NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Friday, May 31, 2019

Wednesday, May 22, 2019

மீண்டும் சொல்கிறேன்


சங்பரிவார் என்னும் கொடூர ஆக்டோபஸின் மற்றுமோர் கரமான பாஜக-வை வீழ்த்துவது அவ்வளவு எளிதானது அல்ல. 'டவுசர்ஸ் பாய்ஸ்' என்று நக்கலடிப்பவர்கள் வெறும் 'முகநூல் புலிகள்தான்' என்பதை நினைவில் கொள்க.

ஒன்றுமே இல்லாமலிருந்து வெறும் சொற்ப எண்ணிக்கை இடங்களைக் கைப்பற்றி அதிலிருந்து 'குயுக்தி' வியூகங்களால் அரியணைப் பிடித்திருக்கும் ஒரு வலிமையான சித்தாந்தம்.

அது மனித இனத்துக்கு தீமை பயப்பதாக இருந்தாலும், அர்ப்பணங்கள், கடும் உழைப்பால் உயரங்களைத் தொட்டவர்களே அதன் தொண்டர்கள். ஆட்சியதிகாரம், அரசு எந்திரம், ஆள்-அம்பாரி என்று சகல ஆயுதங்களுடன் இருப்பவர்கள் அவர்கள்.

மிக எளிதாக மதத்தை அபினாக்கி மக்களை அடிமையாக்க அவர்கள் கையாளும் சூழ்ச்சியே நிகழ்கால வரலாறு. ஆம்.. ஒவ்வொரு அரசியல்வாதிக்குள்ளும், ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் இந்த அபின் போதையை ஏற்றி எளிதாக அவர்களை தங்கள் கைவசப்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த சாணக்கியம் சங்பரிவாருக்கு கைவந்த கலை! அதன் ஒரு பகுதிதான் தேர்தலுக்கு பிறகான தேர்தல் கணிப்புகள்.

ஆக, ஜனநாயகத்துக்கான தேர்தல் களத்தில், எதிரியின் வலிமைத் தெரியாமல் கிண்டலடித்து, நையாண்டி செய்வது வெறும் பொழுதுகழிப்பாகவே முடிந்துவிடும்.

சக மனிதரிடையே துவேஷங்களை வளர்க்கும் ஒரு தத்துவம், சக மனிதரை அடக்கியாள துடிக்கும் ஒரு சித்தாந்தம், எளிய மனிதர்களின் குருதி ஆற்றில் சிம்மாசனங்களை அமைக்க விரும்பும் ஒரு தத்துவம் மக்களால் விரும்பப்படுவது எப்படி? என்று எழும் நியாயமான கேள்விக்கு பதில் தேடுவதும் அவசியம்.

அப்படியானால், மேற்குறிப்பிட்ட சங்பரிவார் தத்துவத்தைவிட மோசமான தத்துவம் அல்லது நடத்தைக் கொண்டவரா பிற அரசியல் கட்சியினர்? சங்பரிவாரைவிட மோசமானவரா நாம்?

இந்த தேடலில்தான் இந்தியாவின் இறையாண்மையும், இயல்பான இயக்கவியல் நியதியும் அடங்கியிருக்கிறது.

ஓட்டைகளை அடைக்காமல் எவ்வளவு சிறப்பான மாலுமியாக இருந்தாலும் கப்பல் கரைசேருமா என்ன?

தனது முகம் வகுப்புவாதத்தால் தோய்த்தெடுத்த இயற்கைக்கு புறம்பான வெறுப்பு முகத்திலானதா?

அல்லது சக மனிதர்களை மனதோடு நேசிக்கும் இயற்கையின் நியதிக்கு உட்பட்டதா? என்ற ஒரு முடிவுக்காக மொத்த இந்தியாவே காத்திருக்கிறது.

இத்தனை இயலாமை, பலவீனங்களுக்கு மத்தியில், ஒரு 'மாஜிக்' நடக்குமானால்.. நிச்சயம் அது இந்திய வாக்களார்களால் மட்டும் நிகழ்ந்தது அல்ல என்று மட்டும் மனம் உறுதியுடன் சொல்கிறது.
 
 




Share:

Tuesday, May 21, 2019

Wednesday, May 15, 2019

"காத்திருந்த கழுகுகள்"

நினைத்ததை
சாதித்துவிட்டது
இலங்கையில்
வகுப்புவாதம்.

அதிரடைப்படையாவது..
ராணுவமாவது.. !
கைக்கட்டி வேடிக்கைப்
பார்க்கும்
பதுமைகளான பின்..!

நீதம் தவறும்
ஆட்சியாளர்
எப்போதும்
ஒரே வகைதான்..!
மனங்களைப் பிரி
ஆட்சியைப் பிடி..!

வகுப்புவாதிகள்
எப்போதும் ஒன்றுதான்..
குருதியை உறிஞ்சு..
ஊன்-உதிரத்தை
சுவை..
மனிதத்தை
எரி..

அந்தோ..!
ஓர் அறிவொளி
சமூகம்
முட்டாளாய்
முடங்கி
கிடக்கும்போது..
பேரமைதி
தொலைந்து போய்
நிதர்சனங்களாகும்
'சூழ்ச்சிகளின்'
வரலாறு..!


Share:

Tuesday, May 14, 2019

Wednesday, May 8, 2019

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive