NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Showing posts with label எனது பார்வையில். Show all posts
Showing posts with label எனது பார்வையில். Show all posts

Wednesday, December 6, 2017

பொதுவெளியில், ஒற்றைச் சொல்லாடல்களால் குறைந்துவிடப் போவதுதான் என்ன?

 
நான் அழுத்தமாக சொல்ல வருவது இதுதான்:

நபிகளார் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் மொத்த மனித இனத்துக்கானவர்.

இன்னும் விரிவாக சொல்லப்போனால் நபிகளார் மொத்த உயிரினத்துக்கானவர்.

அதனால், அவரை முஸ்லிம்  சமுதாயத்துக்குள் மட்டும் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டாம். பொதுவெளியில் அன்னியப்படுத்தவும் வேண்டாம். ~ இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எனது பெருமதிப்பிற்குரிய நண்பர் கோவை Abdul Hakkim அப்துல் ஹகீம் ஒரு செய்தியை இன்பாக்ஸில் https://www.facebook.com/jih.kovai.1/posts/524138047961762 அனுப்பியிருந்தார். அதை சொடுக்கினால் மற்றொரு பக்கத்தில் கண்ணாடி என்ற தலைப்பில் ஓர் அழகிய நபிமொழி அதன் விரிவாக்கத்துடன் இருந்தது.

அதை அப்படியே கீழே தந்துள்ளேன்.

நண்பர்கள் அதை முதலில் படித்துவிட்டு தொடர்ந்து எனது கருத்துக்களை வாசித்தல் நலம் என்று கருதுகிறேன்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கண்ணாடி..!!
'''''''''''''''''''''''''''
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமின் சகோதரராவார். அவருக்கு உதவி-ஒத்தாசை ஏதுமளிக்காமல் அவரை வெறுமனே விட்டுவிடமாட்டார். அவரிடம் பொய்யுரைக்கமாட்டார். அவருக்கு அநீதி இழைக்கவும் மாட்டார். மேலும், திண்ணமாக உங்களில் ஒருவர் தம் சகோதரருக்குக் கண்ணாடியாவார். அவரிடம் ஏதேனும் குறையை அவர் கண்டால் அதனை அவரை விட்டு அகற்றிவிடட்டும்.” நூல்: திர்மிதி, மிஷ்காத்

இந்த நபிமொழியில் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு கண்ணாடி போன்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உவமை மூலம் ஒரு முஸ்லிமுடன் மற்றொரு முஸ்லிமுக்கு உள்ள தொடர்பு பின்வரும் முறைகளில் அமைந்திருப்பது தெரியவருகிறது.

• உண்மையில் முகத்தில் எவ்வளவு கரைகள்-குறைகள் உள்ளனவோ அவற்றையே கண்ணாடி காண்பிக்கின்றது. அவற்றில் குறைப்பதுமில்லை, கூட்டுவதுமில்லை.

• அக்குறைகளைக் கூட முகக் கண்ணாடியின் முன்னாள் இருக்கும்போது மட்டுமே காட்டுகிறது.

• எவரேனும் ஒருவர் கண்ணாடியில் தன் குறைகளைக் கண்டதும் கண்ணாடியின் மீது கோபத்தை வெளிப்படுத்தினார் என்று கேள்விப்பட்டதில்லை. மாறாக நன்றி கூறாமல் மௌனமாய் இருந்தவாறு கண்ணாடியை பாதுகாப்பாக வைக்கின்றனர்.

• கண்ணாடி முகத்திற்கு முன் இருக்கும் வேலையில்தான் முகத்தின் குறைகளைக் காண்பிக்கிறது.

கண்ணாடி உவமை மூலம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இதில் நமக்கு கீழ்காணும் நான்கு அறிவுரைகளை வழங்குகின்றார்கள்.

1. உண்மையில் ஒரு முஸ்லிமிடம் எந்த அளவுக்கு குறைகள் உள்ளனவோ அந்த அளவிற்கு மட்டுமே அவரது குறைகளை எடுத்துக் கூறுங்கள்.
2. குறைகளை நேரடியாக அவரின் முன்னால் கூறவேண்டுமே தவிர அவர் இல்லாதபோது கூறாதீர்கள்.
3. குறைகளைச் சுட்டிக்காட்டுபவரை அல்லது விமர்சிப்பவரை கோபித்துக்கொள்ளாதீர், மாறாக அவருக்கு நன்றி கூறுங்கள்.
4. பிறரை விமர்சிப்பதாலும் அல்லது அறிவுரை கூறுவதாலும் தான் சிறந்தவன், உயர்ந்தவன் என்பதை வெளிப்படுத்தலாகாது. தற்புகழ்ச்சியையோ தேவையற்ற புகழையோ விரும்பலாகாது.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
மேலே குறிப்பிட்டுள்ள நபிமொழியும், அதன் வீச்சும் மிகவும் பிரமாண்டமானது. ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரையும் வசீகரிப்பது. சமயங்களைத் தாண்டி ஒவ்வொரு தனிநபரையும் ஈர்த்து சீர்த்திருத்த வைப்பது.

ஒரு முஸ்லிமாக நின்று முஸ்லிம்களுக்கான வெளியில் இதே நபிமொழியை கேட்டு நான் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்.

அண்ணலாரின் ஆளுமைப் பண்பால் எனக்கு முன்னிருந்தோர் ஈர்க்கப்பட்டதைப் போலவே ஈர்ப்புக்கு ஆளாகி நானும் அந்த மாபெரும் வரலாற்றில் கரைந்திருக்கிறேன்.

ஆதாரப்பூர்வமான அண்ணலாரின் சொல்லுரைகளைத் தேடித்தேடி வாசித்திருக்கிறேன். அந்த ஆதாரங்களை எனது எழுத்து, சொல்லுக்கு குழிகற்களாக அமைத்திருக்கிறேன். அவற்றை எனது வாழ்வில் பொருத்தி அதை செம்மைப்படுத்தி அழகாக்கி இருக்கிறேன்.

ஆனால், இந்த செம்மையை, நபிகளாரின் ஆளுமைப் பண்புகளை, நட்சத்திரப்பூக்களாய் மின்னும் அந்த ஒளிக்கீற்றுகளை பொதுவெளியில் சேர்ப்பது எப்படி?

இதற்கான எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முன் நீங்கள் ஏற்கனவே வாசித்த கண்ணாடியை நானும் 'தி இந்து தமிழ் ஆனந்த ஜோதி' இணைப்பில் எழுதியிருக்கிறேன்.

கீழே தந்துள்ள அவ்வரிகளை சற்றும் சிரமம் பார்க்காமல் வாசிக்கும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நபிகள் மொழி: கண்ணாடியின் ஐந்து குணங்கள்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

உங்களில் ஒருவர் மற்றொரு சகோதரருக்குக் கண்ணாடி போன்றவராவார். எனவே, தம் சகோதரரிடம் ஒரு குறையைக் கண்டால் அதனைக் களைய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

கண்ணாடி நேருக்கு நேராக குற்றங்குறைகளைக் காட்டிவிடுகிறது. விலகி நின்றால் மௌனமாகிவிடுகிறது. பிறர் குற்றங்களை நேருக்கு நேராகக் காட்ட வேண்டும். அவர்கள் குறித்து புறம் பேசக் கூடாது. இதுவே முதல் அம்சம்.

முகத்தில் உள்ள குறைகளை உள்ளதை உள்ளபடியே காட்டுகிறது கண்ணாடி. மிகைப்படுத்தியோ குறைத்தோ ஒருக்காலும் காட்டுவதில்லை. சக மனிதர்களின் குற்றங்குறைகளை மிகைப்படுத்தியோ, குறைத்தோ காட்டாதீர் என்பது இரண்டாம் அம்சம்.

உங்கள் சகோதர்களின் குறைகளைக் கண்டறிய அவர்களைப் பின்தொடர்ந்து திரியாதீர்கள். தமது சகோதரரின் மறைவான குறைகளை வெளிப்படுத்த ஒருவர் முற்படுவாராயின், இறைவனும் அந்த மனிதரின் மறைவான குறைகளை வெளிப்படுத்திவிடுவான். பிறகு அவர் அவமானத்தால் கூனிக்குறுகிப் போக வேண்டியிருக்கும் என்று நபிகளார் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எச்சரிக்கிறார்.

கண்ணாடி, எவ்வித எதிர்பார்ப்பும் சுயலாபமும் இன்றித் தனது கடமையைச் செய்கிறது. யாரிடமும் பகைமை, குரோதத்தைக் காட்டுவதில்லை. யாரையும் பழிவாங்குவதுமில்லை. கோபதாபங்களின்றி, எதிரிலிருப்பவர் அழகிய தோற்றம் பெறக் கண்ணாடி உதவுவதுபோலவே சக மனிதர்களின் அகம், அழகுபெற உதவ வேண்டும் என்பதே மூன்றாவது அம்சம்.

கண்ணாடியில் முகம் பார்ப்பவர், தமது குற்றங்குறைகளைக் கண்டு வெறுப்படைவதில்லை. கோபப்படுவதில்லை. கோபத்தைக் கண்ணாடி மீது காட்டுவதுமில்லை. மாறாக அழகுபடுத்திக் கொள்வதிலேயே முனைப்பு காட்டுகின்றான். மகிழ்ச்சியோடு கண்ணாடியைத் துடைத்து வைத்துப் பாதுகாக்கிறான். உங்கள் குற்றங்குறைகளை நளினமாகச் சுட்டும்போது வெறுப்படையாதீர்கள். கோபப்படாதீர்கள். மாறாக, மகிழ்ச்சியடைந்து, சக மனிதர்களின் தோழமையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். சீர்த்திருத்தத்துக்குத் தயாராகுங்கள் என்பதே கண்ணாடி சொல்லும் அடுத்த அம்சம்.

தோழமைக்குக் கண்ணாடி உவமானப்படுத்தப் பட்டிருப்பது சக மனிதர்களிடம் நிலவும் நட்பும் தோழமையும் அன்பின் வடிவமாக நலன்விரும்பியாகத் திகழ வேண்டும் என்பதற்குத்தான்!

நீங்கள் உங்கள் நண்பர்களின், சக மனிதர்களின் சுகதுக்கங்களில் பங்கெடுங்கள். உங்கள் விமர்சனங்கள், மன உருக்கம் என்னும் அந்த அன்பில் கரைந்துவிடும். உள்ளங்கள் பிணைந்துவிடும்.

அன்பளிப்புகள் சிறியதானாலும் பெரிதானாலும், அவை மனித உள்ளங்களைப் பிணைக்கும் என்பதை உறுதிப்படுத்தி நபிகளார் இப்படிச் சொல்கிறார்.

“ஒருவர் மற்றொருவருக்கு அன்பளிப்புகளை அளித்தவண்ணம் இருங்கள். இதனால், பரஸ்பரம் அன்பு பெருக்கெடுக்கும். உள்ளங்களிலிருந்து கபடங்கள் விலகும். ஒருவர் ஓர் ஆட்டின் கால்களை எனக்கு அன்பளிப்பாக வழங்கினாலும் நான் அவற்றை அவசியம் ஏற்றுக்கொள்வேன். ஒருவர் ஆட்டின் கால்களை சமைத்து விருந்து வைத்தாலும் நான் கட்டாயம் அந்த விருந்தை ஏற்றுக்கொள்வேன்!”

http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8532117.ece

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எழுத்து நடையோ, சொற்சிறப்புகளோ அவற்றுக்கான வலியுறுத்தலோ எனது எழுத்தின் நோக்கமல்ல என்பதை முதலிலேயே தெரிவித்து விடுகிறேன்.

என்னிலும் அழகாய் எழுதுபவர்கள், சொல்லடுக்குபவர்கள், திறமையானவர்கள் அதிகமதிகம் என்பதை நன்கறிவேன்.

நான் அழுத்தமாக சொல்ல வருவது இதுதான்:

நபிகளார் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் மொத்த மனித இனத்துக்கானவர்.

இன்னும் விரிவாக சொல்லப்போனால் நபிகளார் மொத்த உயிரினத்துக்கானவர்.

அதனால், அவரை முஸ்லிம்  சமுதாயத்துக்குள் மட்டும் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டாம். பொதுவெளியில் அன்னியப்படுத்தவும் வேண்டாம்.

உலக மக்களுக்கு அருளாக அனுப்பப்பட்ட அண்ணலாரை எல்லோரும் கொண்டாட விடுங்கள். அவரை எல்லோரும் அணுகும்விதமாக சொல்லாடல்களைக் கையாளுங்கள். மண்ணுக்கேற்ற மைந்தராய் அவர் மனித உள்ளங்களை ஈர்க்க வழிவிட்டு நில்லுங்கள்.

முஃமின் என்பவர் முஸ்லிம் என்பது விளங்கிக்  கொள்ளக்கூடியதுதான். ஆனால், பொதுவெளியில் இறைநம்பிக்கைக் கொண்டவர் என்றால் குறைந்துவிடப்போவதுதான் என்ன?

அந்த ஒற்றைச்சொல்லாடலால், நபிகளார் எனக்குமானவர், என் நலனும் நாடுபவர் என்று ஒவ்வொரு சமயத்தாரும் எண்ணி பூரிக்க வழிவகுத்தால்தான் என்ன?

ஆதாரங்கள், குறிப்பெண்கள் எல்லாம் தவிர்த்து நேரிடையாய் செய்தியை வைத்தால்தான் என்ன?

எந்த மொழி சிறந்தது என்ற சர்ச்சைக்குள் சிக்காமல், மூலமொழிக்குள்ளேயே நிற்காமல் அவரவர் அழகிய தாய் மொழியில் நபிகளாரை பேசவிட்டால்தான் என்ன?

அடைப்புக்குறிக்குள் எல்லாம் நபிகளாரை வாட்டாமல் பொதுவெளியில் எல்லோருக்குமானவர் என்றொரு உறவை பிணைத்தால்தான் என்ன?

இது போன்ற கேள்விகள், இன்னும் பல கேள்விகள் என்னுள் அடுக்கடுக்காய் எழுவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.
எனது இந்தக் கருத்தில் முரண்படுவர்கள் ஏராளமானோர் இருக்கலாம். ஆதரிப்போரும் இருக்கலாம்.

முரண்படுபவர் தமது கருத்துக்களை முன்வைப்பதைவிட்டு எனக்கு ‘பட்டப் பெயர்களை’ சூட்டாமலிருக்கட்டும்.

ஏனென்றால், எனக்கு நபிகளாரைவிட்டால் வேறு நாதியில்லை என்பதில் மட்டும் உறுதியான நம்பிக்கை இருக்கிறது.

நாத்திகனாக திரிந்து இளமையை வீணடித்த எனக்கு இறைநம்பிக்கை ஊற்றைக் அடையாளம் காட்டி தாகம் தீர்த்தவர்.

ஒப்பற்ற அருங்குணங்களால் என்னை புடம்போட வைத்து என் வாழ்வின் தடம் மாற்றியவர்.

வாழ்வின் அடிதோறும் காலத்தால் அழியாத பொன்மொழிகளால், ஒப்பற்ற வழிமுறைகளால் என்னை கைத்தாங்கலாய் வழி நடத்தி இறையன்புச் சுனையை சுவைக்க வைப்பவர்.

சோர்ந்திருக்கும் போதெல்லாம் தாயுமானவராய் நினைவில் எழுந்து இறையருள் பொழிய வழி வகைச் செய்பவர்.

நாயகமே..! நீரின்றி எனக்கு உய்வில்லை… இறையன்பை பெற்றுத்தரும்  வேறு யாருமில்லை என்றே சான்றளிக்கிறேன்.




 


Share:

Wednesday, June 14, 2017

முகநூலை பயனுள்ளதாக்க என்ன செய்ய வேண்டும்?


'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நபிகளார் தமது தாயகமான மக்காவில் தமக்கு எதிரான கொடுமைகளின் உச்சத்தில் நாடு துறந்து மதீனா என்னும் அயலகம் செல்ல வேண்டி வந்தது. அப்போது, அண்ணலார் செய்த ஒரு பிரார்த்தனை மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரும் தமது மனதில் பொறித்துக் கொள்ள வேண்டிய பிரார்த்தனை அது.

"என் இறைவனே..! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் வாய்மையுடன் கொண்டு செல்வாயாக..! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் வாய்மையுடன் வெளியேற்றுவாயாக!” - என்ற இந்தப் பிரார்த்த னையை இறைவனே நபிகளாருக்குக் கற்றுத் தருகின்றான் ~இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
விசித்திரமான யுகத்தில் நுழைந்து விட்டோமோ என்று தோன்றுகிறது.

முகநூல் உலகம் பற்றிதான் சொல்கிறேன்.

எத்தனை எத்தனை விதமான விந்தை மனிதர்கள் இங்கே…. ஆஹா… வியப்பாக இருக்கிறது.

போலிகள் எச்சரிக்கை ஒருபுறம். அறிவு கொழுந்துகளின் ஆர்ப்பாட்டங்கள் மறுபுறம்.

• இப்படி வதந்திகளைப் பரப்புவோர்,
• சதா பரபரப்புகளிலேயே ஆழ்த்தி பதிவேற்றம் செய்வோர்,
• தனியான குழுக்களில் பேச வேண்டிய கருத்துக்களை பொதுத்தளத்தில் வரம்புமுறையில்லாமல்… கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல் பதிவிடுவோர்,
• விமர்சனம் என்ற பெயரில் காதுகூசும் வசைமழைப் பொழிவோர்,
• தாயாக மதிக்கப்படும் மொழியை கொலை செய்வோர் என்று முகநூல் விசித்திர யுகமாகிவிட்டது.

என்னைக் கேட்டால் நல்லவற்றை விரைந்து… கொண்டு சேர்க்க, முகநூலைவிட சிறந்த ஊடகம் வேறு எதுவுமில்லை என்பேன். அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு இந்த பரிந்துரையை முன்வைப்பேன்.

முஸ்லிம்கள் என்று தனியாக விளிப்பதற்கு இந்த சொல்லாடலை நான் பயன்படுத்துவதற்கு எனது நண்பர்கள் எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும்.

தமது பண்பு நலன்களில் கவனமாக இருக்க வேண்டியவர்களும், கொள்கை ரீதியாகவே அடுத்தவர்க்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பொறுப்புகள் சுமத்தப்பட்டவர்களும் முஸ்லிம்கள்தான் என்பதாலேயே இதை பிரத்யேகமாக குறிப்பிட வேண்டியிருந்தது.

நபிகளார் தமது தாயகமான மக்காவில் தமக்கு எதிரான கொடுமைகளின் உச்சத்தில் நாடு துறந்து மதீனா என்னும் அயலகம் செல்ல வேண்டி வந்தது. அப்போது, அண்ணலார் செய்த ஒரு பிரார்த்தனை மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரும் தமது மனதில் பொறித்துக் கொள்ள வேண்டிய பிரார்த்தனை அது.


”என் இறைவனே..! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் வாய்மையுடன் கொண்டு செல்வாயாக..! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் வாய்மையுடன் வெளியேற்றுவாயாக!” - என்ற இந்தப் பிரார்த்தனையை இறைவனே நபிகளாருக்குக் கற்றுத் தருகின்றான்.

உண்மையாக இருத்தல். உண்மையே பேசுதல். உண்மையையே எழுதல் என்று தனது அத்தனை நடவடிக்கைகளையும் வாய்மை என்னும் நேர்க்கோட்டில் அமைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. வாழ்க்கையின் போக்கை சீர்ப்படுத்தும் ஆளுமைப்பண்பு இது. வெற்றி இலக்கை நோக்கி நகர்த்தும் உந்து சக்தி.

முகநூலை மதிப்புள்ளதாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகள் இவை:

• சொந்த அடையாளங்களுடன் இருங்கள். இதனால் போலிகள் தவிர்க்கப்படுவர்

• முகநூலுக்கு அப்பால் நிஜ உலகம் ஒன்றுண்டு என்பதால்… நிறைய வாசியுங்கள். வாசிப்பில்லாமல் அறிவு பெற முடியாது. அறிவில்லாமல் செயல்படவே முடியாது என்பதை நன்குணருங்கள்.

• அவற்றின் உண்மை தன்மை அறியாமல் எந்த செய்தியையும் பரப்பாதீர்கள். வதந்திகள் பெருத்த தீமை விளைவிப்பதால் அது கொலையைவிட கொடியதாகும்.

• ஒரு பரபரப்புக்கு பிறகு மறு பரபரப்பு வருமாதலால் அதனால் எந்த பலனும் விளையப் போவதில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

• சமயம் சார்ந்த சர்ச்சைமிகு கருத்துக்களை தயவுசெய்து தனியான குழுக்களில் பதிவேற்றுங்கள். பொதுவெளியில், அவை குழப்பம் ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

• பரஸ்பரம் ஒருவர் மற்றொருவரை மதியுங்கள்.

• விமர்சனங்கள் உங்கள் முன்னேற்றத்துக்கான மைல் கற்கள் என்பதை உணருங்கள். அதனால், அவற்றை பொறுமையாக செவிமடுத்து கேளுங்கள். அந்த விமர்சனங்கள் உண்மையிலேயே நியாயமற்றவை, உங்களை திசைத் திருப்புபவை என்றால் அந்நிலையில் மென்மையும், மௌனமுமே மேல்.

• ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட தேர்ச்சி பெற்ற வாசிப்பினால்தான் மொழியும், அதன் நடையும் செம்மைப்படுகிறது. நமது கருத்துக்களை அடுத்தவர் உள்ளங்களில் மேடையமர்த்திக் கொள்ள முடிகிறது. தமிழ் எழுதப்படிக்கத் தெரியாதோர் தயவு செய்து கூச்சமில்லாமல் அதை கற்றுக் கொள்ள முயலுங்கள். சின்ன சின்ன வாக்கியங்களாக எழுதப் பழகுங்கள். பிழைத்திருத்தம் செய்யுங்கள். தாய்க்கு ஒப்பான மொழியை தயவுசெய்து கொலை செய்யாதீர்கள்.

• முகநூல் ஒருகாலும் பொழுதுபோக்குக்கானது அல்ல. அரட்டை அரங்கமும் அல்ல. நன்கு, பயனுள்ளதாக்கிக் கொள்ள நமக்கு கிடைத்திருக்கும் நல்வாய்ப்பு என்பதை உணருங்கள்.

• நண்பர்களை தேர்வு செய்யும்போது அவர்களின் முகநூல் பக்கத்துக்கு சென்று கொஞ்சம் நேரம் ஒதுக்கி பாருங்கள். ஏற்கனவே அவர்களின் நட்பு வட்டத்தில் இருப்போர் எத்தகையோர் என்பதை கவனியுங்கள். தேவையற்ற சங்கடங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

• நன்மையானவற்றில் கொள்கை, கோட்பாடுகள், சமயங்கள் கடந்து ஒன்றிணைந்து செயல்படுங்கள்.

• உங்களது நட்பு வட்டத்தில் பெண்கள் இருந்தால்… அவர்களை உங்களின் கண்ணியத்துக்குரிய சொந்த சகோதரிகளாக கருதுங்கள். தேவையில்லாமல் அவர்களின் அந்தரங்களில் நுழையாதீர்கள். தவிர்க்க இயலாத சில நேரங்கள் தவிர மற்றைய நேரங்களில் இன்பாக்ஸில் செல்லாதீர்கள்.

•துவேஷங்களைத் தூண்டும், சமூக நல்லிணக்கத்தை சீர்க்குலைக்கும் எத்தகைய பரப்புரைகளை பரப்பும் ஊடகமாக ஒருகாலும் முகநூலை பயன்படுத்தாதீர்கள். அமைதி சீர்குலைந்துபோன சமூகத்தில் நல்லுரைகள் ஒருகாலும் எடுபடுவதில்லை என்பதில் உறுதியாக இருங்கள்.

• தீமைக்கு தீமை ஒருகாலும் தீர்வாகாது. நெருப்பை நெருப்பால் அணைக்கவே முடியாது. வன்மைக்கு மென்மைதான் தீர்வு. உயரிய ஒழுக்க விழுமியங்களால்தான் மனங்களை ஈர்க்க முடியும் என்னும் திருக்குா்ஆன் அறிவுறுத்தல்களை ஒருகாலும் புறக்கணிக்காதீர்கள்.

• நபிகளார் தலைமையில், உதைஃபியா என்னும் இடத்தில் மக்கத்து குறைஷிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே முஸ்லிம்களுக்கு பெரும் பாதகம் என்று பேசப்பட்ட....  அந்த இடத்தின் பெயராலேயே வழங்கப்படும் உதைஃபியா உடன்படிக்கையை எப்போதும் நினைத்திருங்கள்.

நபிகளாரை நபியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று மக்கத்து குறைஷிகள் முரண்டு பிடிக்க... இறைவனின் திருத்தூதர் முஹம்மது என்ற ஒப்புகை நீக்கப்பட்டு, அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று மாற்றப்பட்ட அந்த மாற்றத்தை நபிகளார் ஏற்றார்கள். ஷரத்து இடம் பெற்றிருந்த பகுதியை சுட்டிக் காட்டச் சொல்லி, தமது திருக்கரங்களாலேயே நபிகளார் அதை அழித்தார்கள். குறைஷிகளின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டார்கள். அந்த ஒப்பந்தத்தில் நபிகளார் பெற்றது ஒன்றே ஒன்றுதான் அமைதி!

•  அக்பர், பாபர் பிள்ளைகள் அல்ல நாம். இந்த மண்ணின் மைந்தர்கள். ஆதிகுடிகள். நமது நாடு. நமது மக்கள் என்பதில் எப்போதும் உறுதியாக, பொறுப்புணர்வோடு இருங்கள்.

 • எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, பொதுவெளியில் பதிவேற்றப்படும் உங்கள் பதிவுகள் அனைவருக்கும் புரியும்விதமாக அரபி சொல் கலப்பில்லாமல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். பள்ளிவாசல்களில் சக முஸ்லிம்களிடம் பேசுவதும், முஸ்லிம் பத்திரிகைகளில் எழுதுவதும் வேறு. முகநூலில் பதிவேற்றம் செய்வதும் வேறு என்பதில் கவனமாக இருங்கள். 

• கடைசியாக, காலம் எவ்வாறு செலவழிந்தது என்பது கேள்விக்குட்பட்டது. தகுந்த பதில் அளிக்காமல் இறைவனின் திருச்சந்நிதியிலிருந்து நம்மால் நகரவே முடியாது என்பதில் கவனமாக இருங்கள்.

Share:

Sunday, June 11, 2017

காலமே சாட்சி!


"கார்ல் மார்க்ஸிலிருந்து, நபிகளார் பக்கம் என்னை திருப்பியவை மௌலானா மௌதூதியின் புத்தகங்கள்தான் என்பதை நான் நேரிடையாகவே சொல்ல முடியும். என் வாசிப்புக்கும், என்னுள் எழுந்த கேள்விகளுக்கும் புரிதல்களாகி என்னை திருக்குா்ஆன் பக்கமும், திருநபிகளார் வாழ்வியல் பக்கமும், அந்த வாழ்வியலை தலைமேல் சுமந்து நின்ற நபித்தோழர், தோழியர்கள் பக்கமும், அதைத் தொடர்ந்து அவற்றை பெரும் பாடுபட்டு ஆதாரபூர்வமாக தொகுத்தளித்த பேரறிஞர்கள் பக்கமும் அந்தப் புத்தகங்கள்தான் என்னை திசை திருப்பியவை. ஜமாஅத்தே இஸ்லாமி என்னும் பேரியக்கத்தோடு என்னை இணைத்தவை" ~இக்வான் அமீர்

````````````````````````````
முகநூலில் நான் யாரையும் 'டாக்' செய்வதில்லை. அப்படியிருந்தும் பலர் என்னை “டாக்“ செய்து அதைத் தொடர்ந்து வரும் நோட்டிபிகேஷன் தொல்லையில் சிக்க வைக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க… அண்மையில் சகோதரர் ஒருவர் என்னை “டாக்“ செய்திருந்தார். அதில் ஒரு இஸ்லாமிய அறிஞர் எழுதிய புத்தகத்தை மையப்படுத்தியும் இருந்தார்.

பேரறிஞர் மௌலானா மௌதூதியால் அமைக்கப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஒரு புதுவிதமான அமைப்பை சமூகத்தில் தோற்றுவிப்பதாக குற்றச்சாட்டு அதில் எழுப்பப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் 'மல்லுக்கட்டுக்கு வா..!' - என்று என்னையும் இழுத்துவிடும் விதமாக கமெண்டில்வேறு என் பெயரை சேர்த்திருந்தார்.

நான் விவாதங்களில் எப்போதும் கலந்து கொள்வதில்லை. அதுவும் இத்தகைய விவாதங்கள் வீணானவை. நமது நேரத்தை கொள்ளைக் கொள்பவை.. என்பது நான் இஸ்லாத்தை ஒப்பி ஏற்றுக்கொண்ட 80-களிலிருந்தே இதை நன்றாக அறிந்து வைத்திருப்பவன்.

நாத்திகவாதத்திலிருந்து இறைநம்பிக்கையாளனாக நான் மாறிய நிலையிலும் என்னை இந்த முஸ்லிம் சமூகம் சும்மா விடவில்லை. அநாகரீக விமர்சனங்கள் ஒரு பக்கம் என்றால், வழிகேடன், ஷியா, காதியானி என்று வாய்க்கு வந்தார்போல ஏச்சு, பேச்சுக்கள் பட்டங்கள் இலவசமாக வாரி… வாரி வழங்கியிருக்கிறது. பொதுத்தள நாளேடுகளின் படியேறி எனது எழுத்துக்களை தடைப்போட எவ்வளவோ முயற்சித்திருக்கிறது. இதில் கற்றவர், கல்லாதவர் எல்லாம் அடக்கம்.

கார்ல் மார்க்ஸிலிருந்து, நபிகளார் பக்கம் என்னை திருப்பியவை மௌலானா மௌதூதியின் புத்தகங்கள்தான் என்பதை நான் நேரிடையாகவே சொல்ல முடியும். என் வாசிப்புக்கும், என்னுள் எழுந்த கேள்விகளுக்கும் புரிதல்களாகி என்னை திருக்குா்ஆன் பக்கமும், திருநபிகளார் வாழ்வியல் பக்கமும், அந்த வாழ்வியலை தலைமேல் சுமந்து நின்ற நபித்தோழர், தோழியர்கள் பக்கமும், அதைத் தொடர்ந்து அவற்றை பெரும் பாடுபட்டு ஆதாரபூர்வமாக தொகுத்தளித்த பேரறிஞர்கள் பக்கமும் அந்தப் புத்தகங்கள்தான் என்னை திசை திருப்பியவை. ஜமாஅத்தே இஸ்லாமி என்னும் பேரியக்கத்தோடு என்னை இணைத்தவை.

ஒரு பத்தாண்டு காலம் ஜமாஅத்தில் இணைந்து நான் பணியாற்றியது மறக்க முடியாதது. மிகைத்தலாக கருதினாலும், அந்தப் பணிதான் எனது சுவனம் என்று என்னுள் ஆழமான கருத்துருவாக்கத்தை எழுப்பிய காலகட்டமது. எனது போதாத காலகட்டமோ அல்லது தொலைதூர சிந்தனையாக செயல்பட்டதால் என்னவோ ஒரு “டெக்னிகல் நாக்அவுட்டில்“ நான் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன்.

ஜமாஅத்திலிருந்து நான் நீக்கப்பட்டாலும், இறையருளால் பாலர் பருவத்திலிருந்தே நான் உருவாக்கிய இளைஞர், இளைஞிகளும், அவர்களின் அரிய ஆள்வளம் வெளியில் சென்று வீணாகிவிடக்கூடாதே என்ற பதைபதைப்புடன் அவர்களிடையே உருவாக்கிய மணப்பந்தங்களும் இன்றளவும் தில்லிவரை இந்த வட்டம் பேசப்படுகிறது என்பது பெருமையான செய்தியும்… இறைவன் தரப்பிலிருந்து எனக்கு இவ்வுலகிலேயே கிடைத்த சீரிய வெகுமதியுமாகும்.

ஜமாஅத்தோடு இணைந்து நான் செய்த பணிகளின் விளைவுகள், ஜமாஅத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னும் அதன் ஒத்துழைப்பாளராக இருந்து செய்து கொண்டிருக்கும் பணிகளின் விளைவுகள் என்று ஒரு கால்நூற்றாண்டு கால பணிகள் சமூகம் சார்ந்த பொறுப்புகள்தான் என்று என்னால் உறுதியாக அதிலும் அனுபவபூர்வமாக கூறமுடியும். மாறாக இஸ்லாத்தில் ஒரு புதுவிதமான அமைப்பை உருவாக்குபவை என்ற குற்றச்சாட்டு அபத்தமானது. எவ்வித உண்மையும் அற்றது.

மௌலான மௌதூதியால் உருவாக்கப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி, மௌலானாவின் நூல்களை அமைப்பின் கட்டமைப்புக்காக வாசிப்பு நூல்களாக வைத்திருக்கிறது.

ஆனால், ஜமாஅத்தின் கொள்கையும், கோட்பாடுகளும், வழிமுறைகளும் திருக்குர்ஆன் மற்றும் சுன்னா எனப்படும் நபிகளாரின் திருவழிமுறைகளின் மீது கட்டப்பட்டவையாகும். அவற்றை செவ்வன நிறைவேற்ற முயன்று கொண்டிருக்கும் இயக்கம் ஜமாஅத்து இஸ்லாமி.

நமது நாட்டின் ஒவ்வொரு இளைஞனையும், இளம்பெண்ணையும் அறிவுரீதியாக, ஒழுக்க ரீதியாக தயார் செய்து அவர்களது சமூக பொறுப்புகளை உணர்த்தி இந்த நாட்டை புனரமைக்கும் பணிகளை நோக்கி செலுத்திக் கொண்டிருக்கும் இயக்கம் இது. மௌலானா மௌதூதி என்ற மாய்மாலங்கள் இங்கு ஏதுமில்லை.

ஜமாஅத் இந்திய துணைக்கண்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு அதன் மீது அபாண்டமாக ஏராளமான குற்றச்சாட்டுகள், குற்றம் சுமத்தி புத்தக வெளியீடுகள். ஒரு காலத்து வெள்ளிமேடைதோறும் சொல்லடுக்கு அம்பு வீச்சுக்கள் என்றெல்லாம் நடந்துள்ளன.

ஒரு கட்டத்தில் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று இளைமையின் வீரியம் துடித்தபோது, ”உங்களுக்கான பணியில் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற பணிகளில் கவனம் சிதறவிடாதீர்கள்..!” – என்று அற்புதமான அறிவுரைகள் காலஞ்சென்ற மூதறிஞர் ஜமீல் அஹ்மது சாஹெப் போன்றவர்களால் அறிவுறுத்தப்பட்டு தடம் புரளாமல் நேர்வழி நடந்தவர்கள். நடந்து கொண்டிருப்பவர்கள்.

தற்போது, ஜமாஅத்தில் எந்தப் பொறுப்பிலும் நான் இல்லை. அதனால், இது அதிகாரபூர்வமான பதிலும் இல்லை. ஆனால், உண்மை இதுதான். இறைவன் நாடினால்… ஜமாஅத்தின் உள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ, ஆதரவாளனாகவோ, உறுப்பினராகவோ மனித இனத்தை அவனது படைப்பியல் நோக்கத்தில் கட்டமைக்கும் ஜமாஅத்தின் இந்த வெற்றிப் பணிகளை தலைமுறை… தலைமுறையாக அதிலும் குடும்பம் சகிதமாக நாங்கள் முன்னெடுத்து சென்று கொண்டேயிருப்போம். வெற்றியோ தோல்வியோ அது இறைவனின் கையில்.

கடைசியாக, நூற்றாண்டே சாட்சியாக என்ற தலைப்பில் எனது வலைப்பூவில் வைகறை நினைவுகள் என்னும் தலைப்பில் மௌலானா மௌதூதியின் வாழ்கையை சுருக்கமாக எழுதியிருக்கிறேன். http://ikhwanameer.blogspot.in/2016/02/29.html

அதிலிருந்து சில வரிகள்:

ஒருநாள் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒரு கடிதம் மௌலானாவுக்கு வந்தது. அதில் இப்படி எழுதப்படிட்டிருந்தது:

"அன்புள்ள தந்தை நிகர் மெளலானாவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்களது புத்தகங்களைப் படித்துதான் நான் இஸ்லாம் தழுவினேன்.

மறுமையில் இறைவனின் சந்நிதியில் தங்களது ஈடேற்றத்துக்கான பரிந்துரையை (சாட்சி) நான் செய்வேன்!"

கடிதத்தை படித்து முடிதத மௌலானாவின் கண்கள் குளமாயின.

"உண்மைதான்! இந்த இளைஞன் நாளை மறுமையில் என் ஈடேற்றத்துக்காக சிபாரிசு செய்வான் என்பது உண்மைதான்!" - என்றார் கனத்த குரலில்.

ஆம்...! யாருடைய சிபாரிசும் ஏற்றுக் கொள்ளப்படாத அந்த மறுமை நாளில், அந்த ஒரு ஸ்பெயின் இளைஞன் மட்டுமல்லாமல் இதை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆயிரக் கணக்கான பேர் மௌலானாவின் பிழைப் பொறுக்க கருணையாளனான இறைவனிடம் இருகரமேந்தி நிற்பார்கள்.

இறைவன் நாடினால்.... இதற்கு வரவிருக்கும் நூற்றாண்டுகள் சாட்சிகளாக நிற்கும்!
Share:

Friday, March 10, 2017

ஊடக அறம் என்பது என்ன?

“இறைவா! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் வாய்மையுடன் வெளியேற்றுவாயாக! என்னை எங்கு கொண்டு சேர்த்தாலும் வாய்மையுடன் கொண்டு சேர்ப்பாயாக!”

- மக்காவிலிருந்து, மதீனாவுக்கு புலன்பெயர்ந்து சென்ற நிகழ்வான ஹிஜ்ரத்தின் போது நபிகளார் இறைவனின் திருமுன் வைத்த வேண்டுதல் இது.

இதுதான் முஸ்லிம்களின் அனைத்துத்துறை தழுவிய ‘அறம், நீதி நெறி’ (ethics) எல்லாம். இதுதான் முஸ்லிம்களின் உயிர் மூச்சு… சுவாசம்.. எல்லாமே. இதுதான் வெற்றிகூட.

வேலூர் இஸ்லாமிக் சென்டர் முதல்வர் மூதறிஞர் அப்துல் ஹபீஸ் ரஹ்மானி சொல்லுவார்: “நான் பேசும்போது, ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து.. அளந்துதான் பேசுவேன்! ஒவ்வொரு வார்த்தையையும் மூளைக்குக் சொண்டு சென்றுதான் பேசுவேன்!”

உண்மைதான். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருப்பது முக்கியம். கொட்டிய வார்த்தைகளை பிறகு அள்ள முடியாது என்றிருக்க.. எல்லாவற்றுக்கும் இறைவனின் திருமுன் கணக்கு, வழக்குகள் சமர்பிக்க வேண்டிய செயல் இது.

90-களில், உணர்வு வார இதழ், மக்கள் உரிமை, ஒற்றுமை, சமரசம் மற்றும் தினமணி நாளேடுகளுக்காக புலனாய்வு செய்திகளைத் திரட்ட சிறப்புச் செய்தியாளனாக செல்லும்போது, மேலே கண்ட நபிகளாரின் பிரார்த்தனையை ‘எனக்கு அசைண்மென்ட்’ ஒதுக்கப்பட்ட நிமிடத்திலிருந்து ஓதிக் கொண்டேயிருப்பேன்.

தகவல்களை மேலோட்டமாய் அணுகாமல் அவற்றின் அடி நுனிவரை சென்று ஒவ்வொரு நபராய் சந்தித்து எனக்கு திருப்தி ஏற்படும்வரை (எதிலும் காம்ப்ரமைஸ் ஆகாமல்) செய்திகளைத் திரட்டி கொண்டு வந்து தருவேன்.

எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அவை ஜீவனுள்ளவையாக அச்சில் ஏறுவதோடு என் ஜீவனும் பிரகாசமடைவதை  உணர்ந்திருக்கிறேன்.


Share:

Sunday, February 19, 2017

மறைமுக வாக்கெடுப்பும், அதிகார குவிமையமும்




இதற்கு, நாட்டாமை செய்து கொண்டிருந்தவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோவை அசம்பாவிதங்கள் என்று ஏக பிரச்னைகளில் சிறுபான்மையினம் சிக்கியிருந்த நேரம். அந்தச் சூழலையொட்டி தீவிரத்தனத்துக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையாயினும், எங்களை தீவிரவாதிகள் என்று சொல்லி பிடித்துக் கொடுத்துவிடுவதாக அந்த அச்சுறுத்தல் நீண்டது - இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

1980-களின் பிற்பகுதி அது. எங்கள் பள்ளிவாசலில் காலங்காலமாக நிர்வாகத்தில் அமர்ந்து நாட்டாமை செய்துவந்த ஒரு குழுவுக்கு எதிராக நாங்கள் களம் இறங்கிய கால கட்டம்.

பள்ளிவாசலில் தேர்தல் இல்லாமல் நியமன முறையில் சிலர் தொடர்ந்து அதிகாரம் செலுத்தி வந்தனர். சுரண்டலும், முறைகேடுகளும் மலிந்துவிட்டிருந்த நேரமது. இது பொதுமக்களுக்கு பிடிக்காத நிலையில்கூட எழுந்து நின்று கேட்க அச்ச உணர்வு அவர்களை ஆட்கொண்டிருந்தது. எதிர்த்து கேட்டவர்கள் சொல்லப்படாத சமூக விலக்கு செய்யப்பட்ட நிலை என்று அதிகார குவிமையத்தின் முரட்டுத்தன வலிமை தொடர்ந்தது.

இடதுசாரி இயக்கங்களிலிருந்து விலகி இஸ்லாத்தின் பக்கம் அப்போதுதான் வந்திருந்தேன் இளைஞனாகிய நான்.

எவ்வித அச்ச உணர்வின்றி சில சிறுவர்களை மட்டும் எனது தரப்பில் வைத்துக் கொண்டு ஜனநாயக முறையிலான மறைமுக வாக்கெடுப்பு வேண்டும் என்று அறவழியில் போராட்டத்தைத் துவக்கினோம்.

வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலின் ஓரமாக நின்று வாக்குமுறையிலான தேர்தல் வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி அமைதியாக நிற்பதுதான் எங்கள் போராட்டத்தின் யுக்தி.

இதற்கு, நாட்டாமை செய்து கொண்டிருந்தவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோவை அசம்பாவிதங்கள் என்று ஏக பிரச்னைகளில் சிறுபான்மையினம் சிக்கியிருந்த நேரம். அந்தச் சூழலையொட்டி தீவிரத்தனத்துக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையாயினும், எங்களை தீவிரவாதிகள் என்று சொல்லி பிடித்துக் கொடுத்துவிடுவதாக அந்த அச்சுறுத்தல் நீண்டது.

நாங்கள் கேட்டது பள்ளி நிர்வாகத்தில், மக்கள் அனைவரும் பங்கெடுக்கும் விதமான ஒரு பொதுவான தேர்வு முறை. ஆனால், அந்த முரட்டு நாட்டாமைகளோ அதிகார தக்க வைத்தலுக்காக மக்களின் ஆதரவைத் திரட்டாமல் பொய் குற்றச்சாட்டுகள் மூலமாக எங்களைப் பணிய வைக்கப் பார்த்தது. எங்கள் எதிர்காலத்தை மையமாக வைத்து விளையாடவும் அச்சப்படவில்லை அந்த பதவி வெறியர்கள்.

இந்த அச்சுறுத்தல்கள் எங்களை எவ்விதத்திலும் அசர வைக்கவில்லை. அந்த காலகட்டத்தில், தினமணி, மணிச்சுடர், தீக்கதிர் போன்ற நாளேடுகளில் அதிகமாக எழுதி கொண்டிருந்த நேரமது.

மனிதரிடையே அன்பும், இணக்கமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்று எழுத்திலும், நடைமுறை வாழ்க்கையிலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது எங்களின் அழுத்தமான வாழ்வியல் அடையாளங்கள்.

கடைசியில் பதவி வெறியர்களின் மூர்க்கத்தனமான நடவடிக்கையின் அடிப்படையில் பொய்யான புகாரையொட்டி நாங்கள் கைது செய்யப்பட்டதும், அதன் பின் மேற்குறிப்பிட்ட எழுத்துவடிவிலான எங்கள் வாழ்க்கைகான ஆவணங்களை திரட்டி காவல்துறையின் உயர்மட்டம்வரை அனுப்பி, அதை சரிப்பார்த்தல், சோதித்தல், தொடர்ந்து எங்களை நச்சரித்தல் என்று தொடர்ந்த நடவடிக்கைகள் இறைவன் நாடினால்… மற்றுமோர் சமயத்தில் பார்க்கலாம்.

நான் இங்கு சொல்ல வந்தது… மறைமுக வாக்கெடுப்புக்கு அச்சப்படுவது என்பது தங்கள் சொல்லாலும், செயலாலும் மக்களை அச்சப்படுத்தி தங்களுக்கு அடிபணிய வைக்கும் ஒரு எதேச்சாதிகார முறைமையை அதிகார விரும்பிகள் எப்போதும் தங்கள் கையில் வைத்திருக்க நினைப்பதுதான்!

இந்த அச்ச உணர்வின் வெளிப்பாடுதான் இரண்டு நாட்களுக்கு முன் சட்டமன்றத்தில் நடந்த ரகளை.

மறைமுக வாக்கெடுப்பு என்பதுதான் சரியான அரசியல் தீர்வாக இருக்க முடியும்.

கிட்டதட்ட ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக எங்கள் பள்ளியில் ஒவ்வொரு தேர்தல் காலம்தோறும் வாக்கு பெட்டிகள்தான் நிர்வாகிகளை தேர்வு செய்கின்றன… இது எதிர் தரப்பினருக்கு பிடிக்காமல் இருந்தாலும் சரியே..!

நியமனங்கள் சர்வாதிகாரத்தின் வெளிப்பாடகிவிடும் என்பதே யதார்த்தம்.

சபாநாயகர் எதிர்கட்சிகளின் கோரிக்கையான மறைமுக வாக்கெடுப்பை ஏற்று அதை பின்பற்றியிருந்தால்… தமிழக சட்டமன்றத்தில் புதிய வழக்கொன்று நாடு முழுவதும் முன்னுதாரணமாகியிருக்கும். வரலாறு தமிழகத்தை அடிகோட்டிட்டவாறே இருந்திருக்கும். போற்றப்பட்ட முடிவாக அது இருக்கும்.

ஆனால், கத்தியின் மீது நடக்கும் சோதனைக்கு ஒப்பான இதை வெறும் அதிகார விரும்பிகள் ஏற்க வாய்ப்பில்லை என்பதை நிரூபித்திருக்கின்றன தொடரும் களேபரங்கள்!


Share:

Saturday, February 18, 2017

காக்கைகள் எவ்வளவோ மேல்!

காக்கை மீது பரிதாபம் கொண்ட நான் நீண்ட கழியால் அது சிக்கியிருந்த இடத்திலிருந்து விடுவிக்க முயன்றும், அது ஏனோ வாழவே பிடிக்காததைப் போல மனோநிலையில் இருந்தது. தானே விடுவித்துக் கொள்ள வழியிருந்தும், விடுவித்துக் கொள்ளாமல் நான் செய்த உதவிகளையும் ஏற்றுக் கொள்ளாமல் தூக்கு மேடையில் ஏற்றப்பட்ட கைதியைப் போல நிலைக்குலைந்திருந்தது. கால்களால் மரக்கிளையைப் பற்றிக் கொண்டு சிறிது சிறிதாக நழுவி தலைக்கீழாக தொங்கியது.-இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
காலையில் மாடி தோட்டத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தபோதுதான் காக்கைகள் கும்பல்… கும்பலாக கரைந்து கொண்டிருந்த சத்தம் கேட்டது.

எனது அனுபவத்தில் இப்படி காக்கைகள் கும்பலாக கரைவதன் பொருள்,

• ஒன்று குரங்குகளின் வருகையை பிரதிபலிப்பதாக இருக்கும் அல்லது
• பஞ்சாயத்து சபை கூடிவிட்டது என்று பொருள்.

ஆம்… காக்கைகள் தங்களுக்குள் உயரிய நீதிபரிபாலன முறைமைக்காக ஒன்று கூடும் நிகழ்வாக அது இருக்கும்.

இந்த நேரத்தில்தான் என் மனைவி என்னை அழைத்தார்… ”ஏங்க.. ஏங்க.. பாவம் அந்த காக்கா… மரத்தில் மாட்டிட்டிருக்கு.. காப்பாத்துங்களேன்..!”

மாடியிலிருந்து எட்டிப் பார்த்தால் வார்தா புயலால் அடிப்பகுதி முறிந்து தென்னையில் சாய்ந்திருந்த காய்ந்து போன கால் நூற்றாண்டு வயதுடைய சப்போட்டா மரத்தில் காக்கை ஒன்று சிக்கியிருந்தது.

அதுதான் குற்றவாளி காகம் என்று எனக்கு தெரிந்துவிட்டது.

சக காக்கைகள் கொத்தியதாலும், அதன் உள்ளுணர்வு தவறை உணர்த்தியதாலும் அது தனது முடிவு காலத்தில் இருந்தது எனக்குப் புரிந்தது.

காக்கைகள் நீதிமன்றம் குறித்து என் மனைவியிடம் சொன்னபோது, அவர் நம்ப மறுத்து, ”காக்காவ முதல்ல காப்பாத்துற வழியைப் பாருங்க” – என்றார் ஒற்றை வரியில்.

காக்கை மீது பரிதாபம் கொண்ட நான் நீண்ட கழியால் அது சிக்கியிருந்த இடத்திலிருந்து விடுவிக்க முயன்றும், அது ஏனோ வாழவே பிடிக்காததைப் போல மனோநிலையில் இருந்தது. தானே விடுவித்துக் கொள்ள வழியிருந்தும், விடுவித்துக் கொள்ளாமல் நான் செய்த உதவிகளையும் ஏற்றுக் கொள்ளாமல் தூக்கு மேடையில் ஏற்றப்பட்ட கைதியைப் போல நிலைக்குலைந்திருந்தது. கால்களால் மரக்கிளையைப் பற்றிக் கொண்டு சிறிது சிறிதாக நழுவி தலைக்கீழாக தொங்கியது.

தலைக்கு மேல் கும்பலாக காக்கைகள் கரைந்தவாறு பறந்து கொண்டிருந்தன.

கடைசி வாய்ப்பாக, காகம் நீர் அருந்த உதவும் வகையில், தொலைவிலிருந்து அதன் உடலில் நீர் ஊற்றினேன். உடலில் நீர்பட்டு தலைவழியே வழிந்தும் அந்த காக்கை நீரருந்த ஆர்வம் காட்டவில்லை.

கடைசியில் மரத்திலிருந்து கீழே விழுந்து தனக்கான தண்டனையை அனுபவித்துவிட்டது.
காக்கைகளுக்கும் சட்ட திட்டங்கள் உண்டு. நீதிமன்றங்களும் உண்டு என்பது வியப்பான செய்தி அல்லவா!

• அடுத்த காக்கைகளின் கூட்டை அபகரிப்பது குற்றம்.
• அடுத்த காக்கையின் ஜோடியை அபகரிப்பது கடும் குற்றம்.
• இளம் குட்டி காக்கைகளின் உணவை திருடி தின்பது குற்றம் என்று காக்கைகள் உலகில் பல சட்ட திட்டங்கள் உண்டு.

குற்றவாளி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார். குற்றங்களுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்படும்.

ஒரு காகம் மற்றொரு காகத்தின் கூட்டை அபகரிக்கும்போது, அந்த கூடு பிரித்துப் போடப்படும். குற்றவாளி மீண்டும் புதிய கூட்டை உருவாக்கி தர வேண்டும்.

ஒரு காகம் தனது ஜோடியை விட்டு விட்டு அடுத்த காகத்தின் ஜோடியை அபகரிக்கும்போது காக்கைகள் நீதிமன்றத்தில் அந்த குற்றவாளிக்கு தண்டனை மரணம்தான்!

எல்லா காக்கைகளும் கும்பலாய் சேர்ந்து தங்கள் அலகுகளாலேயே குற்றவாளியை குத்தி கிழித்து கொன்றுவிடுகின்றன.

இளம் குட்டி காக்கைகளின் உணவை திருடி உண்ணும் காக்கையின் இறகுகள் பிடுங்கப்பட்டு குட்டி காக்கைகளைப் போலவே பறக்க முடியாமல் உணவுக்காக சிரமப்படும் தண்டனைத் தரப்படும்.

இப்படிப்பட்ட நீதிமன்றங்கள் திறந்த வெளியிலும், வயற்காடு போன்ற ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியிலும் நடக்கும்.

அனைத்து காக்கைகளும் ஆஜராகும்வரை இரவு, பகல் என்று அந்த காக்கைகள் அங்கேயே குழுமி இருக்கும். குற்றம் சாட்டப்பட்ட காக்கை அதற்கான காவலர்களால் தப்பிக்க முடியாமல் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும்.

நீதிமன்றம் ஆரம்பம் என்பதன் அறிகுறியாய் காக்கைகள் ஒரு சேர கரைய ஆரம்பிக்கும்.

அதன்பிறகு, குற்றம் சாட்டப்பட்ட காக்தை தனியாக கரைய வேண்டும்.

அடுத்தததாக, குற்றத்தைக் கண்ட சாட்சி காக்கை ஆவேசமாக வால் இறகையும், உடலையும் ஆட்டியவாறே கரைந்து குற்றத்தை உறுதிப்படுத்தும்.

அதை மறுக்கும்விதமாக குற்றவாளி கரைய ஆரம்பிக்கும்.

கடைசியில், பலமான சாட்சியால் குற்றவாளி கரைவதை நிறுத்திவிடும். தலையையும், இறகுகளையும் தொங்கவிட்டு குற்றத்தை ஒப்புக் கொள்ளும்.

அதன் பிறகு தண்டனை நிறைவேற்றப்பட்ட காகத்தின் உடலை, ஒரு குழுவாய் சில காக்கைகள் சுமந்து சென்று கண்ணியத்துடன் அடக்கம் செய்து விடுகின்றன. பிறகு கலைந்து பறந்து விடுகின்றன.

காக்கைகளின் நீதி, நியாயம் மனிதர்களைவிட மேன்மையானது.
  • காக்கைகள் ஒருபோதும் மனிதனைப் போல பொய்சாட்சி சொல்வதுமில்லை.
  • குற்றவாளியை தப்பவிடுவதுமில்லை!
  • வழக்கின் தீர்ப்பு சொல்ல பல ஆண்டுகள் எடுத்துக் கொள்வதுமில்லை!

உண்மையிலேயே மனிதரைவிட காக்கைகள் மேலானவைதான்!

Share:

Saturday, February 11, 2017

இந்திய ஜனநாயகத்தில் நமது பொறுப்புகள்


ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்த அனுமதி அளித்ததற்காக முதல்வர் பன்னீர் செல்வத்தை தூற்றுவதும், சசிகலா முதல்வராக வந்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒடுக்கி சிறுபான்மையினரின் காவல் தெய்வமாக மாறிவிடுவார் என்று நம்புவதெல்லாம் அபத்தமானது! ஏனென்றால் இந்துத்துவ அதி தீவிரவாத பாசிஸம் என்பது சிந்தனை ரீதியானது. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் ஊடுருவக்கூடியது. ஏற்கனவே எல்லா துறைகளிலும் ஊடுருவி இருப்பது - இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நான் அதிமுக கட்சியைச் சேர்ந்தவன் அல்ல. ஆனாலும், எனது தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் தகுதிக்கேற்ப சில நேரங்களில் அதிமுகவை ஆதரித்தும் வாக்களித்தும் இருக்கிறேன். எதிர்த்தும் வாக்களித்திருக்கிறேன். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை அவரை, கடுமையாக விமர்சித்தும் இருக்கிறேன். ஆனால், அவர் நோயுற்றபோதும், அதைத் தொடர்ந்து இறந்ததாக சொல்லப்பட்டபோதும் அந்த அனுதாபம் என்னையும் தொற்றிக் கொண்டது என்ற உண்மையை ஒப்புக் கொண்டாகதான் வேண்டும். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவர் பெண் என்ற ஒரு முக்கிய காரணமும் அதில் உண்டு.

நடிகை சிலுக்கு ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டபோது அவர் சம்பந்தமாக சமரசம் இதழில் ஒரு கட்டுரை எழுதி அனுதாபம் தெரிவித்து கடும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டவன் நான். மௌலானா குத்புதீன் பாகவி தனது மரண காலம்வரை அதை சொல்லியே என்னை கிண்டலடிப்பதும் உண்டு. ஆனாலும் என் நிலையில் நான் தெளிவாகவே இருக்கிறேன். ஒரு எழுத்தாளன் எப்போதும் துணிச்சலுடன் உண்மையை உரைத்தவண்ணமாகவே இருக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான சமரசமும் இல்லை.

அந்த அடிப்படையில் காலமெல்லாம் எனது விமர்சனத்துக்கு ஆளானா ஜெயலலிதாவின் மரணம் என்னை பாதிக்கவே செய்தது. அந்த பாதிப்பை இரங்கலாக.. “ஒற்றைப் போராளி வீழ்ந்தார்“ என்ற கட்டுரை வடிவில் எனது வலைப்பூவில் http://ikhwanameer.blogspot.in/2016/12/blog-post_97.html பதிவும் செய்தேன்.

அதேபோல, இரும்பு மனுஷி எனப்படும் ஜெயலலிதாவின் மிக மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அவரின் நேர்காணல் ஒன்றை அவருடைய இறுதி ஊர்வல காட்சிகளோடு https://www.youtube.com/watch?v=NM4qPP4-5uo&t=1s காணொளியாக பதிவேற்றமும் செய்திருந்தேன். இன்றைக்கும் எனக்கு மிகவும் பிடித்த காணொளி இது.

கடந்த சட்டமன்ற தேர்தல்களின் வெற்றி தோல்விகள் குறித்து நான் எழுதியிருந்த கட்டுரை, ”நாகூரானின் வாக்கு யாருக்கு?” http://ikhwanameer.blogspot.in/2016/05/blog-post_14.html  அந்த கட்டுரையின் முக்கிய பகுதிகளை வாசிப்புக்காக அடியில் தந்துள்ளேன்.
2014-ம், ஆண்டு, விழிகள் வெளிப்புற படப்பிடிப்புக்காக, சென்னைக்கு வடக்கே ஏறக்குறைய ஒரு முப்பது கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் காட்டுப்பள்ளிக்கு சென்றிருந்தபோதுதான் முதன் முதலாக நாகூரானை சந்தித்தேன். (காணொளிக்கு: https://www.youtube.com/watch?v=tpixA1-gGY8)

நாகூரான் என்றதும் முஸ்லிம் என்று கருதிவிட வேண்டாம். குழந்தை இல்லாத ஒரு தலித் தம்பதிக்கு நாகூராரை வேண்டி பிறந்த குழந்தையாதலால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. ஒரு கையில் புட்டி தண்ணீர், மறு கையில் ஒரு கழி, தலைப்பாகை சகிதமாக அந்த நண்பகல் வெய்யிலில் ஆட்டு மந்தையுடன் வந்த நாகூரான் அந்தப் பகுதியின் நடமாடும் வரலாற்று புத்தகமாக இருந்தார். அவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிவந்த மேய்ச்சல் நிலம் அனல் மின்நிலைய விரிவாக்கத்துக்காக அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே சுற்றியும் எண்ணூர் அனல் மின்நிலையம், வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின்நிலையங்கள். இவை போதாதென்று நூற்றுக் கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு காட்டுயிரிகள் உயிரிழக்கும் அபாயம். ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்கள் பாரம்பர்ய மீன்பிடித் தொழில் இழக்கும் அபாயம். அனல் மின்நிலைய நிலக்கரி சாம்பல் கழிவால் பாதரசம் வெளிப்பட்டு பூமி மலடாகி நச்சு வடிவாகிப் போகும் அபாயம். (காணொளிக்கு: https://www.youtube.com/watch?v=1NrfuRgf8wg)

இத்தகைய சூழல்மாசுவின் அபாயங்கள் சுற்றிப் படர்ந்துள்ள பூமியில்தான் நாகூரானை சந்தித்தேன். அதையெல்லாம் அறிந்து கொள்ளும் கல்வி அறிவு  அவரிடம் நான் எதிர்பார்க்க முடியாது. உண்மையும் அதுதான். அந்த ஆபத்துகள் ஏதும் நாகூரானுக்கு தெரியவில்லை. கடைசியாக விடை பெறும்போது, அவர் கட்டியிருந்த  கரை வேட்டியை சுட்டிக் காட்டி அவரது வாக்கு யாருக்கு என்று கேட்டபோது, அவர் பளிச்சென்று பதில் சொன்னார்.

அண்மையில், அதே காட்டுப்பள்ளியைத் தாண்டி காளாஞ்சி கிராமத்தில் காட்டுயிரி ஆய்வுக்காக சென்றிருந்தேன். அங்கு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த நாமக்கல் பகுதியைச் சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாக கொண்டிருந்த அந்த ஏழை உழைப்பாளிகளை அவர்கள் விருப்பப்படி படமெடுத்து முடித்தேன். கடைசியாக, ”உங்கள் வாக்கு யாருக்கு?” - என்று கேட்டபோது அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாகூரான்  சொன்ன அதே பதிலைதான் பளிச்சென்று இப்படி சொன்னார்கள்.

”நாங்கள் எம்ஜிஆர் காலத்திலிருந்தே இரட்டை இலைதான் சாமி!”

ஒரு நாகூரானோ, ஒரு சில ஏழை தொழிலாளர்களோ மட்டும் சொன்ன கருத்துக்கள் அல்ல இவை. வாரத்தில் இரண்டு முறைகள் காட்டுயிரி ஆய்வுக்காகவும், தினமும், ஒளிப்படங்களுக்காகவும் செல்லும் பல பகுதிகளில் நான் சந்தித்த மீனவ மக்கள், இருள இன ஏழைபாழைகள், ஒடுக்கப்பட்டோர், விவசாய கூலிகள் மற்றும் நடுத்தர மக்கள் இவர்கள் எல்லாம் தெரிவித்த ஒரே சின்னம் இரட்டை இலை.

ஆக, இறைவன் நாடினால், ஜெயலலிதா வெல்வது உறுதியாகிவிட்டது. ஜெயலலிதா அம்மையாருக்கு எனது வாழ்த்துக்கள்!

- என்று அந்தக் கட்டுரையில் நான் தெளிவாக தெரிவித்திருந்தேன்.

எனது கணிப்பைப் போலவே ஜெயலலிதாக அதிபெரும்பான்மைப் பெற்று ஆட்சியும் அமைத்தார். கடைசியில் அவருக்கான நேரம் முடிந்து காலத்தில் கரைந்தும் விட்டார்.

இப்போது, தலைமைச் செயலகத்தைக் கடக்கும்போதெல்லாம் ஒரு வெறுமையைதான் உணர முடிகிறது. கம்பீரமான அந்த கோட்டை களையிழந்து கிடக்கிறது. கனத்த மனதுடன்தான் கடந்து செல்ல முடிகிறது.

அதிமுக கட்சியுடனும், அதன் தலைவருடனும் கொள்கை ரீதியாக எந்த சம்பந்தமும் இல்லாத என்னைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆழ்மனதில் ஏற்படும் பாதிப்புகள், ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக  அவரது நிழலாக நின்ற சசிகலாவுக்கு ஏன் ஏற்படவில்லை என்று வியப்பாக இருக்கிறது.

உண்மையில், ஆதாயங்களோடு பெரும் கணக்கிட்டுதான் சசிகலா ஜெயலலிதாவுடன் இருந்தாரா? என்ற சந்தேகத்தையும் நடப்பு சம்பவங்கள் எழுப்புகின்றன.

ஜெயலலிதாவுக்கு பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம் “ஸ்டாண்ட்-பை“ முதல்வராக இருந்தவர் பன்னீர் செல்வம்.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னும் அந்த தொடர்ச்சி தொடர்ந்திருக்கும் என்றுதான் நான் கணித்திருந்தேன். அரசியல் பின்னணிகளோ, அரசியல் போராட்ட முன்னெடுப்புகளோ இல்லாத சசிகலா பன்னீர் செல்வத்தை தஞ்சாவூர் பொம்மையாய் உருட்டி ஆட எந்த தடையும் இல்லை. ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு இந்த வெள்ளுடை ஆசாமிகள் எல்லாம் சற்றே நிமிர்ந்திருந்தார்கள். ஆனால், அடிமைத்தனம் இன்னும் ஆழ்மனதில் பதிந்தேயிருந்தது.

சசிகலா புத்திசாலியாக இருந்திருந்தால், ஆட்சி, அதிகாரத் தொடரை தனது கட்டுக்குள் வைத்து அரசியல் ஆட்டத்தை தொடர்ந்திருப்பார். மத்திய அரசுடன் புரிந்துணர்வுடன் இருந்து தனது பிரச்னைகளுக்கெல்லாம் ஒரு முடிவை கண்டிருப்பார். அது விவேக வெளிப்பாடாக இருந்திருக்கும். இந்த மகாபாரத காட்சிகள் எல்லாம் அரங்கேறியிருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது!

கேட்பார் பேச்சைக் கேட்டு கெட்டுப்போன கதையாய் தற்போது சசிகலா எடுத்த முடிவுகள் எல்லாம் அவருக்கு எதிராககத்தான் திரும்பும் வாய்ப்புகள் உள்ளன. 

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்களே… இங்கே ஒரு கூத்தாடி அல்ல பல கூத்தாடிகளுக்கு கொண்டாடமாகிவிட்டது இப்போது.

நடப்பு அரசியல் போர்க்களம் சம்பந்தமாக மற்றொரு முக்கிய விஷயத்தையும் பதிவு செய்தாக வேண்டும் அதாவது முதல்வர் பன்னீர் செல்வம் மோடி சரக்காருக்கு வேண்டப்பட்டவரோ, சசிகலா அம்மையார் பாசிஸத்தை விரும்பாதவரோ அல்ல. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். சுயஆதயங்களுக்காக எதையும் செய்பவர்கள்.  கடந்த காலங்களில் மக்களுக்கான திட்டங்களை எல்லாம் பெட்டி பெட்டிகளாக மாற்றிக் கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்லப்படுபவர்கள். 

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்த அனுமதி அளித்ததற்காக முதல்வர் பன்னீர் செல்வத்தை தூற்றுவதும், சசிகலா முதல்வராக வந்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒடுக்கி சிறுபான்மையினரின் காவல் தெய்வமாக மாறிவிடுவார் என்று நம்புவதெல்லாம் அபத்தமானது! ஏனென்றால் இந்துத்துவ அதி தீவிரவாத பாசிஸம் என்பது சிந்தனை ரீதியானது. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் ஊடுருவக்கூடியது. ஏற்கனவே எல்லா துறைகளிலும் ஊடுருவி இருப்பது.

இந்திய நாட்டில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்த அதே சங்பரிவார குழுவினர்தான் தற்போது இந்திய அமைப்பின் உயரிய ஆட்சி அதிகாரத்தில் மிருகபலத்துடன் அமர்ந்திருப்பவர்கள்.

அதனால், லாப, நட்டங்களை தங்களை மட்டும் முன்வைத்து பார்க்கும் அளவுகோலை சிறுபான்மை சமூகத்தார் தூக்கி எறிந்திட வேண்டும். பொத்தாம், பொதுவாக சமூக நலன் குறித்து கவலைப்படுபவர்களாகவே அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதிதீவிர இடதுசாரிகள், சூழலியலாளர்கள் இவர்கள் எல்லாம் தாங்கள் ஏதோ ஒரு காரணத்தால் பாதிக்கப்பட்டதற்காக, பன்னீர் செல்வத்தை வேண்டப்படாதவராக பார்க்கும் போக்கும் சரியானதல்ல.

மக்கள் நலன் நாடும் தலைவர்கள் அதிகார பீடங்களில் அமரும்வரை ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் http://ikhwanameer.blogspot.in/2017/01/blog-post_23.html  தொடர்ந்தவாறேதான் இருக்கும் என்பதை இந்த அறிவுஜீவிகளுக்கு தெரியாததல்ல. இதில் பன்னீர் செல்வமோ, சசிகலாவோ விதிவிலக்கானவர்களும் அல்ல.

அதனால், ஒட்டுமொத்த ஆற்றல்களையும் ஒருங்கிணைக்க முடியாமல் பிளவுட்டிருக்கும் சிறுபான்மையினரும், தொடர்ந்து தோல்விகளால் வரலாற்றில் பதித்துக் கொண்டிருக்கும் இடதுசாரிகளும் அதிகார மீட்புக்கான வழிமுறைகளை, தீர்வுகளைத் தேட வேண்டியது முக்கியமானது.

தற்போது புரையோடிப் போயிருக்கும் மொத்த அமைப்பையும் புரட்டிப்போடும் காலத்துக்காக வெறுமனே காத்திராமல், அதற்கான செயல்ரீதியான பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வதே புத்திசாலிதனமானது.

தேனீர் விற்பனை செய்தவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருவர் நாட்டின் பிரதமராக இந்திய ஜனநாயகம் அனுமதிக்கிறது. 

பணியாளராக சேர்ந்த ஒருவர் ஒரு மாநிலத்தின் மொத்த அதிகாரத்தையும் கைப்பற்றும் முயற்சிகளுக்கான வழிதேடல்களும் இதே ஜனநாய கட்டமைப்பில் முடிகிறது என்னும்போது, மக்கள் நலன் நாடும் மக்கள் தலைவர்கள் இதே ஜனநாயக அமைப்புக்கு உட்பட்டு அதிகார அமைப்பை கைப்பற்ற என்ன தடை?

Share:

Sunday, February 5, 2017

நிழல் நிஜமாகுமா?


1956-ல், திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதியின் மகளாக சசிகலா பிறந்தார். ஒரு சாதாரண குடும்பத் தலைவி என்ற நிலையிலிருந்து, தமிழகத்தின் ஆளும் கட்சியின் தலைவராக உயர்ந்த சசிகலாவின் வாழ்க்கைப் பயணம் பல திருப்பங்களையும் ஏற்ற இறக்கங்களையும் கொண்டது.

சசிகலாவுடன் பிறந்தவர்கள் - சுந்தரவதனன், வினோதகன், ஜெயராமன், வனிதாமணி, திவாகரன் ஐந்து பேர். திருத்துறைப்பூண்டியில் பிறந்து வளர்ந்தாலும் சில ஆண்டுகள் கழித்து, குடும்பம் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தனர்.

மன்னார்குடிக்கு அருகில் இருந்த விளார் என்ற ஊரைச் சேர்ந்த நடராஜனை திருமணம் செய்தார் சசிகலா. இந்தத் திருமணத்தை நடத்திவைத்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

1984-ஆம் ஆண்டில் வினோத் வீடியோ விஷன் என்ற வீடியோ கடையை வைத்திருந்த சசிகலா, அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகாவின் பரிந்துரையின் பேரில் ஜெயலலிதாவுக்கு முதன் முதலாக அறிமுகமானார்.

அப்போது அவரது கணவர் மா. நடராஜன் கடலூர் மாவட்டத்தில் அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார்.

அந்த நேரத்தில், அ.தி.மு.கவின் கொள்கைபரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் சுற்றுப் பயணங்களை படமெடுத்துக் கொடுக்கும் வாய்ப்பு சசிகலாவின் வினோத் வீடியோ விஷனுக்குக் கிடைக்க, ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்குள் அடியெடுத்து வைத்தார் சசிகலா.

அதற்குப் பிறகு, மெல்ல மெல்ல ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவராக வளர ஆரம்பித்தார். ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினரானபோது, அவரோடு தில்லி செல்லும் அளவுக்கு நெருக்கமானார் சசிகலா.

தமிழக முதலமைச்சரும் ஜெயலலிதாவின் அரசியல் ஆசானுமாக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் மறைந்த போது, கட்சி இரண்டாக உடைந்த சமயத்தில், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ஜெயலலிதாவிற்குப் பின்னால் அணி திரண்டனர். இதுவே, ஜெயலலிதா வெகுவாக சசிகலாவைச் சார்ந்திருப்பவராக மாற்றியது.

1991-இல் ஜெயலலிதா முதன் முறையாக தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சமயத்தில், அவருக்கு எல்லாமுமாக மாறியிருந்தார் சசிகலா. அப்போதிலிருந்து ஜெயலலிதா, அம்மாவாகவும் சசிகலா சின்னம்மாவாகவும் அழைக்கப்பட ஆரம்பித்தார்கள். ஜெயலலிதா எங்கு சென்றாலும் நிழலாகப் பின்தொடர்ந்தார் சசிகலா.

இதனால், சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் சகோதரர்கள், அவர்களது குடும்பத்தினரின் ஆதிக்கமும் அ.தி.மு.கவின் மீது பற்றிப் படர ஆரம்பித்தது.

1995-இல் சசிகலாவின் உறவினரான வி.என். சுதாகரனை தனது தத்துப் பிள்ளையாக தத்தெடுக்கும் அளவுக்கு சசிகலாவை நம்பினார் ஜெயலலிதா. அந்த சுதாகரனுக்கு ஜெயலலிதா செய்துவைத்த ஆடம்பரத் திருமணம், உலகில் மிகவும் செலவழித்து நடத்தப்பட்ட திருமணமாக சாதனை படைத்தது.

இதற்குப் பிறகு, ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்தே சிறைக்குப் போக நேர்ந்தது. பிறகு சிறிது காலத்திற்கு அவரை ஒதுக்கிவைக்கவும் செய்தார் ஜெயலலிதா. ஆனால், இது வெகுநாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் போயஸ் தோட்ட இல்லத்தில் தலைகாட்ட ஆரம்பித்தார் சசிகலா.

அதற்குப் பிறகு, 2011 வரை போயஸ் தோட்ட இல்லத்திலும் அ.தி.மு.க என்ற கட்சியிலும் சசிகலாவின் அனுமதியின்றி எதுவும் நடக்காது என்ற நிலை ஏற்பட்டது.

2011-இல், தனக்கு எதிராக சசிகலா செயல்படுவதாகக் கருதிய ஜெயலலிதா, அவரை தனது போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து வெளியேற்றினார். ஆனால், சில மாதங்களிலேயே சசிகலாவின் மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் அவரை போயஸ் தோட்டத்திற்குள் அனுமதித்தார். அதற்குப் பிறகு, ஜெயலலிதா காலமாகவும் வரை, அவரை நிழலாகத் தொடர்ந்தார் சசிகலா.

2014-ஆம் ஆண்டில் சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா-சசிகலா இருவருமே ஒன்றாக சிறைசெல்ல நேர்ந்தது.

ஜெயலலிதாவின் நிழலாகவே இருந்தாலும், கட்சியின் முன்னணியில் ஒருபோதும் சசிகலா தென்பட்டதில்லை. ஆனால், கட்சியின் முக்கியமான தருணங்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பவராக சசிகலாவே இருந்தார்.

2002-இல் ஜெயலலிதா முதல்வராக பதவி வகிக்க முடியாமல் போனபோது, ஓ.பன்னீர்செல்வம் அந்த இடத்திற்கு முன்னிறுத்தப்பட்டது சசிகலாவின் ஆலோசனையின்பேரில்தான். அதற்குப் பிந்தைய தேர்தல்களில் எல்லாம் வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும்போது அதில் சசிகலாவின் பங்கும் நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஜெயலலிதாவால் உடன்பிறவா சகோதரி என்று அழைக்கப்பட்ட சசிகலா, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் செல்வாக்கு செலுத்தினார்.

டிசம்பர் 29-ஆம் தேதியன்று சென்னையில் நடந்த பொதுக் குழுக்கூட்டத்தில் அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு முன்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரும் முதலமைச்சருமான ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதியன்று உயிரிழந்ததையடுத்து அந்தப் பதவி காலியானது.

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுவித்துவிட்டாலும், இது தொடர்பான மேல் முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் முடிவடைந்து, இதன் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு, சசிகலாவின் எதிர்கால அரசியல்வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமையக்கூடும்.

இருந்தாலும் இப்போதைக்கு சசிகலா உச்சத்தை அடைந்திருக்கிறார். கட்சியைக் கைப்பற்றியிருக்கும் சசிகலா, முதல்வர் பதவி குறித்து என்ன முடிவுசெய்திருக்கிறார் என்பது விரைவில் தெரிய வரும்.

ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள், அவர் மறைந்த பிறகு அவரது உடலைச் சுற்றி நின்றது கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது. சசிகலா தற்போது கட்சியின் உயரிய பதவியை அடைந்திருக்கும் நிலையில், அவரது சொந்தங்கள் அதற்கான பலனை அடைய நினைக்கலாம்.

கட்சியின் நிர்வாகிகள் இப்போது சசிகலாவை ஏற்றுக்கொண்டிருந்தாலும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் ஜெயலலிதா என்ற ஆளுமைக்குதான் வாக்களித்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா என்ற யதார்த்த நிலையில், அ.தி.மு.கவுக்கு வாக்களித்த எளிய வாக்காளர்கள் சசிகலா தலைமையிலான அ.தி.மு.கவையும் ஆதரிப்பார்களா என்ற மற்றொரு கேள்விக்கும் விரைவில் காலம் பதில் சொல்லிவிடும்.

Share:

Sunday, September 11, 2016

எனது பார்வையில்: எனக்கு ஆண்களை மிகவும் பிடிக்கும்..!



மூன்று ....... லட்சுமிகள் - அக்கா, தங்கைகள் மறக்கவே முடியாத அச்சாய் என் மனதில் பதிந்து போனவர்கள். எனது உயர்நிலைப் பள்ளி நாட்களில், எல்லா திறமைகளுடனும் முதல்வனாக இருந்த என்னை சரிய வைத்த பெயர் அது. அரும்பு மீசை துளிர்விடும் அந்தப் பருவத்தில் என்னை கவிதைப் பாட வைத்த பெயர். மனதைப் பிழிந்து பிழிந்து எழுத வைத்த பெயர்.

அதனால், இந்த லட்சுமிகள் தாங்கி வரும் பெயர்கள் என்னை இப்போதும் எனது பள்ளிப் பருவத்து 70-களில் நுழையச் செய்துவிடும்.

இப்படியான ஒரு பெயர் கொண்ட தோழி Jaya Lakshmi அண்மையில் எனது முகநூல் நட்பு வட்டாரத்தில் இணைந்தவர். இந்தப் பெயரால், 70-களின் வியப்புடனேயே எட்ட நின்று வியக்கிறேன் நான். முகநூல் வட்டத்தில் சில பெண்கள் தங்களை சகோதரிகள் என்று சொல்வதை விரும்பவில்லை என்று தெரிவித்து பதிவிட்டிருந்த காரணத்தினால்தான் நான் இங்கு தோழி என்ற சொல்லாடலை கையாள வேண்டியிருந்தது. இதனால், நெருக்கமோ, விலகலோ பொருளாகாது என் வரம்பு என்னவென்று ஏற்கனவே தீர்மானமாக தெரிவதால்! இது ஒரு அடையாள சொல்லாடல் என்பது மட்டுமே நிஜம்.

தோழி Jaya Lakshmi ன் இந்த முகநூல் பதிவு https://www.facebook.com/permalink.php?story_fbid=1615544308740289&id=100008542061563 என்னை ஏனோ கவர்ந்ததால்... மிகவும் மகிழ்வுடன் எனது வலைப்பூவின் “எனது பார்வையில்“ மீள்பதிவு செய்கிறேன். ஒவ்வொரு மனிதனுள்ளும், மனிஷியுள்ளும் எத்தனை எத்தனை எண்ண ஆர்ப்பரிப்புகள் என்ற வியப்புடனேயே... நான்..! - இக்வான் அமீர்

“““““““““““““““““““““““““““““““““
Jaya Lakshmi


பெண்மையை மதித்த பாரதி இனத்திற்கு இது சமர்ப்பணம்:

"அவளுக்கு ஆம்பிளைகளை தான் பிடிக்கும்'' என்னைப்பற்றிய மற்றவர் கருத்து...

என்றுமே நான் ஆதை மறுத்ததில்லை.இதை எதிர்பாலின ஈர்ப்பு என்றாலும் கவலைப்படமாட்டேன்.

என் வாழ்வின் முதல் ஆண் என் தந்தை.அறிவும்,அன்பும் நிறைந்தவர்.நான் அறிந்தவை பெரும்பாலும் என் தந்தையின் சீதனம்.சிறு விஷயத்தையும் எப்படி அழகாய் செய்வது என்பதை கற்றுத்தந்தவர்.ஆணின் தைரியத்தை என்னுள் விதைத்து வளர்த்தவர்.இறக்கும் வரையிலும் அவருக்கு'டே ராஜா'தான் நான்.என் தாயுமானவர்.

அடுத்து என் தாத்தா.

தாயின் தந்தை.அவரின் கண்டிப்பும்,காேவமும் ஊரறிந்தது.ஆனால் பேரப்பிள்ளைகள் விஷயத்தில் குழந்தையாகி விடுவார். நானும் தம்பியும் பெரும்பாலும் தாத்தாவிடம் தான். எந்த பேரப்பிள்ளைக்கு உடம்பு சரியில்லை என்றாலும் ஊருக்கு தூக்கி சென்றுவிடுவார்.அன்பாகப்பேசயே மருந்தை குடிக்கவைத்து விடுவார்.

சுந்தரவடிவேலு-அண்ணன். பெரியம்மா மகன். இவர் பிறந்ததிலிருந்தே தாத்தா தான் வளர்த்தார். கிட்டதட்ட 11 வயதுவரை என்னை உப்புமூட்டை சுமந்தே நடந்தவன். இருவருக்கும் அப்படி ஒரு ஈர்ப்பு. யாராவது என்னை'கருவாச்சி' என்றழைத்தால் மண்டையை உடைத்து விடுவான். ஆனால் அவன் மட்டும் அப்படித்தான் அழைப்பான்.

மற்ற அண்ணன்களுக்கு நான் 'தங்கம், அம்மிணி'தான்.

பெரும்பாலான குடும்ப சண்டைகளில் இன்று வரை எங்கள் பக்கம்தான் நிற்பார்கள்.

காெஞ்சம் வளரந்தபின்.

+2வில்.

எங்கள் வகுப்பில் 11 பேர். 3 ஆண்கள் 8 பெண்கள். அதில் மனாேகரன்தான் ராெம்ப குளாேஸ். நிறைய விஷயங்களை ரசிக்க கற்றுத் தந்தவன்.

பெண்கள் பசங்களிடம் பேசுவதே ராெம்ப குறைவு. என்னைத்தவிர எல்லாேருமே நல்லா கலரா அழகா இருப்பாங்க. நாலு பென்ச். இரண்டு வரிசை. முதல் வரிசையில் மூன்று பேரை அமரச் சாென்னாலும் வரமாட்டாங்க. நான் மட்டும் தான். எனக்கு பின்னால் பசங்க. நா அப்படி அமர்ந்ததே அவர்களை மரியாதை படுத்தியது பாேலுணர்ந்தார்கள். இரண்டாம் வருடத்தில் நானும் மனாேவும் ராெம்ப நெருக்கம். அவன் பள்ளிக்கு வரலைனா எனக்கு தலைவலி வந்துவிடும். இதனால் நாங்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு கூட கிளம்பியது. ஆனால் அவன் ஒரு பெண்ணையும் நான் வேறாெருவரையும் காதலிப்பது எங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இப்படி ஒரு நட்பு எப்படி சாத்யமானதென்று இதுவரை எனக்கே தெரியாது. தாெடர்பற்று பாேனாலும் நான் மிகவும் விரும்பிய நட்பு அது.

அடுத்து வந்த பதினாெரு ஆண்டுகளை என் வாழ்விலிருந்து கிழித்து விட்டேன்.

அதற்கடுத்து வந்த இந்த பதினெட்டு ஆண்டுகளில் முக்கியமானவர்கள்

கிருஷ்ணன்  என் அன்பான கணவர்.

அடுத்து மகாலிங்கம் என் பாஸ்.

முதலாமவரின் ஆறுதலும், தேற்றுதலும் இல்லாதிருந்தால் நான் என்னவாகியிருப்பேன் என்று எனக்கே தெரியாது.

இரண்டாமவர் என் உழைப்பை சரியான முறையில் பயன்படுத்தி தானும் உயர்ந்து என்னையும் உயர்த்தியவர். அடுத்து பென்சில் கம்பெனியின் நிர்வாகத்தினர். உற்பத்தியை விட பெண்களின் பாதுகாப்பையே முன்னிருத்துபவர்கள். ஒற்றை ஆளாய் இரவு 12 மணி வரை இருந்திருக்கிறேன். இது பாேல எந்த நிறுவனமும் இருக்க முடியாது என்று அழுந்தச் சாெல்வேன். இங்கிருந்த பத்து ஆண்டுகளும் என் வாழ்வில் வசந்தகாலமே.



அடுத்து நீங்கள்தான்.

பாெழுது பாேக்காய் ஆரம்பித்த நட்புகளில் தான் எத்தனை அன்பு. முகமறியாவிட்டாலும் எத்தனை கரிசனம். நண்பனாய், தம்பியாய், தகப்பனாய் எத்தனை உறவுகள். மார்க்கிற்கு என் நன்றிகள். முகநூல் நட்பில் ஒரே ஒருவரை தவிர யாரையும் சந்தித்து இல்லை. ஆனாலும் நான் வியாபாரம் ஆரம்பித்தபாேது பாெருளுதவி செய்ய வந்த நட்பை என் உயிருள்ளளவும் மறக்கமுடியாதே. எப்பாெழுது பேசினாலும் நான் மறுத்ததற்கு ஆதங்கப்படுவார். இந்த ஒரு வார்த்தையே எனக்கு கூடுதல் பலமளிக்குமல்லவா.

எனக்கு நண்பர்கள் குறைவுதான். ஆனால் நிறைய பேருக்கு நான் உயிர்த்தாேழி. ஆண்களாேடு ஒத்துப்பாேகுமளவு என்னால் பெண்களாேடு இருக்கமுடிவதில்லை.

பெரும்பாலான பேச்சுக்கள் வீண் புரளியிலும் வேண்டாத சண்டையிலுமே முடிப்பதினால் என்னவாே.

சந்தாேஷ்... என் தங்கை மகன்.

எங்கள் மகிழ்ச்சியே அவன் மகிழ்ச்சி. எங்கள் முகம் காெஞ்சம் சாேர்ந்தாலும் தானும் வாடிவிடுவான். அன்புச்செல்வம் அவன்.

எல்லாேருமே நல்லவங்கதானா உனக்குனு யாராே கேக்கறீங்கனு தெரியுது. எனக்கு பூக்களைத்தான் பிடிக்கும்.

என் தாேட்டத்து பூக்கள் மட்டுமே உங்கள் பார்வைக்கு. முட்களை நானே விரும்பாத பாேது உங்களுக்கு எப்படி தருவேன்.

இதில் ஓரிருவரைத்தவிர யாரிடமும் ஆழமான அன்பைத் தவிர வித்யாசமாய் உணர்ந்ததில்லை நான்.

தங்கள் ஆளுமையினாலும், அன்பாலும் ஆட்காெண்டவர்களை எப்படி தவிர்ப்பேன்..

இது ஆண்களைப் பற்றிய பதிவல்ல.

பெண்களுக்கானது.

சரியான நண்பர்களை தேர்ந்தெடுக்கும் பாேது நம் வாழ்க்கைப் பயணமும் சிறப்பானதாகும்.

மறுபடியம் சாெல்வேன் எனக்கு

ஆண்களை

மிகவும் .... பிடிக்கும்.



Share:

Saturday, May 14, 2016

எனது பார்வையில்: நாகூரான் வாக்கு யாருக்கு?


 நாகூரான் என்றதும் முஸ்லிம் என்று கருதிவிட வேண்டாம். குழந்தை இல்லாத ஒரு தலித் தம்பதிக்கு நாகூராரை வேண்டி பிறந்த குழந்தையாதலால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. ஒரு கையில் புட்டி தண்ணீர், மறு கையில் ஒரு கழி, தலைப்பாகை சகிதமாக அந்த நண்பகல் வெய்யிலில் ஆட்டு மந்தையுடன் வந்த நாகூரான் அந்தப் பகுதியின் நடமாடும் வரலாற்று புத்தகமாக இருந்தார். அவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிவந்த மேய்ச்சல் நிலம் அனல் மின்நிலைய விரிவாக்கத்துக்காக அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. - இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அதிகாலை நடை பயிற்சி முடித்துவிட்டு, உறவினரின் ஹோட்டலுக்கு சென்றிருந்தேன். ஹோட்டல்கள், டீக்கடைகள் இவையெல்லாம் வாய்மொழி ஊடகங்கள். உண்மையான கருத்து கணிப்புகளுக்கு ஏற்ற இடங்கள். நடுத்தட்டு மற்றும் அடித்தட்டு மக்கள் கூடும் இடமாகையால் நாட்டு நடப்புகள் இங்கு உடனுக்குடன் பிரதிபலிக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இன்று அமைதிதான் காணப்பட்டது. நடைபெறவிருக்கும் தேர்தல்கள் சம்பந்தமாக வலிய பேச்சுகொடுத்தும் யாரும் பிடிகொடுத்து பேசுவதாக காணோம். “கமுக்கமாக“ தேர்தல்கள் முடிவுகள் தீர்மானிக்கப்படவிருக்கின்றன என்பதற்கான அறிகுறி இது.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிகிறது.  மாலை 6 மணிக்குப் பின் யாரும் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது.

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 3 ஆயிரத்து 776 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதிகபட்சமாக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 பேரும் குறைந்த பட்சமாக, ஆற்காடு, கூடலூர், மயிலாடுதுறையில் தலா 8 பேரும் போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட் பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 9-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கி, 12-ம் தேதி நெல்லையில் முடித்தார். இதேபோல், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரும் பிரச்சாரம் செய்தனர். தங்கள் கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பா.ஜ வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தின் பல இடங்களில் வாக்கு சேகரித்தனர்.

மே 16-ம் தேதி வாக்குப்பதிவு நடப்பதையொட்டி, தேர்தல் விதிகளின்படி இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதன் பிறகு எந்த வகையிலும் யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும், மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலும் பிரச்சாரத்தை முடிக்கின்றனர். கனிமொழி திருச்சியிலும், வைகோ தூத்துக் குடியிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கும்மிடிப்பூண்டி, மணலி, திருவொற்றியூர் மற்றும் வேளச்சேரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதுதவிர, அன்புமணி ராம தாஸ் தான் போட்டியிடும் பென்னாகரத்திலும், காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னையிலும் தங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்கின்றனர்.

இன்று மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மட்டுமின்றி ஊடகங்களும் கண் காணிக்கப்படுகின்றன. இன்று மாலை 6 மணிக்கு மேல் 16-ம் தேதி வாக்குப்பதிவு முடியும் வரை, முகநூல் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் உட்பட தேர்தல் தொடர்பான எந்த விளம்பரமும், பிரச்சாரமும் கூடாது என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் விதிமீறலில் ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகி றது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்?

ஒருமுறை மூத்த இதழியாலாளரான சகோரர் சிராஜுல் ஹஸனின் முகநூல் பதிவொன்றுக்கு பின்னூட்டமிடும்போது அவர், ”இக்வான்.. நீங்கள் எந்த கட்சி?” - என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த நேரத்தில் நான் மௌனம் சாதிக்க வேண்டியிருந்தது. இப்போது நான் அந்த கேள்விக்கு பதில் சொல்லிவிடுகின்றேன்.

80-கள்வரை நான் இடதுசாரி அமைப்பின் முன்னணி ஊழியன். ஆசியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தில் நான் முழு நேர பணியாளனாக இருந்ததாலும், இளமையை கடும் வறுமையில் கழித்ததாலும் இயல்பாகவே நான் சுரண்டலுக்கு எதிராக என்னைத் தீட்டிக் கொள்வது தவிர்க்க இயலலாததாக இருந்தது.

80-களுக்கு பிறகு, இஸ்லாம் பரிச்சயம், பிறகு அதற்கு ஒப்புக் கொடுத்தது என்று சித்தாந்த ரீதியாக நான் வேறு முகாமுக்கு புலம் பெயர்ந்தாலும், இதுவரையிலும் நான் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர் இல்லை. எந்த கட்சியின் ஆதரவாளனும் இல்லை. எந்தக் கட்சியின் சார்பாளனும் இல்லை.

இந்தியாவில் உள்ள கட்சிகள் அனைத்துக்கும் பொதுவான ஒரு மாற்று வழிமுறை என்னிடம் உள்ளது. அதனால் மட்டுமே இன்றைய அமைப்பை மாற்றி முற்றிலும் வேறொரு அமைப்பை நிறுவ முடியும் என்பதிலும் அசைக்க முடியாத ஆதராமும் என்னிடம் உள்ளதால் பிற கட்சிகளுக்கு ஊதுகுழலாக, வழக்குரைஞராக அல்லது எனது தலைவர் நபிகளாரை பிற்படுத்தி பிற கட்சிகளின் தலைவர்களை முற்படுத்தி எனது “ரஸீலாக“ அதாவது எனது வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும்  அவசியமும் எனக்கில்லை. இது இந்திய கட்சிகள் அனைத்துக்கும் பொருந்தும்.

நான் ஒரு இஸ்லாமியவாதியாகவே இருப்பேன். இறைவன் நாடினால், இஸ்லாமியவாதியாகவே மரணிப்பேன். நான் எந்தக் கட்சி என்பதற்கு விடை இதுவே.

இந்த கட்டுரை ஊடே இதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று உங்கள் புருவங்கள் எழலாம். காரணம் உள்ளது. இந்தத் தேர்தலில் யார் வெல்வார்கள்? என்று எனது கருத்தை அறிவிக்க இருக்கும் தருணத்தில் என் மீது யாரும் சார்பு முத்திரை குத்திவிடக் கூடாது என்பதற்காவே இந்த விளக்கம்.

2014-ம், ஆண்டு, விழிகள் வெளிப்புற படப்பிடிப்புக்காக, சென்னைக்கு வடக்கே ஏறக்குறைய ஒரு முப்பது கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் காட்டுப்பள்ளிக்கு சென்றிருந்தபோதுதான் முதன் முதலாக நாகூரானை சந்தித்தேன். (காணொளிக்கு: https://www.youtube.com/watch?v=tpixA1-gGY8)

நாகூரான் என்றதும் முஸ்லிம் என்று கருதிவிட வேண்டாம். குழந்தை இல்லாத ஒரு தலித் தம்பதிக்கு நாகூராரை வேண்டி பிறந்த குழந்தையாதலால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. ஒரு கையில் புட்டி தண்ணீர், மறு கையில் ஒரு கழி, தலைப்பாகை சகிதமாக அந்த நண்பகல் வெய்யிலில் ஆட்டு மந்தையுடன் வந்த நாகூரான் அந்தப் பகுதியின் நடமாடும் வரலாற்று புத்தகமாக இருந்தார். அவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிவந்த மேய்ச்சல் நிலம் அனல் மின்நிலைய விரிவாக்கத்துக்காக அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே சுற்றியும் எண்ணூர் அனல் மின்நிலையம், வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின்நிலையங்கள். இவை போதாதென்று நூற்றுக் கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு காட்டுயிரிகள் உயிரிழக்கும் அபாயம். ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்கள் பாரம்பர்ய மீன்பிடித் தொழில் இழக்கும் அபாயம். அனல் மின்நிலைய நிலக்கரி சாம்பல் கழிவால் பாதரசம் வெளிப்பட்டு பூமி மலடாகி நச்சு வடிவாகிப் போகும் அபாயம். (காணொளிக்கு: https://www.youtube.com/watch?v=1NrfuRgf8wg)

இத்தகைய சூழல்மாசுவின் அபாயங்கள் சுற்றிப் படர்ந்துள்ள பூமியில்தான் நாகூரானை சந்தித்தேன். அதையெல்லாம் அறிந்து கொள்ளும் கல்வி அறிவு  அவரிடம் நான் எதிர்பார்க்க முடியாது. உண்மையும் அதுதான். அந்த ஆபத்துகள் ஏதும் நாகூரானுக்கு தெரியவில்லை. கடைசியாக விடை பெறும்போது, அவர் கட்டியிருந்த  கரை வேட்டியை சுட்டிக் காட்டி அவரது வாக்கு யாருக்கு என்று கேட்டபோது, அவர் பளிச்சென்று பதில் சொன்னார்.




அண்மையில், அதே காட்டுப்பள்ளியைத் தாண்டி காளாஞ்சி கிராமத்தில் காட்டுயிரி ஆய்வுக்காக சென்றிருந்தேன். அங்கு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த நாமக்கல் பகுதியைச் சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாக கொண்டிருந்த அந்த ஏழை உழைப்பாளிகளை அவர்கள் விருப்பப்படி படமெடுத்து முடித்தேன். கடைசியாக, ”உங்கள் வாக்கு யாருக்கு?” - என்று கேட்டபோது அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாகூரான்  சொன்ன அதே பதிலைதான் பளிச்சென்று சொன்னார்கள்.

”நாங்கள் எம்ஜிஆர் காலத்திலிருந்தே இரட்டை இலைதான் சாமி!”

ஒரு நாகூரானோ, ஒரு சில ஏழை தொழிலாளர்களோ மட்டும் சொன்ன கருத்துக்கள் அல்ல இவை. வாரத்தில் இரண்டு முறைகள் காட்டுயிரி ஆய்வுக்காகவும், தினமும், ஒளிப்படங்களுக்காகவும் செல்லும் பல பகுதிகளில் நான் சந்தித்த மீனவ மக்கள், இருள இன ஏழைபாழைகள், ஒடுக்கப்பட்டோர், விவசாய கூலிகள் மற்றும் நடுத்தர மக்கள் இவர்கள் எல்லாம் தெரிவித்த ஒரே சின்னம் இரட்டை இலை.

ஆக, இறைவன் நாடினால், ஜெயலலிதா வெல்வது உறுதியாகிவிட்டது. ஜெயலலிதா அம்மையாருக்கு எனது வாழ்த்துக்கள்!

இதில் எரிச்சல் அடையவோ, வேதனைப்படவோ காரணம் ஒன்றுமேயில்லை! மக்களைப் போலதான் அவர்களின் தலைவர்களும் அமைவார்கள். இதுதான் இயக்கவியல் விதி.

இன்று காலையில்கூட எனது இல்லத்தரசியுடன் தேர்தல்கள் சம்பந்தமாக நடந்த உரையாடலில் இடையில் வந்த எனது மகள் ஒருவரை ”ஊத்திக் கொடுத்த உத்தமி” என்று விமர்சிக்கிறார்கள். சரி. அப்போ ஊத்திக் கொடுக்க சாராய ஆலைகளை திறந்து வைத்திருக்கிற மற்றொருவரை ”ஊத்திக் கொடுக்க சீரழிக்கும் உத்தமர்கள்!“ – என்று சொல்லலாமா அப்பா?” என்றாள்.

இருப்பவரில் சற்று மேலானவர்தான் ஆட்சி அதிகாரத்துக்கு வருவார்கள் என்பதே உலக வரலாறு.

''''''''''''''''''''''
Share:

Wednesday, May 11, 2016

எனது பார்வையில்: அழகிய உறைவிடம் பெற்றார் மோதியுர் ரஹ்மான் நிஜாமி!


வங்கதேசத்து பிரதான எதிர்கட்சி ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் பேரறிஞர் மோதியுர் ரஹ்மான் நிஜாமி (72) தூக்கிலிடப்பட்டார். (அந்த ஆன்மா எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று சேர்ந்தது!) பெரும் சர்ச்சைக்குரிய வங்கதேசத்து போர்க்குற்றங்களுக்கான நடுவர் நீதிமன்றம் அளித்த அரசியல் காரணங்களுக்கான இந்த தீர்ப்பையொட்டி செவ்வாய் கிழமை நள்ளிரவு அவரது தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1971-ல், நடந்த அன்றைய மேற்கு பாகிஸ்தான் பிரிவினைப் போரின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்ததாகவும், போர்க்குற்றங்கள் புரிந்ததாகவும் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் மோதியுர் ரஹ்மான் நிஜாமியின் மீது 2014-ம், ஆண்டு குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
2013-ம், ஆண்டிலிருந்து அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து தூக்குதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து முக்கியத் தலைவர்களில் ஒருவரான மோதியுர் ரஹ்மான் நிஜாமி ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த தலைவராவார்.

போர்க்குற்றங்கள் சம்பந்தமாக இதுவரை குற்றம் சாட்டப்பட்டுள்ள 16 பேரும் வங்கதேசத்தின் பல்வேறு முக்கிய எதிர்கட்சிகளைச் சேர்ந்த பெருந்தலைவர்கள் என்பது முக்கியமானது.

மோதியுர் ரஹ்மான் நிஜாமி அவருக்குரிய அற்புதமான உறைவிடத்தை தன் இறைவனிடம் பெற்றுகொண்டார்.

கொலைவெறிப்பிடித்த ஆட்சியாளர்கள் முன் மண்டியிடாமல், உயிர்பிச்சைக் கேட்டு கருணை மனு செய்யாமலும் ஓர் இலட்சிய வீரனாகவே அவர் தூக்குமேடையில் நின்றார்.

மரணம் என்பது குடும்பத்தினருக்கு, உற்றார், உறவுகள், அன்பு உள்ளங்களுக்கு மட்டும் தீராத இழப்பைத் தரும் என்பதே உண்மை.

ஆனால், இன்னும் சில மரணங்களோ வரலாற்றில் நீங்காத இடம் பெறுகின்றன. உலகம் முழுமைக்கும் காலந்தோறும் இளம்தலைமுறையினருக்கு எழுச்சியைத் தருகின்றன. அத்தகைய பேறு பெற்ற மரணம் மோதியுர் ரஹ்மான் நிஜாமிக்கு அமைந்தது இறையருள் அன்றி வேறென்ன?

இந்தத் தருணத்தில், அன்பு நபிகளாரின் இந்த அறிவுரை நினைவில் எழுகிறது:

”இஸ்லாம் என்னும் இயந்திரம் சுழன்று கொண்டிருக்கிறது. எத்திசை நோக்கி திருக்குா்ஆன் சென்று கொண்டு இருக்கிறதோ, அத்திசை நோக்கி நீங்களும் திரும்பிக் கொள்ளுங்கள்.

வெகுவிரைவில் ஒரு காலம் வரும்.

அப்போது, திருக்குா்ஆனும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் தனித்தனியே பிரிந்துவிடுவார்கள்.

(எச்சரிக்கை, அப்போது) நீங்கள் திருக்குா்ஆனை எந்நிலையிலும் கைவிட்டுவிடாதீர்கள்.

(மேலும்) வரும்காலங்களில் உங்கள் மத்தியில் எத்தகைய ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள் என்றால்… அவர்கள் உங்களைக் குறித்து தீர்ப்புகளை மேற்கொள்வார்கள். அவர்களை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை வழி பிறழச் செய்துவிடுவார்கள். மேலும், நீங்கள் அவர்களுக்கு மாறு செய்தாலோ, அவர்கள் உங்களை கொன்று விடுவார்கள்.

நபிகளார் இவ்வாறு கூறியபோது, அவர்களின் தோழர்கள் கேட்டனர்:

”இறைவனின் தூதரே! அப்போது நாங்கள் என்ன செய்வது?”

அன்பு நபிகளார் பதிலளித்தார்கள்:

”ஈஸா (அலை) – (இயேசு பிரான்) அவர்களின் தோழர்கள் செய்ததையே நீங்களும் செய்து கொள்ளுங்கள்!

அவர்கள் இரம்பத்தால் அறுக்கப்பட்டார்கள். தூக்கிலிடப்பட்டார்கள்.

இறைவனுக்கு மாறு செய்து கொண்டு உயிர்வாழ்வதைவிட இறைவனின் கட்டளைகளை சிரமேற்கொண்டு அந்தப் பாதையில் உயிர் நீப்பதே மிகவும் மேன்மையான செயல்!” (ஆதாரம் முஸ்லிம்)

என்னே தீர்க்கதரிசனம்! என்னே.. அற்புதமான வழிகாட்டுதல்கள்!!




Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive