Showing posts with label நல்லுரை. Show all posts
Showing posts with label நல்லுரை. Show all posts
Friday, December 8, 2017
படைத்தவனுக்கே அடிபணிவீர்
"மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள்
இறைவனுக்கே அடிபணியுங்கள்! அவ்வாறு செய்வதால் மட்டுமே நீங்கள் உங்களைக்
காப்பாற்றிக் கொள்ள முடியும்.
அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும்,
வானத்தை முகடாகவும் ஆக்கினான்.
அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து
அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும்
வெளிப்படுத்துகின்றான்.
எனவே, இவற்றை எல்லாம் நீங்கள் அறிந்திருந்தும்
இறைவனுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்" ~(திருக்குர்ஆன்: 2:21,22)
இவரே வெற்றியாளர்
"அவர்கள் எத்தகையவர்கள் என்றால்,
• மறைவானவற்றை நம்புகிறார்கள்.
• மேலும், தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள்.
• நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள்.
• மேலும், உமக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் - வேதத்தின் மீதும் -
• உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்.
• இறுதித் தீர்ப்பு நாளின் - மறுமை - மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கிறார்கள்.
இவர்கள்தான் தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள்.
மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள்"
~ (திருக்குர்ஆன்: 2:3-5)
• நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள்.
• மேலும், உமக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் - வேதத்தின் மீதும் -
• உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்.
• இறுதித் தீர்ப்பு நாளின் - மறுமை - மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கிறார்கள்.
இவர்கள்தான் தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள்.
மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள்"
~ (திருக்குர்ஆன்: 2:3-5)












