NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Saturday, March 28, 2020

Thursday, March 26, 2020

Monday, March 23, 2020

இருள் படிந்திடுமோ என் இரவுகளில்!


கனத்துபோன மனதுடனே
இரவுகளில் நான்!
பேரானந்தம் தரும்
இரவின் அமைதியை
நடுஇரவிலும்
பசுமையுடன் இருக்கும்
என் ரசனையை
தொலைத்துவிட்டேனோ நான்?
அல்லது பறித்துவிட்டனரோ
மனுவாத பாவிகள்!

“உலகில் சிறந்த நாடு
என் நாடு
இந்திய திருநாடு..!”
என்று எத்தனை முறை
பாடியிருப்பேன்?
புளாங்கிதம் அடைந்திருப்பேன்!
எழுத்துக்களாய் வடித்திருப்பேன்!
மேடைதோறும் முழங்கியிருப்பேன்!

மீரட், பீவண்டி, பாகல்பூர்,
பாபரி மஸ்ஜித், குஜராத் என்று
இனப்படுகொலைகளால்
அவநம்பிக்கை கரு மேகங்கள்
வாழ்வில் சூழ்ந்தபோதெல்லாம்
எத்தனை எத்தனை முறை
என் தலைமுறையை
அமைதி படுத்தியிருப்பேன்!
"பொறுங்கள் பிள்ளைகளே
எல்லாம் சீராகிவிடும்!"
என்று ஆற்றுப்படுத்தியிருப்பேன்!

இன்று எல்லாம்
பறிபோகும் நிலையில்
பொய்யுரைத்தேனோ நான்?
ஆம்..!
இன்று எல்லாம்
பறிபோகும் நிலையில்
பொய்யுரைத்தேனோ நான்?

தாயகத்தின் மீதிருந்த
கண்மூடித்தனமான
'தாயகப் பித்தால்'
கடல் கடந்து பொருள்தேட
எத்தனை எத்தனை
வாய்ப்புகள் வந்தும்
அத்தனையும் புறக்கணித்த
என் இறந்தகாலம்
நையாண்டி செய்வதை ஏற்பதா?

இளமையில், கடவு சீட்டிருந்தால்
வற்புறுதப்படுவேனோ என்று
முதுமையில்
ஹஜ் வணக்கத்துக்கான கடமைவரை
அதை வாங்க மறுத்த நினைவுகள்,
கைக்கொட்டி சிரிப்பதை ரசிப்பதா?

இன்று கண்முன்னே
தலைநகர் தில்லி
வகுப்புவாத வானரங்களால்
பற்றவைக்கப்படுகிறது!
மனிதம் தோட்டாக்களால்
துளைக்கப்படுகிறது!
உணவு எரிப்பொருளும்
எதிர்காலம் சிதைக்கும் என்று
எரிவாயு உருளைகளால்
கட்டடங்கள் தகர்க்கப்படுகிறது!
வேலியாய் நின்று காக்க வேண்டிய
காவல்துறையின் பாதுகாப்பில்
அத்தனையும் நடக்கிறது!
நாட்டாமை தீர்ப்புகளாய்
நீதிமன்றங்களில்
தீர்ப்பு வாசிக்கப்படுகிறது

அந்தோ, அழகிய எனது பேரழகு
கனவுநாடு சிதைக்கப்படுகிறதே!
தெய்வமே! இது எனது தேசமா?
அல்லது ஹிட்லரின் தேசமா?
என்ற குழப்பத்தில்
சிதைந்து போகிறது எனதுள்ளம்
மௌனத்தில்
கரைந்து போகிறது எனதுயிர்காற்று

கிள்ளி கிள்ளிப் பார்க்கிறேன்
ஆம்.. என்னை
கிள்ளிக் கிள்ளிப் பார்க்கிறேன்
இது கனவாகவே இருக்கக் கூடாதா
என்று துடியாய் துடிக்கிறேன்!
நனவுகள்தான் என்றானபோது
அனலிட்ட புழுவாய் துடிக்கிறேன்!

மனுவாத எதிரி உக்கிரமாய்
இனவாத யுத்தம் தொடுத்துவிட்டும்
தமக்கென்ன என்றொரு பொது சமூகம்
என்னைச் சுற்றி!
தன் தனயனின் தாயும், மகளும்
நிர்கதியாய் நிற்பதைக் கண்டும்
ஊமையாய் நிற்கிறது
எனது அண்டை, அயலை!

இத்தனை சுமைகளையும்
பொதிகளாய் சுமந்தவண்ணம்
இன்றும் நான்
"சீராகிவிடும் கொஞ்சம்
அமைதியாய் இருங்கள்"
என்றுதான் சொல்ல முடிகிறது!
ஆம்..! இத்தனை சுமைகளையும்
பொதிகளாய் சுமந்தவண்ணம்
இன்றும் நான்
"சீராகிவிடும் கொஞ்சம்
அமைதியாய் இருங்கள்"
என்றுதான் சொல்ல முடிகிறது!

ஒவ்வொரு துன்பத்தின் பின்னும்
இன்பம் துளிர்க்கும் என்கிறது
சுற்றிச் சூழ்ந்து நிற்கும் இயற்கை!
எத்தனை எத்தனை
அநீதியாளர்களை
தன்னுள் விழுங்கி கொண்டது
இதோ நான் நிற்கும் பூமி!

இழப்பதற்கு ஒன்றுமில்லாதவன் நீ
பின்வாங்காமல் போராடு என்கிறது
என் மனஉறுதி!
உன் தேசத்தை மீட்பதற்கான
கடைசி யுத்தம் இது
இதே அஹிம்சை போராட்டத்தை
முன்னெடு அல்லது செத்துபோ
என்கிறது என் நம்பிக்கை!

இத்தனை அவநம்பிக்கைகளைக்
கடந்தும் வரலாறுகளை
எழுதிக் கொண்டிருக்கிறது
எனதருமை சமூகம்!
சமாதான ரோஜாக்களை நீட்டி
தன் குருதி மையால்
மண்ணின் மைந்தர்களின்
விடுதலைக்காக
வரலாறுகளை
எழுதிக் கொண்டிருக்கிறது
எனதருமை சமூகம்!

இன்ஷா அல்லாஹ்
ஆம்.. இறைவன் நாடினால்
இந்த சிறு பறவை ‘அபாபீல்’ கூட்டம்
மனுவாதிகளை புறமுதுகிட்டு ஓடச்செய்யும்
என்ற முழு நம்பிக்கையோடு
என் கண்களை மூடுகிறேன்!


''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Share:

Friday, March 20, 2020

Friday, March 13, 2020

Harvested Kasturi Turmeric In Terrace Garden

Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive