NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Showing posts with label நல்லுரை. Show all posts
Showing posts with label நல்லுரை. Show all posts

Friday, December 8, 2017

படைத்தவனுக்கே அடிபணிவீர்

"மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்! அவ்வாறு செய்வதால் மட்டுமே நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். 

அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் ஆக்கினான். 

அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகின்றான். 

எனவே, இவற்றை எல்லாம் நீங்கள் அறிந்திருந்தும் இறைவனுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்" ~(திருக்குர்ஆன்: 2:21,22)
Share:

இவரே வெற்றியாளர்

"அவர்கள் எத்தகையவர்கள் என்றால், 

• மறைவானவற்றை நம்புகிறார்கள்.

• மேலும், தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள்.

• நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள்.

• மேலும், உமக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் - வேதத்தின் மீதும் -

• உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்.

• இறுதித் தீர்ப்பு நாளின் - மறுமை - மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கிறார்கள்.

இவர்கள்தான் தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள்.

மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள்"

~ (திருக்குர்ஆன்: 2:3-5)


Share:

இறைவனின் வேதமிது

இது இறைவனின் வேதமாகும்.

இதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

இறையச்சமுடையோர்க்கு இது சீரிய வழிகாட்டியாகும். ~ (திருக்குர்ஆன்: 2:2)
Share:

Monday, December 4, 2017

அருள்வாய் இறைவா..!



"உனக்கே நாங்கள் அடிபணிகின்றோம். மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கின்றோம். நீ எங்களுக்கு நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக! அவ்வழி, எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்களின் வழி. உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாதவர்களின், நெறித்தவறிப் போகாதவர்களின் வழி" (திருக்குர்ஆன்: 1:4-7)
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive