NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Tuesday, December 31, 2019

Saturday, December 21, 2019

Tuesday, December 17, 2019

Thursday, November 21, 2019

என்னை கேட்டால்..முடிவல்ல இது தொடக்கம்!


பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் தீர்ப்பளித்த ஐவர் குழு நீதியரசர்களுக்கும் நன்றி. அவர்கள் நீதமாக நடந்துகொண்டார்களோ அல்லது பாரபட்சமாக நடந்துகொண்டார்களோ அது இப்போது முக்கியமல்ல. தீர்ப்பளிக்கபட்டுவிட்டது. தனது வீடு இடிக்கப்பட்டவன் நீதிமன்றம் போனால், அவனது நிலம் இனி பிடுங்கப்படும் என்று வெளிப்படுத்தும் இந்த தீர்ப்பை வருங்காலத்தில் வழக்குரைஞர்கள் முன்னுதாரணமாக கொள்ள மாட்டார்கள் என்றுகூட நம்பலாம்.

முஸ்லிம்களை பொறுத்தவரை இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. பாபரி மசூதி இடிக்கப்பட்ட ஒவ்வொரு டிசம்பர் மாதமும் ஒரு கட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பெரும் அச்சுறுத்தல், துன்பத்திற்கு ஆளான சமூகத்தார் அவர்கள். நீதி கேட்டு தெருவில் இறங்கி போராடியவர்கள். இவை எல்லாம் இனி நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு படிப்பினை மிக்கது.

ஏனென்றால், நன்மையோ, தீமையோ அது அணுஅளவும் பிசகாமல் தீர்ப்புநாளில் பெறவிருக்கும் தீர்ப்பு குறித்து உறுதியான நம்பிக்கை உடையவர்கள் அவர்கள். அதேபோல, வஞ்சிக்கப்பட்டவனுக்கும் அதாவது அநீதி இழைக்கப்பட்டவனுக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த திரையும் இருக்காது என்பதும் அவர்களின் நம்பிக்கைக்கு உட்பட்டது. அதனால், சர்வ வல்லமை மிக்க இறைசந்நிதி தீர்ப்பு குறித்து இனியும் அவர்கள் உறுதியுடனே இருப்பார்கள். மனித சட்டங்கள் - இறைசட்டங்கள் இடையிலான வேறுபாடும் அவர்களுக்கு இன்னும் ஆழமாக புரிந்திருக்கும்.

முஸ்லிம் சமூகத்துக்கு பெருத்த தலைவலியாக இருந்த... அவர்கள் சுமந்து கொண்டிருந்த... சிலுவைகளுக்கு தற்போது உச்ச நீதிமன்றம் ஒரு முடிவுரை எழுதியுள்ளது.

ஒரு வழிபாட்டு தலத்தை இடித்து மற்றொரு வழிபாட்டு தலம் கட்டப்பட்டது என்ற பாபர் மீதான புனைந்துரை தகர்க்கப்பட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்றச்செயல் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

கடைசியில் பெரும் ரத்த களரி பாய்வது தடுக்கப்பட்டது.

உண்மைதான், இதே தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டிருந்தால் நாட்டில் என்ன நடந்திருக்கும் என்று நீதிபதிகளும் அறியாமலிருப்பார்களா என்ன? குஜராத் கலவரங்களின் மோசமான விளைவுகளுக்கு காரணம் ஆட்சி, அதிகார எந்திரம் கைக்கட்டி, வாய்ப்பொத்தியிருந்ததே என்பது அவர்களுக்கு தெரியாதா என்ன?

நாடு முழுவதும் வகுப்புவாதிகளின் கோரதாண்டவத்தின் அச்சுறுத்தல் அனைவருக்கும் இருந்திருப்பது யதார்த்தம். அந்த அடிப்படையில் பார்த்தாலும் நீதிபதிகளுக்கு நன்றி சொல்ல முஸ்லிம் சமூகம் கடமைப்பட்டிருக்கிறது.

பாபரி மசூதி இடத்தை எடுத்து ராமர் கோயிலுக்கு தந்த கையோடு, உடன் கோயில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காலகெடு அளித்த நீதிமன்றம், காசி, மதுரா உட்பட 3 ஆயிரம் மசூதிகள் கோயில்களாக்க காத்திருக்கும் சங்பரிவார் திட்டத்துக்கு முடிவுரை எழுதியிருக்கலாம். துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை.

எல்லாம் முடிந்தது. வழக்கில் யாராவது ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் என்பது யதார்த்தம். முஸ்லிம்கள் எப்போதும் கொடுக்கும் கரங்களாக இருப்பதே நல்லது.

அதேபோல, உச்ச நீதிமன்றம் பாபரி மசூதிக்காக, ஒதுக்கியுள்ள ஐந்து ஏக்கர் இடத்தை மறுக்காமல் பெற்றுகொண்டு, பிரமாண்டமான கல்விசாலையாகவோ, மருத்துவமனையாகவோ அதை கட்டி எல்லா மக்களுக்கும் பயனடையும்படி செய்யலாம். அது பாபர் பெயராலே இருந்துவிட்டு போகட்டும்!




Share:

Saturday, November 9, 2019

Sunday, October 6, 2019

World Of Lizard - ஓணான் உலகு

Share:

Thursday, August 29, 2019

Monday, August 19, 2019

Thursday, August 8, 2019

Wednesday, July 17, 2019

Monday, July 8, 2019

Saturday, July 6, 2019

Sunday, June 30, 2019

Friday, June 21, 2019

Wednesday, June 19, 2019

Friday, June 14, 2019

Friday, June 7, 2019

Wednesday, June 5, 2019

Wednesday, May 22, 2019

மீண்டும் சொல்கிறேன்


சங்பரிவார் என்னும் கொடூர ஆக்டோபஸின் மற்றுமோர் கரமான பாஜக-வை வீழ்த்துவது அவ்வளவு எளிதானது அல்ல. 'டவுசர்ஸ் பாய்ஸ்' என்று நக்கலடிப்பவர்கள் வெறும் 'முகநூல் புலிகள்தான்' என்பதை நினைவில் கொள்க.

ஒன்றுமே இல்லாமலிருந்து வெறும் சொற்ப எண்ணிக்கை இடங்களைக் கைப்பற்றி அதிலிருந்து 'குயுக்தி' வியூகங்களால் அரியணைப் பிடித்திருக்கும் ஒரு வலிமையான சித்தாந்தம்.

அது மனித இனத்துக்கு தீமை பயப்பதாக இருந்தாலும், அர்ப்பணங்கள், கடும் உழைப்பால் உயரங்களைத் தொட்டவர்களே அதன் தொண்டர்கள். ஆட்சியதிகாரம், அரசு எந்திரம், ஆள்-அம்பாரி என்று சகல ஆயுதங்களுடன் இருப்பவர்கள் அவர்கள்.

மிக எளிதாக மதத்தை அபினாக்கி மக்களை அடிமையாக்க அவர்கள் கையாளும் சூழ்ச்சியே நிகழ்கால வரலாறு. ஆம்.. ஒவ்வொரு அரசியல்வாதிக்குள்ளும், ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் இந்த அபின் போதையை ஏற்றி எளிதாக அவர்களை தங்கள் கைவசப்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த சாணக்கியம் சங்பரிவாருக்கு கைவந்த கலை! அதன் ஒரு பகுதிதான் தேர்தலுக்கு பிறகான தேர்தல் கணிப்புகள்.

ஆக, ஜனநாயகத்துக்கான தேர்தல் களத்தில், எதிரியின் வலிமைத் தெரியாமல் கிண்டலடித்து, நையாண்டி செய்வது வெறும் பொழுதுகழிப்பாகவே முடிந்துவிடும்.

சக மனிதரிடையே துவேஷங்களை வளர்க்கும் ஒரு தத்துவம், சக மனிதரை அடக்கியாள துடிக்கும் ஒரு சித்தாந்தம், எளிய மனிதர்களின் குருதி ஆற்றில் சிம்மாசனங்களை அமைக்க விரும்பும் ஒரு தத்துவம் மக்களால் விரும்பப்படுவது எப்படி? என்று எழும் நியாயமான கேள்விக்கு பதில் தேடுவதும் அவசியம்.

அப்படியானால், மேற்குறிப்பிட்ட சங்பரிவார் தத்துவத்தைவிட மோசமான தத்துவம் அல்லது நடத்தைக் கொண்டவரா பிற அரசியல் கட்சியினர்? சங்பரிவாரைவிட மோசமானவரா நாம்?

இந்த தேடலில்தான் இந்தியாவின் இறையாண்மையும், இயல்பான இயக்கவியல் நியதியும் அடங்கியிருக்கிறது.

ஓட்டைகளை அடைக்காமல் எவ்வளவு சிறப்பான மாலுமியாக இருந்தாலும் கப்பல் கரைசேருமா என்ன?

தனது முகம் வகுப்புவாதத்தால் தோய்த்தெடுத்த இயற்கைக்கு புறம்பான வெறுப்பு முகத்திலானதா?

அல்லது சக மனிதர்களை மனதோடு நேசிக்கும் இயற்கையின் நியதிக்கு உட்பட்டதா? என்ற ஒரு முடிவுக்காக மொத்த இந்தியாவே காத்திருக்கிறது.

இத்தனை இயலாமை, பலவீனங்களுக்கு மத்தியில், ஒரு 'மாஜிக்' நடக்குமானால்.. நிச்சயம் அது இந்திய வாக்களார்களால் மட்டும் நிகழ்ந்தது அல்ல என்று மட்டும் மனம் உறுதியுடன் சொல்கிறது.
 
 




Share:

Tuesday, May 21, 2019

Wednesday, May 15, 2019

"காத்திருந்த கழுகுகள்"

நினைத்ததை
சாதித்துவிட்டது
இலங்கையில்
வகுப்புவாதம்.

அதிரடைப்படையாவது..
ராணுவமாவது.. !
கைக்கட்டி வேடிக்கைப்
பார்க்கும்
பதுமைகளான பின்..!

நீதம் தவறும்
ஆட்சியாளர்
எப்போதும்
ஒரே வகைதான்..!
மனங்களைப் பிரி
ஆட்சியைப் பிடி..!

வகுப்புவாதிகள்
எப்போதும் ஒன்றுதான்..
குருதியை உறிஞ்சு..
ஊன்-உதிரத்தை
சுவை..
மனிதத்தை
எரி..

அந்தோ..!
ஓர் அறிவொளி
சமூகம்
முட்டாளாய்
முடங்கி
கிடக்கும்போது..
பேரமைதி
தொலைந்து போய்
நிதர்சனங்களாகும்
'சூழ்ச்சிகளின்'
வரலாறு..!


Share:

Tuesday, May 14, 2019

Wednesday, May 8, 2019

Tuesday, April 30, 2019

Tuesday, April 23, 2019

மாட்டு அரசியலும், மனிதாபிமானமும்




 மாலை சுமார் ஆறுமணியிருக்கும்.

பறந்து திரியும் பறவைகளை அடைக்கும் நேரம் அது.

நாங்கள் (நானும், பேரப்பிள்ளைகளும்) சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான் அந்த குரல் கேட்டது:

“மாடு… கன்னு போட்டிருக்கு… மாடு… கன்னு போட்டிருக்கு!” மாடியிலிருந்து எட்டிப் பார்த்தால் காங்கேயம் சைஸீக்கு எங்கள் வீட்டு வாசலுக்கு நேராக ஒரு பசு மாடும் அதன் கன்றும் இருந்தது..

வீடே பரபரப்பானது. நடுத் தெருவில் இருந்த கன்றை ஓரமாக ஒதுக்கப் போனால்.. தாய் மாடு முட்ட வந்தது.

நாய்கள் நடமாட்டம் வேறு.

ஒரு குட்டிப் பயல் நாயை விரட்ட இன்னொரு பேரப்பையன் ரிஸ்க்கை ரஸ்காக நினைத்து துணிந்து கன்றை தெரு ஓரமாக பாதுகாப்பாக ஒரு சிமெண்ட் மேடை மீது படுக்க வைக்க

இன்னொருவனோ கஞ்சித் தண்ணீரை தேடிப் பிடித்து கொண்டு வந்து பசு மாட்டின் முன் வைக்க

- என்று வீடே பரபரப்பானது.

பசு மாடு மற்றும் அதன் கன்று ஆகியவற்றின் பாதுகாப்பைக் கருதி மற்ற இரண்டு பிள்ளைகள் மாடு வளர்ப்போரை தேடிச் சென்று, அலைந்து திரிந்து

அதன் உரிமையாளரைக் கண்டுபிடித்து தகவல் சொல்ல என்று இந்த சம்பவம் நீண்டது.

இதில் எந்தவிதமான மாட்டு அரசியலும் இல்லை.

எங்கள் வீட்டு நண்டு சிண்டுகள் எல்லாம் பதறியதற்கு காரணம் மனிதாபினமானம் அன்றி வேறில்லை.

ஒட்டகத்தின் கண்ணீருக்கும் காரணம் தேடிய http://ikhwanameer.blogspot.com/2015/11/blog-post_26.html ஒரு போதனையாளரின் பின்பற்றலின் மகத்துவம் அது.

ஆனால், மாடுகளுக்காக என்ற போர்வையில் மனிதர்களைக் கொல்லும் கயமைத்தன அரசியல் அல்ல இது.

இந்த நிகழ்வின் டெய்ல் பீஸாக தேடிப்பிடித்து விசாரித்து தகவல் சொன்னபோதுதான் தெரிந்தது அந்த கறவை பசு மாட்டின் உரிமையாளர் ஒரு முஸ்லிம் என்று!

நல்லவேளை இந்த மண் பெரியார் தேசமாகையால் எல்லாம் சுபத்திலேயே முடிந்தது.

Share:

Saturday, April 20, 2019

ரஞ்சன் கோகாயும், பாலியல் குற்றச்சாட்டும்

இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தற்போதைய தலைமை நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் புகார் ஒன்றை எழுதியுள்ளார்.

இதைத் தொடர்ந்து ரஞ்சன் கோகாய் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அவசர விசாரணை ஒன்றை நடத்தியது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியோடு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அப்போது தம் மீதான புகார்களை மறுத்த ரஞ்சன் கோகாய், நீதித்துறையின் சுதந்திரம் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், நீதித்துறை பலிகடா ஆகக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

அந்தப் பெண் அளித்துள்ள புகார் தொடர்பாக தாம் எதுவும் விசாரிக்கப் போவதில்லை, பிற மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்று ரஞ்சன் கோகாய் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின்னால் சதி இருப்பதாகவும், தலைமை நீதிபதியின் அலுவலகம் செயல்படுவதை முடக்கும் நோக்கத்துடன் இதன் பின்னால் பெரும் சக்திகள் உள்ளதாகவும் கூறினார்.

யார் இந்த ரஞ்சன் கோகாய்?

ரஞ்சன் கோகாய் இந்திய உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக 2018ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி பதவியேற்றார்.

ரஞ்சனின் தந்தை அசாமின் முன்னாள் முதலமைச்சர் கெசாப் சந்திர கோகாய் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கெசாப் சந்திர கோகாய் கடந்த 1982ஆம் ஆண்டு அசாமின் முதலமைச்சராக இருந்தார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் ஒன்றிலிருந்து இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நபர் ரஞ்சன் கோகாய்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட "கவுகாத்தி ஹை கோர்ட், ஹிஸ்டரி அண்ட் ஹெரிடேஜ்" என்ற புத்தகத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள ரஞ்சன் கோகாய் பற்றிய ஆச்சர்யமளிக்கும் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அசாமில் முன்னாள் முதலமைச்சரும் ரஞ்சன் கோகாயின் தந்தையுமான கெசாப் சந்திர கோகாயிடம் அவரது நண்பர்களில் ஒருவர், "உங்கள் மகனும் ஒருநாள் அரசியலில் குதித்து முதலமைச்சராவாரா என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்கு, எவ்வித தயக்கமுமின்றி கெசாப் சந்திர கோகாய், "தன்னுடைய மகன் திறைமைவாய்ந்த வழக்கறிஞராக இருப்பதால், அவர் இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாவதற்கு வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னதாக "கவுகாத்தி ஹை கோர்ட், ஹிஸ்டரி அண்ட் ஹெரிடேஜ்" புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களது சொத்து விவரங்களை வெளியிட்ட 11 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ரஞ்சன் கோகாய்யும் ஒருவராவார். அவர் வைத்திருக்கும் நிலம், நகைகள், பணம் போன்றவற்றின் விவரங்களை பார்த்தால் அவர் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார் என்பதையே காட்டுகிறது.

அத்தோடு தனது சொத்து விவரங்களை தவறாமல் ரஞ்சன் புதுப்பித்து வருகிறார்.

ரஞ்சனிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை.

சில மாதங்களுக்கு முன்னர் ரஞ்சன் கோகாய்யும், இன்னும் சில உச்சநீதிமன்ற நீதிபதிகளும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, 'முக்கியமான, சர்ச்சைக்குரிய வழக்குகளை குறிப்பிட்ட சில நீதிபதிகளும் மட்டுமே விசாரணைக்கு ஒதுக்கீடு செய்கிறார் என்னும் திடுக்கிடும் குற்றச்சாட்டை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பற்றி சக நீதிபதிகளால் பொதுவெளியில் குற்றச்சாட்டு எழுந்தது அதுவே முதல்முறையாகும்.


Share:

Sunday, April 14, 2019

பரிவாரங்கள் பரப்பும் கப்ஸாக்கள்


 
 
முஸாஃபர்நகர் மக்களவைத் தொகுதியின் பாரதிய ஜனதா ஊழியர் ஒருவர், புர்கா அணிந்திருந்த பெண்கள் குழு ஒன்றிடம் இருந்து போலி ஆதார் அட்டைகளை கைப்பற்றியதாக சமூக ஊடக காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.

ஏப்ரல் 11ம் தேதி வியாழக்கிழமை மக்களவைக்கான முதல் கட்ட தேர்தல்கள் நடைபெற்ற பின்னர் இந்த காணொளி வலம் வருகிறது என்பது முக்கியமானது.

புர்கா அணிந்த சில பெண்கள் கள்ள ஓட்டுகளை போடுவதாக முஸாஃபர்நகர் பாஜக வேட்பாளர் சன்ஜீவ் பல்யான் தெரிவித்தார். அவரது இந்தக் குற்றம்சாட்டு ஆயிரக்கணக்கான முறை ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பகிரப்பட்டு பார்க்கப்பட்டுள்ளது.

"பிஜேபி மிஷன் 2019" மற்றும் "வி சப்போர்ட் நரேந்திர மோதி" போன்ற வலது சாரி ஃபேஸ்புக் குழுக்களும் இந்த காணொளியை பகிர்ந்துள்ளன.

தற்போது நடைபெற்று வருகின்ற மக்களவைத் தேர்தலுக்கும், இந்த காணொளிக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது.
 
இந்த காணொளியிலுள்ள எழுத்துகள், "கள்ள ஓட்டு போட்ட புர்கா அணிந்த பெண்களை பாஜக முஸ்லிம் ஊழியர் பிடித்தார்," என்று குறிப்பிடுகிறது.

இந்த காணொளியை கவனமாக செவிமடுத்தால், அந்த பெண் கூறுவதும் கேட்கிறது.

காணொளியில் அந்த பெண், "நான் பிஎஸ்பி வேட்பாளர் ஷாய்லா. பெண்கள் பிரச்சனையில் சிக்கிக்கொள்வதை நான் விரும்பவில்லை. உண்மையை சொல். இந்த ஆதார் அட்டைகளை உன்னிடம் கொடுத்தது யார்?" என்கிறார். காணொளிக்கு: https://www.bbc.com/tamil/india-47914935

ஊடக தகவல்களின்படி, 2017ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி ஃபேஷன் வடிவமைப்பாளர் ஷாய்லா கானை ராம்பூர் நகர் மன்றத் தலைவர் பதவிக்கு நிறுத்தியது. உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தல் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.

இப்போது வைரலாகும் காணொளி யூடியூபில் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி பதிவேற்றப்பட்டது. இது உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தல்களுக்கு ஒரு நாளுக்கு பின்னராகும்.

இத்தகைய சம்பவம் ஒன்று நிகழ்ந்ததாக எந்தவொரு செய்தி ஆதாரமும் இல்லை. இந்த காணொளி 2019ம் ஆண்டை சேர்ந்ததும் அல்ல. 
 
(நன்றி: பிபிசி - தமிழ்)
 
 

Share:

Tuesday, April 9, 2019

தேர்தல்கள் 2019: அந்த வம்பனின் வம்பு!


'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எனக்கு ஆண்டு சரியாக நினைவில் இல்லை. 1986 லிருந்து 1990-களுக்குள்தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அப்போது நான் சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்தேன். ஜமாஅத்தின் ஊழியனாகவும் இருந்தேன்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முக்கிய ஆளுமைகளான பேரறிஞர் காலஞ்சென்ற குத்புதீன் அஹ்மது பாகவியும், பேரறிஞர் வேலூர் அப்துல் ஹபீஸ் ரஹ்மானியும் அசோக் லேலண்ட் நிறுவனத்தை பார்வையிட வந்திருந்தார்கள். அதற்கான முறையான அனுமதியும் நிறுவனத்திடமிருந்து பெற்றாகிவிட்டது.

வாகன உற்பத்தியில், ஆசியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கடைசியாக எல்லா உதிரி பாகங்களையும் இணைத்து வாகனத்தின் உடற்பகுதியாக மாற்றும் சேசிஸ் அசெம்பிளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோதுதான் அது நிகழ்ந்தது.

தொலைவில் கப்போர்ட்டுகளின் மீது அமர்ந்திருந்த செல்வராஜ் குதித்து ஓடிவந்தான். "பாகிஸ்தான்வாலா … பாகிஸ்தான்வாலா!" - என்று சத்தமாக விருந்தினரின் நீண்ட ஆடைகளையும், தாடி, தொப்பிகளையும் கிண்டல் செய்து கத்த ஆரம்பித்தான்.

செல்வராஜ் ஒரு வம்பன் என்று நேரில் கண்டிருக்கிறேன். ஆனால், அநாகரிகமாக தனது நிறுவனத்தை பார்வையிட வந்திருக்கும் விருந்தினரிடம் இப்படி நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்கவில்லை.

கோபமும், அவமானமும் சூழ்ந்து கொண்ட தருணமிது.

பேரறிஞர் குத்புதீன் அஹ்மது பாகவி, பேரறிஞர் வேலூர் அப்துல் ஹபீஸ் ரஹ்மானி இந்த ஆளுமைகளின் பாசறையில் நேரடி ஒழுக்கப் பயிற்சி பெறும் வாய்ப்பு பெற்றிருந்ததால் அந்நிகழ்வை ஒரு புன்சிரிப்புடனும், மென்மையுடனும் கடக்க வேண்டியிருந்தது.

இது, அத்துடன் முடிந்ததா என்றால் அதுதான் இல்லை.

“இந்தியா ஜிந்தாபாத்!” - என்று சொல்லுங்கள் என்றான் எங்களை இடைமறித்த அந்த வம்பன் செல்வராஜ்.

நாங்கள் ஒருவர் மற்றொருவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டோம். பிறகு ஒரே குரலில் அழகு தமிழில் சொன்னோம்: “இந்தியா.. வாழ்க..!”

பொட்டில் அறைந்தாற்போல அந்த வார்த்தைகள் வம்பன் செல்வராஜை பாதித்திருக்க வேண்டும். மௌனமாக விலகி வழிவிட்டான்.

அதே மென்மையுடன், புன்னகையுடனேயே நாங்கள் அங்கிருந்து நகர்ந்தோம்.

இந்தியா மத துவேஷங்களின் உச்சக்கட்டத்தில் ஒரு தேர்தலை சந்திக்க இருக்கும் இந்த நேரத்தில் இந்த சம்பவம் நினைவில் எழுவதை என்னால் தடுக்க இயலவில்லை.
 
 


Share:

Saturday, April 6, 2019

விஷமிகளின் விஷமத்தனங்கள்:வயநாடு: ராகுல் காந்தி பேரணியில் பாகிஸ்தான் கொடி இடம்பெற்றதா?


வியாழக்கிழமை வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி, வேட்பு மனுதாக்கல் செய்த பின்னர் நடத்திய பேரணியில், அவரது ஆதரவாளர்கள் பாகிஸ்தான் கொடிகளை வைத்திருந்தினர் என்றும், கேரள காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டடம் "பச்சை இஸ்லாமிய நிறத்தில்" உள்ளதாகவும் சில சமூக ஊடகங்கள் பரப்புரை செய்தன.

பாலிவுட் நடிகை கோயனா மித்ராவும் இதே கருத்தை தெரிவித்து, இந்த படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இது ஆயிரத்திற்கு மேலான ட்விட்டுகளையும், 2,500க்கு மேலான லைக்குகளையும் பெற்றது. அதேபோல, ஷேர்சேட் மற்றும் ஃபேஸ்புக்கில் நூற்றுக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.

இந்த மக்களவைத் தொகுதியில் இருக்கின்ற இந்து மற்றும் இஸ்லாமிய மத வாக்காளர்களின் எண்ணிக்கை பற்றிய வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன.

பிபிசி நடத்திய புலனாய்வில் , இந்த புகைப்படம் 2019ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி எடுக்கப்பட்டதாக கண்டறிந்தது.

கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரதேச கட்சியான இந்திய முஸ்லிம் லீக் ஒன்றிய கட்சி (ஐயுஎம்எல்) இந்த மாநிலத்தில் பல பேரணிகளை தொடர்ந்து நடத்தியுள்ளது. அப்படிப்பட்ட நிகழ்வொன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைதான் மித்ரா ட்விட் செய்துள்ளார். சமூக ஊடகங்களில் பரப்புரை செய்யப்பட்டுவருகிறது.

ஐ.யு.எம்.எல்-யின் கொடியும் பச்சை நிறம் கொண்டது. பாகிஸ்தான் கொடியின் பெரும் பகுதியும் பச்சை நிறம் கொண்டது. இதைப் பயன்படுத்தி விஷமிகள் செய்த விஷமத்தனமான பரப்புரையே இது.
அதேபோல, சமூக ஊடகங்களில் விஷமிகள் காட்டும் கட்டடம் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது அல்ல. அது ஐ.யு.எம்.எல் கட்சியின் பிரதேச அலுவலகமாகும்.

இந்த புகைப்படத்தை ஜும் செய்து பார்த்தால், ஐ.யு.எம்.எல் கட்சியின் சின்னமான ஏணி தெரிகிறது. இந்த கட்டடத்தில் இருக்கும் நபர் ஒருவரின் புகைப்படமும் தெரிகிறது. இந்த படத்தில் இருப்பவர் 2009ம் ஆண்டு இறந்துபோன ஐ.யு.எம்.எல் தலைவர் சையத் முகமது அலி ஷாஹிப் ஆவார்.


அந்தக் கட்டிடத்தில், மலையாளத்தில், 'இக்பால் நகர், லீக் இல்லம்' என்று எழுதப்பட்டுள்ளன.

ராகுல் காந்தியைச் சுற்றியும் உள்ள பச்சை நிறங்கள் எல்லாமே அந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் கட்சியின் அடையாளங்களாகும். இவற்றை விஷமிகள் திட்டமிட்டு விஷமத்தனமாக பரப்புரை செய்கிறார்கள்.

கோயாபல்ஸ்ஸீம் இத்தகைய தந்திரத்தைதான் பயன்படுத்தினான் என்கிறது வரலாறு.

பச்சை பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்றால்... பாஜக கொடியில் இடம் பெற்றுள்ள பச்சை நிறம் யாருக்கு சொந்தமானது என்று இந்த விஷமத்தனமான பரப்புரையில் இறங்கியுள்ள விஷமிகள்தான் பதில் சொல்ல வேண்டும்.

Share:

Thursday, April 4, 2019

Monday, April 1, 2019

Saturday, March 23, 2019

CAMERA VS BUFFALO - A Thrilling Experience

Share:

Friday, March 15, 2019

Thursday, March 14, 2019

Wednesday, March 13, 2019

MAN VS NATURE

Share:

Tuesday, March 12, 2019

Black Heart Sweet Potato Vine in Tamil

Share:

Grow Fire Bushes From Small Cutting In Tamil

Share:

Saturday, March 9, 2019

HAND FEEDING TO PIGEON CHICKS In Tamil

Share:

Thursday, March 7, 2019

HAND FEED TO BIRDS - Part 2

Share:

Monday, March 4, 2019

World War ll Bunker At North Chennai

Share:

Saturday, March 2, 2019

BUG ON LEAVES

Share:

Sunday, February 24, 2019

Friday, February 22, 2019

Thursday, February 21, 2019

How to Trim Hand Tame Cockatiel Wings

Share:

How to Trim Hand Tame Cockatiel Wings

Share:

Wednesday, February 20, 2019

Monday, February 18, 2019

Relaxing Music Timelapse

Share:

Sunday, February 17, 2019

Ravan’s Mustache - at Pulicat Koraikuppam

Share:

Saturday, February 16, 2019

30 min. Relaxing Time Lapse Video with Music

Share:

Friday, February 15, 2019

JUMPING AT BEACH

Share:

Tuesday, February 12, 2019

Drums Festival - Bhogi

Share:

NADODI in Tamil

Share:

Sunday, February 10, 2019

SPINIFEX LITTORUS GRASS

Share:

Wednesday, February 6, 2019

How To Hand Feed Bird - Ahamed Pets Farm

Share:

Saturday, February 2, 2019

About African Love Birds - Ahamed Pets Farm

Share:

Friday, January 25, 2019

PONGAL KOLAM

Share:

Thursday, January 24, 2019

DISEASE IN BANANA LEAVES

Share:

Monday, January 7, 2019

Beautiful Ennore Creek

Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive