Saturday, December 31, 2016
Thursday, December 29, 2016
Sunday, December 11, 2016
நாளை சென்னைக்கு அருகே கரையை கடக்கும் 'வர்தா' புயல்:
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் அதி தீவிர புயல் வர்தா, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலவரப்படி சென்னைக்கு வடகிழக்கே சுமார் 480 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் வர்தா புயல், தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை (திங்கள்கிழமை) பிற்பகல் சென்னைக்கு மிக அருகே கரையை கடக்கக் கூடும் என்பதால், தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று மாலை துவங்கி நாளை வரை பரவலாக மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம். மேலும், வர்தா புயல் கரையை கடக்கும் போது 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கருத்து
விஜயதரணி |
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் இறப்பு குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் எழுந்துள்ளது. அப்போலோ மருத்துவமனை இரவு 11.30 மணிக்கு இறந்ததாகக் கூறியுள் ளது. ஆனால் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் இரவு 11.09 மணிக்கு இரங்கல் செய்தியை பதிவு செய்துள்ளார். இது பெரிய ஆச்சரியமாக உள்ளது. அதிகாரப்பூர்வமாக இறப்புச் சான்றி தழில்கூட இரவு 11.30 மணிக்கு இறந்தார் என்றுதான் இருக்கிறது. அப்படி இருக் கும்போது நாட்டின் பிரதமர் 11.09 மணிக்கே எவ்வாறு இரங்கல் செய் தியை கொடுத்தார் என்று பார்க்கும் போது இந்த மரணத்தில் பல்வேறு சந் தேகங்கள் நிச்சயமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று நான் கருதுகிறேன்.
75 நாட்கள் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பதை அறிய முடியாத சூழல் உள்ளது. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான புகைப்படமோ, வீடியோ காட்சிகளோ இதுவரை வெளியிடப்படவில்லை. மக்களின் சந்தேகத்தை போக்க இப்போதாவது அந்த புகைப்படங்களையோ, படக் காட்சி களையோ அதிமுகவோ அல்லது தமிழக அரசோ வெளியிட வேண்டும்.
ஆளுநர் அப்போலோ மருத்துவ மனைக்கு சென்றாரே தவிர, ஒரு முறை கூட சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த முதல்வரை அவர் பார்க்கவில்லை. அதனை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். ஒரு முதல்வர் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. முதல்வர் இறப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவே பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். உண்மைகளை மக்களிடம் கூற வேண்டும் என்றார் விஜயதரணி.
Saturday, December 10, 2016
Friday, December 9, 2016
மனசோட மடல்கள்: 001
மனசோட மடல்கள்… எனது
வாழ்வில் நான் சந்தித்த பல்வேறு வகையான மனிதர்களுடனான எனது கருத்து பறிமாற்றங்கள்.
நிஜங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால்.. நீங்களும் மடல்களை வாசிக்கலாம். கருத்துக்களை
ஏற்றுக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். - இக்வான் அமீர்
மதிப்பிற்குரிய சகோதரருக்கு,
தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக..!
அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களை இம்மடல் நல்ல உடல் நிலையுடனும், வீரியமான நல்லுணர்வுகளுடனும் சந்திக்கும் என்று நம்புகின்றேன். அதற்காக இறைவனிடம் இரு கரமேந்தி நெஞ்சுருக இறைஞ்சுகின்றேன். தங்களின் அன்பான மடல் கண்டேன். மகிழ்ந்தேன். அதேபோல, அடுத்து சொல்லப்போகும் சம்பவம் நினைவுக்கு வந்ததால்… மனதில் வருத்தமும் ஏற்பட்டது.
அது எப்போதும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கத்துறையினரின் அலுவலகம். உயர் அதிகாரி சங்கரும், அவருடைய சகாவும் அமர்ந்திருக்கிறார்கள். அலுவல் விஷயமாக பேசும் நண்பர் ஒரு மாதிரியாக காணப்படவே சங்கர், ”என்ன விஷயம்?” – என்று விசாரிக்கிறார்.
”ஒன்றுமில்லை சார்.. நாம் குழு ரீதியாக உயிரைக் கொடுத்து ஒருங்கிணைந்து பாடுபடுகிறோம். ஆனால், அந்த ருக்மிணியோ கடைசியில் தனி ஆளாக பெயரும், புகழும் தட்டிக் கொண்டு சென்றுவிடுகிறாள். கடந்த மூன்று “ரெய்டு“களை வேண்டுமானால் நினைத்துப் பாருங்களேன்! நான் சொல்ல வந்தது உங்களுக்கு விளங்கும்” – நண்பர் நெருடலை வெளிப்படுத்துகிறார்.
மூத்த அதிகாரி சங்கர், நண்பரைச் செல்லமாக கண்டித்தாலும், அவரது கருத்து மனம் முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டதை அவரால் தடுக்க முடியவில்லை.
ருக்மிணி சற்று படபடப்பான அதேசமயம், துணிச்சலான பெண். ஜுனியர் அதிகாரி. கடத்தல்காரர்களைப் பிடிக்க சுங்கத்துறையினர் விரிக்கும் வலைகளில் முன்னணியில் நின்று கடத்தல்காரர்களைப் பிடிப்பவள். இளம் வயதுக்கேற்ப அலட்சியமும் அவளிடம் அதிகம்.
ருக்மிணி மீது அவளுடைய மூத்த அதிகாரி சங்கருக்கும் தப்பான அபிபிராயம் வளர்கிறது. நேரிடையாக அதை அவளிடமே வெளிப்படுத்தவும் செய்கிறார். அதைக் கேட்டு வழக்கம்போலவே ருக்மிணி கோபப்படுகிறாள். அந்தக் கோபம் வீட்டில், கல்லூரியில் பயிலும் தங்கையிடம் என்று பல இடங்களில் வெடிக்கிறது. வருங்கால கணவனிடமும் பாய்கிறது. கடைசியில், அந்த குழப்பமான மனநிலையிலேயே வேலையையும் விட்டுவிட முடிவெடுக்கிறாள். அதன்படியே ராஜினாமா கடிதத்தை மேல் அதிகாரியிடம் சமர்பிக்கவும் செய்கிறாள்.
”ருக்மிணி… ஒரு குழுவாக செயல்படும்போது, இப்படிப்பட்ட புரிதல் இன்மைகள் உண்டாவது சகஜம்தான்.! அதை மனம் விட்டு பேசும்போது, நம்மீதுள்ள தப்பிப்ராயங்கள் எல்லாம் களைந்துவிடும். அதைவிட்டுவிட்டு…. பெரிய பிரச்னையாக நினைத்து வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்ளாதே… பிரச்னைகளோடு மோதக் கற்றுக் கொள். பிரச்னைகளைக் கண்டு பயப்படாமல் அவற்றை துணிச்சலுடன் எதிர்கொள்ள பழக்கிக் கொள். சரி. உனக்கு ஒரு நாள் அவகாசம் தருகிறேன். நன்றாக ஆலோசித்துவிட்டு அதன் பிறகு முடிவெடு!” – அறிவுறுத்தலோடு ராஜினாமாவை ஏற்க மறுக்கிறார் மேலதிகாரி.
ருக்மிணியுடன் பல சாகஸங்கள் செய்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களைக் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்ற துணையாக விஷயத்தைக் கேள்விப்பட்டு அவளோடு தேனீர் அருந்த அழைத்துச் செல்கிறார்.
”ருக்மிணி… மிகப் பெரிய ஒரு லட்சியத்துக்காக நாம் குழுவாய் ஒன்றிணைந்துள்ளோம். சின்னஞ்சிறு கருத்து வேறுபாடுகளில் சிக்கி பெரிய நோக்கத்திலிருந்து விலகிவிடுவது புத்திசாலிதனமல்ல. இந்த லட்சியப் பணியிலிருந்து நீயோ, நானோ விலகிவிடுவதால்.. நஷ்டம் ஒன்றுமில்லை அல்லது இந்த அமைப்பு இழுத்து மூடப்போவதுமில்லை. அந்த இடத்துக்கு வேறு நபர்கள் வருவார்கள். மீண்டும் அந்தப் பணி தொடரவே செய்யும். அதனால், இது நமது நன்மைக்கான, லட்சியப்பணி என்பதை நினைத்துப் பார்..!” – தேனீர் அருந்திக் கொண்டே நண்பர் அறிவுறுத்துகிறார்.
முதலில் மறுத்துரைக்கும் ருக்மிணி, இரவில் தீர யோசிக்கிறாள். மேலதிகாரி, தன் வருங்கால கணவன், சக அதிகாரி சொன்ன அறிவுரைகளை அசைப்போடுகிறாள்.
கடைசியில், பிரச்னைகளுடன் போராட ருக்மிணி தயாராகிவிட்டாள். இலக்கை நோக்கி முனைப்புடன் முன்னேற முடிவெடுத்துவிட்டாள். இனி அவள் என்றும் சோர்ந்திடப்போவதில்லை. குழு ரீதியாக… கூட்டமைப்புடன் … செயல்பட தன்னை முழு அளவில் சீர்த்திருத்திக் கொள்வதே இனி அவளது முதற் பணி.
சகோதரரே! இது 29.05.1992 சென்னை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான “சங்கர்ஷ்“ தொடரின் இறுதிப்பகுதி. ஒவ்வொரு இயக்கவாதியும் படிப்பினைப் பெற வேண்டிய நல்ல நிகழ்ச்சி இது.
மிகச் சாதாரண சின்னஞ்சிறு இலட்சியம் கொண்ட ஓர் அமைப்பைச் சார்ந்தவர்களிடம் எவ்வளவு கட்டுப்பாட்டுடன், ஒழுக்கத்துடன், ஒருங்கிணைப்புடன், முழு வீச்சுடன் செயல்பட வேண்டியிருக்கிறது.
ஆனால், மிகப் பெரிய இலட்சியத்துக்காக.. மனித குலத்துக்கு வழிகாட்டுவதற்காக, அவர்களின் முன்னேற்றத்துக்காக, இறைநெறியை மேலோங்கச் செய்வதற்காக ஒன்று திரண்டிருப்பவர் நாம். அதற்காக ஒரே அணியாய் நின்று நமது சக்தி, சாமார்த்தியங்களை எல்லாம் ஒன்றுத் திரட்டி பாடுபட வேண்டியவர்கள் நாம். இந்நிலையில், இயக்கத்திலிருந்து விலக முடிவெடுத்துவிட்டேன்!” – என்று பேசுவது புத்திசாலித்தனமான செயலே அல்ல. .. ருக்மிணியைப் போல..!
ஓர் அமைப்போ, இயக்கமோ எனப்படுவது என்ன?
ஒரு கொள்கைக்காக.. அதை நிறைவேற்றும் நோக்கத்துடன் திரளும் பல்வேறு தனிநபர்கள் ஒன்று சேர்ந்து இயங்கும் குழுமம் அது. அதில் இடம் பெற்றிருப்பவர் அனைவரும் மனிதர்தான்..! அந்த இயக்கத்தின் கொள்கை, கோட்பாடுகளால் ஈர்க்கப்படும் அந்த கடைசிநேரம்வரை பல்வேறு விதமான பலவீனங்களில் மூழ்கியிருந்தவர்கள். இவர்கள் வானவர்கள் அல்ல.
தமது அமைப்பின் கொள்கையை நிறைவேற்ற பல்வேறு சூழல்களையும், பிரச்னைகளையும், சொந்த வாழ்க்கையிலும், கூட்டு சமூக வாழ்க்கையிலும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இவ்வளவு அர்ப்பணங்களுக்கு மத்தியில், அவர்கள் முன்வரும் நிலையில், அதைக் கண்டு மகிழ்ச்சியடையாமல், எப்பாடுபட்டாவது அதற்கு ஒத்துழைப்புத் தராமல் .. இயக்கத்தார் மத்தியில் நிலவும் பலவீனங்களை களைந்திட இறைவனிடம் இறைஞ்சாமல், ஏதோ கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டு, விதவிதமான கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு மனம் போன போக்கில் செயல்பட்டால் மந்திரத்தால் மாங்காய் விழாது… சகோதரரே… மந்திரத்தால் ஒருகாலும் மாங்காய் விழாது..!
பார்த்தவுடனேயே இயகத்தின் பக்கம் ஈர்க்கப்பட வேண்டுமென்றால், சற்று மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்…. ”என்ன.. அந்தத் தகுதி முதலில் நம்மிடம் இருக்கிறதா?” ஒரு தலைவர் செய்வது தவறுதான்! ஆனால், அதே தவறை தொண்டர் செய்வதும் சரியாகிவிடாதே..! நாம் எப்போது நம்மைச் சீர்த்திருத்திக் கொள்ளப் போகிறோம்? ஒரு வளரும் இயக்கத்தின் ஆரம்ப பயணமிது. நிறைய குறுக்கீடுகள், இடர்பாடுகள், குறைகள் இருக்கலாம். கருத்து வேறுபாடுகள் ஏராளமாக எழலாம். ஆனால், அவற்றைப் பெரிது படுத்தி கொள்கையை, குறிக்கோளை கைவிட்டுவிடக் கூடாது.
காலம் சென்ற மர்ஹும் அலி அஹ்மது சௌத்ரி (ரஹ்) ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். அவர் சொல்கிறார்: ”இந்த நாட்டில் இயக்கப் பணிகள் முதல் தரத்தை அடையாவிட்டால்… மாதத்தின் 25 நாட்களை என்னுடைய சுயசீர்த்திருத்தத்துக்காக செலவழிக்கத் தயார்!”
எத்தனை மகத்தான் சொற்கள் இவை! நாம் இப்படி என்றேனும் சிந்தித்ததுண்டா..?
நபிகளார் இறைவனின் திருத்தூதர். சத்தியவான். உண்மையாளர். ஆனாலும், அவரது போதனைகள் உடனே செவிமடுக்கப்பட்டனவா? அவை மக்களின் இதயங்கைளைத் தொட, இருபத்து மூன்று ஆண்டுகள் அல்லவா ஆனாது! இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனை எத்தனை துன்பங்கள்..! துயரங்கள்…! தியாகங்கள்..! உயிரிழப்பு அர்ப்பணங்கள்…! இவற்றின் ஒரு சிறு பகுதியை நாம் ஏற்கத் தயாரா? ஆம்.. என்றால்… நம்புங்கள்.. இயக்கம் வளர்ந்துவிட்டது என்று..!
மறுபடியும் நினைவூட்டுகிறேன்:
- பல தனிநபர்களால் கட்டப்பட்ட அமைப்புதான் இயக்கம் என்பது.
- ஒவ்வொரு தனிநபரின் தூய எண்ணத்தின் அடிப்படையிலான உழைப்பு, முயற்சி, அர்ப்பணம் இவற்றின் வழியேதான் இயக்கம் முன்னெடுத்து செல்லப்பட்டு வெற்றி இலக்கை எட்ட முடியும்.
- தனி நபரின் பலவீனங்களை, குறைபாடுகளை பெரிது படுத்த வேண்டாம்.
- அவரின் மற்றொரு புறத்திலுள்ள வலிமைகளைப் பாருங்கள்.
- குற்றங் குறைகளை மன்னித்துவிடுங்கள்.
- குறையுள்ள மனிதருக்காக வருத்தப்படுங்கள். அவர் தம்மைச் சீர்த்திருத்திக் கொள்ள நளினமாக சுட்டிக் காட்டுங்கள்.
- அவருக்காக இறைவனிடம் இறைஞ்சுங்கள்..!
நபிகளார் வலியுறுத்தியுள்ள முக்கியமான ஐந்து விஷயங்கள் திர்மிதியில் பதிவு செய்யப்பட்டிருப்பவை:
1. கூட்டமைப்பு
2. செவியேற்றல்
3. கீழ்ப்படிதல்
4. ஹிஜ்ரத் செய்தல்
5. அறப்போர் புரிதல்
கூட்டமைப்பு இல்லாமல் இஸ்லாம் இல்லை என்கிறார் நபித்தோழர் உமர். கோபத்தால் தனித்து ஒதுங்கியிருந்து இறைக் கோபத்திற்கு ஆளாக வேண்டாம். ஒன்று இயக்கத்துடன் இணைந்து உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுங்கள் அல்லது உங்களுக்குப் பிடித்த இயக்கத்துடன் இணைந்து இந்த பொறுப்புகளை நிறைவேற்றுங்கள்.
கருணையுள்ள இறைவன் நம் பாவங்களையும், பிழைகளையும் மன்னிப்பானக! ஈருலகிலும் வெற்றியைத் தந்தருள்வானாக! உலகெங்கும் அமைதித் தவழ நம்மை வழிநடத்துவானாக!
அன்புடன்,
இக்வான் அமீர்.
Thursday, December 8, 2016
Wednesday, December 7, 2016
நான் யாரிடம் கேட்க?
”நானாஜீ, முதலமைச்சரம்மா அப்போலாவுலே எத்தனை நாள் இருந்தாங்க? – எனது பேரன் கேட்டான்.
”எழுபத்தைஞ்சு நாள் இருந்தாங்கப்பா.. ஏன் கேட்குறே..” – என்றேன் நான்.
”இல்ல.. அவங்கள சேர்த்திருந்த ஹாஸ்பிடல் ரொம்பவும் காஸ்ட்லியாச்சே.. அதான் கேட்டேன்..!” – என்றவன் சிறிது நேரம் கழித்து, ”நானாஜீ… ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாயிருக்கும்?” – என்றான் தொடர்ந்து.
”தெரியலேப்பா… அவங்களுக்கு ரொம்பவும் காஸ்ட்லியான மருத்துவத்தை, ஹை-டெக் தொழில்நுட்பத்தோடு கூடிய உபகரணங்களை வைச்சு.. உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள வச்சு… மருத்துவம் பார்த்தாங்க.. அப்படியும் பாவம்… அவங்கள காப்பாத்த முடியலியேப்பா..” – வருத்தப்பட்டேன் நான்.
”நானும் செய்திகள்லே கேட்டேன் நானாஜீ. அதான் கேட்குறேன். ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாயிருக்கும்..? சும்மா சொல்லுங்களேன்..!” – விடாப்பிடியாய் பேரன் நின்றான்.
”என்ன ஒரு நாளைக்கு சில ஆயிரங்களாவது இருக்கலாம். சில லட்சங்களாவது இருக்கலாம். எனக்கு தெரியாது கண்ணா..”
”இந்த ஆயிரங்களை.. லட்சங்களை… எழுபத்தைஞ்சு நாட்களோட பெருக்கினால்… பல லட்சங்கள்… பல கோடிகள் ஆகுமே.. இது யாரோட செலவு?” – அவன் சாதாரணமாகதான் கேட்டான்.
நான் திகைத்து நின்றேன்.
”எனக்கு தெரியாதப்பா.. அவங்க முதலமைச்சர் இல்லியா… அதனாலே கவர்மெண்ட் செலவு செய்திருக்கலாம். இல்லேன்னா.. அவங்களோட சொந்த செலவாக இருக்கலாம். கட்சி செலவிலும் இருக்கலாம். இல்லேன்னா… அந்த ஹாஸ்பிடலே செலவை ஏத்துட்டிருக்கலாம்..!” இப்படிதான் என்னாலே வரிசைப்படுத்த முடிந்தது.
இந்தக் காலத்து பிள்ளையல்லாவா அவன், “நான்- ஸ்டாப்பாக“ கேள்விகளை அடுக்கலானான்.
கவர்மெண்ட் என்பது நாமதான்..! கவர்மெண்ட் பணம் என்பதும் நமது பணம்தான்..! நமக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா.. இவ்வளவு பெரிய செலவை ஏத்துப்பாங்களா? அவங்க பணம்.. கட்சி பணம்னா.. இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது? அந்த ஹாஸ்பிடலே செலவை ஏத்துட்டுச்சுன்னா நமக்கும் ஃபிரீயா அந்த ஹாஸ்பிடல் செலவை ஏத்துக்குமா?” சொல்லுங்க நானாஜீ.
நான் என்னத்த சொல்றது? குழந்தை… குழந்தைத்தனமான கேள்விகளை முன் வைக்குது.. நான் என்னத்த சொல்ல..? நமது அமைப்பிலுள்ள குளறுபடிகளை புரிந்து கொள்ளும் வயது அவனுக்கு இல்லை.
இதற்குள், ”டேய்.. எங்கடா போயிட்டே..?” எனது மகள் அழைக்க… ”இதோ.. வரேம்மா..!” பேரன் அங்கிருந்து ஓடினான்.
நல்ல வேளை பதில் சொல்வதிலிருந்து அப்போதைக்கு நான் தப்பித்தேன்.
நமக்கு இந்த நிலைமை வந்திருந்தா என்னவாகியிருக்கும்? எனது மனது கேட்க..
”ஆரம்பத்திலேயே தூக்கிவாரிப் போட்டிருப்பாங்க.. புதைச்ச இடத்துலே இந்நேரம் புல்லு முளைச்சிருக்கும்!”
- எனது மனசு தயங்காமல் பதில் சொன்னது.
அதேநேரம் அவன் அடுக்கடுக்காக வைத்த கேள்விகள் என்னுள்ளும் எழுவதை தடுக்க முடியவில்லையே நான் யாரிடம் சென்று கேட்க?
Tuesday, December 6, 2016
இரங்கல்: ஒற்றைப் போராளி வீழ்ந்தார்..!
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
துரதிஷ்டவசமாக கடைசிவரை அவரை கருநிழல்களாக பற்றிப் பீடித்திருந்த நிழல்
அதிகாரங்களை புறக்கணித்திருந்தால் இன்னும் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்க
முடியும். மக்கள் நலப்பணிகளில் மிகச் சிறப்பாக ஈடுபட்டிருக்க முடியும்.
அவர் தன் வாழ்நாளில் ஒரு சிறந்த வழிகாட்டியைப் பெற்றிருந்தால் ஒரு எளிய
மனுஷியாக வாழ்ந்து உலகின் தலைச்சிறந்த மக்கள் அரசியல் அதிகார நாயகியாக
மிளிர்ந்திருக்கவும் முடியும். >>> இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
"என் தந்தையை 3 வயது இருக்கும் பொழுதே இழந்து விட்டேன், 22 வயதில் தாயையும் இழந்துவிட்டேன். என் குடும்பத்தில் எவரும் 60 வயதை எட்டியதில்லை.... நான் எட்டிவிட்டேன் என்பது இறைவனின் அருள்! இனி எஞ்சிய வாழ்நாள் என்பது எனக்கான கூடுதல் அவகாசம். அதை மக்களுக்காகவே அர்ப்பணிப்பேன்!”- 24.02.2008 – அன்று மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா சொன்னது இது. சொன்னபடியே ஏறக்குறைய அவர் வாழ்ந்தும் காட்டிவிட்டார்.இந்திய அரசியலில் ஒரு விடிவெள்ளியாக திகழ்ந்த ஜெயலலிதா இன்று நம்மிடையே இல்லையாயினும், அவர் வாழ்க்கையிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம்.
ஒற்றையாய் இருந்து, ஒற்றையில் போராடி, ஒரு கட்டத்தில் தமது அன்புக்குரிய வாழ்க்கைத்துணை உறவுகள், மெல்லிய உணர்வுகள் எல்லாம் ஆணாதிக்க சமூகத்தால் பலவந்தமாக பிடுங்கப்பட்டநிலையிலும், பின்னாளில் அந்த அரசியல் உறவையும் இழந்து, அதைத் தொடர்ந்து அரசியல் வாரிசுரிமைக்காக ஒற்றையாகவே போராடி தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் அவர். அதுவும் பெண்ணியம் புதைக்கப்படும் ஒரு சமூக அமைப்பில் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்றாகும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஜனநாயக அமைப்பின் ஒற்றை ராணியாகவே இருந்ததால் என்னவோ அவர் ஆணாதிக்கத்தை தமது காலடியில் பணிய வைத்தார்.
துரதிஷ்டவசமாக கடைசிவரை அவரை கருநிழல்களாக பற்றிப் பீடித்திருந்த நிழல் அதிகாரங்களை புறக்கணித்திருந்தால் இன்னும் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும். மக்கள் நலப்பணிகளில் மிகச் சிறப்பாக ஈடுபட்டிருக்க முடியும். அவர் தன் வாழ்நாளில் ஒரு சிறந்த வழிகாட்டியைப் பெற்றிருந்தால் ஒரு எளிய மனுஷியாக வாழ்ந்து உலகின் தலைச்சிறந்த மக்கள் அரசியல் அதிகார நாயகியாக மிளிர்ந்திருக்கவும் முடியும்.
காலம் எல்லோருக்கும், எல்லா வசதிகளும் கொடுப்பதில்லை. அவ்வகையில் கிடைத்த அனைத்தையும் முடிந்தளவு சிறப்பாக்க நினைத்த மக்கள் தலைவர்தான் ஜெயலலிதா.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று இரவு (05.12.2016) 11.30 மணிக்கு பிரிந்ததாக நள்ளிரவு 12.15 மணிக்கு மருத்துவமனை நிர்வாகத்தால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில், காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு மற்றும் சில மருத்துவக் காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு உலகின் தலைச் சிறந்த மருத்துவக் குழுவினரால், சர்வதேச அளவிலான உயரிய மருத்துவ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை முறைகள் பலனளிக்கவில்லை. மனிதன் மரணத்தை வெல்ல முடியவில்லை!
அறிவியல், தொழில்நுட்பங்களும், மனித முயற்சிகளும் முற்றாக செயலிழந்து போகும் தருணங்களில் மரணமும் ஒன்று. ”நீங்கள் எங்கிருந்தாலும், மரணம் உங்களை வந்தடைந்தே தீரும். நீங்கள் உறுதிமிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே!”” – என்று அழுத்தம் திருத்தமாக உலகின் நிலையாமையை, மனிதனின் இயலாமை மறைநூல் எடுத்துரைக்கிறது.
இந்த யதார்த்தத்தை வாழும் காலத்திலேயே ஜெயலலிதாவுக்கு முன்னிலைப்படுத்தும் நல்லாலோசகர் அமையவில்லை. நாட்டின் பிரதமர் மோடிவரை அரசியல் தாக்கத்தை உருவாக்கி தனது உடலுக்கு மரியாதை செய்ய வைக்கும் அளவுக்கு செல்வாக்குப் படைத்த ஜெயலலிதா இன்னும் மாபெரும் ஆளுமைகள் நிறைந்த ஓர் அற்புத உலகத் தலைவராக உருவெடுத்திருக்க முடியாமல் போனது மற்றுமோர் துரதிஷ்டமே..!
Monday, December 5, 2016
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடம்: அப்போலோ மருத்துவமனை அறிவிப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை அப்போலோ செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டியும் தன்னுடைய டிவிட்டர் பதிவில் உறுதிபடுத்தியிருக்கிறார்.
இதுதொடர்பாக, சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், நேற்று திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இ.சி.எம்.ஓ. (Extra corporeal Membrane Oxygenation) மற்றும் பிற உயிர் பாதுகாப்பு சாதனங்கள் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், நேற்று திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இ.சி.எம்.ஓ. (Extra corporeal Membrane Oxygenation) மற்றும் பிற உயிர் பாதுகாப்பு சாதனங்கள் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ.சி.எம்.ஓ. என்பது, இதயம் மற்றும் நுரையீரல் அவையங்கள் முழுமையாக செயல்படாத நிலையில், வெளியில் செயற்கையான கருவி மூலம் ரத்தத்தை சுத்திகரித்து, ஆக்ஸிஜனை உடலுக்குள் செலுத்துவதற்கான மருத்துவ முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இ.சி.எம்.ஓ. என்பது, இதயம் மற்றும் நுரையீரல் அவையங்கள் முழுமையாக செயல்படாத நிலையில், வெளியில் செயற்கையான கருவி மூலம் ரத்தத்தை சுத்திகரித்து, ஆக்ஸிஜனை உடலுக்குள் செலுத்துவதற்கான மருத்துவ முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Sunday, December 4, 2016
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி குறித்து கவலை அடைந்தேன். அவர் விரைவில் குணம்பெற பிரார்த்திக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
பிரதமர் மோடியிடம் சபாஷ் பெற்ற இன்ஜீனீயர் 2,000 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்து கைது
அபிநவ் வர்மா |
அபிநவ் வர்மாவிடமிருந்து 42 லட்சம் போலி 2000 ரூபாய் நோட்டுக்களை பஞ்சாப் காவல்துறை கைப்பற்றியுள்ளது. 30 சதவீத தரகு கட்டணம் பெற்று கொண்டு, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக தற்போது இந்திய ரிசர்வ் வங்கியால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2,000 ரூபாய் போலி நோட்டுக்களை வழங்கி கொண்டிருந்தபோது அபிநவ் வர்மா கைது செய்யப்பட்டிருக்கிறார். இவருடன், அபிநவ் வர்மாவின் சகோதரி விஷாகா வர்மாவும், லூதியானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வீட்டுமனை வியாபாரி சுமான் நாக்பாலும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அபிநவ் வர்மா பயன்படுத்திவந்த புத்தம் புதிய சொகுசு ஆடி காரில் இருந்து போலி 2,000 ரூபாய் நேட்டுக்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. மிக முக்கிய அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கும் சிவப்பு சுழல் விளக்கு அந்த காரில் பொருத்தப்பட்டிருந்தது. இந்தத் தகல்வளை மொஹாலி போலிஸ் துணை கண்காணிப்பாளர் பார்மின்தர் சிங் தெரிவித்திருக்கிறார்.
அபிநவ் வர்மாவின் "லிவ் பிரைய்லி" என்னும் பெயர் கொண்ட சண்டிகர் அலுவலகத்தில் இந்த நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுபடுகிறது.
பஞ்சாபில் போலி புதிய ரூபாய் நோட்டுக்கள் பரவி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, அதில் தொடர்புடையோரை கைது செய்ய காவல்துறை மும்முரமாக சோதனைகளை நடத்திவருகிறது. இவற்றில் எல்லாம் அபிநவ் வர்மா தலைமையிலான இந்த கும்பல் தப்பித்து வந்தது. கடைசியில், நோட்டுக்களை மாற்றுவதில் தரகு தொகை பெற்ற பிறகும் போலியான நோட்டுக்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வந்ததாக காவல்துறை தெரிவிக்கிறது.
கைது செய்யப்பட்டிருக்கும் அபிநவ் வர்மா, "மேக் இன் இந்தியா" திட்டத்தில் தன்னுடைய சிறந்த பணிக்கும், புதிய படைப்பாற்றலுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டை பெற்ற பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளிகளான பார்வையற்றோர் பயன்படுத்தும் குச்சிகளில் பொருத்தப்படும் உணர்வலை கருவிகளை (சென்ஸார்) தயாரிக்கும் பொறியியல் பட்டதாரிதான் அபிநவ் வர்மா.
இந்நிலையில், புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் பாதுகாப்பு சம்பந்தமான நம்பகத்தன்மை பொதுமக்களிடையே கேள்விக்குறியாகியுள்ளது.
Saturday, December 3, 2016
Friday, December 2, 2016
Thursday, December 1, 2016
அதிகாரத்திடம் உண்மை பேசுங்கள்
தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருப்போர், அவர்களை தலைமைப் பொறுப்பில் அமர்த்தியோர் ஆகிய இரு சாரருக்கும் இருக்க வேண்டிய பொறுப்புகள் முக்கியமானவை. சுயநலம், மோசடி, நம்பிக்கைத் துரோகம் ஆகியவை இல்லாதவையாக பரஸ்பரம் நலம் நாடும் பண்புகளாக அந்த பொறுப்புகள் இருத்தல் அவசியம்.
நபித்தோழர் உமர் ஜனாதிபதியாய் பொறுப்பேற்றிருந்த நேரம் அது. அவரது தோழர்களான அபூஉபைதா மற்றும் முஆத் பின் ஜபல் ஆகிய இருவரும் இணைந்து ஜனாதிபதிக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினார்கள்:
”இறைநம்பிக்கையார்களின் தலைவருக்கு, அபூ உபைதா பின் ஜர்ராஹ் மற்றும் முஆத்பின் ஜபல் ஆகியோர் எழுதிக் கொள்வது. தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!
ஜனாதிபதி அவர்களே, தாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக தங்கள் வாழ்வை சீர்த்திருத்திக் கொள்வதில் மிகவும் அக்கறை உள்ளவராக இருந்தீர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால், தற்போதோ தங்களின் தோள்களில் ஏராளமான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒழுக்கப் பயிற்சி அளித்து அவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பும் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தங்களின் அவைக்கு, உயர் அந்தஸ்து உடையோரும் வருவார்கள். பாமரரும் வருவார்கள். கற்றோரும் வருவார்கள். கல்லாதோரும் வருவார்கள். நண்பர்களும் வருவார்கள். பகைவர்களும் வருவார்கள். ஆனால், எல்லோருக்கும் பாராபட்சமற்ற நீதி வழங்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு தங்களுக்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். இதற்கேற்ப எத்தகைய உயரிய நடத்தையை தாங்கள் கையாள வேண்டியிருக்கும் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். உலக மக்கள் அனைவரும் இறைவனின் சந்நிதானத்தில் ஆஜராக வேண்டிய அந்த மறுமை நாளை, அச்சத்தால் இதயங்கள் படபடக்கும் அந்த நாளை கண் முன் நினைத்திருங்கள். இறைவனின் திருமுன் யாரும் வாய்த்திறக்க முடியாத நாள் அது. இறைவனின் கருணையை எதிர்நோக்கியும், கிடைக்கவிருக்கும் தண்டணைக் குறித்து அச்சத்தாலும் உள்ளங்கள் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் நாள் அது! இந்த நாள் சதா தங்கள் கண்முன் இருக்கட்டும்!
கடைசியாக, ”ஒரு காலம் வரும். அப்போது, மனிதர்கள் வெளித்தோற்றத்தில் நண்பராயும், உள்ளுக்குள் பகைவராயும் இருப்பார்கள்!” - என்ற நபி மொழியை ஜனாதிபதி அவர்களுக்கு நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
இந்தக் கடிதம் முற்றிலும் தங்களின் நலம் நாடும் கடிதமாகவே எழுதப்பட்டுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
தங்கள் மீது இறையருள் பொழிவதாக!
இப்படிக்கு,
அபூஉபைதா மற்றும் முஆத்பின் ஜபல்.
நபித்தோழர் உமர் ஜனாதிபதியாய் பொறுப்பேற்றிருந்த நேரம் அது. அவரது தோழர்களான அபூஉபைதா மற்றும் முஆத் பின் ஜபல் ஆகிய இருவரும் இணைந்து ஜனாதிபதிக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினார்கள்:
”இறைநம்பிக்கையார்களின் தலைவருக்கு, அபூ உபைதா பின் ஜர்ராஹ் மற்றும் முஆத்பின் ஜபல் ஆகியோர் எழுதிக் கொள்வது. தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!
ஜனாதிபதி அவர்களே, தாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக தங்கள் வாழ்வை சீர்த்திருத்திக் கொள்வதில் மிகவும் அக்கறை உள்ளவராக இருந்தீர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால், தற்போதோ தங்களின் தோள்களில் ஏராளமான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒழுக்கப் பயிற்சி அளித்து அவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பும் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தங்களின் அவைக்கு, உயர் அந்தஸ்து உடையோரும் வருவார்கள். பாமரரும் வருவார்கள். கற்றோரும் வருவார்கள். கல்லாதோரும் வருவார்கள். நண்பர்களும் வருவார்கள். பகைவர்களும் வருவார்கள். ஆனால், எல்லோருக்கும் பாராபட்சமற்ற நீதி வழங்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு தங்களுக்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். இதற்கேற்ப எத்தகைய உயரிய நடத்தையை தாங்கள் கையாள வேண்டியிருக்கும் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். உலக மக்கள் அனைவரும் இறைவனின் சந்நிதானத்தில் ஆஜராக வேண்டிய அந்த மறுமை நாளை, அச்சத்தால் இதயங்கள் படபடக்கும் அந்த நாளை கண் முன் நினைத்திருங்கள். இறைவனின் திருமுன் யாரும் வாய்த்திறக்க முடியாத நாள் அது. இறைவனின் கருணையை எதிர்நோக்கியும், கிடைக்கவிருக்கும் தண்டணைக் குறித்து அச்சத்தாலும் உள்ளங்கள் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் நாள் அது! இந்த நாள் சதா தங்கள் கண்முன் இருக்கட்டும்!
கடைசியாக, ”ஒரு காலம் வரும். அப்போது, மனிதர்கள் வெளித்தோற்றத்தில் நண்பராயும், உள்ளுக்குள் பகைவராயும் இருப்பார்கள்!” - என்ற நபி மொழியை ஜனாதிபதி அவர்களுக்கு நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
இந்தக் கடிதம் முற்றிலும் தங்களின் நலம் நாடும் கடிதமாகவே எழுதப்பட்டுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
தங்கள் மீது இறையருள் பொழிவதாக!
இப்படிக்கு,
அபூஉபைதா மற்றும் முஆத்பின் ஜபல்.
இந்த கடிதம் ஜனாதிபதி உமரின் கையில் கிடைத்ததும், அவர் மௌனத்தில் உறைந்துவிட்டார். நெடுநேரம் அப்படியே இருந்தார். ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு இப்படி பதில் கடிதம் எழுதினார்:
”உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக! நீங்கள் இருவரும் கூட்டாக எழுதிய கடிதம் கண்டேன்.
அருமைத் தோழர்களே, நான் இதற்கு எப்படி பதில் அளிப்பது? உமர் என்ற தனி நபரிடம், பிரத்யேகமான எந்த வழியும், வலிமையும் இல்லை! அப்படி ஏதாவது கிடைக்கும் என்றால் அது இறைவனின் புறத்திலிருந்துதான் எனக்குக் கிடைக்க வேண்டும்.
முன்னோர்களின் எச்சரிக்கையைப் போலவே, இறுதிநாள் குறித்து நீங்களும் எச்சரித்துள்ளீர்கள். இதன் மூலம் உங்கள் பொறுப்புகளை நீங்கள் செவ்வனே நிறைவேற்றிவிட்டீர்கள். இரவும், பகலும் மாறிமாறி வருவதன் மூலம் இந்த இறுதித்தீர்ப்பு நாளும் மிக வேகமாக நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. தூரமானவற்றையெல்லாம் நெருக்கமானதாக்குகிறது. நவீனத்தையெல்லாம் கண நேரத்தில் பழமையாக்கிவிடுகிறது. முன்னறிவிப்பு செய்யப்பட்ட ஒவ்வொன்றையும் நமக்கு எடுத்துரைக்கிறது. உலக வாழ்க்கை முடிந்து மறுமை வாழ்க்கை ஆரம்பிக்கும்போது ஒவ்வொருவரும் சுவனம் செல்வர் அல்லது நரகம் புகுவர் என்பதை நானும் அறிவேன் தோழர்களே!
“ஒரு காலம் வரும். அப்போது மனிதர்கள் வெளித்தோற்றத்தில் நண்பராயும், உட்புறத்தில் பகைவராயும் இருப்பர்!” – என்ற நபிகளாரின் முன்னறிவிப்பை சுட்டிக் காட்டினீர்கள். இது நிச்சயமாக உங்களைக் குறிக்கவில்லை என்பதை மட்டும் உறுதியாக நம்புங்கள். அந்தக் காலம் வரும்போது, மக்கள் தங்கள் சுய ஆதாயங்களுக்காக ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள். பொது நலனைப் பாதுகாக்க பரஸ்பரம் அச்சப்படுவார்கள். அப்படிப்பட்ட காலத்தில்தான் முன்னறிவிப்பு செய்யப்பட்ட நயவஞ்சகம் மக்களிடையே தோன்றும்.
இறுதியாக, என் அன்புக்குரிய தோழர்களே! நீங்கள் உண்மையாளர்கள். முற்றிலும் நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் உங்கள் மடல் எழுதப்பட்டது என்பதை நான் நன்கறிவேன். உங்கள் அறிவுரைகள் தேவைப்படாதவனாக நான் இல்லை என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். அதனால், அச்சமில்லாமல் தொடர்ந்து ஆட்சி, அதிகாரத்தை விமர்சித்தவாறே இருங்கள்.
உங்கள் இருவர் மீதும் இறையருள் பொழியட்டுமாக!
இப்படிக்கு,
உமர்பின் கத்தாப்.
சமகாலத்துக்கு எவ்வளவு பொருத்தமான மடல்கள் இவை!
”உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக! நீங்கள் இருவரும் கூட்டாக எழுதிய கடிதம் கண்டேன்.
அருமைத் தோழர்களே, நான் இதற்கு எப்படி பதில் அளிப்பது? உமர் என்ற தனி நபரிடம், பிரத்யேகமான எந்த வழியும், வலிமையும் இல்லை! அப்படி ஏதாவது கிடைக்கும் என்றால் அது இறைவனின் புறத்திலிருந்துதான் எனக்குக் கிடைக்க வேண்டும்.
முன்னோர்களின் எச்சரிக்கையைப் போலவே, இறுதிநாள் குறித்து நீங்களும் எச்சரித்துள்ளீர்கள். இதன் மூலம் உங்கள் பொறுப்புகளை நீங்கள் செவ்வனே நிறைவேற்றிவிட்டீர்கள். இரவும், பகலும் மாறிமாறி வருவதன் மூலம் இந்த இறுதித்தீர்ப்பு நாளும் மிக வேகமாக நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. தூரமானவற்றையெல்லாம் நெருக்கமானதாக்குகிறது. நவீனத்தையெல்லாம் கண நேரத்தில் பழமையாக்கிவிடுகிறது. முன்னறிவிப்பு செய்யப்பட்ட ஒவ்வொன்றையும் நமக்கு எடுத்துரைக்கிறது. உலக வாழ்க்கை முடிந்து மறுமை வாழ்க்கை ஆரம்பிக்கும்போது ஒவ்வொருவரும் சுவனம் செல்வர் அல்லது நரகம் புகுவர் என்பதை நானும் அறிவேன் தோழர்களே!
“ஒரு காலம் வரும். அப்போது மனிதர்கள் வெளித்தோற்றத்தில் நண்பராயும், உட்புறத்தில் பகைவராயும் இருப்பர்!” – என்ற நபிகளாரின் முன்னறிவிப்பை சுட்டிக் காட்டினீர்கள். இது நிச்சயமாக உங்களைக் குறிக்கவில்லை என்பதை மட்டும் உறுதியாக நம்புங்கள். அந்தக் காலம் வரும்போது, மக்கள் தங்கள் சுய ஆதாயங்களுக்காக ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள். பொது நலனைப் பாதுகாக்க பரஸ்பரம் அச்சப்படுவார்கள். அப்படிப்பட்ட காலத்தில்தான் முன்னறிவிப்பு செய்யப்பட்ட நயவஞ்சகம் மக்களிடையே தோன்றும்.
இறுதியாக, என் அன்புக்குரிய தோழர்களே! நீங்கள் உண்மையாளர்கள். முற்றிலும் நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் உங்கள் மடல் எழுதப்பட்டது என்பதை நான் நன்கறிவேன். உங்கள் அறிவுரைகள் தேவைப்படாதவனாக நான் இல்லை என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். அதனால், அச்சமில்லாமல் தொடர்ந்து ஆட்சி, அதிகாரத்தை விமர்சித்தவாறே இருங்கள்.
உங்கள் இருவர் மீதும் இறையருள் பொழியட்டுமாக!
இப்படிக்கு,
உமர்பின் கத்தாப்.
சமகாலத்துக்கு எவ்வளவு பொருத்தமான மடல்கள் இவை!
(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் - 01.12.2016 அன்று வெளியான எனது ஆக்கம்)
Wednesday, November 30, 2016
Tuesday, November 29, 2016
Sunday, November 27, 2016
Friday, November 25, 2016
Thursday, November 24, 2016
Monday, November 21, 2016
Saturday, November 19, 2016
இங்கிருந்து வங்கி எவ்வளவு தூரம்?
கறுப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாக கூறி பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 நாட்களாக ஒட்டுமொத்த இந்திய மக்களையும் துயரத்தின் பிடியில் சிக்க வைத்திருப்பதை எதிர்த்து மாநிலங்களவையில் நவம்பர் 17 திங்களன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து விரிவான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று புள்ளி விபரங்களுடன் மோடி அரசின் மக்கள் விரோத சட்டத்தை அம்பலப்படுத்தினார் மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. அவரது உரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. நன்றி https://www.facebook.com/gopalant/posts/1377152875658995 Gopalan TN
““““““““““““““““““““““““““
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் படும் துன்ப துயரங்கள் குறித்து நாம் இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம்.பிரெஞ்சுப் புரட்சி நடைபெறுவதற்கு முன்பு அங்கு மக்கள் உணவு கிடைக்காமல் பசியால் பரிதவித்த சமயத்தில் பிரெஞ்சு நாட்டில் மகாராணியாக இருந்த மேரி அண்டாய்னெட் “ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன, கேக் சாப்பிடுங்கள்” என்றாராம். அதேபோன்றே நம் பிரதமர் மோடியும் ரூபாய் நோட்டுகள் இல்லாவிட்டால் என்ன, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட பிளாஸ்டிக் நோட்டுக்களை பயன்படுத்துங்கள்” என்கிறார்.
நாட்டிலுள்ள 113 கோடி மக்களில் எத்தனை பேரிடம் இதுபோன்ற டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன? நாட்டில், 2 கோடியே 60 லட்சம் பேரிடம்தான் கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன. 14 லட்சம் பேர்தான் டெபிட் கார்டுகள் மூலமாக சில்லறைக் கடைகளில் பொருட்களை வாங்குகிறார்கள். இதன் மூலம் நம் பொருளாதாரத்தை முழுமையாக இயங்க வைக்க முடியுமா?
80 சதவீத ரொக்கப் பொருளாதாரம்
நம் நாட்டில் நேரடியாகக் கொடுக்கல் வாங்கல் மூலம் 80 சதவீதத்திற்கும் மேலான ரொக்கப் பொருளாதாரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
டிரக் டிரைவர்களிலிருந்து, மீனவர்கள் வரை, தினக்கூலி தொழிலாளிகளிலிருந்து விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் வரை அனைத்துத் தரப்பினரும் இன்றைய தினம் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
2000 ரூபாய் நோட்டை வங்கியிலிருந்து நான் பெற்றேன். அதனை வாங்கிக் கொண்டு பொருட்ள்களைக் கொடுக்க எவரொருவரும் முன்வரவில்லை. இந்த 2000 ரூபாய் நோட்டுடன் நான் தில்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் சென்றபோது, விமான நிலையத்தில் இந்த நோட்டை வைத்துக்கொண்டு என்னால் எதுவும் வாங்க முடியவில்லை. பின்னர் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் சென்றேன். ரயிலிலும் உணவோ, காப்பியோ இந்த நோட்டை வைத்துக்கொண்டு என்னால் வாங்க முடியவில்லை. பின்னர் நான் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு திரும்பிவந்து, அங்கிருந்து இப்போது தில்லிக்கும் வந்துவிட்டேன். அந்த நோட்டு இன்னமும் என்னிடம்தான் இருக்கிறது. எவரும் மாற்ற முன்வரவில்லை.
என்ன இது? இந்த நாட்டிற்கு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நாடு முழுவதும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று பாருங்கள்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் சிக்கி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
அசாமில் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே அங்கே மட்டும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று மத்திய அரசாங்கம் விதிவிலக்கு அளித்திருக்கிறது.
ஆனால் வங்கத்தில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும், டார்ஜிலிங்கில் உள்ள தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களுக்கு ம் இந்த விதிவிலக்கு கிடையாது.
என்னதான் நடந்து கொண்டிருக்கிறது, இங்கே?
அசாம் தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுக்கு விதிவிலக்கு அளிக்கும் நீங்கள், மற்றவர்களுக்கு ஏன் அளிக்கக்கூடாது? மகாராஷ்டிரா அரசாங்கம் இன்றைய தினம் சினிமா டிக்கெட்டுகள் வாங்க பழைய நோட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதித்திருக்கிறது. என்ன இது? தேநீர் அருந்தவோ, உணவு சாப்பிடவோ நாம் 500 ரூபாய் நோட்டை 1000 ரூபாய் நோட்டைப் பயன்படுத்த முடியாது. ஆனால் சினிமா டிக்கெட்டுகள் வாங்கலாமாம். இதுதான் கறுப்பை வெள்ளையாக மாற்றுவதற்கான வழியா? சிலவற்றிற்கு மட்டும் எப்படி விதிவிலக்கு அளிக்கிறீர்கள்?
புலன்விசாரணை நடத்தப்பட வேண்டும்
அடுத்து, நான் சில விவரங்களைக் கையில் வைத்திருக்கிறேன். வங்கிக் கணக்கு எண், கொல்கத்தா, சென்ட்ரல் அவென்யுவில் உள்ள இந்தியன் வங்கியின் எம்ஐசிஆர் (MICR) எண் ஆயியவை ஆதாரமாக, என் கையில் உள்ளன. இதன்படி நவம்பர் எட்டாம் தேதி பிரதமர் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த அன்றைய தினம், அதற்குசில மணிநேரங்களுக்கு முன்னால், உள்ளூர் பாஜக கிளையின் சார்பாக 500 ரூபாய் நோட்டுகள், 1000 ரூபாய் நோட்டுகள் ஒரு கோடி ரூபாய்க்கு டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. நான் கூறுவது தவறு என்றால் அதை நிரூபியுங்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இது என்னிடம் உள்ள சாட்சியமாகும். அனைத்து விவரங்களையும் நான் வைத்திருக்கிறேன். எனவே, இதன்மீது புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதுதான் நாடு முழுவதும் நடந்திருக்கிறது.
`ஜெய் ஹிந்த்` அல்ல; `ஜியோ ஹிந்த்`
அடுத்து இப்போது ‘பே டிஎம்’ (Paytm) விளம்பரம் வந்திருக்கிறது. இதில் நமது பிரதமர் தோன்றி, பணம் இல்லா சமூகத்திற்கு மாறுங்கள் (move to a cashless society) என்று கூறி இருக்கிறார். இனி `ஜெய் ஹிந்த்` எல்லாம் கிடையாது. இப்போது நமது பிரதமர் விளம்பரத்தில் தோன்றி `ஜியோ ஹிந்த்` கூறிக்கொண்டிருக்கிறார். என்ன நடந்து கொண்டிருக்கிறது நாட்டில்?
உலகில் ஒரே ஒரு நாடான சுவீடன்தான் பணம் அதாவது ரூபாய் நோட்டு இல்லா பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. சுவீடனின் அனைத்து குடிமக்களையும் அந்நாட்டு அரசு 100 சதவீதம் இணையத்துடன் (Internet) இணைத்து விட்டது. எனவே அங்கே அனைத்தையும் ஐபேட் மூலம் இணையம் வழியாகவே செய்து கொள்ள முடியும்.
ஆனால் நம் நாட்டில் இன்றையதினம் இணையத்தின் மூலம் பிணைக்கப் பட்டிருப்பவர்கள் எத்தனை பேர்? உங்களிடம் உள்ள 4-ஜி மற்றும் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் மூலம் எத்தனை பேரை பிணைத்திருக்கிறீர்கள்? வசதியானவர்கள் ஒவ்வொருவரும் நான்கு போன்கள் வைத்திருக்கிறார்கள். நீங்கள் நாட்டில் விற்பனையாகியுள்ள போன்களின் எண்ணிக்கையை வைத்து நபர்களை எண்ணிவிட முடியாது.
இந்தியா போன்ற ஒரு நாட்டில், ரூபாய் நோட்டு இல்லா பொருளாதாரம் எப்படி சாத்தியமாகும்? இங்கே சுமார் 86 சதவீத மக்கள் ரொக்கப் பரிவர்த்தனை மூலமாகத்தான் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கல் வாங்கல் அனைத்தையும் பணப் பரிவர்த்தனை மூலமாகத்தான் செய்து வருகிறார்கள். அவை முற்றிலும் வெள்ளைப் பணமாகும். அவை கறுப்புப் பணம் அல்ல.
தற்போது அரசாங்கம் செய்திருக்கும் வேலை ஒரு விஷயத்தை எனக்கு நினைவுபடுத்துகிறது. ரோமானிய செனட்டர் (அரசவை உறுப்பினர்) ஒருவர் இருந்தார். அவரது பெயர், கிராக்கஸ். அவர் ஒரு ரோமானியப் பேரரசர் குறித்துப் பேசுகிறார். அவரது பெயர் சீசர் மார்கஸ் அருளியஸ் கம்மாண்டஸ் அண்டோனிமஸ் அகஸ்டஸ் (Caesar Marcus Aurelius Commodus Antoninus Augustus) என்பது ஆகும். ஜூலியஸ் சீசர் அல்ல.
இப்போது இந்தியாவில் நடைபெறும் விஷயங்களைப் பார்க்கும்போது இதுதான் என் நினைவுக்கு வருகிறது.
என்ன சாதித்துவிட்டார் மோடி?
ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று சொன்னதன் மூலம் இந்த அரசாங்கம் நான்கு முனைகளில் சாதனைகள் படைக்கும் என்று சொல்லப்படுகிறதே! அவர்கள் கூறியவற்றில் சற்று வெற்றி பெற்றாலாவது இந்த அரசாங்கத்தை பாராட்டலாம். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.
பிரதமர் குறிப்பிட்டுள்ள நோக்கங்களில் ஒன்று. கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதாகும். இங்கே நாம் அனைவருமே கடந்த பத்தாண்டுகளாகவே கறுப்புப் பணத்தைப்பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். கறுப்புப்பணத்தைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று நானே நான்கைந்து முறை பேசியிருக்கிறேன். அது கட்டுப்படுத்தப்பட வேண்டும், அது ஒழிக்கப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
நம் நாட்டில் உள்ள கறுப்புப்பணம் குறித்து உலக வங்கியின் புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன? மொத்த இந்தியப் பொருளாதாரத்தில் சுமார் 21 சதவீதம் அதாவது சரியாக 20.7 சதவீதம் கறுப்புப் பணம் இருப்பதாக அது சொல்கிறது அதாவது நம் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமாக கறுப்புப் பணம் இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதிலோ, இது ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலோ எந்தவித சந்தேகமும் இல்லை.
ஆனால், இந்தக் கறுப்புப் பணம் எங்கே இருக்கிறது?
கறுப்புப் பணத்தில் 6 சதவீதம் மட்டுமே ரூபாய் நோட்டுகளாக இருக்கிறது. நினைவில் கொள்ளுங்கள், கறுப்புப் பண பேர்வழிகள் எவரும் கருமிகள் அல்ல. அவர்கள் தங்கள் கறுப்புப்பணத்தை தலையணைக்குக் கீழே பதுக்கிவைத்துக் கொள்ளவில்லை. அதை அவர்கள் சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள். அதன்மூலம் அவர்களுக்கு மேலும் மேலும் அதிக அளவில் கறுப்புப்பணத்தை அது கொண்டுவரும். அவர்களின் கறுப்புப் பணம், ரியல் எஸ்டேட்டில் இருக்கிறது.
இப்போது 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னபிறகு, அவை 15 ஆயிரம் ரூபாய் நாணயங்களாக, தங்க நாணயங்களாக, மாறிவிட்டன. கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஏராளமாக தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு மதிப்பீட்டின்படி தங்க இறக்குமதி மும்மடங்காக உயர்ந்திருக்கிறது. தங்க நகை வியாபாரிகள் விளம்பரங்கள் செய்கிறார்கள். நானே என் போனில் ஏராளமான குறுஞ்செய்திகளைப் பெற்றிருக்கிறேன். தங்க வியாபாரிகள் எல்லோருக்கும் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். “எங்கள் கடைகள் டிசம்பர் 20 வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும். நாங்கள் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொள்வோம்.நீங்கள் கறுப்புப் பணத்தை தங்கமாக மாற்றிக் கொள்ள முடியும்” என்ற ரீதியிலான செய்திகள் பகிரங்கமாகவே வருகின்றன.
500 ரூபாய்,1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலமாக, நீங்கள் கறுப்புப்பணத்தைக் கைப்பற்றி இருக்கிறீர்களா? அல்லது அவற்றை தங்க நாணயங்களாக மாற்ற வசதி செய்து கொடுத்திருக்கிறீர்களா?
இதே பிரதமர்தான் கறுப்புப் பணம் குறித்து முன்பு நாட்டு மக்களிடையே பேசுகையில், கறுப்புப் பணத்தில் 90 சதவீதம் வெளிநாடுகளில் இருக்கிறது என்றார். இதை நாம் கூறவில்லை. அவர்தான் கூறினார். 2014 தேர்தலின்போது இதைக் குறிப்பிட்ட அவர், வெளிநாடுகளில் உள்ள கறுப்புப்பணத்தையெல்லாம் கொண்டுவந்து, நாட்டு மக்கள் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று உறுதிமொழியை அளித்தார். எங்கே போனது அந்த உறுதிமொழி? இப்போது ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தால் அந்தப் பணம் எல்லாம் திரும்பி வந்துவிடுமா?
சுவிஸ் வங்கி அதிகாரிகள், தங்களிடம் யார் யார் பணம் டெபாசிட் செய்திருக்கிறார்கள் என்ற பட்டியலை இந்திய அரசாங்கத்திடம் அளித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். நமது நிதி அமைச்சரோ, “சட்டப்பிரச்சனைகள் காரணமாக அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது,” என்கிறார்.
மொரீஷியஸ் பாதை குறித்தும், சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். நம் நாட்டின் கறுப்புப் பணத்தில் பாதிக்கும் மேலாக அவர்களிடம்தான் இருக்கிறது. அவற்றைக் கொண்டுவருவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், நீங்கள் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறீர்கள்.
முதலைகளைக் கொல்வதாக எண்ணி மீன்களை கொன்றுவிட்டார்
நம்நாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகளில் இருக்கும் கறுப்புப்பணத்தின் அளவு வெறும் 6 சதவீதம் மட்டுமேயாகும். அதைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் பிரதமர் இந்த அறிவிப்பினைச் செய்திருக்கிறார்.
ஒரு குட்டையில் உள்ள முதலைகளைக் கொல்ல வேண்டும் என்பதற்காக குட்டையில் உள்ள தண்ணீரை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டார். பெரிய முதலைகள் நீரில்லாவிட்டால் நிலத்திற்கு வந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் என்பதை அவர் மறந்துவிட்டார். பெரும் முதலைகள் தப்பித்து விட்டன. இறந்து போனவை என்னவோ சிறிய மீன்கள்தான். ஆம், இப்போது இறந்து கொண்டிருப்பது சிறிய மீன்களான நாம்தான். முதலைகள் தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
இன்றையதினம் செய்தித்தாள்களின் செய்திகள்தான் இவை. பாரத ஸ்டேட் வங்கி, தங்கள் வராக்கடன்களில் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை, ரத்து செய்திருக்கிறது.
(இந்த நேரத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குறுக்கிட்டு, கடன்கள் ரத்து செய்யப்படவில்லை. செயல்படும் சொத்திலிருந்து (performing assets) செயலற்ற சொத்தாக (non-performing assets) மாற்றப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். கடன் ரத்து செய்யப்படவில்லை!” – என்கிறார்.)
சரி, அப்படியே வைத்துக்கொள்வோம். இந்த வசதியை நீங்கள் எங்கள் விவசாயிகளுக்குச் செய்து தர தயாராய் இருக்கிறீர்களா? பிரச்சனை என்னவென்றால் இவ்வாறு செயலற்ற சொத்தாக மாற்றி, பின்னர் தள்ளுபடி செய்யப்படுபவை, பின்னாளில் பெரும் தொகையாக மாறும். 2014க்கும் 2016க்கும் இடையே இப்படித் தள்ளுபடி செய்யப்பட்டது மும்மடங்காகி இருக்கிறது.
கறுப்புப்பணப் பிரச்சனையை இந்த வழியில் தீர்த்திட முடியாது. கறுப்புப் பணம் என்ற ஒன்று எங்கும் இல்லை. கருப்புப் பணம் என்பது சுற்றிக் கொண்டே இருக்கும் ஒன்று. மொத்தமுள்ள கறுப்புப் பணத்தில் 5 அல்லது 6 சதவீதம் வேண்டுமானால் கைவச இருப்பாக இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இயங்கிக்கொண்டே, சுற்றிக் கொண்டே இருக்கிறது. அதனை நீங்கள் தடுத்து நிறுத்தவில்லை. அதனைத் தடுத்து நிறுத்தாமல் கறுப்புப் பணத்தையும் நிறுத்திவிட முடியாது. இப்போது நீங்கள் செய்திருப்பதன்மூலம் சாமானிய மக்களைத்தான் கொன்று கொண்டிருக்கிறீர்கள். சிறிய மீன்கள் இறந்து கொண்டிருக்கின்றன; பெரிய முதலைகள் உண்மையில் தங்கள் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. எனவே பிரதமர் கூறியவற்றில் உள்ள முதல் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை.
இரண்டாவது நோக்கம், கள்ள நோட்டுகள் (counterfeit notes) குறித்ததாகும்.
கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, நாட்டில் புழக்கத்தில் உள்ள 1,418 லட்சம் கோடி ரூபாயில் வெறும் 0.028 சதவீதம் அல்லது 400 கோடி ரூபாய்தான் கள்ள நோட்டுகள் ஆகும். இதனை நிதி அமைச்சரும் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார். அதை ஒழிப்பதாகக் கூறி இப்போது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் சுமைகளை ஏற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.
அடுத்து, இப்போது நீங்கள் வெளியிட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் பற்றியது. இந்த நோட்டுக்கு கள்ள நோட்டு வராது என்று என்ன உத்தரவாதம்? நாம் ஏற்கனவே பெங்களூரில் கள்ள 2000 ரூபாய் நோட்டை பார்த்துவிட்டோம்.
கள்ள நோட்டு ஒழிக்கப்பட வேண்டியது தேவை. அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதை முதலில் வரவேற்கப்போவது நாங்கள்தான். கள்ள நோட்டு அடிப்பவர்களைக் கண்டுபிடியுங்கள். கள்ள நோட்டு அடிக்கப்படுவதை நிறுத்துங்கள். நடவடிக்கை எடுங்கள். தண்டியுங்கள். இனி எவரும் அவ்வாறு கள்ள நோட்டு அடிக்காதவாறு கடும் தண்டனை விதியுங்கள். நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக நிற்போம். ஆனால் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு இது வழி அல்ல. இவ்வாறு கூறுவதும் பாசாங்குத்தனமான ஒன்றேயாகும்.
மூன்றாவதாக பிரதமர் கூறுவது, இதன்மூலம் பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பது தடுத்து நிறுத்தப்படும் என்பதாகும்.
26/11 சம்பவத்திற்குப்பின் இந்த அவையில் நாம் பயங்கரவாதத்தை ஒழித்திட புதிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று விவாதித்தோம். இப்போது அவைத்தலைவராக இருப்பவர்தான்(அருண்ஜெட்லி) அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். பயங்கரவாதிகளுக்கு நிதி வருவதைத் தடுத்து நிறுத்துவது எப்படி என்று அப்போது அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் விவாதித்தோம். இவற்றில் அதிகமான அளவிற்கு எலக்ட்ரானிக் டிரான்ஸ்பர் (இணைய வழி பணப்பரிமாற்றம்) மூலமாகத்தான் வருகிறது. அவ்வாறு வருவதை எந்த சட்டத்தின்கீழ் தடுத்து நிறுத்துவது என்றுதான் யோசித்திட வேண்டும்.
மும்பை, தாஜ் ஓட்டலில் வந்து தங்கியிருந்த பயங்கரவாதிகள் எவரும் சாக்குமூட்டைகளில் பணத்துடன் வந்து அதைச் செய்யவில்லை. எனவே, ரூபாய் நோட்டை செல்லாது என்று சொன்னால் பயங்கரவாதிகளை ஒடுக்கிவிடலாம் என்று கூறுவதன் மூலம் நீங்கள் யாரை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? பயங்கரவாதிகளுக்குப் பணம் வருவது நிறுத்தப்பட வேண்டும் என்றால் இணையவழி பணப்பரிமாற்றத்தை நிறுத்திட வேண்டும். உலகில் பல நாடுகள் இதனைச் செய்திருக்கின்றன. பயங்கரவாதிகளுக்குப் பணம் வருவதைத் தடுத்திடுவது தொடர்பாக ஐ.நா. சாசனம் மற்றும் தீர்மானங்கள் இருக்கின்றன
அவற்றைப் பின்பற்றுங்கள். அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, இதுவா வழி?
கடைசியாக, லஞ்ச ஊழல்.
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்துவிட்டால், லஞ்ச ஊழல் ஒழிந்துவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இப்போது வெளியாகியுள்ள 2000 ரூபாய் நோட்டு மூலம் இது இரட்டிப்பாகிவிடும். எப்படி நீங்கள் லஞ்ச ஊழலை ஒழிக்கப்போகிறீர்கள்?
பொதுவாக லஞ்சம் குறித்து விவாதிக்கப்படும்போதெல்லாம், அதனைப் பெறுபவரைப்பற்றி மட்டுமே பார்க்கிறீர்கள். கொடுப்பவர்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. ஓர் ஏழை ஒரு பத்து ரூபாய் கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதை அவர்கள் லஞ்சம் என்று சொல்வதில்லை. அதை அவர்கள் `சேவைக் கட்டணம்` என்கிறார்கள். கார்ப்பரேட்டுகளின் கணக்குகளை ஆராய்வோமானால், அவர்கள் இவ்வாறு பெரிய அளவில் கமிஷன்கள் கொடுத்திருப்பதை `சேவைக் கட்டணம்` என்றுதான் குறித்திருப்பார்கள். அது லஞ்சம் அல்ல. ஓர் ஏழை பத்து ரூபாய் கொடுத்தால் யாருக்காவது கொடுத்தால் அது லஞ்சம். அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்கள். ஆனால் பெரிய மீன்கள் – பெரிய கார்ப்பரேட்டுகள் – இங்குள்ள பெரிய கட்சிகளுக்கு கொடுப்பதற்கு என்ன பெயர்? அவ்வாறு கார்ப்பரேட்டுகள், பெரிய கட்சிகளுக்குக் கொடுப்பதை நிறுத்தாமல் இந்த நாட்டில் எப்படி லஞ்சத்தை தடுத்திட முடியும்? இதில் நாம் அனைவரும் ஏன் ஒத்துப்போகக் கூடாது? நான் இதனை இங்கே பலமுறை கூறிவிட்டேன். எனினும் மீண்டும் அதனை எழுப்புகிறேன். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் நிதி கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும். கார்ப்பரேட் கம்பெனியின் அந்தத் தொகைகளை அவர்கள் விரும்பினால் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அல்லது மத்திய அரசிடம் நேரடியாகத் தந்துவிடட்டும். பின்னர் நாம் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து தேர்தல் செலவுகளை எப்படிச் செய்வது என்று பேசுவோம்.
கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு பணம் தருவது என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு முதலீடாகும். எனவே அதை முதலில் நிறுத்துங்கள்.
இதில் இரண்டாவது விஷயம், அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் அவர்கள் செய்திடும் செலவினங்களையும் சேர்த்திடுங்கள். இதற்கு விதிவிலக்கு எவருக்கும் கொடுக்காதீர்கள். அரசியல் கட்சிகள் அவர்களுக்கு என்ன தேவையோ, எப்படித் தேவையோ அப்படி செலவு செய்கிறார்கள். ஒரு கார்ப்பரேட்காரரின் சொந்த விமானத்தில் பிரதமராகப் போகிறவர் பயணம் செய்ய முடியும். அவரது கட்சிக்காக நூற்றுக்கணக்கான ஹெலிகாப்டர்களை அமர்த்திக்கொள்ள முடியும். இதனை கட்சி நிதி என்று சொல்கிறீர்கள். இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது? எனவே, இவற்றை முதலில் நிறுத்துங்கள்.
லஞ்ச ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் உண்மையிலேயே நீங்கள் அக்கறை உள்ளவர்கள் என்றால் முதலில் இதனைச் செய்யுங்கள்.
அடுத்து உங்கள் நிதி அமைச்சர் அந்நிய பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்திற்கு (FCRA-Foreign Contribution Regulation Act) திருத்தம் கொண்டுவந்திருக்கிறார். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுத்தால் அது தவறு இல்லை என்று திருத்தம் கொண்டுவந்திருக்கிறார். இது ஏன்?
மீண்டும், அருண்ஜெட்லி குறுக்கிடுகிறார். ”நாங்கள் கொண்டுவந்திருக்கும் திருத்தம் என்னவென்றால், இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் கொஞ்சம் அந்நியப் பங்குகளும் இருக்குமாயின், அதனை வெளிநாட்டுப் பங்குகளாகக் கருதக் கூடாது. அவ்வாறு கருதினால் அது மிகப்பெரிய அளவில் கேடு பயத்திடும். எனவேதான் அவ்வாறு திருத்தம் கொண்டுவந்தோம்)
சீத்தாராம் யெச்சூரி தொடர்ந்து உரையாற்றுகிறார்:
”அப்படியானால் இந்தியாவில் உள்ள நிறுவனம் அயல்நாட்டில் உள்ளவர்களுக்கு நிதி அனுப்பி, அவர்கள் மீண்டும் இங்கே திரும்ப அனுப்பலாம்.
எனவே, ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் அறிவித்ததற்கான நான்கு காரணங்களுமே இதனால் நிறைவேறப்போவதில்லை.
அடுத்து, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு புதிய நோட்டுகளைக் கொடுக்க வங்கிகளை அனுமதித்திருக்கிறீர்கள். ஆனால் மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் நிலைமை என்ன? மாநில அளவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மாவட்ட, கிராமப்புற கூட்டுறவு வங்கிகளின் நிலை? நாட்டில் உள்ள மக்களில் பெரும்பகுதியினர் கிராமப்புற கூட்டுறவு வங்கிகளுடன்தான் தங்கள் தொடர்பினை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவை மிக மிக வளமான வங்கிகள். இவற்றின் வராக்கடன்கள் அல்லது செயலற்ற சொத்துகள் (NPAs) ஒரு சதவீதம் அல்லது இரண்டு சதவீதத்திற்கும் குறைவானவையாகும். ஆனால் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அவர்களுக்கு நீங்கள் அனுமதி அளிக்கவில்லை. இதன் பொருள், பெரும் பணக்காரர்கள் தங்கள் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள முடியும். நாட்டிலுள்ள மக்களில் 86 சதவீதமாக இருக்கும் கிராமப்புற மக்கள் தங்களுடைய வங்கிகளில் அவ்வாறு நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியாது என்பதுதானே. இல்லையென்றால், இதற்கு வேறென்ன பொருள்? அதனால்தான் இந்த ஆட்சியை மக்கள் முகமது-பின்-துக்ளக் ஆட்சி என்று கூறத் தொடங்கி இருக்கிறார்கள்.
எனவே, ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது பிரதமர் கூறிய எந்த நோக்கத்தையும் நிறைவேற்றப்போவது இல்லை. மக்களின் துன்ப துயரங்கள்தான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த பல நாட்களாக வங்கிகளில் நிற்கும் மக்களின் வரிசை வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது மிகவும் பரிதாபகரமான நிலை.
சமூக வலைத்தளங்களில் ஒரு ஜோக் சுற்றிக்கொண்டிருக்கிறது. ஒருவர் மற்றொருவரிடம் கேட்கிறார்: “இங்கிருந்து வங்கி எவ்வளவு தூரம்?” அதற்கு அவர், ”இரண்டு கிலோமீட்டர்” என்கிறார். ”பஸ்ஸில் போகலாமா? அல்லது நடந்துதான் போக வேண்டுமா? ” அதற்கு அவரது பதில், ”இரண்டும் வேண்டாம். என் பின்னே நில்லுங்கள், நான் வங்கிக்கு போவதற்காகத்தான் அதற்கான வரிசையில்தான் நின்று கொண்டிருக்கிறேன்”.
இதுதான் இன்றைய நிலை. ஏன் இப்படி நாட்டு மக்களைத் துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள்?
நம் நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள மக்களில் 80.8 சதவீத மக்கள் எந்த வங்கிகளுடனும் தொடர்பின்றி இருந்து வருகிறார்கள். பூகோளரீதியாக நம் நாட்டின் 93 சதவீதம் வங்கிகள் இல்லாத இடமாகும். எந்த உலகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ-வாலட்டுகள், பே டிஎம்கள் – இவை அனைத்தும் நாட்டிலுள்ள மக்களில் எத்தனை சதவீதத்தினரிடம் இருக்கின்றன? மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான சதவீதத்தினரே இவற்றைப் பெற்றிருக்கிறார்கள். 90 சதவீத மக்கள் இதில் எதனையும் பெறாத நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நாட்டிலுள்ள மொத்த பணப் பரிவர்த்தனையில் 86 சதவீதம் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களின் மூலம்தான் நடந்து வந்தது. இதனைத் திடீரென்று திரும்பப்பெற்றதன்மூலம் பொருளாதாரத்தை முழுமையாக நிலைகுலைய வைத்திருக்கிறீர்கள். பணத்தை மாற்றமுடியாமல் இதுவரை 26 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். இது மேலும் அதிகரிக்கும். மக்கள் தங்கள் தந்தையையோ தாயாயையோ குழந்தைகளையோ மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முடியவில்லை. இந்த நாட்டை எங்கே இழுத்துக்கொண்டு செல்கிறீர்கள்?
ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்வுக்கு முன்பும் இதேபோன்று ஏதோ ஒரு பிரச்சனை முன்னுக்கு வந்து, நாடாளுமன்ற விவாதமே தடம்புரண்டுவிடுகிறது. நம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்ப துயரங்களை நம்மால் விவாதிக்க முடியவில்லை. எப்படி அவர்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நம்மால் பேச முடியவில்லை.
நீதித்துறை பணியிடங்கள் காலியாக இருக்கின்றன
உயர்நீதிமன்றங்களில் 452 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஏழை மக்கள் சொல்லொண்ணாத் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். விவசாயிகள் தற்கொலைகள் 26 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இப்போது பிரதமர் மாற்று ஏற்பாடுகளுக்கு இன்னும் 50 நாட்கள் தேவை என்று கூறியிருக்கிறார். அதுவரை பழைய நோட்டுக்களை செல்லும் என்று அறிவியுங்கள். டிசம்பர் 30-ஆம் தேதி வரை பழைய நோட்டுகள் செல்லும் என்று அறிவித்திடுங்கள்
Thursday, November 17, 2016
கொஞ்சம் அமைதியாக இருங்கள்..!
நபிகளாரின் திருச்சபைக்கு வந்த ஒருவர் அங்கிருந்த மூத்த நபித்தோழர் அபூபக்கரை மிகவும் கடுமையான வார்த்தைகளால் இழிவுபடுத்த ஆரம்பித்தார். அதை அபூபக்கர் பொருட்படுத்தாமல் அமைதி காத்தார்.
வந்தவரோ தொடர்ந்து கடும் வார்த்தைகளால் சாடி கொண்டிருந்தார். அப்போதும், அபூபக்கர் வாயைத் திறக்கவில்லை.
ஆனால், சாடல் ஓய்வதாக காணோம்!
இனியும் பொறுக்க முடியாத எல்லை மீறிய நிலையில், அபூபக்கர் அவருக்கு பதில் கூறத் தொடங்கினார்.
இதைக் கண்ட நபிகளார் விருட்டென்று எழுந்து அங்கிருந்து செல்ல ஆரம்பித்தார்.
பதறிப்போன அபூபக்கர் அதற்கான காரணத்தை நபிகளாரிடம் கேட்டார்.
”தோழரே..! நீங்கள் அமைதி காத்த அந்த கடைசி தருணம்வரை உமது சார்பில் வானவர் ஒருவர் உம்மை இழிவுப்படுத்திய மனிதருக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், கோபத்தில் பொறுமையிழந்து நீங்கள் பதிலளிக்க ஆரம்பித்ததும், அந்த வானவர் சென்றுவிட்டார். அதனால்தான் நானும் இங்கிருந்து செல்ல ஆரம்பித்தேன்!” – என்று நபிகளார் தமது தோழரிடம் சொன்னார்.
பழிக்குப் பழி.. பதிலுக்கு பதில் என்றில்லாமல் பொறுமைக் காப்பது இறைவனின் பாதுகாப்பைப் பெற்றுத் தரும். மாறாக, பதிலுக்கு பதில் என்ற போக்கில் நடந்து கொள்வது இறைவனின் அன்பை பெற்றுத் தராது என்பதைதான் நபிகளார் தமது தோழர் அபூபக்கருக்கு விளக்கினார்.
ஒருமுறை, ஒரு யூத அறிஞரிடம் நபிகளார் கடன் வாங்கியிருந்தார். கடனைத் திருப்பித் தரும் தவணை இன்னும் முடியவில்லை.
இந்நிலையில், நபிகளாரிடம் வந்த அந்த யூதர் கடனை உடனே திருப்பித் தரும்படி வற்புறுத்த ஆரம்பித்தார்.
வந்தவரோ தொடர்ந்து கடும் வார்த்தைகளால் சாடி கொண்டிருந்தார். அப்போதும், அபூபக்கர் வாயைத் திறக்கவில்லை.
ஆனால், சாடல் ஓய்வதாக காணோம்!
இனியும் பொறுக்க முடியாத எல்லை மீறிய நிலையில், அபூபக்கர் அவருக்கு பதில் கூறத் தொடங்கினார்.
இதைக் கண்ட நபிகளார் விருட்டென்று எழுந்து அங்கிருந்து செல்ல ஆரம்பித்தார்.
பதறிப்போன அபூபக்கர் அதற்கான காரணத்தை நபிகளாரிடம் கேட்டார்.
”தோழரே..! நீங்கள் அமைதி காத்த அந்த கடைசி தருணம்வரை உமது சார்பில் வானவர் ஒருவர் உம்மை இழிவுப்படுத்திய மனிதருக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், கோபத்தில் பொறுமையிழந்து நீங்கள் பதிலளிக்க ஆரம்பித்ததும், அந்த வானவர் சென்றுவிட்டார். அதனால்தான் நானும் இங்கிருந்து செல்ல ஆரம்பித்தேன்!” – என்று நபிகளார் தமது தோழரிடம் சொன்னார்.
பழிக்குப் பழி.. பதிலுக்கு பதில் என்றில்லாமல் பொறுமைக் காப்பது இறைவனின் பாதுகாப்பைப் பெற்றுத் தரும். மாறாக, பதிலுக்கு பதில் என்ற போக்கில் நடந்து கொள்வது இறைவனின் அன்பை பெற்றுத் தராது என்பதைதான் நபிகளார் தமது தோழர் அபூபக்கருக்கு விளக்கினார்.
ஒருமுறை, ஒரு யூத அறிஞரிடம் நபிகளார் கடன் வாங்கியிருந்தார். கடனைத் திருப்பித் தரும் தவணை இன்னும் முடியவில்லை.
இந்நிலையில், நபிகளாரிடம் வந்த அந்த யூதர் கடனை உடனே திருப்பித் தரும்படி வற்புறுத்த ஆரம்பித்தார்.
”அய்யா, தற்போதைய சூழலில் தங்களது கடனைத் திருப்பித் தரும் நிலையில் நான் இல்லை!” – என்று நபிகளார் எவ்வளவோ சொல்லியும் அந்த யூதர் கேட்பதாயில்லை.
”தவணை முடியும் நாள்வரை என்னால் பொறுத்திருக்க முடியாது, என் கடனை இப்போது உடனே திருப்பித் தரும்வரை இங்கிருந்து நான் ஒரு அடியும் நகர்வதாக இல்லை. உங்களையும் நகரவிடுவதாக இல்லை!” – என்று முரண்டு பிடித்தார் அந்த யூத கனவான். அத்துடன் நிற்காமல் நபிகளாரை தடுத்து வைத்துக் கொண்டார்.
இந்த சம்பவம் நிகழ்ந்த சமயத்தில் மொத்த மதீனாவின் அரசியல் அதிகாரமும் நபிகளாரின் கையில் இருந்தது. இந்த அதிகாரத்தைக் கையிலெடுத்து யூதரை அங்கிருந்து அகற்றிட வேண்டும் என்றுதான் சுற்றி நின்றிந்த நபித்தோழர்கள் நினைத்தார்கள்.
பொறுமையிழந்த நபித்தோழர்களில் ஒருவர், ”இறைவனின் திருத்தூதரே, கிட்டதட்ட ஒரு கைதியைப் போல தங்களைத் தடுத்து வைத்திருக்கும் இந்த யூதரின் செயலை பொறுத்துக் கொள்ள இயலவில்லை!” – என்று கோபத்தை வெளிப்படுத்தவும் செய்தார்.
”தாங்கள் சொல்வது உண்மைதான் தோழரே..! இறைவன் அதிகார துஷ்பிரயோகம் செய்வதைத் தடுத்திருக்கிறான். அவர் கடன் அளித்தவர். நான் கடன்பட்டவன். கொஞ்சம் அமைதியாக இருங்கள்!” – என்று அவரை சமாதானப்படுத்தினார்.
இரவு கடந்து பொழுதும் புலர்ந்தது.
கும்மிருட்டு விலகி பொழுது புலரும் அந்த வேளையில், யூதரின் மனக் கதவுகளும் திறந்தன. நபிகளாரின் ஆளுமையால் அவர் ஈர்க்கப்பட்டார். தமது செல்வத்தையெல்லாம் இறைத்தூதரின் திருப்பணிகளுக்காக அர்ப்பணித்தார்.
மற்றொருமுறை, அப்துல்லாஹ் இப்னு அபீ அல் ஹஸ்மா நபிகளாருடன் முக்கிய உரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். இடையே ஏதோ ஒரு பணி நிமித்தம் செல்ல வேண்டி வந்தது. ”இதோ திரும்பி வந்துவிடுகின்றேன்!” - என்று நபிகளாரிடம் விடைப் பெற்று சென்றவர் வேலைப்பளுவில் அதை மறந்தே விட்டார்.
இப்னு அபீ அல் ஹஸ்மா திரும்பி வருவார்… வருவார்.. என்று நபிகளார் அங்கேயே காத்திருந்தார். ஒரு நாள், இரண்டு நாள் என்று மூன்று நாட்கள் இப்படியே கழிந்தன.
நபிகளாரிடம் சொன்னது நினைவுக்கு வந்ததும் பதறியடித்துக் கொண்டு அப்துல்லாஹ் இப்னு அபீ அல் ஹஸ்மா ஓடி வந்தார். ”இருங்கள்!” - என்று சொன்ன இடத்திலேயே நபிகளார் காத்திருப்பதைக் கண்டு பதறிப் போனார். தமது தவறுக்கு வருத்தம் தெரிவித்தார்.
நபிகளார் அவர் மீது சினம் கொள்ளவில்லை. எந்த கடினமான வார்த்தைகளையும் உதிர்க்கவில்லை. அமைதியுடன் சொன்னார்:
”எனக்கு பெருத்த சிரமத்தைக் கொடுத்துவிட்டீர் அப்துல்லாஹ் இப்னு அபீ அல் ஹஸ்மா, நான் உங்களுக்காக மூன்று நாட்களாய் இங்கேயே காத்திருக்கிறேன்..!”
”தவணை முடியும் நாள்வரை என்னால் பொறுத்திருக்க முடியாது, என் கடனை இப்போது உடனே திருப்பித் தரும்வரை இங்கிருந்து நான் ஒரு அடியும் நகர்வதாக இல்லை. உங்களையும் நகரவிடுவதாக இல்லை!” – என்று முரண்டு பிடித்தார் அந்த யூத கனவான். அத்துடன் நிற்காமல் நபிகளாரை தடுத்து வைத்துக் கொண்டார்.
இந்த சம்பவம் நிகழ்ந்த சமயத்தில் மொத்த மதீனாவின் அரசியல் அதிகாரமும் நபிகளாரின் கையில் இருந்தது. இந்த அதிகாரத்தைக் கையிலெடுத்து யூதரை அங்கிருந்து அகற்றிட வேண்டும் என்றுதான் சுற்றி நின்றிந்த நபித்தோழர்கள் நினைத்தார்கள்.
பொறுமையிழந்த நபித்தோழர்களில் ஒருவர், ”இறைவனின் திருத்தூதரே, கிட்டதட்ட ஒரு கைதியைப் போல தங்களைத் தடுத்து வைத்திருக்கும் இந்த யூதரின் செயலை பொறுத்துக் கொள்ள இயலவில்லை!” – என்று கோபத்தை வெளிப்படுத்தவும் செய்தார்.
”தாங்கள் சொல்வது உண்மைதான் தோழரே..! இறைவன் அதிகார துஷ்பிரயோகம் செய்வதைத் தடுத்திருக்கிறான். அவர் கடன் அளித்தவர். நான் கடன்பட்டவன். கொஞ்சம் அமைதியாக இருங்கள்!” – என்று அவரை சமாதானப்படுத்தினார்.
இரவு கடந்து பொழுதும் புலர்ந்தது.
கும்மிருட்டு விலகி பொழுது புலரும் அந்த வேளையில், யூதரின் மனக் கதவுகளும் திறந்தன. நபிகளாரின் ஆளுமையால் அவர் ஈர்க்கப்பட்டார். தமது செல்வத்தையெல்லாம் இறைத்தூதரின் திருப்பணிகளுக்காக அர்ப்பணித்தார்.
மற்றொருமுறை, அப்துல்லாஹ் இப்னு அபீ அல் ஹஸ்மா நபிகளாருடன் முக்கிய உரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். இடையே ஏதோ ஒரு பணி நிமித்தம் செல்ல வேண்டி வந்தது. ”இதோ திரும்பி வந்துவிடுகின்றேன்!” - என்று நபிகளாரிடம் விடைப் பெற்று சென்றவர் வேலைப்பளுவில் அதை மறந்தே விட்டார்.
இப்னு அபீ அல் ஹஸ்மா திரும்பி வருவார்… வருவார்.. என்று நபிகளார் அங்கேயே காத்திருந்தார். ஒரு நாள், இரண்டு நாள் என்று மூன்று நாட்கள் இப்படியே கழிந்தன.
நபிகளாரிடம் சொன்னது நினைவுக்கு வந்ததும் பதறியடித்துக் கொண்டு அப்துல்லாஹ் இப்னு அபீ அல் ஹஸ்மா ஓடி வந்தார். ”இருங்கள்!” - என்று சொன்ன இடத்திலேயே நபிகளார் காத்திருப்பதைக் கண்டு பதறிப் போனார். தமது தவறுக்கு வருத்தம் தெரிவித்தார்.
நபிகளார் அவர் மீது சினம் கொள்ளவில்லை. எந்த கடினமான வார்த்தைகளையும் உதிர்க்கவில்லை. அமைதியுடன் சொன்னார்:
”எனக்கு பெருத்த சிரமத்தைக் கொடுத்துவிட்டீர் அப்துல்லாஹ் இப்னு அபீ அல் ஹஸ்மா, நான் உங்களுக்காக மூன்று நாட்களாய் இங்கேயே காத்திருக்கிறேன்..!”
(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 17.11.2016 அன்று பிரசுரமான எனது கட்டுரை)