக்கு எதிரான கருத்துக்களும், இஸ்லாத்துக்கு ஆதரவான எந்தக் கருத்துக்களும் வெளிபட்டுவிடக்கூடாது என்பதில் சிலர் கவனமாக இருக்கிறார்கள் என்பதை உள்வாங்குங்கள்" ~இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''
சங்பரிவார் குழுக்களான இவர்கள் எப்போதும் இப்படிதான். ஒரு அரை நூற்றாண்டுக்கு முன் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் மக்களவை உறுப்பினர்களாக இருந்த சமயம் அது. விவாத மேடைகளில் அடுத்தவர் கருத்து சேராமல் இருக்க உரத்தக் குரலில் பேசி திசைத்திருப்பும் தற்போதைய செயல்களைப் போலவே அப்போதும் எழுத்து ஊடகங்களில் ஊடுருவி கருத்துருவாக்கம் செய்து வந்தார்கள்.

"பர்தாவை தூக்கி எறிவோம்!", "வேலூரில் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி" - இது போன்ற பல்வேறு பொய்யான ஆக்கங்களை நாளேடுகள் முதற்கொண்டு பிரபல வார ஏடுகள்வரை ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையின மக்கள் இவர்களுக்கு எதிராக சங்பரிவார் பயன்படுத்தி வந்தார்கள். தற்போதும் பயன்படுத்திவருகிறார்கள். ஆனால், சமூக வலைத்தளங்கள் என்னும் பிரமாண்ட வீச்சால் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் அது தொடர்கிறது. ஊடகங்களின் கட்டுரையாளர்களாக, செய்தியாளர்களாக, வாசகர்களாக சங்பரிவார் குழுக்கள், அவர்களின் ஆதரவாளர்கள் இந்தப் பணிக்காக முழு வீச்சில் செயல்படுகின்றனர் 

இந்தச் சிக்கலை  எதிர்கொள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சிறுபான்மையினத்தாருக்கும் எதிராக அச்சேற்றப்படும் கருத்துக்களை எதிர்கொள்ளவும், பொய்யான கருத்துக்களுக்கு தகுந்த பதிலளிக்கவும் வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்காக மறைந்த தமிழறிஞர் கவிக்கோவின் தலைமை  உட்பட டாக்டர் கே.வி.எஸ், மௌலானா ஜபருல்லாஹ் ரஹ்மானி போன்ற அறிஞர்கள், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், மாணவ இயக்கங்களைச் சார்ந்தவர்கள் எல்லாம் ஊர்கூடி தத்தம் கவலையைப் பகிர்ந்து கொண்டார்கள் ஊடக கண்காணிப்பகம் போன்ற பெயர்களில் செயல்பட வேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள். 

இந்தப் பணியை என்னைப் பொருத்தவரை மிகவும் சிறப்பாக செய்ததாகவே எண்ணுகின்றேன். அன்றைய இளைஞனான நான் இரண்டுவிதங்களாக எனது செயல்பாட்டை அமைத்துக் கொண்டேன்.

1. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைக் கண்காணிக்கவும், தகுந்த முறையில் பதிலளிக்கவும் மாணவர் ஊடகக் கண்காணிப்புக் குழுக்களை உருவாக்குவது. அவர்களுக்கு சம்பந்தப்பட்ட பிரச்னைகளையொட்டி வழிகாட்டுவது; அறிவூட்டுவது. அந்த பதில் அந்தந்த ஊடகங்களுக்கு அஞ்சல் செய்யும்வரை துணை நிற்பது.
2.  அடுத்தது, செய்திகளை பின்தொடர்ந்து புலனாய்வது. இந்தப் பணிக்காக தமிழகத்தின் அநேகமாக எல்லா மாவட்டங்களுக்கும் பயணப்பட்டிருக்கிறேன். குறிப்பாக நாகர்கோவில், குளச்சல், மேல்மருவத்தூர் கோயில், வேலூர் பேரணாம்பட்டு, சித்தூர் பகுதிகளின் குக்கிராமங்கள் என்றெல்லாம் இரவு, பகல் பாராமல் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொண்டு அலைந்து திரிந்து, புலனாய்ந்து செய்திகளைத் திரட்டிய காலமது. செய்திகளுக்குட்பட்ட சாமான்யனிலிருந்து, அரசு அதிகாரம்வரை ஒரு துறையையும் விடாமல் துல்லியமாக புலனாய்வு செய்த நிகழ்வுகள் அவை. இறைவன் எனக்கு வாய்ப்பளித்தால் அவற்றை விரிவாக சொல்ல இருக்கிறேன்.

தற்போதைய சூழலில் மேற்கூறப்பட்ட வரையரைகளோடு இன்னும் செய்ய வேண்டியதும் உள்ளது. அதுவும் சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் சமூக ஊடகங்களை ஓரளவு உருப்படியாக பயன்படுத்தி வரும் தற்போதைய நிலைமையில் ஒன்றுபடுவதும், ஓரணியாக திரண்டு அறிவு யுத்தம் செய்வதும் தவிர்க்கவே இயலாதது.

எந்தக் கொள்கை, கோட்பாடுகள் தங்களின் உயிரினும் மேலாக கருதுகிறார்களோ, எந்த சித்தாந்தம் அவர்களின் இம்மை, மறுமை வாழ்க்கையை சிறப்பாக்கும் என்று நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்களோ அதை உறுதிப்படுத்த ஒன்றுபடல் என்ற இந்த வழியைத் தவிர வேறு எந்தவழியும் சாத்தியமே இல்லை.

அவரவர் சார்ந்த அமைப்புகள் இருக்கட்டும். அமைப்பு ரீதியாக செயல்பட்டுக் கொள்ளட்டும். ஒருவிதத்தில் இந்த பிரிவுகள் ஒரு பலவீனமாக இருந்தாலும் மறுவிதத்தில் ஒவ்வொரு இயக்கமும் தத்தமது பணிகளை அடுத்தவர் இடர்பாடு இல்லாமல் செயல்பட உதவும் என்ற பலமும் இந்த பிளவுகளில் உண்டு. இந்த ஆரோக்கியத்தை உணரும்வரை எந்த ஆபத்தும் இல்லை.

அதனால், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களானாலும் ஊடகங்களின் கருத்துக்களை எதிர்க்கொள்ள அமைப்புகளின் கட்டுப்பாடுகளை, அந்த விக்கிரமாதிதனின் வேதாளச் சுமைகளை கொஞ்சம் நேரம் இறக்கி விட்டுக் கொள்ளலாம்.

இந்த இளைஞர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:

பொதுத்தளத்தில் இயங்கும், எழுத்து என்னும் அறிவாயுதத்தை எடுத்து தொடர்ந்து அறப்போர் புரிந்து கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களையும், (என்னை நானாக முன்மொழிவது சரியா? என்று எனக்குள்ளேயே ஒரு கேள்வி எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை. ஆனாலும் வேறு வழி தெரியவில்லை. மன்னிக்கவும்) என்னிலும் மூத்தவர்களையும் ஒன்று திரட்டுங்கள். தன்னுணர்வை மூட்டைக்கட்டி இவர்களை அடையாளம் காணுங்கள்.

மூத்தவர்களான இவர்களின் அழகிய வழிகாட்டுதலைப் பெற தொடர்ந்து முயலுங்கள்.

சமூகத்தின் அரிய சொத்துக்களான இவர்களால் கட்டப்பட்ட ஒரு பாசறையை நிறுவுங்கள். அந்தப் பாசறையில் அறிவாயுத பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

இயக்கச்சாயல்களை விட்டு இந்த மூத்தவர்கள் வெளியேற மறுக்கிறார்களா?அடம் பிடிக்கிறார்களா? கவலையை விடுங்கள்.. சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை  என்பது போல இறையருளால் நான் பெற்ற அறிவை, அனுபவங்களை பகிர்ந்து உங்களின் ஏணியாகிறேன் வாருங்கள்..!

இளைஞர்களே நீங்கள்தான் இந்திய சமூக அமைப்பின் வழிகாட்டிகள். உலக அரங்கில் உங்கள் தாய் நாட்டுக்கான வெல்லப் பிறந்தவர்கள் என்பதை மட்டும் ஒருகாலும் மறந்துவிடாதீர்கள்...!

சமூக ஊடகங்களில் ஆரம்ப நிலையில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:

• விருப்பு, வெறுப்பின்றி பிரச்னைகளை அணுகுங்கள்.

• மறுப்புகளை தெரிவிக்கும் கையோடு உங்களின் ஆதரவாக  செயல்படுவோரின் கருத்துகளுக்கும் செவி கொடுங்கள்.

• கரம் கொடுத்து அவர்களுக்கு ஆதரவு தெரிவியுங்கள்.

• அந்தந்த இணைப்புகளுக்குச் சென்று பின்னூட்டமிடுங்கள். கருத்துக்களைப் பதியுங்கள்.

பாசிசத்துக்கு எதிரான கருத்துக்களும், இஸ்லாத்துக்கு ஆதரவான எந்தக் கருத்துக்களும் வெளிபட்டுவிடக்கூடாது என்பதில் சிலர் கவனமாக இருக்கிறார்கள் என்பதை உள்வாங்குங்கள்.

முத்தலாக் சம்பந்தமான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததும், முகநூலிலும், https://www.facebook.com/photo.php?fbid=865354370284260&set=a.107624929390545.15685.100004291150487&type=3&theater எனது வலைப்பூவிலும் https://ikhwanameer.blogspot.in/2017/08/blog-post_23.html#comment-form ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்தேன். உங்களில் எத்தனைப் பேர் இதனை வாசித்தீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எனது வலைப்பூவில் வந்த பின்னூட்டத்தை (படம்) இணைத்திருக்கிறேன் பாருங்கள்.

ஒரு வலைப்பூ மட்டுமல்ல, பொதுவெளி ஊடகங்களில் எழுதப்படும் ஆக்கங்களையும் இப்படிதான் கருத்துப் பிறழ்ந்து மோசமான வார்த்தைகளால் சிலர் பின்னூட்டமிடுகிறார்கள். ஆக இவர்களின் நோக்கம் இனியும் எங்களைப் போன்றோர் எழுதக்கூடாது என்பதுதான்!

"சரி நாங்கள் செய்ய வேண்டியது என்ன?" - என்ற கேள்வியை நீங்கள் எழுப்பினால் எங்களை தொடர்ந்து வாசியுங்கள் என்பேன் முதலாவதாக! அக்கருத்துக்களின் வழிகாட்டுதல்களை உள் வாங்குங்கள் என்பேன் அடுத்ததாக! அவற்றுக்கு பின்னூட்டமிடுங்கள். பதிவேற்றப்படும் எதிர்தரப்பினரின் பின்னூட்டங்களுக்கு அழகிய முறையில் பதிலளியுங்கள் என்பேன் தொடர்ச்சியாக!

அநேகமாய் எங்களைப் போன்றோரின் காலம் முடிந்தது. இறையருளால் ஒவ்வொரு நாளும் கழிந்து கொண்டிருக்கிறது. வாய்ப்புகள் பறிபோன பின் இரங்கல் செய்திகளாய் பதிவேற்றம் செய்வதைவிட இருக்கும் காலத்தை உருப்படியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இளைஞர்களே தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் உங்கள் சமூகத்துக்கான வழிகாட்டிகள் நீங்கள்தான்! மதவெறுப்புகளால், மனங்களைப் பிரித்து, இந்திய சமூகத்தை அதளப்பாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கும் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தத் தகுதியானவர்களும் நீங்கள்தான்.

இறையருளால் ஜெயம் உண்டாகும் இளைஞர்களே.. சொல்வதைக் கேளுங்கள்..!

Share:

Wednesday, August 23, 2017

முத்தலாக் தீர்ப்பு: அய்யன்மீர்..! இது எங்கள் பிரச்னை..! நாங்களே தீர்த்துக்கொள்ள விடுங்கள்!



ஒரு நீண்ட கால இடைவெளி, உலக மகாப் போர்களால் முதலாளித்துவம், கம்யூனிஸம் கொள்கைகள் காலனியாதிக்க தலைவர்களால் திணிக்கப்படகின்றன. இதற்காக திட்டமிட்டபடி முஸ்லிம் நாடுகளின் இளைஞர்கள் கல்வி கற்றல் என்ற பெயரால் ஏற்றுமதி செய்யப்படுகின்றனர். சொந்த தாய்நாடு திரும்பிவரும்போது, மேலைநாட்டு, இறைமறுப்பு முஸ்லிம் பெயர் தாங்கி அறிவு ஜீவிகளாய் உருவெடுக்கிறார்கள். இப்படி நவீன கல்வி என்று இஸ்லாத்துக்கு எதிரான கருத்துருவாக்கம், காலனியாதிக்கம் என்று ஒரு நீண்ட இடைவெளியில் சிக்கிக் கொண்டு தங்கள் சுய நிறங்களைத் தொலைத்துவிட்ட முஸ்லிம் சமூகம்.- இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
"நல்லவாயன் வந்தானா?" - என்று மனைவியிடம் கேட்டேன். "குடிச்சிட்டு வந்தா இனி வீட்டுலே சேர்க்கவே மாட்டேன்னு அவன் பொண்டாட்டி சொல்லிட்டாளாம். அதையே சாக்காக வைச்சுகிட்டு அவன் குடிச்சிட்டு எங்கே உருண்டு கிடக்கிறானோ? - மனைவி கவலையுடன் தெரிவித்தார்.

நல்லவாயன் என்றது என் தம்பி குறித்துதான்! பல ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்துவிட்டு தாயகம் திரும்பி சொந்தமாக ஆட்டோவை ஓட்டி வருபவன். கடனில் சிக்கி, அதிலிருந்து விடுபட முடியாமல் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி தற்கொலைவரை சென்றவன். அப்படிப்பட்டவனை குடும்பத்துடன் மீட்டுவந்து வயதான காலத்தில் எங்கள் கைச் செலவுக்காக உதவுமே என்று கட்டியிருந்த வாடகை வீட்டையும் அவனுக்குக் கொடுத்தோம். அவன் வாங்கிய கடனுக்காக காவல்நிலயம்வரை சென்று கடன்கொடுத்த சம்பந்தப்பட்ட நபர்களின் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைத்தும் இன்னும் திருந்தாதவன்.

காலையில் மாப்பிளைப் போல பயபக்தியுடன் ஆட்டோ ஓட்டிச் செல்பவன் மாலை நேரம் வந்ததும் குடித்துவிட்டு 'நாரவாயனாக' மாறி நிற்பவன். மனைவியிடம் சண்டையிடுபவன். பிரச்னையின் உச்சகட்டமாக வாழ்வியில் பிரச்னைகளைச் சமாளிக்க மனைவியும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை.

மூன்றாண்டுகளாக இந்த நல்லவாயனை திருத்த தொடர் முயற்சிகள் மேற்கொண்டுவரும் சமயத்தில், சில நாட்களுக்கு முன் குடித்துவிட்டு வந்து, என்னிடம் வந்தவன், பிரச்னைகளுக்கு முழு காரணம் மனைவிதான் என்றும், அதனால், மனைவியை விவகார ரத்து செய்ய இருப்பதாகவும் சொன்னான்.

கூடவே அவன் மனைவியும் வந்து கணவன் குறித்து முறையிட்டு 'குலா' (மணவிலக்கு) பெற்றுத் தரும்படி முறையிட நான் ஒரே வார்த்தையில் சொன்னேன்:

"விவகார ரத்து செய்துவிடலாம் அல்லது ஏற்கனவே உன் மனைவி கேட்பது போல மண விலக்கும் தந்துவிடலாம்"

இந்த முடிவை சற்றும் எதிர்பார்க்காத அவன் அந்த குடிபோதையிலும் அதிர்சியடைந்து நிற்க, "உண்மைதானப்பா..! ஒரு குடிக்காரனிடம் சிக்கி வாழ்க்கையை சீராக்கிக் கொள்வதைவிட மண விலக்கு பெற்று, உனது கரு இவளது வயிற்றில் சுமக்கப்படுகிறதா என்ற இக்தா தவணைக்காலம் முடிந்த கையோடு, அவளுக்குப் பிடித்த நல்லவன் ஒருவனுக்கு நிக்காஹ் செய்து தந்து விடலாம்பா..!"

இந்த நாராவாயனிடம் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் வசிக்கும் மகளிடமிருந்து வருகிறது அந்த அவசர அழைப்பு. "அப்பா, இந்த ஆளோட அடியை தாங்க முடியலேப்பா.. தயவுசெய்து என்னை அழைச்சிட்டுப் போயிடுங்களேன்!"

பதறிப்போன நாங்கள் கார் எடுத்துக் கொண்டு அடிபட்டு முகமெல்லாம் வீங்கி ஏறக்குறைய மயக்க நிலையிலிருந்த மகளை மீட்டு வந்து ஆறுதல் சொல்லி வீட்டில் தங்க வைத்தோம்.

ஒரு கடனாளியாகவும், வாய்மையற்றவனாகவும் இருந்த ஒருவனை மகள் தேர்வு செய்த ஒரே காரணத்தால் தவிர்க்க இயலாத சிக்கலில் நாங்கள். திருமணத்துக்கு சம்மதிக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே பட்ட கடனை அடைக்க எவ்வளவோ உதவி செய்தும் அந்த வெள்ளை - சொள்ளை மாப்பிளை தனது மிடுக்கிலிருந்து சற்றும் மாறுவதாக இல்லை.

கடனாளிகள் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி சிறைக்குள் தள்ளியபோது, அந்த விஷயம் எங்கள் காதுகளுக்கு எட்டாதவாறு ரகசியமாக வைத்து, தனது கணவனை ஜாமினில் மீட்டு வந்த அவ்வளவு நல்லவள்தான் எங்கள் மகள். ஐந்து வருடம் வடநாட்டின் சிறப்பு மிக்க அரபி பாடசாலையில் மார்க்க கல்வி கற்று முடித்த பெண் மார்க்க அறிஞர் - ஆலிமா. தற்போது ஆசிரியராக பணிபுரிபவர். பிரச்னையில் கணவனிடமிருந்து மணவிலக்குப் பெற இருப்பதாக சொன்னவர், சில வாரங்களுக்குப் பிறகு மகளின் உடல்நிலை என்ற சாக்கில் எங்கள் பாதுகாப்பையும் பொறுப்படுத்தாமல் மாமியாரை அழைத்து மீண்டும் கணவனோடு இணைந்து கொண்ட துரதிஷ்டசாலி.

பிரச்னை ஓய்ந்ததா என்றால் இல்லை. மீண்டும் தனது கற்புக்கு களங்கம் சுமத்தும் அந்தக் கயவனிடம் சிக்கி மீண்டும் அடி, உதைப்பட்டு தவித்துக் கொண்டிருக்கிறாள். என்ன செய்வது பெற்ற வயிறு இல்லையா? மீண்டும் பிரச்னையை நாங்கள் தாங்கிக் கொண்டிருக்கிறோம். விஷயம் அந்தப் பகுதி, பள்ளிவாசல் நிர்வாகம்வரை சென்றிருக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி பொருத்திருக்கும்படி அறிவுரை நல்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அது முற்றல்ல.

இவை எல்லாமே வீட்டுக்கு வீடு அன்றாடம் நடைபெற்றுவரும் சொல்வதெல்லாம் உண்மைகள்..! முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அவை எடுப்பாக தெரிபவை. பிரச்னைகளாக்கப்படுபவை. வழக்காடு மன்றங்களில் ஊடகங்களால் அரங்கேற்றப்படுபவை. அதேநேரம் நிச்சயமாக தீர்வு காணப்பட வேண்டியவை.

முஸ்லிம்களால் பின்பற்றப்படும் மார்க்கம் இஸ்லாம் குறித்து நினைக்கும்போதெல்லாம் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கும். ஏதோ ஒரு மண். முற்றிலும் வித்யாசமான நிலபரப்பும் அதைச் சார்ந்த வாழ்வியல் அமைப்பும். பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் காலம். மொழி ரீதியாகவும் நெருக்கமற்ற முற்றிலும் வேறுபட்ட நிலை. யாரும் கண்ணால் கண்டதில்லை. அவர் சம்பந்தமாக ஒரு சித்திரம்கூட காண கிடைப்பதில்லை. இருப்பினும் அவர் சொன்னதை உலகின் வேறொரு பகுதி கேட்கிறது. இறைவனின் திருவாக்காய் (திருக்குர்ஆன்) அவரது போதனைகளை சிரமேற்கொண்டு நடக்கிறது. அவரது சொல், செயல், அனுமதிகள் (ஹதீஸ்) எல்லாமே சிக்கலின்றி பின்பற்றும் எத்தனத்தால் மனித இனத்தின் ஒரு பகுதி துடிக்கிறது.

இப்படி, திருக்குர்ஆன், திருநபிகளாரின் வாழ்வியல் முறைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பாகி, பிரிக்க முடியாத 'ஷரீயத்' என்ற ராஜபாட்டையாகிறது. அந்த வாழ்வியல் தத்துவத்தின் செயலுருவத்தால் அதைப் பின்பற்றும் மனித மனங்களில் அமைதி தவழ்கிறது. உலகின் நான்கில் ஒருவராய் நபிகளாரின் பின்பற்றாளர்களால் ஒரு கூட்டம் உருவெடுக்கிறது.

இந்த ஆச்சர்யம், பெரும் வியப்பு மலைப்பாக நிற்கிறது உண்மைதானே?

ஒரு நீண்ட கால இடைவெளி, உலக மகாப் போர்களால் முதலாளித்துவம், கம்யூனிஸம் கொள்கைகள் காலனியாதிக்க தலைவர்களால் திணிக்கப்படகின்றன. இதற்காக திட்டமிட்டபடி முஸ்லிம் நாடுகளின் இளைஞர்கள் கல்வி கற்றல் என்ற பெயரால் ஏற்றுமதி செய்யப்படுகின்றனர். சொந்த தாய்நாடு திரும்பிவரும்போது, மேலைநாட்டு, இறைமறுப்பு முஸ்லிம் பெயர் தாங்கி அறிவு ஜீவிகளாய் உருவெடுக்கிறார்கள். இப்படி நவீன கல்வி என்று இஸ்லாத்துக்கு எதிரான கருத்துருவாக்கம், காலனியாதிக்கம் என்று ஒரு நீண்ட இடைவெளியில் சிக்கிக் கொண்டு தங்கள் சுய நிறங்களைத் தொலைத்துவிட்ட முஸ்லிம் சமூகம்.

இஸ்லாம் வழங்கிய உயரிய ஜனநாயக அமைப்பை அச்சமற்ற விமர்சனப் போக்கை தவறாக பயன்படுத்தி சொந்த மார்க்கத்தை சர்ச்சைகளால் பிளவுப்படுத்தும் போக்கின் மிகைத்தல்.

திருக்குர்ஆன், திருநபிகளாரின் வழிமுறைகளைவிட்டு விலகிப் போன சமுதாயம்.

ஒவ்வொருவரும் ஒரு அறிவுப்போராளியாக இருக்க வேண்டிய சமூகத்தின் அங்கத்தினர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாய் மாறிவிட்ட துரதிஷ்டநிலை என்று தொடரும் நிகழ்காலம்.

அறிவு தொலைந்து போனபின், வாழ்வில் ஒளியேது? முன்னேற்றம்தான் ஏது?

இருண்ட வாழ்வில் உழன்ற சமூகங்கள் எல்லாம் தங்களை மேம்படுத்திக் கொண்டு முன்னேற்றத்தின் உச்சியில் நின்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்போது, முற்றிலும் மேம்படாத ஒரு சமூகம் நகர்வின் சாத்தியம்தான் ஏது? தொலைநோக்குப் பார்வைதான் ஏது? பயன்தராத கருத்துப் பேதங்களிலிருந்து வெளிப்படும் சூழல்தான் ஏது?

சொந்த சமூக மக்கள் வாழ்வியல் போராட்டங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், விரல்விட்டு எண்ணத்தக்க அறிவுஜீவி முல்லாக்கள் அதி தீவிர சர்ச்சைகளில் முழக்கமிட்டுக் கொண்டிருக்க..

தங்கள் உரிமைகள் என்ன? கடமைகள்தான் என்னென்ன? என்று உயர் விழுமியங்களால் பண்பட்ட மேன்மைத்தாங்கிய சமூகம் என்று திருக்குர்ஆனால் விளிக்கப்படும் சமூகத்தில் சுபிட்டசம்தான் ஏது?

இஸ்லாத்தின் கூறுகள் அவற்றின் ஒவ்வொரு சட்ட திட்டங்கள் மனித இனத்தின் வழிகாட்டுதலாக இருக்க... சொந்த சமூகத்தின் உறுப்பினர்களுக்கே பொருத்திப் பார்க்க இயலாத சூழலை என்னவென்பேன்?

நோய்க்குறித்து அறியாத ஒருவருக்கு, நோய் தீர்க்கும் நிவாரணம் குறித்தும் தெரியாத ஒருவருக்கு, சிகிச்சைத் தெரியாத ஒருவர் சிகிச்சை அளிப்பது போன்றுதான் தற்போதைய நிகழ்கால சூழல்கள்.

"வாருங்கள் ஒரு மணவிலக்கு சட்டம் மட்டுமல்ல... இஸ்லாத்தின் ஒவ்வொரு சட்டத்தையும் அலசிப் பார்ப்போம். இன்றைய நவீன சட்டங்கள் என்று நீங்கள் சொல்வதையெல்லாம் விவாத மேடையில் ஏற்றி ஊரறிய வெளிப்படையாக பேசலாம் வாருங்கள். ஒரு பிரச்னைக்கு நீங்கள் சொல்லும் தீர்வு என்ன? நாங்கள் எடுத்துரைக்கும் மாற்று தீர்வு என்ன?" - என்று உரத்து சொல்ல முடியுமா முஸ்லிம்களால்..?

"முத்தலாக் மட்டுமல்ல.. முஸ்லிம் தனியார் சட்டங்கள் மட்டுமல்ல... இஸ்லாமிய கிருமினல் சட்டங்கள் குறித்தும் விவாதிப்போம் வாருங்கள். பகிரங்கமான அந்த விவாதத்தில் ஏற்புடைய சட்டங்களை நேர்மையாக தொகுத்து இந்தியாவின் பொதுச்சட்டங்களாக்கலாம் வாருங்கள்..!" - என்று விவாத மேடையமைக்க முஸ்லிம் தலைவர்களால் அறிவு ஜீவிகளால்தான் முடியுமா?

எல்லாம் துரதிஷ்டம் சூழ்ந்து கொண்ட இந்திய முஸ்லிம் சமூக அமைப்பு. உணவுக்கே அல்லல்படும் ஒரு பாவப்பட்ட சமூகம் வழக்கம் போலவே உணர்ச்சிவசப்படுவதற்கான நேரமல்ல இது. அறிவு ரீதியாக செயல்பட வேண்டிய நேரம்! சர்ச்சைகளில் சிக்கி சமூகத்தை சிக்க வைத்து பிரச்னைகளை திசைத் திருப்பும் நேரமும் அல்ல இது. அறிவின் பக்கம் சமூக மக்களை திசைத் திருப்ப வேண்டிய நேரம்.

3:2 என்ற நிலைப்பாட்டில்தான் முத்தலாக் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய தீர்ப்பு என்று கூட சொல்லலாம்.

அதேபோல, கண்ணியத்திற்குரிய நீதிபதிகளின் கவனத்துக்கு, "அய்யன்மீர், நாட்டில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நீதி கிடைக்காமல் தேங்கிக் கிடக்கின்றன. பிரபலமான வழக்குகள் என்று எடுத்துக் கொண்டால்கூட பாபரி மஸ்ஜித் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட வழக்கு, குஜராத் இனப்படுகொலைகள் வழக்குகள், போலி என்கவுண்டர் வழக்குகள், நீதிக்காக ஏங்கி நிற்கும் ஆயிரக்கணக்கான விசாரணைக் கைதிகளின் வழக்குகள், காவேரி மேலாண்மை வாரிய விவகாரங்கள், தலைநகர் தில்லியில் எங்கள் விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்கள் என்று லட்சக்கணக்கான பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தயவு செய்து இவற்றை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டிய நேரமிது.

முஸ்லிம் தனியார் சட்டங்கள் என்பவை இந்திய அரசிலமைப்பு சட்டம் 25-வது பிரிவின்படி முற்றிலும் பாதுகாக்கப்பட்டவை. மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உறுதிபட நாட்டின் குடிமக்களுக்கு உறுதிபட வாக்களிக்கப்பட்டவை.

இது எங்கள் வீட்டு விவகாரம். இதனால் உங்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்பதும் அப்பட்டம்.

எங்கள் வீட்டு விவகாரம் வீதிக்கு வந்துவிட்ட ஒரு துரதிஷ்டநிலை காரணமாக வைத்து எங்களுக்கு அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகளை தயவு செய்து பறிக்காதீர்கள். எங்கள் பிரச்னைகளை நாங்களே தீர்த்துக்கொள்ள எங்களை விடுங்கள்.

திருக்குர்ஆன், திருநபிகளாரின் வழிமுறைகள் என்று இஸ்லாமிய சட்டக்கூறுகளை சுயமாய் வியாக்கியானம் செய்வது சரியாகவும் இருக்காது. அதிலும் 1400 ஆண்டு காலமாக செயல்பட்டுவரும் சட்டங்களை சில பக்கங்களில் நீங்கள் தீர்ப்பளிக்கவும் முடியாது!


Share:

Monday, August 21, 2017

மனிதநேயம் வெளிப்பட்ட அந்த தருணத்தில்..


பகவான் தாஸ் மஹாராஜ். விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த சன்யாசி. ஹரித்துவார் சென்று புனித கங்கையில் நீராட 6 பேர் கொண்ட குழுவினருடன் பயணம் மேற்கொண்டவர். விபத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமலிருந்தார். >>> இக்வான் அமீர் <<<

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
பெயர்களில் என்ன இருக்கிறது? பண்புகள் செயல்களில் வெளிப்பட்டாலே போதுமானது. இறைநம்பிக்கையை பூர்த்தி செய்ய வல்லது.

உத்திரப்பிரதேசத்தில் உத்கல் விரைவு ரயில் சனிக்கிழமை மாலை (19.08.2017) தடம் புரண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காயமடைந்த 60-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புரி-ஹரித்துவார் கலிங்கா உத்கல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் புரி நகரிலிருந்து உத்தராகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. இடையே உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கதாவ்லி என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி அதன் 14 பெட்டிகள் தடம் புரண்டன. மிகவும் சோகமான செய்தி இது.

பகவான் தாஸ் மஹாராஜ். விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த சன்யாசி. ஹரித்துவார் சென்று புனித கங்கையில் நீராட 6 பேர் கொண்ட குழுவினருடன் பயணம் மேற்கொண்டவர். விபத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமலிருந்தார்.

"ரயில் தடம் புரண்ட அதிர்ச்சியில் நான் இரண்டு அடிகள் முன்புறம் தூக்கி எறியப்பட்டேன். என் தலை எதிரிலிருந்த இருக்கையில் முட்டியது. கடுமையான வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த என்னைச் சுற்றிலும் மரண ஓலங்கள் கேட்கலாயின. அந்த நேரத்தில் அவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் இந்நேரம் இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்போம். ஆம்... எங்கிருந்தோ பாய்ந்த வந்த முஸ்லிம்கள் பெட்டிக்குள் சிக்கியிருந்த எங்களை மீட்டார்கள். நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், முஸ்லிம்கள் காப்பாற்றியிருக்காவிட்டால் இந்நேரம் நாங்களும் பலியாகியிருப்போம்" - என்கிறார் சன்னியாசி பகவான் தாஸ் மஹாராஜ்.

"பெட்டிக்குள்ளிலிருந்த எங்கள் அனைவரையும் மீட்ட முஸ்லிம்கள் குடிநீர் கொடுத்தார்கள். ஓய்வெடுக்க படுக்கை வசதிகளையும் செய்தார்கள். கூடவே தனியார் மருத்துவரை ஏற்பாடு செய்து எங்களுக்கு விரைந்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தார்கள்! இந்த உதவியை உயிருள்ளவரை எங்களால் மறக்கவே முடியாது!"- என்கிறார் நன்றி பெருக்கெடுக்க பகவான் தாஸ் மஹாராஜ்.

"இந்த விபத்தில் இறைவனின் கருணையை நேரில் கண்டோம். அரசியல்வாதிகள் எங்களை இந்து-முஸ்லிம் என்று பிரித்திருந்தாலும் நாங்கள் எப்போதும் ஒன்றுதான் என்று நிரூபணமான தருணமிது!" - என்கிறார் மற்றொரு சன்னியாசியான மோர்னி தாஸ்.

நான் ஆரம்பத்தில் சொன்ன வாக்கியங்களை மீண்டும் நினைவுகூருங்கள்:

'பெயர்களில் என்ன இருக்கிறது? அந்தப் பண்புகள் செயல்களில் வெளிப்பட்டாலே போதுமானது. இறைநம்பிக்கையை பூர்த்தி செய்ய வல்லது'.

மனித நேயம் வெளிப்படும் தருணத்தில் இதயங்கள் பிண்ணிப் பிணைந்துவிடுகின்றன என்பது உண்மைதான்!

Share:

எண்ணூர் உப்பங்கழியும், அரங்கேற்றப்படும் அத்துமீறல்களும்!


வெறும் சட்டங்களால் மட்டுமே பிரச்னைகளை தீர்த்துவிட முடியும் என்றால் நாம் புழல் சிறையைக் கட்ட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அதேபோல, சட்டங்களால் மட்டுமே நதியைப் பாதுகாத்துவிட முடியாது. அந்தச் சட்டங்கள் பாராபட்சமின்றி மக்களல் நலன்சார்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் முக்கியம். அந்த சட்டங்கள் குறித்த விழிப்புணர்வும், அவை அமல்படுத்தப்பட வேண்டும் என்ற அரசியல் நிர்பந்தங்களும் தர வேண்டியது மக்கள்தான்..>>> இக்வான் அமீர் <<<
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

வடசென்னை மக்களால் நதி எனக் குறிப்பிடப்படும் எண்ணூர் உப்பங்கழி, முன்பு இருந்ததைப்போல இப்போது இல்லை. பள்ளி நாட்களில் மாணவர்களாகிய நாங்கள் பளிங்கு போல தோற்றமளிக்கும் இந்த நதியில்தான் நீந்தக் கற்றுக் கொண்டோம். சுவை மிகுந்த மீன்களை விடுமுறை நாட்களில் இங்குதான் வேட்டையாடி உண்டோம். வெண்குவியல்களாய் கொட்டப்பட்டிருக்கும் உப்பைச் சுமந்த உப்பளங்கள் பிரமிப்பூட்டும். உப்பையும், சவுக்குச் சுள்ளிகளையும் சுமந்த பாய்மர படகுகள் கம்பீரமாக பயணிக்கும். அந்தக் கால கோலிவுட்டின் வெளிப்புற படக்காட்சிகளின் பிரதான ஸ்தலமாக இருந்த நதி இது. பரிந்துரைக்கப்பட்ட சுற்றலாதலங்களில் முக்கியமாக விளங்கிய இடம்.

உப்பங்கழியின் பளீர் நீல நிற கரையோரத்தில், வண்ணமய சிறு நண்டுகள் தங்கள் தடித்த ஒரு கால்களால் வரவேற்க இருபுறமும், அடர்த்தியான அலையாத்திக் காடுகள் பசுமைப் பூச்சுடன் செழித்து வளர்ந்து ஆயிரக்கணக்கான உயிரினங்களின் உறைவிடமாக இருந்த நதி.

இந்த நதி அதாவது எண்ணூர் உப்பங்கழி தனது அத்தனை சிறப்புகளையும், அழகையும் இழந்து பொலிவிழந்த விதவைப் பெண்ணாய் தற்போது காட்சியளிக்கிறது. ஏற்கனவே எண்ணூர் அனல் மின்நிலையம் இருந்தது போதாதென்று அழகிய உப்பளங்கள் இருந்த இடத்தில் இன்னும் ஒன்றுக்கு இரண்டாய், வல்லூர் அனல் மின்நிலையம், வடசென்னை அனல் மின்நிலையம் என்று மூன்று அனல் மின்நிலையங்கள் நதியை சின்னாபின்மாக்கிவிட்டன. சாம்பல் மயமாய், நிலக்கரி கழிவுகளாய் உப்பங்கழியை நிரப்பிவிட்டன. அத்தோடு தனியாருக்குச் சொந்தமான வாகன உற்பத்தி நிறுவனங்களின் எண்ணெய் கழிவுகள், இரசாயன ஆலைகளின் கழிவுகள் என்று கரு நிறத்தில் எண்ணெய் பிசகாய் உருமாற்றிவிட்டன. அரிய வகை பச்சை ஆலி போன்ற நீர் வாழ் உயிரினங்களின் வாழ்வியலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், மீன்பிடித் தொழிலை மட்டும் நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலைய வைத்துவிட்டன.

சூழல்மாசுவால் சீரழிக்கப்பட்ட எண்ணூர் உப்பங்கழி குறித்து விரிவாக தெரிந்து கொள்வதுதான் பிரச்னையின் பிரதானத்தை உணர முடியும். 

மொத்தம் 8 ஆயிரம் ஏக்கர் மொத்த பரப்பளவு கொண்ட உப்பங்கழி என்பது ஒரு நீரேற்ற நீர்நிலைப் பகுதி என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் புலிகாட் என்று வழங்கப்படும், பழவேற்காட்டுக்குத் தென் பகுதியில் ஆரணி நதி, உப்பங்கழிக்கு வந்தடைந்து, தெற்கு திசையில் பாய்ந்து எண்ணூர் முகத்துவாரம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அத்துடன், தெற்குப்பக்கம் கொசஸ்தலை நதி இந்த உப்பங்கழியில் இணைந்து, முகத்துவாரம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கொசஸ்தலை, ஆரணி நதிகளின் நீர் சமுத்திரமுனையில் சந்திக்கும் நீர்நிலை அமைப்பு. இதுத் தவிர, பக்கிங்காம் கால்வாயும், சென்ட்ரல் ரயில்நிலையம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளிலிருந்து கழிவு நீர் எண்ணூர் முகத்துவாரத்துக்கு வந்தடைகிறது.

முன்பு, இந்த நதியின் இரு பக்கங்களிலும் அலையாத்திக் காடுகளும், ஆற்றுப்படுகைகளில் அலையேற்ற சதுப்பு நிலங்களும், மண்மேடுகளும், உப்பு நீரில் வளரும் தாவரங்களும் ஏராளமாக இருந்தன. பிரதான கால்வாய் ஆழமாக இருந்ததால், நீரின் ஓட்டமும் அதிகமாக இருந்தது. முகத்துவாரம் இயற்கையாகவே திறந்திருந்ததால், ஒவ்வொரு பருவநிலை அலையேற்றத்தின்போதும், கடலிலிருந்து மீன்களும், இறால்களும் உப்பங்கழிக்கு புலன்பெயர்ந்து, அதி பாதுகாப்பான சதுப்பு நிலக்காடுகளில் முட்டைகளை இட்டன. இனப்பெருக்கம் நடந்தது. சுவை மிகுந்த நீர் வாழ் உயிரினங்களால் மீனவ மக்களின் வாழ்வும் செழித்தது. நதியைச் சுற்றியிருந்த உப்பளங்களால், சவுக்குக் காடுகளால் பொருளியலும் பெருகியது.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெறும் முப்பது, நாற்பதாண்டுகளில் நதி நிறம் மாறிப்போனது. பெரும் பகுதி நீர் வாழ் உயிரினங்கள் அடையாளம் தெரியாமல் போயின. கிடைக்கும் சொற்ப வகை மீன்களும் மண்ணெண்ணெய் தொட்டிக்குள் வளர்வது போல உண்பதற்கு லாயக்கற்று சுவை மாறிப் போயின. https://www.youtube.com/watch?v=I2zClBfZh-0 https://www.youtube.com/watch?v=4pdprvBSwIo

அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் வடசென்னைவாசிகளின் அறியாமையைப் பயன்படுத்தி பல ஆண்டுகள் ஆட்சியாளர்கள் அரங்கேற்றிய திட்டங்களின் விளைவுகள்தான் இவை. https://www.youtube.com/watch?v=4TflFDj74l0

சென்னை, ஆர்.கே.நகர், திருவொற்றியூர் பகுதிகளிலிருந்து சாக்கடை நீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக இந்த உப்பங்கழிக்கு வந்து சேர்கிறது.

மணலி தொழிற்சாலையிலிருந்து ரசாயனக் கழிவுகள், வாகன உற்பத்தி நிறுவனங்களின் கழிவுகள் இந்த உப்பங்கழியிலும் கொசஸ்தலை ஆற்றிலும் கலக்கின்றன. https://www.youtube.com/watch?v=9MZxhPcfj4k

எண்ணூர் அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், வடசென்னை அனல் மின் நிலையம், ஹெச்.பி.சி.எல்., பி.பி.சி.எல் எண்ணெய் நிறுவனங்கள், காமராஜர் துறைமுகம் போன்றவை இந்த நீர்நிலைப் பகுதியின் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான இடத்தை ஆக்கிரமித்து கொண்டுள்ளன. இதன் விளைவாக மீன், இறால் போன்ற நீர்வாழ் உயிரிகள் இனப்பெருக்கம் செய்யும் இங்குள்ள செழிப்பான மண் மேடுகள் மற்றும் சதுப்புநிலப்பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. https://www.youtube.com/watch?v=miF_9v9fi1I https://www.youtube.com/watch?v=7zKaqaL-P6o

இந்த அத்துமீறிய ஊடுருவல்களாலும், குழாய்களிலிருந்து கசியும் நிலக்கரி சாம்பலும் இந்த நதியின் ஆழத்தை வெகுவாக குறைத்துவிட்டன. இதன் விளைவாக, ஆழமற்ற நீர் வெகு வேகமாக வெப்பமடைந்தது. மீன்கள், இறால்கள் போன்ற நீர் வாழ் உயிரிகளின் உயிர்வாழ்க்கை சிக்கலானது. https://www.youtube.com/watch?v=yVVIsYEFAWQ வடப்பகுதியில் இருக்கும் மீன்பிடி இடங்களில் சேறு அல்லது நிலக்கரி சாம்பல் சூழ்ந்து கொண்டது. இதனால், மீனவர்களின் படகுகள் சிக்கிக்கொள்வதால் அந்த மீன்பிடி இடங்களுக்குப் போவதில் சிக்கல் ஏற்பட்டது. https://www.youtube.com/watch?v=1NrfuRgf8wg

அதேபோல, வடசென்னை அனல் மின் நிலையம் நேரடியாக முகத்துவாரப்பகுதிக்கு அதன் வெப்ப நீரை வெளியேற்றுகிறது. உயர் அலையேற்ற கால நிலையில்கூட, வெப்ப நீர் காரணமாக உப்பங்கழிக்கு கடலிலிருந்து மீன்கள் புலன் பெயர முடியாமல் போனது. https://www.youtube.com/watch?v=TUSV_c8s7ns

இவ்வளவு மோசமான அரசு அக்கிரமங்களைத் தடுத்து நிறுத்தி எண்ணூர் கடற்கழியைக் காத்து ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நமது நாட்டில் எந்த சட்டப் பிரிவுகளும் இல்லையா என்ற கேள்வி எழுவதும் இயல்புதான்!

இந்திய நாட்டில் ஏட்டளவில் குறைவில்லாத சட்டங்களும் உள்ளன. அவற்றில் ஒட்டகம் நுழையும் அளவுக்கு ஓட்டைகளும் உள்ளன. சட்டங்களைப் பொருட்படுத்தாத ஆட்சியாளர்களும், விழிப்புணர்வற்ற மக்களும் உள்ளனர்.

எண்ணூர் உப்பங்கழியை மட்டும் எடுத்துக் கொண்டால் அது 6 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த 6 ஆயிரத்து 500 ஏக்கர் பகுதியைப் பாதுகாக்க கோரி அரசே பரிந்துரைத்துள்ளது முக்கியமானது. அந்தப் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டு அப்பகுதிக்குக் கடற்கரை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சட்ட ரீதியாக முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது. 16 கி.மீ. நீளம் கொண்ட கருங்காலி நதிப் பகுதியின் முகத்துவாரத்திலிருந்து (சிந்தாமணி முகத்துவாரம்) எண்ணூர் முகத்துவாரம் வரையிலான பகுதி, 1996ஆம் ஆண்டு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல (சி.ஆர்.இசட்) வரைபடத்தில் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.




சி.ஆர்.இசட். அறிவிப்பு குறிப்பாக, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடையாளம் கண்டு அவர்களைப் பாதுகாக்க வேண்டியது. இதன்படி, மீன்பிடி பகுதிகள் எவை என்று அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என சட்டம் குறிப்பிடுகிறது. அதேபோல, நதியின் நிலப்பரப்பை கையகப்படுத்த, நிலக்கரி சாம்பல், மணல் அல்லது கழிவுகளை நதியில் கொட்டுவதும், உப்பங்கழியில் வெப்ப நீரை வெளியேற்றுவதும் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. ஏதாவது காரணங்களுக்காக நதியின் போக்கைத் தற்காலிகமாக தடுத்து நிறுத்துவதற்குக்கூட இந்த சட்டத்தின்படி யாருக்கும் அனுமதி கிடையாது எனலாம்.

இவ்வளவு கடுமையான சட்டங்கள் இருந்தும், இந்த நதி தற்போது ஏன் மிகவும் மோசமான நிலையில் உள்ளது? என்ற கேள்வி எழுவதும் சகஜம்தான்!

வெறும் சட்டங்களால் மட்டுமே பிரச்னைகளை தீர்த்துவிட முடியும் என்றால் நாம் புழல் சிறையைக் கட்ட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அதேபோல, சட்டங்களால் மட்டுமே நதியைப் பாதுகாத்துவிட முடியாது. அந்தச் சட்டங்கள் பாராபட்சமின்றி மக்களல் நலன்சார்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் முக்கியம். அந்த சட்டங்கள் குறித்த விழிப்புணர்வும், அவை அமல்படுத்தப்பட வேண்டும் என்ற அரசியல் நிர்பந்தங்களும் தர வேண்டியது மக்கள்தான்..!

அதோடு மத்திய, மாநில அரசுகள் சட்டங்களை மீறாமல் அமல்படுத்த வேண்டும் என்பதை உறுதிசெய்வதில் ஆர்வம் கொண்டுள்ள வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது எல்லாவற்றையும்விட முக்கியமானது. 

சீர்கெட்டுவிட்ட எண்ணூர் உப்பங்கழி சம்பந்தமாக மீனவ பெருமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே செய்தனர். ஆனால், அந்த எதிர்ப்பை சட்ட ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளவில்லை. மேலும், தகுந்த நேரத்தில் தங்கள் கருத்துக்களை அவர்கள் பதிவு செய்யவில்லை அல்லது பெரும்பான்மையினர் அதற்கு ஆர்வம் காட்டவில்லை.

வல்லூர் அனல் மின்நிலையம், ஹெச்.பி.சி.எல்லின் எண்ணெய் சேமிப்பு முனையம் முன்மொழியப்பட்டபோது பொதுமக்களின் கருத்துகளை அறிய கண்துடைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன என்பது உண்மைதான்! இவற்றில் தங்களது கவலையைப் பதிவு செய்ய பெரும் எண்ணிக்கையிலான மீனவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது துரதிஷ்டவசமானது. மண்ணையும், காற்றையும், காட்டையும், சக உயிர்களையும் காத்தல் வருங்கால தலைமுறையைக் காப்பது என்ற தொலை நோக்கு பார்வையில்லாமல் ஒரு சிலர் இதில் வேலைவாய்ப்பை நாடிச் சென்றனர். இந்த வாய்ப்புக்காக காத்திருந்த சூழலைச் சீரழிக்க வந்த நிறுவனங்கள், இவர்களுக்கு வேலைவாய்ப்பு வாக்குறுதியை எந்தவிதமான உத்திரவாதமும் தராமல், அதைக் காப்பாற்றும் எண்ணமும் இல்லாமல், ஒப்புக்கு தலையாட்டிவிட்டு இந்த நதிப்பகுதியில் தாங்கள் விரும்பும் எதை வேண்டுமானலும் செய்துகொள்ளலாம் என்று நினைத்தன.

அரசு ஏஜென்சிகளை இதற்குப் பொறுப்பாளிகள் ஆக்குவதற்கு மக்கள் போதுமான முனைப்புக் காட்டவில்லை. எண்ணூர் உப்பங்கழி பகுதி அபிவிருத்தி மண்டலம் கிடையாது என்ற சட்டம் அமலாக்கப்படுவதையும், இந்தப் பகுதியின் 1996ஆம் ஆண்டின் வரைபடம் அறிவிப்பின்படி எண்ணூர் உப்பங்கழி பகுதியின் 6 ஆயிரத்து 500 ஏக்கரில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லாமல் இருப்பதையும் சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருக்கும் மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்.

2017 ஜூலை மாதம் இந்த ஆணையம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட எண்ணூர் பகுதியின் சி.ஆர்.இசட். வரைபடம் என்று கூறி மோசடியான ஒரு வரைபடத்தை வெளியிட்டதாகவும், இந்த வரைப்படத்தின்படி எண்ணூர் உப்பங்கழி என்ற ஒன்று இருப்பதையே மறுப்பதாகவும் சூழலியலாளர்களால் சொல்லப்படுகிறது. காளாஞ்சி அருகே உள்ள சிந்தாமணி முகத்துவாரத்துக்கும், சமுத்திரமுனைக்கும் இடையே உள்ள ஒட்டுமொத்த பகுதியும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலமாக (நீர் அல்ல நிலம்) காட்டப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஜூன் மாதம் மோசடியாகத் தயாரிக்கப்பட்ட இந்த வரைப்படத்தைப் பயன்படுத்தி இந்த நதியின் ஆயிரம் ஏக்கர் பகுதியை காமராஜர் துறைமுகத்துக்கு ஒதுக்கீடு செய்தது. அந்தத் துறைமுகம் நதியின் மேல் ஒரு கார் நிற்கும் முனையம், நிலக்கரி கிடங்கும் ஆகியவற்றை கட்ட விரும்புவதாக சொல்லப்படுகிறது.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மிக மோசமான அரசு மோசடி இது என்றால் மிகையில்லை..!

வெறும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மெரினாவில் லட்சக்கணக்கான பேர் திரண்ட வரலாற்றைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு பயனும் இல்லை. பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் நெடுவாசல்கள், கதிராமங்கலங்கள் அவலங்களைவிட வடசென்னைவாசிகளின் வாழ்வியலுக்கு கவனம் செலுத்துவதும் முக்கியமானது.

தனது தவறுகளுக்கு அரசாங்கத்தைப் பொறுப்பேற்க செய்வதற்கும், வளர்ச்சி என்ற பெயரால் வருங்கால தலைமுறையினரின் வாழ்வியலையும், சக உயிரிகளின் உயிர்களையும் சூறையாடுவதை தடுத்து நிறுத்தவும் ஆக பொறுப்பு அவர்களை அரியணையில் அமர்த்தும் மக்களின் அதிகாரத்துக்கே உள்ளது. மாநிலக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை கேள்வி கேட்க வேண்டியதும், இதற்காக ஒரு விசாரணை நடத்தப்பட்டு, ஆணையத்தில் தவறாக நடந்துகொள்பவர்களின் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்த வேண்டியதும் பொது மக்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

நாளை எண்ணூர் என்ற ஒரு பகுதி இல்லவே இல்லை என்று சுயநல வரைப்படம் உருவாவதற்கு முன் பொதுமக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். 

இல்லையென்றால், வருங்கால இளந்தலைமுறையினர் சுயநல ஆட்சியாளர்களின் எடுபிடிகளாக இருந்த ஒரு சமூகத்தின் வாரிசுகள் தாங்கள் என்ற அவப் பெயரை வரலாற்றில் காலமெல்லாம், சுமக்க வேண்டியிருக்கும். சூழல்மாசுவால் மொத்த வாழ்வாதாரத்தை பறிகொடுத்து, சொந்த நிலத்தில் மனித உருமாறி அகதிகளாக வலம் வர வேண்டியிருக்கும்.

Share:

Friday, August 18, 2017

சுவர்க்கத்தின் நடுவில் ஒரு வீடு



சமூக அமைப்பில் பொய் எங்கெல்லாம் உலா வர வாய்ப்புள்ளதோ அந்த இடங்களையெல்லாம் சுட்டிக்காட்டி நபிகளார் அறிவுறுத்தியுள்ளார். அதன் செயலுருவாக்கத்தை கடுமையாக கண்டித்தும் உள்ளார். பொய்ப் பிரயோகிப்பவர்களுக்கு கடும் தண்டனை காத்திருக்கிறது என்று எச்சரித்தும் உள்ளார். இதன் விளைவாக ஒரு சாதாரண பணியாள்கூட மக்களைத் தவறாக வழி நடத்த முடியாது. ஒரு சாமான்யன்கூட உண்மையின் முக்கியத்துவத்தைப் புறக்கணித்துவிட முடியாது. 
-இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''

ஒருமுறை நான் நபிகளாரின் இல்லத்தில் இருக்கும்போது எனது தாயார் "என்னிடம் வந்தால் உனக்கொன்றை தருவேன்..!" - என்று என்னை அழைத்தார்.

அப்போது நபிகளார், "குழந்தைக்கு என்ன தரப்போகிறீரகளம்மா..?" - என்று விசாரித்தார்.

"பேரீத்தம்பழம் தரப் போகிறேன் இறைவனின் தூதரே!"- என்றார் எனது தாயார்.

"ஞாபகமிருக்கட்டும்... ஒருவேளை பேரீத்தம் பழத்தை குழந்தைக்குத் தரவில்லை என்றால்... நீங்கள்  பொய் சொன்னதாக இறைவனிடம் பதியப்படும்" - என்று நபிகளார் அறிவுறுத்தியதாக நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அம்ர் பதிவு செய்கிறார்.

ஒரு குழந்தையை அழைப்பதற்காககூட எதையாவது தருகிறேன் என்று சொல்லி அதை தராமலிருப்பது ஏமாற்றுச் செயலாகும் என்று பெற்றோரை இஸ்லாம் எச்சரிக்கிறது. குழந்தைகளின் உள்ளங்களில் நேர்மை, உண்மை இவற்றின் விதைகளை அதிகதிகமாக தூவுங்கள் என்றே அது தனது பின்பற்றாளர்களை எச்சரிக்கிறது.

குழந்தைகள் பொய்மையின் நிழல்கூட படாதவர்களாக திகழ்ந்து, உண்மையாளர்களாக வளர்ந்து, நேர்மையான உருவங்களில் வாழ்ந்து, சொல்லாலும், செயலாலும் வாய்மையாளர்களாக சமூகத்தில் உலா வர வேண்டும் என்று இஸ்லாம்  விரும்புகிறது. குழந்தை வளர்ப்பில் பொய் பெரும் பாவம் என்று அறிவுறுத்துவதோடு, வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இளந்தலைமுறையினர், நேர்மையாளர்களாகவே கட்டமைக்கப்பட வேண்டும் என்பது அதன் அழுத்தான கட்டளையாகும்.

நபித்தோழி அஸ்மா பின்த் யஜீத் மற்றொரு சம்பவத்தை பதிவு செய்கிறார்:

"நான் ஒருமுறை நபிகளாரிடம், "பெண்களாகிய எங்களில் ஒருசிலர் ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டும் அதன் மீது ஆசை இல்லை என்று கூறுவதும் பொய்யாகுமா இறைவனின் திருத்தூதரே?" - என்று கேட்டேன். அதற்கு நபிகளார், "பொய்... பொய்யாகவே எழுதப்படும்!" -  என்று பதிலளித்தார்.

சமூக அமைப்பில் பொய் எங்கெல்லாம் உலா வர வாய்ப்புள்ளதோ அந்த இடங்களையெல்லாம் சுட்டிக்காட்டி நபிகளார் அறிவுறுத்தியுள்ளார். அதன் செயலுருவாக்கத்தை கடுமையாக கண்டித்தும் உள்ளார். பொய்ப் பிரயோகிப்பவர்களுக்கு கடும் தண்டனை காத்திருக்கிறது என்று எச்சரித்தும் உள்ளார். இதன் விளைவாக ஒரு சாதாரண பணியாள்கூட மக்களைத் தவறாக வழி நடத்த முடியாது. ஒரு சாமான்யன்கூட உண்மையின் முக்கியத்துவத்தைப் புறக்கணித்துவிட முடியாது.

சிலசமயம், நண்பர்களிடையே அரட்டை அடிக்கும்போது, வேடிக்கைக்காக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுவதுண்டு. சொல்பவரோ அல்லது கேட்பவரோ பொய் என்று இதை மனதில் நினைப்பதில்லை. அதைக் கண்டிப்பதுமில்லை.

வேடிக்கைப் பேச்சில், தவறான தகவல்களைத் தருவதிலோ, கற்பனையாக மிகைப்படக் கூறுவதிலோ தவறு என்ன இருக்கிறது? என்று எண்ணுவோருக்கு இஸ்லாத்தின் தெளிவான செய்தி இதுதான்: "வேடிக்கையாகப் பேசுவதில் ஒரு தவறும் இல்லை. அதேநேரத்தில் இந்த வேடிக்கையும், சிரிப்புகளும் வாய்மை என்ற வரம்புகளுக்குள்ளாகவே இருக்க வேண்டும். பொய் எப்போதும் பொய்தான். உண்மை பொய்யிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. தனித்துவம் வாய்ந்தது.

இதுகுறித்து நபிகளாரின் எச்சரிக்கையும், நற்செய்தியும் இது: "அடுத்தவரை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பொய்யான கதைகளைக் கூறுபவனுக்கு மரணம் உண்டாகட்டும். அவனுக்கு அழிவு காத்துக் கொண்டிருக்கிறது.

அதேபோல, "வேடிக்கையில் ஈடுபட்ட நிலையிலும், பொய்யைவிட்டு விலகி இருப்பவனுக்கு சுவர்க்கத்தின் நடுவில் ஒரு வீடு உண்டு என்று நான் உறுதி அளிக்கிறேன்"

வேடிக்கை, விவாதங்களில் பொய் சொல்வதை விட்டுவிடாதவரை ஒருவர் தனது இறைநம்பிக்கையில் முழுமைப் பெற முடியாது. அவர் மற்றைய விவகாரங்கள் அனைத்திலும் உண்மையாக இருந்தாலும் சரியே..!

வேடிக்கைப் பேச்சுகள் எல்லா நிலைகளிலும் சிரிப்பூட்டுவதில்லை..! மகிழ்ச்சியூட்டுவதுமில்லை. அப்போது கட்டவிழ்த்துவிடும் பொய்களின் பின்விளைவுகளால் குடும்பங்களில் சுமூகநிலை பாதிக்கப்படுகிறது. சிலபோது விபரீதங்களை விளைவிக்கிறது. குடும்ப உறவுகளை சீர்க்குலைக்கிறது. பகைமையை வேர்விடச் செய்கிறது என்பதே உண்மை.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 17.08.2017 அன்று வெளியான எனது கட்டுரை)  

படம்: நன்றி: Subhan's Photography:  https://www.facebook.com/groups/716821555091965/
Share:

Thursday, August 17, 2017

செக்கிழுத்த செம்மல் அறிஞர் மொஹானி

டாக்டர் அம்பேத்காருடன் அறிஞர் மொஹானி

1931 ம் ஆண்டு அஹமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் பொதுக்குழுவில் அறிஞர் மொஹானி "இந்தியாவுக்கு பூரண விடுதலை" என்ற தீர்மானத்தை முன்மொழிந்தபோது இந்தியா ஆச்சரியத்தில் விழியுயர்த்தியது! ஆம் அதுவரை "பூரண விடுதலை" என்ற கற்பனை கூட இந்தியாவில் காணப்படவில்லை!

இந்தத்தீர்மானம் நிறைவேற்றப்படாதா என மக்கள் எதிர்பார்த்தனர்!

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தீர்மானத்துக்கு எதிர்ப்பு காந்திஜீயிடமிருந்தே எழுந்தது! இதன் விளைவாக தீர்மானம் தோகடிக்கப்பட்டது!

ஆனால் இதில் முரண்நகை என்ன தெரியுமா? எட்டு ஆண்டுகள் கழித்து லாஹூர் காங்கிரஸ்ஸில் "பூரண விடுதலை" என்ற தீர்மானம் அதே காந்தியால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டதுதான்!

அறிஞர் மொஹானி அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எண்ணிய எண்ணம் காந்திஜியால் எட்டு ஆண்டுகள் கழித்து வடிவம் பெற்றது!

அறிஞர் மொஹானி மிகச் சிறந்த உர்து கஜல் கவிஞராகவும் விளங்கினார்!

"சுப்கே சுப்கே ராத் தின்" https://www.youtube.com/watch?v=5bLN85bo48s என்ற அவரது "கஜல்" பாடல் மிகவும் பிரசித்திப் பெற்றது.

இந்தப் பாடல், "நிக்காஹ்" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் ஒலித்து 80 களில் இந்தியாவைக் கலக்கியது!

மிகச் சிறந்த ஊடகவியலாளரான, அறிஞர் மொஹானி, தன் எழுத்தாற்றலைத் தேச விடுதலைக்கு அர்ப்பணிக்கும் முகமாக "உருது முஹல்லா" என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார்; அப்பத்திரிக்கை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களைச் சிந்திக்க வைக்கும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.

ஒருமுறை உருது முஹல்லாவில் பிரிட்டீஷாருக்கு எதிரான அக்னி வார்த்தைகளைத் தாங்கிய ஓர் இளைஞனின் கவிதை பிரசுரமானது. அக்கவிதை ஏற்படுத்திய சலசலப்பினால் கொதித்துப்போன ஆங்கில அரசு அறிஞர் மொஹானிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அக்கவிதையை எழுதியவர் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் அச்சுறுத்தியது. அதை தெரிவிக்க, மொஹானி மறுத்து விட்டார். மிகச் சிறந்த ஊடகவியலார் என்று வரலாற்றில் உயர்ந்தார்.

கவிதையைப் பிரசுரித்த பத்திரிக்கையின் ஆசிரியர் நான், எனவே அதற்கு நான் தான் பொறுப்பு. எழுதியவரை அடையாளம் காட்டமுடியாது. வேண்டுமானால் என்மீது நடவடிக்கை எடுங்கள் என்று அந்த நோட்டீசுக்குத் துணிச்சலுடன் பதிலளித்தார்.

ஆங்கில அரசு அறிஞர் மொஹானி மீது நடவடிக்கை எடுத்தது. கோர்ட்டுக்கு அவரை அலைக்கழித்தது. இறுதியில் ஆறுமாதச்சிறைத் தண்டனை வழங்கியது. உருது முஹல்லா பத்திரிக்கையைத் தடை செய்தது. அப்பத்திரிக்கை அச்சிடப்பட்ட ஹஜ்ரத்துக்கு சொந்தமான அச்சுக்கூடத்தை ஜப்தி செய்தது.

”யாரோ எழுதிய கவிதைக்காக நீங்கள் இத்தனைத் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா?” – என்று மொஹானியிடம் கேட்டபோது, அது யாரோ எழுதிய கவிதைதான். ஆனால் எனக்கு உடன்பாடான கவிதை. என் தேசநலன் நாடும் வார்த்தைகளைச் சுமந்த கவிதை. அக்கவிதையை என் பத்திரிக்கையில் பிரசுரித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். அதற்காக எனக்கு இத்தணடனை என்றால், என் தேசத்தின் விடியலுக்காக இத்தண்டனையை மகிழ்வோடு ஏற்கிறேன்!. – என்று பதிலளித்தார்.

ஹஜ்ரத் மொஹானி அவர்கள் கைது செய்யப்படும்போது அவரது மனைவியார் நிறைமாதக் கர்ப்பிணி. குழந்தையை ஈன்ற அத்தாய், தன் கணவனிடம், அவரது, வாரிசைக் காட்ட குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு ஒவ்வொரு சிறைச்சாலையாக அலைந்தார். எந்தச் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற குறைந்தபட்ச தகவலைக்கூட தர ஆங்கில அரசு மறுத்து விடுகிறது.

மூன்று நாட்கள் பட்டினியுடன் பல சிறைகளுக்கும் அலைந்த அத்தாய், இறுதியில் தன் கணவனைச் சந்தித்தார்.

தனது வாரிசை முதன் முதலாகப் பார்த்த அறிஞர் மொஹானி பாசம் பொங்க, சிறைக் கம்பிகளினூடே குழந்தையை வாங்கி முத்தமிட்டார். 

தன் குழந்தைக்கு ஒரு தந்தை, முத்தமிட்டது குற்றமா?

ஆங்கில அரசு அதனையும் குற்றமாக்கியது. சிறை விதிகளை மீறி நடந்தார் என்று குற்றம் சாட்டி மேலும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதைத் தொடர்ந்து சிறைச்சாலையில் அறிஞர் மொஹானி செக்கிழுத்த கொடுமையும் நடந்தது!

செக்கிழுத்த செம்மல் மொஹானி என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு பேசட்டும்.





Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive