NewsBlog

Friday, July 10, 2020

புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை


நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியா நேபாள அரசின் செய்தி தொடர்பாளர் யூபா ராஜ் காத்திவாடா, "ஊடகங்கள் மீது தடை விதிக்க அரசு விரும்பவில்லை என்றும், ஆனால் ஊடகங்கள் ஒழுக்கமுடன் நடந்து கொள்ள வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்!” - என தெரிவித்தார்.

எந்த ஒரு ஊடகத்தின் பெயரையும் குறிப்பிடாமல், சில இந்திய ஊடகங்கள் நேபாளம் குறித்து எதிர்மறையான செய்தி வெளியிடுவது குறித்து குறிப்பிட்ட அவர், "நேபாள மக்களின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பெருமையை வெளிநாட்டு ஊடகங்கள் கெடுப்பதை இந்த அரசு விரும்பவில்லை" என தெரிவித்தார்.

மேலும் அவர், “இது போன்ற செய்திகள் வெளியிடுவது தொடர்ந்தால் கடும் அரசியல் மற்றும் ராஜீய நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என எச்சரித்தார்.
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive