NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Saturday, November 30, 2019

Friday, November 29, 2019

Thursday, November 21, 2019

என்னை கேட்டால்..முடிவல்ல இது தொடக்கம்!


பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் தீர்ப்பளித்த ஐவர் குழு நீதியரசர்களுக்கும் நன்றி. அவர்கள் நீதமாக நடந்துகொண்டார்களோ அல்லது பாரபட்சமாக நடந்துகொண்டார்களோ அது இப்போது முக்கியமல்ல. தீர்ப்பளிக்கபட்டுவிட்டது. தனது வீடு இடிக்கப்பட்டவன் நீதிமன்றம் போனால், அவனது நிலம் இனி பிடுங்கப்படும் என்று வெளிப்படுத்தும் இந்த தீர்ப்பை வருங்காலத்தில் வழக்குரைஞர்கள் முன்னுதாரணமாக கொள்ள மாட்டார்கள் என்றுகூட நம்பலாம்.

முஸ்லிம்களை பொறுத்தவரை இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. பாபரி மசூதி இடிக்கப்பட்ட ஒவ்வொரு டிசம்பர் மாதமும் ஒரு கட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பெரும் அச்சுறுத்தல், துன்பத்திற்கு ஆளான சமூகத்தார் அவர்கள். நீதி கேட்டு தெருவில் இறங்கி போராடியவர்கள். இவை எல்லாம் இனி நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு படிப்பினை மிக்கது.

ஏனென்றால், நன்மையோ, தீமையோ அது அணுஅளவும் பிசகாமல் தீர்ப்புநாளில் பெறவிருக்கும் தீர்ப்பு குறித்து உறுதியான நம்பிக்கை உடையவர்கள் அவர்கள். அதேபோல, வஞ்சிக்கப்பட்டவனுக்கும் அதாவது அநீதி இழைக்கப்பட்டவனுக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த திரையும் இருக்காது என்பதும் அவர்களின் நம்பிக்கைக்கு உட்பட்டது. அதனால், சர்வ வல்லமை மிக்க இறைசந்நிதி தீர்ப்பு குறித்து இனியும் அவர்கள் உறுதியுடனே இருப்பார்கள். மனித சட்டங்கள் - இறைசட்டங்கள் இடையிலான வேறுபாடும் அவர்களுக்கு இன்னும் ஆழமாக புரிந்திருக்கும்.

முஸ்லிம் சமூகத்துக்கு பெருத்த தலைவலியாக இருந்த... அவர்கள் சுமந்து கொண்டிருந்த... சிலுவைகளுக்கு தற்போது உச்ச நீதிமன்றம் ஒரு முடிவுரை எழுதியுள்ளது.

ஒரு வழிபாட்டு தலத்தை இடித்து மற்றொரு வழிபாட்டு தலம் கட்டப்பட்டது என்ற பாபர் மீதான புனைந்துரை தகர்க்கப்பட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்றச்செயல் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

கடைசியில் பெரும் ரத்த களரி பாய்வது தடுக்கப்பட்டது.

உண்மைதான், இதே தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டிருந்தால் நாட்டில் என்ன நடந்திருக்கும் என்று நீதிபதிகளும் அறியாமலிருப்பார்களா என்ன? குஜராத் கலவரங்களின் மோசமான விளைவுகளுக்கு காரணம் ஆட்சி, அதிகார எந்திரம் கைக்கட்டி, வாய்ப்பொத்தியிருந்ததே என்பது அவர்களுக்கு தெரியாதா என்ன?

நாடு முழுவதும் வகுப்புவாதிகளின் கோரதாண்டவத்தின் அச்சுறுத்தல் அனைவருக்கும் இருந்திருப்பது யதார்த்தம். அந்த அடிப்படையில் பார்த்தாலும் நீதிபதிகளுக்கு நன்றி சொல்ல முஸ்லிம் சமூகம் கடமைப்பட்டிருக்கிறது.

பாபரி மசூதி இடத்தை எடுத்து ராமர் கோயிலுக்கு தந்த கையோடு, உடன் கோயில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காலகெடு அளித்த நீதிமன்றம், காசி, மதுரா உட்பட 3 ஆயிரம் மசூதிகள் கோயில்களாக்க காத்திருக்கும் சங்பரிவார் திட்டத்துக்கு முடிவுரை எழுதியிருக்கலாம். துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை.

எல்லாம் முடிந்தது. வழக்கில் யாராவது ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் என்பது யதார்த்தம். முஸ்லிம்கள் எப்போதும் கொடுக்கும் கரங்களாக இருப்பதே நல்லது.

அதேபோல, உச்ச நீதிமன்றம் பாபரி மசூதிக்காக, ஒதுக்கியுள்ள ஐந்து ஏக்கர் இடத்தை மறுக்காமல் பெற்றுகொண்டு, பிரமாண்டமான கல்விசாலையாகவோ, மருத்துவமனையாகவோ அதை கட்டி எல்லா மக்களுக்கும் பயனடையும்படி செய்யலாம். அது பாபர் பெயராலே இருந்துவிட்டு போகட்டும்!




Share:

Saturday, November 9, 2019

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive