NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Sunday, March 11, 2018

Morning At School Ground

Share:

Monday, March 5, 2018

கொல்வதும், கொல்லப்படுவதும் ராவணின் பிள்ளைகள்..!



நேர்மைக்கு பெயர் போன, நல்லாட்சியின் நாயகனாக கருதப்பட்ட ஒரு தலைவர் திரிபுராவில் ஆட்சி இழக்க வேண்டி வந்தது. இந்நிலையில், வெறும் வெத்து வேட்டுகளாய், சுயநலமிகளாய், குறுகிய மனநிலையில் மக்களை வழிநடத்தும் தமிழக தலைவர்களை வெல்ல சங்பரிவார்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் தமிழகத்திலும் ஏற்கனவே வெற்றிப் பெற்றதற்கு அடையாளம்தான் நடப்பு பழனிச்சாமி அண்ட் பன்னீர் செல்வம் பிரதர்ஸ் ஆட்சி. ~இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

மத துவேஷங்களைத் தூண்டி வெறுப்பு அரசியலை இந்திய உப கண்டம் முழுக்க கொளுத்திவிட்ட, பாசிஸ சக்திகள் பாபரி மஸ்ஜிதை தரை மட்டமாக்கிய சூழல் அது. வெறும் சொற்ப எண்ணிக்கையிலான பாஜக சங்பரிவார் குழுவினர் அதைத் தாண்டி மைய அரசின் அதிகாரத்தைக் கைப்பற்றிய வேளை.

இத்தகைய சூழலில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய குழுத் தலைவர்கள் ஆரம்பித்து மாநிலங்கள் குறுந்தலைவர்கள்வரை உச்சரித்த அந்த சொல்லாடல் மறக்க முடியாமல் இன்னும் மனதில் பதிந்துள்ளது. “அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரிந்து அணைவது போல சங்பரிவார் பாசிஸம் விரைவில் மண் கவ்வும்!” என்ற சொல்லாடல்தான் அது அதாவது சங்பரிவார் கைப்பற்றிய இந்திய அதிகாரத்தின் உச்சக் காலக்கட்டமாக 90-களின் பிற்பகுதிகளை ஜமாஅத்தின் தலைவர்கள் கணித்திருந்தனர். அந்த கருத்தியலை அப்போது, என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியிலும் ஜமாஅத் பரப்பியது. வெறும், பொய்யும், புரட்டும், வெறுப்பு அரசியலும் மக்களிடையே நிலைக்கொள்ளாது. இந்த அண்டசாரம் சத்தியத்தின் அடிப்படையில்தான் இயங்கிவருகிறது என்று தனது தொண்டர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தது ஜமாஅத்.

ஜமாஅத்தின் இந்தக் கருத்தியலுக்கு அப்பாலும் ஏறக்குறைய  20 ஆண்டுகள் கடந்தும் பாசிஸ சங்பரிவார் அமைப்பு தனது தேர்தல் களத்தில் வெற்றி முகத்திலிருந்து திரும்புவதாய் இல்லை. நேர்மைக்கு பெயர் போன, நல்லாட்சியின் நாயகனாக கருதப்பட்ட ஒரு தலைவர் திரிபுராவில் ஆட்சி இழக்க வேண்டி வந்தது. இந்நிலையில், வெறும் வெத்து வேட்டுகளாய், சுயநலமிகளாய், குறுகிய மனநிலையில் மக்களை வழிநடத்தும் தமிழக தலைவர்களை வெல்ல சங்பரிவார்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் தமிழகத்திலும் ஏற்கனவே வெற்றிப் பெற்றதற்கு அடையாளம்தான் நடப்பு பழனிச்சாமி அண்ட் பன்னீர் செல்வம் பிரதர்ஸ் ஆட்சி.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல்களில் மட்டும் ஏறத்தாழ 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பா.ஜ.கவுக்குப் பணியாற்றி இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்று மூத்த பத்திரிகையாளர் கிஷாலாய் பட்டாச்சாரியா கூறியது நினைவுகூறத்தக்கது. இந்தக் கூற்றை தற்போது வெளியாகியுள்ள பிரசாந்த் ஜாவின்  ‘How BJP Wins’ – என்ற புத்தகமும் உறுதிப்படுத்துகிறது.

ஒற்றை தேசியத்தை பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டர்கள் அழுத்தமாக பேசினாலும், தேர்தல் என்று வரும் போது இந்த இறுக்கத்தை தளர்த்தி எப்போதும் உள்ளூர் முகமூடியை அணிந்துக் கொள்வதில் மிகத் தெளிவாக இருக்கிறது பாஜக. 

அதனால்தான், தேசிய அளவில் பசுபாதுகாப்பு - ‘கெளரக்‌ஷா’ என்று பேசுபவர்கள், வட கிழக்கு மாநில தேர்தல்கள் என்று வரும் போது, “நாங்கள் மாட்டுக்கறி உணவிற்கு எதிரானவர்கள் இல்லை!” - என்று பரப்புரை செய்தார்கள். 

அசாம் தேர்தலின் போதும் சரி, மணிப்பூர் தேர்தலின் போதும் சரி, அந்த மாநிலங்கள் குறித்து சங்பரிவார் சக்தி, விரிவாக ஆய்வு செய்து, அம்மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்தது. மக்களின் மனநிலைக்கேற்ப முகமூடியை தரித்துக் கொண்டு அவற்றை தேர்தல் பிரச்சாரங்களில் பிரதிபலித்தது.

மணிப்பூர் தேர்தலில், மாநில அரசுக்கு எதிரான மனநிலை மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் ஆகியவற்றை முன்னிறுத்திதான் வாக்கு கோரியது பாஜக. அந்த மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆயுதப்படை சிறப்பு சட்டத்துக்கு எதிரான மனநிலையில்தான் மக்கள் அனைவரும் இருந்தார்கள். இது சங்பரிவார் சக்திக்கு தெரியாததல்ல, இது, தேர்தலில் பெரும் பிரச்னையாக உருவெடுக்கும் என்று அஞ்சிய அவ்வமைப்பு, அதற்கு மாற்றான திட்டமொற்றை விரிவான ஆய்வில் கண்டறிந்தது.

மணிப்பூர் மக்கள், அந்த மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் 'போலி மோதல்கள்' (என்கவுண்டர்) சம்பவங்கள் மீதுதான் முதல்நிலை, கோபத்தில் இருந்தார்கள். ஆயுதப்படை சிறப்பு சட்டம் அடுத்த நிலையில் இருந்தது. அதனால், என்கவுண்டர் பிரச்சனையை தேர்தலில் பிரதானமாக்க முடிவெடுத்தது சங்பரிவார் குழுமம்.  அதுவரை அங்கு இயங்கி வந்த மனித உரிமைக்  குழுக்களுடன் கரைந்து, அவ்வமைப்புகளின் தலைமை முகமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது.

2015-ல், சொந்த காரணங்களுக்காக குஜராத் செல்ல வேண்டி வந்தது. அந்த பயணத்தின் ஊடே சிங்கங்களின் புகழ்பெற்ற திறந்தவெளி சரணாலயமான ‘சாஸன் கிர்’ (Sasan Gir) வனப்பகுதிக்கு செல்ல ஒரு வாய்ப்பும் கிடைத்தது.

காரோட்டியாக வந்தவர் அஹ்மதாபாத் நகரைச் சேர்ந்தவர். இளைஞர். அந்த மாநிலத்தில், பாஜக வெல்ல முடியாத அரசியல் சக்தியாக இருப்பதன் காரணம் என்ன என்று அவரிடம் நான் கேட்டதற்கு, அவர் எளிமையாக சொன்னது இது: “மது, மாது, பணம்!”

இந்திய உபகண்டத்தை வர்ணாசிரம சிந்தாந்தத்தால் தூய்மைப் படுத்த நினைக்கும் சங்பரிவார் குழு கீழ்த்தரமான அரசியல் முறைகளை கையாள்வதாக அந்த அஹ்மதாபாத் இளைஞர் சொன்னதை அப்போது என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், தற்போது வடக்கிழக்கு மாநிலங்களில் சங்பரிவார் சக்திகளும், அதன் அரசியல் தளமான பாஜக.வும், நடந்து கொண்ட முறை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற எல்லா ராஜதந்திரங்களும் சங்பரிவார் சித்தாந்தத்தில் ஹலால் (கூடும்) ஆக்கப்படும் என்கின்றன நிகழ்வுகள்.

மணிப்பூர் பழங்குடிகளிடம் பாஜக. வாக்கு சேகரித்த விதம் மிகவும் மட்டகரமானது. பாஜக கட்சியால் முன்னிறுத்தப்பட்ட ஆதிக்குடி, கிறிஸ்துவ வேட்பாளர்கள், மலைகளில் வாழும் கிறிஸ்துவ மக்களிடம் BJP என்றால் 'Bharatiya Jesus Party' என்று கூறி வாக்கு கேட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. முஸ்லிம்களின் ஹஜ் மானியத்தை நிறுத்திய கையோடு, தற்போதைய தேர்தல் பிரச்சார பரப்புரையில், ‘ஜெருசலேம்’ பயணத்தக்கான மானியம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசியது இதே பாஜக.தான்.

ஏறத்தாழ இதே பாணியைதான் திரிபுராவிலும் சங்பரிவார் குழுக்கள் பின்பற்றின. பாதிரியார் ஸ்டெயினையும் அவரது குடும்பத்தாரையும்  உயிரோடு எரித்த இந்த சிந்தாந்த குழுமம் அங்கு தன்னை கிறிஸ்துவர்களுக்கு நெருக்கமான கட்சியாக காட்டிக் கொண்டது. மற்ற விஷயங்களை எல்லாம் விட அம்மாநிலத்தில் பிரதானமாக இருந்த வேலைவாய்ப்பின்மையை முன்னிறுத்தி வாக்கு கேட்டது.

“வெல். வெல்ல முடியாத சூழலில் உள்வாங்கு!” - இதுதான் சங்பரிவாரின் 'ஆக்டோபஸ்' அரசியல் அதிகாரத்துக்கான சூத்திரம்.

அஸ்ஸாமின் முடிசூடாத மன்னராக மக்கள் மனதில் கோலோச்சியவர் காங்கிரஸின் ஹிமான்தா பிஸ்வா சர்மா. அவரைக் கவர்ந்து கொண்ட சங்பரிவார் குழுமம் அந்த மக்கள் செல்வாக்கை பா.ஜ.கவின் அதிகார வெற்றியாக மாற்றிக் கொண்டது. இதே வெற்றிதான் தற்போது திரிபுராவிலும் கையாளப்பட்டது. பாஜக வின் வெற்றி வேட்பாளர்களில் அதிக எண்ணிக்கைக் கொண்வர்கள் முன்னாள் காங்கிரஸ் பிரமுகர்கள்தான்.

பீகார் தேர்தல் சூழலில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத் ஆர்கனைசர் இதழில் இடஒதுக்கீடுக்கு எதிராக அளித்த நேர்காணல் பாஜக வின் தோல்வியாக அந்த மாநில தேர்தல்களில் பிரதிபலித்ததை சங்பரிவார் சக்திகள் மறக்கவில்லை. அந்த அனுபவத்தை பாடமாக எடுத்துக் கொண்டவர்கள், ‘எதைப் பேசக்கூடாது’ என்பதில் தெளிவாக இருந்தார்கள்.

சரியான திட்டமிடல், பொய்ப்புனைவுகள், தந்திரம், இவை அனைத்தையும் தாண்டி, சங்பரிவார் குழுக்களில் உள்ள, ‘வர்ணாசிரம மூளைச்’ சலவை செய்யப்பட்டுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் அளவற்ற அர்ப்பணம் இவைதான் பாஜகவின் தொடர் வெற்றிக்கு காரணங்கள் என்கின்றன தரவுகள்.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம், நன்கு திட்டமிடப்பட்டு, இந்திய மக்களின் மனங்களில் சங்பரிவார் குழுமம் பல்வேறு நாமங்களில் செயல்பட்டு, மெல்ல மெல்ல நச்சேற்றிய வர்ணாசிர திட்டங்களின் அறுவடைக்காலம் இது.

ஒரு புரிதலுக்காக சொல்ல வேண்டுமென்றால் ராவணன் பிள்ளைகளுக்கு எதிரான கலகம் இது.

இந்த வர்ணாசிரம போர்க்களத்தில், ராமன் தரப்பில், செறிவூட்டப்பட்ட, ராவணன் பிள்ளைகள் அம்புகள் ஏந்தி நிற்கிறார்கள். மறுபுறமோ, நிராயுதபானியாக நிற்கும், ராவணன் பிள்ளைகளைக் கொல்லும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த வியூகம் விந்தனையானது. கொல்வதும், கொல்லப்படுவதும் ராவணன் பிள்ளைகள்..!

ஆகப் பெரும் அறிவாயுதமும், அதை மக்கள் மனதில் கொண்டு சேர்க்கும் சுயநலமற்ற தூயத் தலைவர்களும்தான் இன்றைய தேவை.

எப்போதும், போர்க்களம் என்ற மனமாச்சரியங்களும், வெறுப்பரசியலும், பதட்டத்தை அதிகரித்து மன அமைதியை கொன்றுவிடும். மக்களின் சகஜமான வாழ்வியலை நாசமாக்கிவிடும். நாட்டு முன்னேற்றத்தை ஸ்தம்பிக்கச் செய்துவிடும். இந்த இழப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும், ராவணன் பிள்ளைகளின் பெரும் பொறுப்பாகும்.

ஆக, ராமனின் அம்புகள் கூர்த்தீட்டப்படுகின்றன. குத்தீட்டிகள் பதம் பார்க்க இருக்கின்றன.

எச்சரிக்கை மக்களே..!




Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Pages

Labels