NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Showing posts with label அழைப்பியல். Show all posts
Showing posts with label அழைப்பியல். Show all posts

Friday, June 23, 2017

ஆப்பிள் பழமும், மூதறிஞர் ஜமீல் அஹமதும்..!


மூதறிஞர் தொடர்ந்தார்: “இந்த ஆப்பிளின் பின்னணியில் ஓர் அற்புதமான வரலாறு இருக்கிறது. நீங்கள் அதை எழுத வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆஃப் இந்தியாவில் நான் ஒரு கட்டுரையை வாசித்தேன். ஆப்பிள் இந்தியாவுக்கு வந்தது சம்பந்தமான கட்டுரை அது. நீங்கள் அந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு எழுத வேண்டும்” – என்றார்.~இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

”நாளொன்று ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவர் தேவையே இல்லை” (An Apple a day keeps the doctor away) – என்றொரு சொலவடை உண்டு.

அது சரி… வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட ஆப்பிள் பழம் இந்தியாவுக்கு எவ்வாறு வந்தது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்பாக ஒரு சின்ன பிளாஷ் பேக் சொல்லியே ஆக வேண்டும்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
ஒருநாள், மூதறிஞர் ஜமீல் அஹ்மது சாஹெப்பிடம் பேசிக் கொண்டிருந்த போது, தமக்கு முன்னால் தட்டில் வைத்திருந்த பழத்துண்டுகளில் ஓர் ஆப்பிள் துண்டை எடுத்துக் காட்டி ”இக்வான் சாப்.. இதோ இந்த ஆப்பிள் நமது நாட்டுக்கு எப்படி வந்தது என்ற கதை உங்களுக்குத் தெரியுமா?” – என்று கேட்டார்.

எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காப்பதே சரியாக எனக்குத் தோன்ற அவ்வாறே செய்தேன்.

”இந்த ஆப்பிள் இந்தியாவுக்கு வந்ததற்கும், இயக்கத்துக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது. உண்மைதான், ஓர் இயக்கவாதி தனது இலக்கை அடைய எப்படி எல்லாம் அர்ப்பணிக்க வேண்டும்? மக்களை சீர்த்திருத்த எப்படி எல்லாம் உழைக்க வேண்டும் என்பதற்கு நல்லதொரு உதாரணம் அது.”

பேசுவதைவிட கேட்பது எனக்கு அதிகம் பிடிக்குமாதலால் நான் கவனமாக கேட்க ஆரம்பித்தேன்.

மூதறிஞர் தொடர்ந்தார்: “இந்த ஆப்பிளின் பின்னணியில் ஓர் அற்புதமான வரலாறு இருக்கிறது. நீங்கள் அதை எழுத வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆஃப் இந்தியாவில் நான் ஒரு கட்டுரையை வாசித்தேன். ஆப்பிள் இந்தியாவுக்கு வந்தது சம்பந்தமான கட்டுரை அது. நீங்கள் அந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு எழுத வேண்டும்” – என்றார்.

அப்போது, இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆஃப் இந்தியா மூடுவிழா கண்டிருந்தது.

நான் இதைக் குறித்து சொன்னதும், ”ஆமாம்..! ஆனால், அந்த பத்திரிகை அலுவலகம் சென்று பழைய இதழ்கள் குறித்து கேட்டு குறிப்பிட்ட இதழ் கிடைக்கிறதா என்று முயற்சி செய்யுங்கள்!” – என்று அவர் வழியும் சொன்னார்.

அதன் பின்னும் பலமுறை மூதறிஞர் ஜமீல் அஹமது சாஹெப் எனக்கு ஆப்பிள் வரலாறு சம்பந்தமாக நினைவூட்டியவாறே இருந்தார்.அவரது மறைவுக்கு பின்னும் என்னால் அந்தக் கட்டுரையை எழுத முடியவில்லையே என்ற வருத்தம் என்னை சதா அலைக்கழித்தவாறே இருந்தது.

மேற்படி கட்டுரை வெளியான இதழ் எனக்கு கிடைக்கவேயில்லை. ஆனாலும் நான் தேடுவதை நிறுத்தவே இல்லை.

இது நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாக இருக்கும். சமீபத்தில் ஒருநாள் கூகுளில் தேடிக் கொண்டிருந்தபோது அந்தக் கட்டுரை சம்பந்தமான தகவல்கள் எனக்குக் கிடைத்தன.

எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு. எனது ஆசானின் ஆசையை உயிருள்ள போது நிறைவேற்ற முடியாவிட்டாலும், அவரது மரணத்துக்கு பின்னாவது தட்டாமல் நிறைவேற்றும் மகிழ்ச்சி அது. அதுவும் ரமளானின் ஆயிரம் மாதங்களைவிட கண்ணியம் மிக்க லைலத்துல் கத்ர் இரவில் இதை எழுதி முடிக்கும் வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றியும்… புகழும்..!

மௌலானா தங்கள் ஆசையை நான் நிறைவேற்றிவிட்டேன். காலமே நீ சாட்சியாக இரு! வாசிப்போரே நீங்களும் சாட்சிகளாக இருங்கள்..!

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

இந்தியாவில் முதன் முதலாக ஆப்பிள் பழக்கன்று பிரிட்டீஷ் ராணுவத்தைச் சேர்ந்த R.C லீ என்பவரால் குளு பள்ளத்தாக்கில் 1870-ல், நடப்பட்டது. நியூவ்டவுன் பிப்பின்ஸ், கிங் ஆஃப் பிப்பின், கோக்ஸ் ஆரஞ்ச் பிப்பின் போன்ற பழ வகைகளை அவர் நமது நாட்டில் அறிமுகப்படுத்தியபோதும் அவற்றின் புளிப்பு, இனிப்பு கலந்த சுவையால் அவ்வளவாக நமது விவசாயிகளின் வரவேற்பை பெற முடியவில்லை. மா, பலா போன்ற சுவை மிகுந்த பாரம்பர்ய பழங்களை விளைவித்து வந்த இந்திய விவசாயிகள் ஆப்பிளின் சுவையை விரும்பவில்லை என்பது வியப்பான செய்தியும் அல்ல.

இந்நிலையில்தான் அந்த இளைஞர், வணிக ரீதியாக ஆப்பிள் பழங்களை விளைவித்து பின்தங்கியிருந்த இமாச்சலப்பிரதேசத்தின் ஏழ்மையை விரட்டியடித்தார்.

சாமுவேல் இவான் ஸ்டோக் என்ற பெயர் கொண்ட அந்த இளைஞர், ஆகஸ்ட் 6-1882-ல், அமெரிக்காவின் பிலடெல்பியாவின் புறநகர் பகுதியில் பிறந்தார்.

1900-ல், நியூயார்க்கின் மொஹெகென் லேக் ராணுவ அகடாமியில் பட்டப்படிப்பை முடித்தார். மேற்படிப்புக்காக கார்னெல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

சமூக சேவைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த சாமுவேல் ஸ்டோக் ஒருமுறை கிருத்துவ தேவாலயத்தில் ஒரு சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். இந்தியாவில் தமது வாழ்நாள் முழுவதையும் தொழுநோயாளிகளின் சேவைக்காக அர்ப்பணித்திருந்த மருத்துவரான டாக்டர் கார்ல்டன்னின் சொற்பொழிவுதான் அது. சமூகத்தால் தனிமைப்படுத்தப்படும் தொழுநோயாளிகளின் பரிதாபகரமான நிலைகுறித்து உள்ளம் நெகிழச் செய்யும் அந்த சொற்பொழிவு அந்த இளைஞரை உடையச் செய்தது. நிலைகுலைந்து போனவர் கண்ணீர் சிந்தி அழலானார். இதுவே அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. கடைசியில் தனது மேற்படிப்பை தொடர மனமில்லாமல் டாக்டர் கார்ல்டன்னோடு சமூகப் பணிகளில் தம்மை இணைந்து கொண்டார்.

ஜனவரி 9- 1904-ல், டாக்டர் கார்ல்டன் குடும்பத்தாரோடு இந்தியாவை அடைந்த சாமுவேல் ஸ்டோக் பிப்ரவரி 26, 1904-ல் மும்பையை அடைந்தார்.

தொழுநோயாளிகளின் இல்லம், இமாச்சலப்பிரதேசத்தின் அடிவாரத்தில் கிருத்துவ மெஷினரியால் 1868-ல், அமைக்கப்பட்டிருந்தது.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டிருந்த தொழுநோயாளிகளை டாக்டர் கார்ல்டன்னும் அவரது துணைவியாரும் கவனித்து வந்தனர். இங்குதான் மனித இனத்துக்கான சேவையை சாமுவேல் ஸ்டோக் முதன் முதலில் ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில், தொழுநோயாளிகளின் தோற்றம் கண்டு அதிர்ச்சியுற்ற சாமுவேல் ஸ்டோக் அதன்பின், அவர்கள் மீது இரக்கம் கொண்டார். அவர்களின் துன்பம் தீர சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்.

தொழுநோயல் பாதிக்கப்பட்டு ஆதரவற்றிருந்த 4 வயது கிர்பா ராமை தத்து எடுத்துக் கொண்டார்.

தனது பணியின் எல்லையான பஞ்சாபின் பல பகுதிகளுக்கு டாக்டர் கார்ல்டன்னோடு பயணம் செய்தார். கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு நோயுற்றார். குணமடைந்ததும், சட்லுஜ் நதிக்கரையில் அமைந்திருந்த கோட்கர் என்னும் குக்கிராமத்துக்கு அனுப்பப்பட்டார்.

1815-ல், அமர் சிங் தாபாவின் தலைமையில் திரண்ட நேபாளி படையினரை பிரிட்டீஷ் படையினர் தோற்கடித்தனர். கோட்கரில் படைத்தளத்தையும் அமைத்தனர். 1872-ல், சிறிய சர்ச் ஒன்றும் அங்கு கட்டப்பட்டது. பசுமையும், குளிர்ச்சியும் மிக்க இந்த இடத்தால் மனம் கவரப்பட்ட சாமுவேல் ஸடோக் அங்கேயே தங்கி தமது பணிகளைத் தொடர முடிவெடுத்தார். வெகு விரைவிலேயே மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள நபராக மாறிவிட்டார்.

1905-ல், இமாச்சல மலையடிவாரத்தில் அமைந்திருந்த கங்கரா நகர் நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை அறிந்த சாமுவேல் ஸ்டோக் மீட்புக்குழுவினரோடு அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்.

நிலநடுக்கத்தில், பெற்றோரை பறிக்கொடுத்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாயினர். ஆயிரக்கணக்கானோர் வீடுகள் இடிந்து தெருவில் நின்றனர். இந்தச் சூழலில் ஐந்து குழந்தைகளை சாமுவேல் ஸடோக் தத்தெடுத்துக் கொண்டார்.

1910-ல் சாமுவேல் ஸ்டோக்கின் தந்தையார் மரணமுற்றதைத் தொடர்ந்து அவர் அமெரிக்கா சென்றார். 1911-ல் இந்தியா திரும்பியவர் உள்ளுரைச் சேர்ந்த பெண் அக்னெஸ்ஸை மணந்து கொண்டார்.

இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த எம்மா மாடில்டா பேட்ஸ் என்னும் விதவை சீமாட்டி, தனது தேயிலைத் தோட்டத்தை விற்பனை செய்துவிட்டு பழையபடி இங்கிலாந்து திரும்பி செல்ல விரும்பினார். அந்த தோட்டத்தை விலைக்கு வாங்கி சாமுவேல் ஸ்டோக் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்.

பின்தங்கியிருந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆப்பிள் பயிரிடுவது உகந்தது என்று முடிவெடுத்த அவர் 1914-ல், தமது பண்ணையின் மண் மாதிரிகளோடு அமெரிக்கா சென்றார். திரும்பிவரும்போது, ஐந்து விதமான ஆப்பிள் பழக்கன்றுகளை உலகப் புகழ் பெற்ற ஸ்டார்க் பிரதர்ஸ் ஆஃப் லூசியானா நாற்றுப் பண்ணையிலிருந்து கொண்டு வந்து நடவு செய்தார்.

ஆப்பிள் குறித்து உள்ளுர் விவசாயிகளிடம் விழிப்புணர்வு பரப்புரைகளை தொடர்ந்து மேற்கொண்டார். அது அவ்வளவு எளிதான பணியாக இல்லை. பழமையான விவசாய முறைமைகளிலிருந்து நவீன விவசாய முறைகளுக்கு அவர்களை மாற்ற மிகவும் உழைக்க வேண்டியிருந்தது. இதற்காக தனது பண்ணைக்குள் ஒரு பள்ளிக்கூடத்தை அமைத்து உள்ளுர் குழந்தைகள் கல்வி கற்ற ஏற்பாடு செய்தார். அந்தக் குழந்தைகளுக்கு பல்வேறு பழவகைகளை பயிரிடுவதற்கான யுக்திகளை அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே போதித்தார். படித்து முடித்த குழந்தைகள் வளர்ந்து ஆளாகியதும் விவசாய நுணுக்கங்களில் திறமையானவர்களாக மாறத்தான் அந்த ஏற்பாடு.

ஆப்பிள் பயிரிடுவதன் மூலமாக பொருளாதார வளர்ச்சிக்கு உதவியதோடு நில்லாமல் பின்தங்கிய மக்கள் வாழும் அத்தகைய மலைப்பகுதிகளில் ஆப்பிள் பயிர் ஒன்றுதான் அவர்களின் வாழ்வை வளப்படுத்துவதற்கான ஒரே தீர்வு என்பதை செயல் ரீதியாக நிரூபித்தார்.

இந்தியாவைத் தொடர்ந்து நேபாளத்துக்கும், பூடானுக்கும் ஆப்பிள் சென்ற கதை இதுதான்.

ஓர் இயக்கவாதி தனது கொள்கை, கோட்பாடுகளை நிறைவேற்ற தியாகங்களால் முன்னெடுத்துச் சென்ற கதை. ஒவ்வொரு இயக்கத்தாரும் படித்து பாடம் பெற வேண்டிய உண்மை கதை.

ஆதார இணைப்பு
“““““““““““““““““““““““““““
http://www.himachaltravelblog.com/…/thanedhar-a-story-of-…/…
https://en.wikipedia.org/wiki/Satyananda_Stokes

Share:

Sunday, July 10, 2016

அழைப்பது நம் கடமை - 16: 'நீதியை கடைப்பிடியுங்கள்!'

மனித விழுமியங்களின் உயரிய சிகரமான இஸ்லாம், போரில் ஈடுபடாத அப்பாவிகளையும், பெண்கள், குழந்தைகள், முதியோர், ஊனமுற்றோர், சரணடைந்த வீரர்கள் இவர்களைக் கொல்வதற்கோ, துன்புறுத்துவதற்கோ ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

ஆப்கானிஸ்தான், இராக் நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினர் மேற்கொண்ட அட்டுழியப் பின்னணியில் இஸ்லாத்தின் கொள்கைப்பூர்வமான கருத்துக்களை அழைப்பாளர்கள் உள்வாங்க வேண்டும்.

அது போர்க்காலமோ, அமைதி காலமோ எந்தச் சூழலானாலும் இஸ்லாம் திட்டவட்டமான நடைமுறைகளையே அமல்படுத்தச் சொல்கிறது. மனித உரிமை மீறல்களை அது என்றும் அனுமதிப்பதில்லை. இஸ்லாமிய சட்டவியல் போர்க்காலத்தில் சில சட்டங்கள், போரில்லாத காலத்தில் சில சட்டங்கள் என்று கூறுபோடுவதில்லை.

படம்: இராக்கின் அபுகாரிப் சிறைகளில் அமொிக்கா நடத்திய கொடுமைகள்
 உலக வரலாற்றிலேயே அவை சமயம் சார்ந்த வரலாறானாலும் அல்லது அரசியல் சார்ந்த வரலாறானாலும் கைது செய்யப்பட்ட எதிரிகளிடம் யாரும் பரிவையும், அன்பையும் காட்டியதில்லை. அவர்களது உரிமைகளுக்கு உயர்ந்த மதிப்பளித்ததும் இல்லை; இஸ்லாத்தைத் தவிர! இந்த மனித உரிமைகள் நேற்றைய ஜெனீவா உடன்படிக்கைக்கு முன்னமே 1434 ஆண்டுகளாக இஸ்லாத்தில் நடைமுறையில் உள்ள மானுடவியல் சட்டங்கள்.

"இன்னும் உங்களோடு போர் புரிபவர்களுடன் நீங்கள் இறைவனின் பாதையில் போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் வரம்பு மீறாதீர்கள். ஏனென்றால்.. வரம்பு மீறுபவர்களை இறைவன் நேசிப்பதில்லை!"- (2:190) என்கிறது திருக்குர்ஆன்.

போருக்கான அனுமதி இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் அமைந்தது.

1. வலியச் சென்று தாக்குவது கூடாது. போரிடுவது தற்காப்புக்காக மட்டுமே!

2. அந்தப் போரும் வரம்பு மீறாத நிலையில் இருக்க வேண்டும்.

தற்காப்புக்கான போர்கூட ஆயுதமேந்தாத அப்பாவிகளுக்கு எதிரான போராக இருக்கக்கூடாது.

போரில் எதிரி வீரர்கள் கைது செய்யப்படுவது தவிர்க்க இயலாதது. அப்படி பிடிபடும் வீரர்கள் சம்பந்தமாக இஸ்லாம் சொல்வது இதுதான்:

1. எதிரி நாட்டு கைதிகளை பெருந்தன்மையோடு மன்னித்து விடுதலை செய்துவிட வேண்டும். அல்லது

2. மீட்புப் பணம் பெற்று அவர்களை விடுதலைச் செய்திட வேண்டும்.


படம்: இராக்கின் அபுகாரிப் சிறைகளில் அமொிக்கா நடத்திய கொடுமைகள்

திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது:

"இறை நிராகரிப்பாளர்களை நீங்கள் போரில் சந்திக்க நேர்ந்தால்.. முதல் வேலை கொல்வதுதான்! அவ்வாறு அவர்களை நீங்கள் முற்றிலும் அடக்கி ஒடுக்கிவிட்டால் .. கைதிகளை இறுக்கமாக கட்டிவிடுங்கள். அதன் பிறகு - அவர்கள் மீது நீங்கள் - கருணை காட்டலாம் அல்லது ஈட்டுத் தொகை பெறலாம். உங்களுக்கு இதற்கான உரிமை இருக்கிறது. போர் ஓயும் வரையில் இதுதான் நீங்கள் செய்ய வேண்டிய பணி!"- (47:4)

போர்க்களத்தில் போரிடும் வீரருக்கு இரண்டே இரண்ட வழிகள்தான் இருக்கும்: ஒன்று கொல்வது அல்லது கொல்லப்படுவது.

எதிரிகளைக் கண்டதும், துப்பாக்கி விசையை இயக்காதவர் எதிரிகளின் தோட்டாக்களால் கொல்லப்படுவார். அதேபோல, தனது தரப்பு படையினருக்கு எந்த இழப்பீடும் நேராமல் பார்த்துக் கொள்வது சக படை வீரனின் மற்றொரு இன்றியமையாத பணி. அதனால், போர்முனையில் எதிரியின் தரப்பில் முன்னேறிச் செல்லும்போது நடைமுறை வழக்கப்படி காயமுற்று வீழ்ந்திருக்கும் வீரர்கள்கூட ஆபத்தானவர்கள்தான்! அவர்கள் எந்த நிலையிலும், துப்பாக்கியை இயக்கலாம். கையெறி குண்டுகளை வீசலாம். அதனால், அவர்களின் ஆயுதங்களைப் பறித்து நிராயுதபாணிகளாக்கி விலங்கிடுவது அல்லது தேவைக்கேற்ப மருத்துவ சிகிச்சையளிப்பது என்பதே திருக்குர்ஆன் வலியுறுத்தும் மனிதநேயப் பண்பாகும்.

ஆனால், தற்போதைய போர்களில் இந்த உயரிய நெறிமுறைகள் பின்பற்றப் படுவதில்லை. வீழ்ந்து கிடக்கும் வீரன் நெஞ்சில் பைனட் என்னும் துப்பாக்கிச் சனியனை செருகி கொலை செய்துவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போரில் எதிரிகளோடு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக இஸ்லாம் திட்டவட்டமாக வழிகாட்டுகிறது.

போர் நியதிப்படி கொல்வது அல்லது வெற்றிபெற்றதும் கைது செய்யப்பட்டவர்களை கருணை காட்டி மன்னித்தோ, பணயத் தொகையைப் பெற்றுக் கொண்டோ விடுதலை செய்துவிடுவது.

படம்: இராக்கின் அபுகாரிப் சிறைகளில் அமொிக்கா நடத்திய கொடுமைகள்
இதில் இரண்டாவது கருத்துக்கு இடமேயில்லை. கைதிகளை சிறைப்பிடித்து விலங்குகளைப் போல கூண்டுகளில் அடைத்து நிர்வாணமாக்கி, துன்புறுத்தி, கற்பழித்து, வெறிநாய்களை ஏவிவிட்டு.. கைதிகள் படும் வேதனைகளைப் புகைப்படம் எடுத்து ரசித்து.. இவை எல்லாம் நாகரீக உச்சாணியில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அமெரிக்கா போன்ற மனித குல விரோதிகளுக்குப் பொருந்தலாம். ஆனால், இஸ்லாம் இந்த மனித உரிமை மீறல்களை, காட்டுமிராண்டித்தனங்களை அனுமதிப்பதேயில்லை.

இரண்டாவது அம்சமான பணயத் தொகை பெறுவது என்பது...

கைது செய்யப்பட்டவர்கள் நிபந்தனைகள், ஒப்பந்தங்கள் அடிப்படையிலோ, மீட்புத் தொகையின் அடிப்படையிலோ, கைதிகள் பரிமாற்றத்தின் மூலமாகவோ செய்யப்படும் விடுதலையாக இருக்கலாம்.

ஆனால், எக்காரணம் கொண்டும் கைது செய்யப்படும் எதிரி வீரர்களை கம்பிகளுக்குப் பின்னால் முடிவில்லாமல் அடைத்துத் துன்புறுத்துவதற்கு அனுமதியில்லை!

- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.


Share:

Saturday, July 2, 2016

அழைப்பது நம் கடமை: 15, 'கொந்தளிப்புக்குப் பின்தான் பேரமைதி!'



விமர்சனங்களுக்கு ஈடு கொடுக்கும் ஒன்றுதான் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அந்த வகையில் சமீபகாலமாக விமர்சனங்களுக்கும், ஏராளமான கேள்விகளுக்கும் ஆளாகிவரும் மார்க்கம் இஸ்லாம். அதுவும் செப்.11 இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு இந்த நிலை தீவரமடைந்தது. தற்போது சகோதரி ரிஸானா தண்டனைவரை அது தொடர்கிறது.

இந்த விமர்சனங்களால் இரண்டுவிதமான நன்மைகள் கிடைத்தன. முதலாவது, இஸ்லாம் சம்பந்தமாக சரியான விளக்கத்தை அடுத்தவர்க்கு எடுத்து வைக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பு. அடுத்தது, இஸ்லாம் சம்பந்தமான கருத்துக்களை சுயமாக  ஆய்வு செய்து அறிவு வளர்த்துக் கொள்ள கிடைத்த வாய்ப்பு.

ஆப்கானிஸ்தான் முதற்கொண்டு இராக் வரையிலான இன்றைய சம்பவங்கள் சகிக்கும்படியாக இல்லை. இறைவன் மகா வல்லமையுள்ளவன்! அல்லாஹீ அக்பர்! - என்ற அற்புதமான தத்துவார்த்த முழக்கம் அப்பாவிகளைக் கொல்ல.. தலைகளை வெட்ட பயன்படுத்தப்படுகிறது. இந்தக் காட்டுமிராண்டித்தனங்களை சகித்துக் கொள்ள இயலவில்லை.

சக உயிர்களிடம் பேரன்புடன் இருக்கும்படி வழிகாட்டியுள்ள மார்க்கம் இஸ்லாம். சக உயிர்களின் உரிமைகளைப் பேணும்படி இறைநம்பிக்கையோடு முடிச்சுப் போட்டிருக்கும் மார்க்கம் இஸ்லாம். அப்படிப்பட்ட உயரிய மார்க்கத்தைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொள்பவர்கள் நடந்துகொள்ளும் முறை உண்மைதானா? என்று பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.



உணர்ச்சிமயமான கொந்தளிப்புகள், அவரவர் நாட்டுக்குரிய பிரச்சினைகள், அதன் அடிப்படையில் அந்த நாட்டு மக்கள் எடுக்கும் முடிவுகள், உலகளவில் ஒட்டு மொத்தமாக முஸ்லிம் நாடுகளில் காணப்படும் இஸ்லாமிய சிந்தனா வரட்சி! மிகைத்தவிட்ட உலகாயதப்போக்கு இவை எல்லாம் நடப்பு சம்பவங்களின் பின்புலன்கள் என்பது உண்மைத்தான்! ஆனால், அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஒருகாலும் அனுமதிக்க முடியாது.

கடும் உஷ்ணமாய் இறங்கிக் கொண்டிருக்கும் நடப்பு யதார்த்தங்களை எல்லாம் உள்வாங்கி தனது அழைப்பியல் களத்தில் நிலைத்திருக்க வேண்டியது அழைப்பாளனின் தனித்திறமையாகும்.

ஆக்கிரமிப்புகள், சிறைக்கொடுமைகள், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள் என்று அமெரிக்க, பிரிட்டன் வினைகளுக்கு...

ஆள் கடத்தல்கள், தலைவெட்டல்கள். சிறைபிடிப்புகள், பணயக் கைதிகள் என்று எழும் எதிர்வினைகளை இஸ்லாத்தின் ஒளியில் பொறுத்துக் கொள்ள முடியாது.

இவற்றுக்கிடையே மேற்கத்திய ஊடகங்கள், போலி-பொய்மைக் கலந்த செய்தி சித்தரிப்புகள், கருத்துருவாக்கங்கள் என்று ஏகத்துக்கும் பிரச்சினைகள் மலை.. மலையாய் தலையே வெடிக்கும் அளவுக்கு கனக்கிறது. இஸ்லாம் வீறு கொண்டு எழுந்த அரபு மண்ணின் ஆட்சியாளர்களோ ஆட்சி, அதிகாரம், உலக போகங்கள் ஒன்றே குறியாய் மறுமையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை எல்லாம் கண்டு அழைப்பாளர் கலங்கிடக் கூடாது.

கடல் கொந்தளிப்புக்கு பின்தான் பேரமைதி என்பதே இயற்கையின் நியதி. சமுத்திரக் கொந்தளிப்பும், புயல் காற்றின் ஆர்ப்பரிப்பும் மீனவனைத் துளியும் பாதிப்பதில்லை. ஏனென்றால்... இவற்றுக்குப் பின்னே ஏற்படும் அமைதியில் ஏராளமான பலன் பெறலாம்.. வலை வலையாய் மீன்களை வேட்டையாடலாம் என்பது அனுபவம் போதிக்கும் உண்மை. இதை உணர்ந்தவனாதலால் இந்த மௌனநிலை அவனுக்கு சாத்தியமாகிறது. மக்கள் மனங்கள் என்னும் மீன்களைப் பிடிக்க இருக்கும் அழைப்பாளர்கள் ஒரு வகையில் சிறந்த மீன்பிடித் திறன் மிக்க மீனவர்களாய் தங்களை உருமாற்றிக் கொள்ள வேண்டும். மனித மனங்கள் என்னும் மீன்களைப் பிடிப்பவர்கள் அவர்கள்.

-- இறைவன் நாடினால்... அழைப்பது தொடரும். 


Share:

Tuesday, June 14, 2016

அழைப்பது நம் கடமை - 14: ' நம்புங்கள் .. இது இறைவனின் மார்க்கம்! '


பல நூற்றாண்டுகள் கழிந்தாலும், இனவாதிகளின் பண்புகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்! காலந்தோறும், அவர்கள் இரத்த வெறிப்பிடித்தாடுவார்கள். பிரபஞ்ச வாழ்வியல் திட்டமான இஸ்லாத்தையும் அதைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களையும் கொன்றொழிக்கவே முயல்வார்கள்.

உலகில் இஸ்லாத்தைப் போல பேரழிவுகளைச் சந்தித்த வாழ்க்கை நெறி வேறு இருக்க முடியாது! வரலாற்று அறிஞர்கள் வியக்கிறார்கள் இந்த உண்மையைக் கண்டு!

இதுவரை உலகில் லட்சக்கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அவர்களது உடமைகள் சூறையாடப்பட்டன. மனைவி, மக்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டனர். தப்பிப் பிழைத்தவர்கள் காலத்துக்கும் அச்சத்துடன் பல தலைமுறை  வரைக்கும் அந்த பீதியில் உறைந்திருந்தார்கள்.

''இனி அவ்வளவுதான்! இஸ்லாம் அழிந்துவிடும்! அது வளருவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை!''- என்று எதிரிகள் உறுதியுடனிருந்த நேரத்தில் அந்த அதிசயம் மீண்டும்.. மீண்டும் நிகழ்கிறது! இஸ்லாம் என்னும் விருட்சம் இன்னும் ஆழ வேர்ப்பரப்பி வானுயர கொப்பும், கிளைகளுமாக துளிர்விட்டு மகாவிருட்சமாக வளர்கிறது!

நேற்றைய 'அந்தலூசியா' என்றழைக்கப்படும் ஸ்பெயின் முதற்கொண்டு இன்றைய குஜராத் வரையிலான நிகழ்வுகள் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளை... அடக்குமுறைகளை...  கொன்றொழிப்புகளை இனத்துடைத்தெறிதலைதான் காட்டுகின்றன!

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றிய இறைவனின் பிரியத்துக்குரிய நல்லடியார்களின் அளப்பரிய தியாகங்களால் மீண்டும் மீண்டும் அந்த அற்புதம் நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக 13-ஆம், நூற்றாண்டை எடுத்துக் கொண்டால்.. பயத்தால் உடல் சிலிர்த்துவிடும். வரலாறு நெடுக இரத்த வாடை அடிக்கும் அந்த கொடுர சம்பவங்கள் இப்போதும் நம்மை சிலிர்க்க வைக்கும்.

ஒரு நகரைத் தொடர்ந்து மறு நகரம்.. ஒரு பகுதியைத் தொடர்ந்து மறு பகுதி... ஒரு நாட்டைத் தொடர்ந்து மறு நாடு... என்று உலக முஸ்லிம்கள்  கடும் சேதங்களை அடைந்து கொண்டிருந்த நேரம் அது. பகைமை உக்கிரத்தால்.. முஸ்லிம்களும் அவர்கள் பின்பற்றும்  மார்க்கமான இஸ்லாமும் இனி தீர்ந்துவிடும் என்று வரலாறு நடுங்கிக் கொண்டிருந்த நேரம்.

அந்த கோர கொலைப் பட்டியலின் குறைந்தளவு புள்ளிவிவரம் இது:

நிஷாபூர்             -   17 லட்சத்து 47 ஆயிரம் பேர் .
பாக்தாத்              -   16 லட்சம் பேர்.
 ஹீரட்                 -    10 லட்சம் பேர்.
சமர்கண்ட்         -    9 லட்சத்து 80 ஆயிரம் பேர்.
மெர்வ்                 -    7 லட்சம் பேர்.
அலெப்போ       -    80 ஆயிரம் பேர்.
பால்க்                  -    முற்றிலும் அழிந்து போனது.
கிஹ்வா             -    முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது.
ஹர்ரான்            -    முற்றிலும் அழிந்தது.

உலகின் பேராபரணம் என்று வர்ணிக்கப்படும் நகரம் பாக்தாத்! நீண்ட நெடிய சோதனை மிக்க அந்த ஆறு வாரங்களில் இந்த அழகான ஆபரணம் குரங்குக் கையில் கிடைத்த பூமாலையைப் போல பிய்த்து எறியப்பட்டது. யூப்ரட்டீஸ் நதி குருதியால் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. மென்மைக்கும் அழகுக்கும் பேர் போன நகரப் பெண்கள் கொடுரமாக கற்பழித்துக் கொல்லப்பட்டனர்.

ஐந்து நூற்றாண்டுகளுக்கு பொத்தி.. பொத்தி.. பாதுகாத்து வந்த அறிவு... பெரும் சிரமங்களுக்கிடையே சேர்த்து வைக்கப்பட்டிருந்த உலகின் தலைச் சிறந்த நூலகம், தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அரிய நூல்கள் சாம்பலாக்கப்பட்டன.

கல்வி-கேள்விகளுக்கும், அற்புதமான கலாச்சாரத்துக்கும், வணிகத்துறைக்கும் கேந்திரமாக விளங்கிய பாக்தாத் மயானக் காடானது. கலைநயத்தைப் பறைச்சாற்றும் பல அற்புதமான கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. ரத்த வெறிப்பிடித்த ஆட்சியாளன் செங்கிஸ்கான் நாற்பதாண்டு காலம் முஸ்லிம்களை நடுநடுங்க வைத்தான்.
 அன்றைக்கு ஆட்சியிலிருந்த முஸ்லிம் அரசர் 'முஹம்மது குவாரிஷா' செய்த ஒரு சிறு தவறால் வந்த வினை இது. அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் சக்தியாக விளங்கியவர் இவர். அவருடைய நாட்டுக்கு வணிகம் நிமித்தமாக வந்த மங்கோலியக் குழுவினரை அனுமதி பெறாத காரணம் காட்டி அவர்களைக் கொலைச் செய்ய உத்திரவிட்டார். அதற்கு முறையாக தூதர்களை அனுப்பி எதிர்ப்புத் தெரிவித்த செங்கிஸ்கானின் தூதர்களையும் கொன்றார்.

மனித நேயமற்ற இந்த இரண்டு சம்பவங்கள்தான் செங்கிஸ்கானை பழி வாங்கும் உக்கிரத்தில் தள்ளியது. வரலாற்றில் எராளமான முஸ்லிம்கள் உயிரிழக்கக் காரணமானது.

மங்கோலியப் படைகள், மத்திய ஆசியா, பாரசீக வளைகுடா, புடா பெஸ்ட், மாஸ்கோ என்று புயல் வேகத்தில் இந்தியாவின் தில்லிவரை வந்து சேர்ந்தன.

உலகின் வேறொரு மூலையிலிருந்தவர்கள் சுவீடன் நாட்டவர். அவர்களுக்கு செங்கிஸ்கானால் எந்த ஆபத்தும் இல்லாவிட்டாலும்கூட மங்கோலியர் பெயரைக் கேட்டு நடு நடுங்கினார்கள் அவர்கள்.

வெறும் ஆட்சி - அதிகாரம், ஆடம்பர மோகங்களில் (இன்றைய அரபு ஆட்சியாளர்களைப் போல) திளைத்திருந்த முஸ்லிம்களை வெல்வதற்கு எந்த சிரமமும் இல்லை. ஒரு மங்கோலியன் நூறு முஸ்லிம்களை கொலை செய்யுமளவுக்கு கோழைகளாக இருந்தார்கள். தங்களது உயிர், உடமைகளைக் காத்துக் கொள்ள இயலாமல் அவர்கள் செத்து மடிந்தார்கள்.

'மங்கோலியப் படை தோற்றுவிட்டதென்று யாராவது சொன்னால்... நம்பவே நம்பாதீர்கள்!' - என்று அரபு பழமொழி வழக்கத்தில் ஏற்படுமளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.

மங்கோலியர் சாம்ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்தபோது, முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஒழுக்க வீழ்ச்சியில் மூழ்கித் திளைத்தார்கள். ஊழல், அதிகார வெறி அவர்களிடையே மிகைத்துப் போனது. உலகாயதப்போக்கே அவர்களிடம் பிரதானமாக காணப்பட்டது.

தலைமைத்துவ தகுதியின்மைக்கு 'குவாரிஜயம் ஷா' மட்டுமே உதாரணம் அல்ல. அப்பாஸிய கலீஃபா 'அல் முஸ்த அஸிமின்' நிலைமையும் அதுதான்! குவாரிஜம் ஷாவின் அரசாட்சி வீழ்ந்தது என்று கேள்விப்பட்டதும், தனிப்பட்ட வெறுப்பை பொது வெறுப்பாக்கி அகமகிழ்ந்தார் அப்பாஸிய கலீஃபா அல் முஸ்த அஸீம். மங்கோலியர்கள் பாக்தாத்தை அடையும் முன்னரே கலீஃபாவின் ஆலோசகர்கள் தமது படைவீரரை விலக்கிக் கொள்ளும்படி கலீஃபாவுக்கு அறிவுறுத்தினார்கள். இந்தக் கோழைத்தனம் அப்பாஸிய ஆட்சி வீழ்வதற்கு போதுமானதாக இருந்தது.

இந்தக் கொடுமைகளாலும் இஸ்லாம் அழிந்துவிடவில்லை.

'தான் இறைவனின் பேரழிவு!', 'இறைவனால் அனுப்பப்பட்ட வேதனை!'- என்று தன்னைத்தானே அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்திக் கொண்டான் செங்கிஸ்கான்! கைப்பற்றிய  நாட்டு முஸ்லிம் பெண்களின் கற்பைச் சூறையாடினான். கொலைக்காரர் குஜராத் மோடி செய்தது போலவே நிறைமாத கர்ப்பிணிப் பெண்களையும் கற்பழித்து ... வயிற்றைக் கிழித்து.. குழந்தைகளை வாளால் குத்திக் கொன்றான். ஒரு தலைமுறைக்கு முஸ்லிம்களைத் துன்பங்களும், துயரங்களும் சூழ்ந்து கொண்டன.

அதன் பிறகு இறைவனின் பேரருள் மீண்டும் முஸ்லிம் சமுதாயம் மீது பொழிந்தது. தனது அடியார்கள் சோதனைகளால் பெற்ற படிப்பினைகள் போதும்! என்று கருணை வாய்ந்த இறைவன் எண்ணினான் போலும்! மீண்டும் இஸ்லாத்துக்கு சாதகமாக காற்று வீச ஆரம்பித்தது.

பாக்தாத் செங்கிஸ்கான் பேரனால் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு செங்கிஸ்கானின் கொள்ளுப் பேரன் 'பெர்க்' இஸ்லாத்தைத் தழுவினார்.

மங்கோலியர்களின் கொடும் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

 

மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வரலாற்று நிகழ்வுகளில் இரண்டு சாமான்யமானவர்களின் பங்கு முக்கியமானது!

'பெர்க்' அல்லது 'பரகா கான்' என்று அழைக்கப்படும் செங்கிஸ்கானின் கொள்ளுப் பேரனுக்கு இஸ்லாம் இரண்டு வணிகர்களால் பரிச்சயமானது. இந்த முயற்சியின் விளைவாக இஸ்லாம் ரஷ்யா, கிழக்கு ஐரோப்பா வரை சென்று சேரக் காரணமானது!

பாரசீகத்ததைச் சேர்ந்த வணிகரான ஜமாலுத்தீன் தனது வணிகப் பயணம் நிமித்தமாகச் செல்லும் போது, மங்கோலிய இளவரசன் துக்ளக்கின் உயர் பாதுகாப்புப் பகுதியான விளையாட்டுத் திடலுக்குள் நுழைந்துவிட்டார். தெரியாமல் நடந்துவிட்ட சம்பவத்துக்கு அவர் கைது செய்யப்பட்டு இளவரசன் முன்பாக நிறுத்தப்பட்டார்.

செங்கிஸ்கானின் பரம்பரையில் உதித்த துக்ளக்கிற்கு பாரசீக முஸ்லிம்கள் என்றால்... விலங்குகளைவிட மட்டமானவர்கள் என்று நினைப்பு! பௌத்தமும், கிருத்துவமும் அவரது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான மதங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது!

இந்த எண்ணத்தாலேயே துக்ளக் ஜமாலுத்தீனை ஏளனமாகப் பார்த்து கிண்டலாகச் சொன்னானர்: "பாரசீகர்களைவிட நாய்கள் எவ்வளவோ மேல்!"

கொஞ்சமும் அச்சப்படாமல் ஜமாலுத்தீன் பதிலளித்தார்:

"உண்மைதான் அரசே! நாங்கள் இஸ்லாத்தைத் தழுவியிருக்காவிட்டால்.. தெரு நாய்களைவிட கேவலமாக இருந்திருப்போம்!"

சலனமற்ற இதயத்திலிருந்து அச்சமற்று வெளிப்பட்ட இந்த பதில் துக்ளக்கை சிந்திக்க வைத்தது. இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள அதுவே திருப்புமுனையாக அமைந்தது!

ஜமாலுத்தீன் துக்ளக்குக்கு இஸ்லாம் குறித்து விரிவான முறையில் பரிச்சயம்  செய்தார். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்த துக்ளக் ராஜாங்க காரணங்களையொட்டி தனது முடிவை அறிவிக்க சிறிது அவகாசம் கேட்டார். சிறிதுநாள் கழித்து தன்னை வந்து பார்க்கும்படியும், தனது வாக்குறுதியை நினைவுறுத்தும்படியும் ஜமாலுத்தீனை அவர் கேட்டுக் கொண்டார்.

ஊர் திரும்பிய ஜமாலுத்தீன் சிறிது நாளிலேயே நோயுற்றார். மரண வேளையில் அவர் தனது மகனான ரஷீதை அழைத்தார். இளவரசர் துக்ளக் குறித்து நடந்தவற்றை விவரித்தார். இஸ்லாம் ஏற்றுக் கொள்வது சம்பந்தமான உறுதிமொழியை அவருக்கு நினைவுறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.

துக்ளக் அரியணையில் அமர்ந்திருந்த சமயம் அது.

அவரை சந்திப்பது அவ்வளவு எளிதாக இல்லை. கடைசியில் அரண்மனை அருகே தொழுகைக்கான அழைப்பை விடுத்து துக்ளக்கின் கவனத்தை ஈர்த்தார் ரஷீத். அதன் பின் துக்ளக் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு உதவினார். 'துக்ளக் தைமூர் கான்' என்ற பெரும் பிம்பம் வரலாற்றில் பதியக் காரணமானார்.

துன்பங்களும், துயரங்களும் சத்தியத்தை என்றென்றும் சூழ்ந்திருப்பவை! பெரும் மலையிலிருந்து உருண்டுவரும் நீர்வீழ்ச்சியைப் போன்றவை! பாக்தாத், ஆப்கான், நேற்றைய குஜராத் எல்லாமே இறைவனின் சோதனைகள்தான்!

இந்த துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் மறுபக்கம் உண்டு என்பதற்கு சாமானியர்களான ஜமாலுத்தீன் மற்றும் ரஷீத் போன்றோரின் அழைப்பியல் வரலாறே சாட்சி!

ஆமாம்! அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் உறுதியுடன் நம்புங்கள்... இது இறைவனின் மார்க்கம்!

வாள் வீச்சுகளையும், துப்பாக்கித் தோட்டாக்களையும், நவீன லேசர் ஆயுதங்களையும் தாண்டி வரலாற்றில் நிலைத்திருக்கும் மார்க்கம்!

கியூபாவின் குவாண்டனாமோ சிறைச்சாலைகளும், ஈராக்கின் அபூகாரிப் சிறைகளையும் தாண்டி மீண்டெழும் மார்க்கம்!

நம்புங்கள் தோழர்களே! இது இறைவனின் மார்க்கம்! படைத்தவனால் தனது படைப்புகளுக்காக அருளப்பட்ட பேரருள் மார்க்கம்!

- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.


 அழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html 
2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html 
3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html 
4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html 
5. சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html 
6. சான்று வழங்குதல் என்றால் என்ன? http://ikhwanameer.blogspot.in/2015/08/6_14.html 
7. கடல் பிளந்தது. நெருப்பு குளிர்ந்தது : http://ikhwanameer.blogspot.in/2015/08/13_18.html 
8. அந்த நாள் வரும்முன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/8.html 
9. அழைப்பாளர்களின் இலக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/08/9_22.html 
10 ஊடகங்களின் இரண்டு அளவுகோல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/10_24.html 
11.அடிப்படை விஷயங்களும், அழைப்பாளர்களும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/11.html 
12. கடைநிலைக் காவலராய் ஒரு ஜனாதிபதி : http://ikhwanameer.blogspot.in/2015/09/12.html

 



Share:

Tuesday, October 13, 2015

அழைப்பது நம் கடமை: 13, மக்கள் சேவையில் மனம் திளைத்த ஜனாதிபதி

 

இந்த வரலாற்று சம்பவத்தை எழுதும் போதெல்லாம் நான் மலைத்துப் போகின்றேன்! நம்பவே முடியாத வரலாற்று நிகழ்வுகள்!

"இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்களே! வாழ்ந்திருக்கிறார்களே!"- என்று என்னுள் முணுமுணுப்பு எழுகிறது.

நான் வாழும் சமுதாயம் எப்படியெல்லாம் கறைபடிந்து ஓர் அவநம்பிக்கையை என்னுள் எழுப்பிவிட்டுள்ளது? அரைநூற்றாண்டுக்கும்  அதிகமாக கறைபடிந்த சூழல்கள் என் எண்ணங்களை, பார்வையை சிதைத்து அவற்றையே என் மூளையின் பதிவுகளாக்கி விட்டதால் வந்த வினை இது!

முடியும் என்று நானும் என்னைச் சேர்ந்தோறும் வாழும் வாழ்க்கை என் நம்பிக்கையை வலுப்படுத்துவதால்.. இந்த நிஜங்களை நோக்கி உலகம் முழுக்க உள்ள இறைநம்பிக்கையாளர்களின் நடப்புகள் பல்வேறு தியாகங்களுக்கிடையே நகர்வதால் ...

இந்த சமூக அமைப்பை விட்டால்.. உலகில் வேறு மாற்றேயில்லை என்று மாற்றங்கள் நிகழ்வதால்..

அதை இறைவன் நாடினால்..  என் ஆயுட்காலத்திலேயே பார்க்கும் வாய்ப்பும் இருக்கும் என்று உறுதியில் இந்த சம்பவங்களை அழுத்தம் திருத்தமாக பதிக்கின்றேன்.

மதீனாவின் கிராமப் பகுதிகளில் ஜனாதிபதி உமர் அவர்கள் (இறையருள் பொழிவதாக!) இரவு நேர நகர்வலம் வந்து கொண்டிருந்தார்கள்; வழக்கம் போல மாறு வேஷத்தில்!

இரவின் கும்மிருட்டில் அந்த பள்ளத்தாக்குப் பகுதியைக் கடப்பது மிகவும் சிரமாக இருந்தது.

தொலைவில், 'மிணுக்.. மிணுக்..' என்று விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதை நோக்கி ஜனாதிபதி உமர் அவர்கள் விரைந்தார்கள்.

அருகில் சென்றதும் விளக்கு எரிந்து கொண்டிருந்த கூடாரத்திலிருந்து யாரோ அழும் குரல் கேட்டது.

கூடாரத்துக்கு வெளியே ஒரு மனிதர் தன்னந்தனியாக ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்தார். அவர் முழங்கால்களில் தலைக் கவிழ்ந்து அழுது கொண்டிருந்தார்.

அவர் ஏதோ பெரும் சோகத்தில் சிக்கியிருப்பதை உமர் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

அந்த மனிதரை நெருங்கி 'சலாம்-முகமன்' கூறினார்கள். விவரத்தை விசாரித்தார்கள்.

தாளமுடியாத துக்கத்தில் இருந்ததற்கு அடையாளமாக அவரிடமிருந்து பெரும் கேவல் வெளிப்பட்டது. வார்த்தைகள் வெளிப்படவில்லை.

ஆறுதலாக அவரது தோள்களில் கை வைத்த உமர் அவர்கள் (இறையருள் பொழிவதாக!) சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள்.


கடைசியாக வழிப்போக்கர் தனது பிரச்சினையை அழுகையுடன் சொன்னார் இப்படி:

'அந்த வழிப்போக்கர் ஜனாதிபதி உமர் அவர்களைக் கண்டு உதவி பெறுவதற்காக தலைநகருக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவிக்கு பேறுகால வேதனை ஏற்பட்டுவிட்டது. அந்த அகால இரவில், பிரசவம் பார்க்க தகுந்த ஆளும் உதவியும் இல்லாமல் அவர் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்!'

இதை அறிந்து கொண்ட உமர் அவர்கள் அங்கே ஒரு நிமிடம்கூட தாமதிக்கவில்லை. நேராக இல்லம் சென்றார்கள். தங்களின் துணைவியார் உம்முல் குல்தும் பின்த் அலி அவர்களை (இறையருள் பொழிவதாக!) எழுப்பினார்கள். விவரத்தைச் சுருக்கமாக சொன்னார்கள். அதன் பின்,

"இறைவனின் நற்கூலியைப் பெற்றுத் தரும் ஓர் அரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உடனே என்னுடன் கிளம்புங்கள்!"- என்றார்கள்.

மகப்பேறுக்குத் தேவையான பொருட்களையும், உணவு மற்றும் குடிநீரையும் எடுத்துக் கொண்டு உம்முல் குல்தும் உடனே புறப்பட்டார்கள்.

இருவரும் வெகு விரைவிலேயே கூடாரத்தை அடைந்தார்கள். தமது துணையியாரை பிரசவம் பார்க்க கூடாரத்தில் அனுப்பிவிட்டு உமர் அவர்கள் வழிப்போக்கரின் அருகில் அமர்ந்தார்கள். அவருக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார்கள். அத்தோடு நிற்காமல் கொண்டுவந்த உணவுப் பொருட்களை சமைக்க ஆரம்பித்தார்கள்.

அந்த வழிப்போக்கருக்கு தமது பக்கத்தில் ஒரு சாமான்யராக அமர்ந்திருந்து... உணவு சமைத்துக் கொண்டிருப்பது அகண்ட இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி என்பது தெரியாது.

சற்று நேரத்தில் கூடாரத்திலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.

"ஜனாதிபதி அவர்களே! உங்கள் நண்பருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற நற்செய்தியைச் சொல்லுங்கள்! தாயும்-சேயும் நலமாக இருப்பதையும் தெரிவித்துவிடுங்கள்!"-என்றார்கள் உம்முல் குல்தும் அவர்கள் கூடாரத்திலிருந்து எட்டிப் பார்த்தவாறு.

இதைக் கேட்டதும் அதிர்ச்சியுறுகிறார் அந்த வழிப்போக்கர்.

தான் இதுவரையில் பேசிக் கொண்டிருந்தது... பிணங்கிக் கொண்டது... இயலாமையால் கடிந்து கொண்டது... பார் போற்றும் ஜனாதிபதி.. இறைநம்பிக்கையாளர்களின் தலைவர்... நபித்தோழர்.. உமர் (இறையருள் பொழிவதாக!) அவர்கள் என்பதை அறிந்ததும் ஆடி போய்விட்டார்.

சூழலைப் புரிந்துகொண்ட உமர் அவர்கள் வழிப்போக்கரின் தோளில் மெல்ல தட்டிக் கொடுத்தார்கள். சுட.. சுட தயாரித்த உணவை கூடாரத்தில் அனுப்பி குழந்தையின் தாய்க்கு ஊட்டிவிடும்படி தங்களின் துணைவியாரைப் பணித்தார்கள்.

அதற்கு அடுத்த நாட்களில் தலைநகர் வந்த அந்த வழிப்போக்கருக்கு தேவையான நிதியுதவிகளை செய்தார்கள். அந்த நிதியுதவியில் குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்ட நிரந்தர உதவியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் சேவையில் மனத் திளைத்த.. ஜனாதிபதிகள்!

இறையச்சத்தால் பதறிய ஆட்சியாளர்கள்...!!

இஸ்லாமிய சமூக அமைப்பென்னும் மகா சமுத்திரத்தில் ஒரு சில திவலைகள்தான் இங்கே குறிப்பிட்டிருப்பது. இஸ்லாமிய அரசாட்சியின் எடுப்பான முத்திரைகள் இவை.

ஆனால்... இன்று நடப்பது என்ன?

-- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.

''''''''''''''''''
அழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html

3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html

4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html

5. சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html

6. சான்று வழங்குதல் என்றால் என்ன? http://ikhwanameer.blogspot.in/2015/08/6_14.html

7. கடல் பிளந்தது. நெருப்பு குளிர்ந்தது : http://ikhwanameer.blogspot.in/2015/08/13_18.html

8. அந்த நாள் வரும்முன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/8.html

9. அழைப்பாளர்களின் இலக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/08/9_22.html

10 ஊடகங்களின் இரண்டு அளவுகோல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/10_24.html

11.அடிப்படை விஷயங்களும், அழைப்பாளர்களும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/11.html

12. கடைநிலைக் காவலராய் ஒரு ஜனாதிபதி : http://ikhwanameer.blogspot.in/2015/09/12.html
Share:

Tuesday, September 15, 2015

அழைப்பது நம் கடமை - 12,'கடைநிலைக் காவலராய் ஒரு ஜனாதிபதி!'

 

உண்மையில், அரசியல் அமைப்பு என்பது என்ன? அரசியல் அமைப்பின் நோக்கம் எதுவாக இருக்க வேண்டும்? ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டும்?

அழைப்பாளர்கள் தங்கள் அழைப்பியல் களங்களில் பயன்படுத்த வேண்டிய உயிர்துடிப்புள்ள அந்த வரலாற்று நிஜங்கள் இதோ!

ஒருமுறை. ஜனாதிபதி உமர் அவர்கள் (இறையருள் பொழிவதாக!)  மதீனத்துத் தெருவில் நண்பர்கள் சூழ நடந்து  சென்று கொண்டிருந்தார்கள். உடன் அவருடைய மகன் அப்துல்லாஹ் பின் உமரும் (இறையருள் பொழிவதாக!) இருந்தார்.

தெருவில் ஒரு சிறுமி தென்பட்டாள். வறுமையின் மொத்த வடிவமாய் அவள் திகழ்ந்தாள்.

பரட்டைத் தலை. ஒட்டுப் போட்ட சட்டை. இடுங்கிய கண்கள்.

சிறுமியிடம் இரக்கம் கொண்ட ஜனாதிபதி உமர் அவர்கள், "யாரிந்த ஏழைப் பெண்?"-என்று அவளைப் பற்றி விசாரித்தார்கள்.

பக்கத்தில் வந்து கொண்டிருந்த மகன் அதற்கு நேரிடையாக பதில் சொல்லாமல் திருப்பி கேள்வி கேட்டார்:

"இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! தங்களுக்கு இந்தப்  பெண் யாரென்று தெரியவில்லையா?"

"இல்லை. இந்தப் பெண் யாரென்று எனக்குத் தெரியவில்லை. யார் இவள்?"

அரபுலகையும் தாண்டி அகண்டு விரிந்திருந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியாளர் உமர் அவர்களின் மகனார் பதில் தந்தார்:

"இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இவள் என் மகள்!"

"என்ன! அப்துல்லாஹ்..! இவள் உமது மகளா? இவ்வளவு வறிய நிலையில்..?"

நம்ப முடியாமல் கேட்டார்கள்.

"ஆமாம்! தந்தையே! இவள் எனது மகளேதான்! அரசு பொது நிதியகமான பைத்துல்மாலிருந்து உங்கள் குடும்பத்தாராகிய எங்களுக்கு அதிகப்படியாக ஒரு பைசாவையும் தருவதில்லை. எனது வறுமை.. என் மகளை இப்படியாக்கி விட்டது!" - அப்துல்லாஹ் பின் உமரின் குரல் உடைந்து வெளிப்பட்டது.


ஆனால், ஜனாதிபதி உமர் அவர்கள் இறைநம்பிக்கையின் உறுதியுடன் சொன்னார்கள்:

"மகனே! இறைவனை சாட்சியாக்கிக் கூறுகின்றேன்! மற்றவர்களுக்கு பொதுவாக எதைத் தருகின்றேனோ அதைவிட அதிகமாக என் குடும்பத்தாருக்குத் தர என்னிடம் ஏதுமில்லை! இது குறித்து இறைவனின் வேதம் நம்மிடையே தீர்ப்பு வழங்கட்டும்!"

தனது மகனின் கண்களிலிருந்து பெருக்கெடுக்கும் கண்ணீரையும் உமர் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இன்னொரு முறை. ஒட்டகக் கூட்டம் ஒன்று மதீனாவுக்கு வந்திருந்தது. அந்தக் கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் இருந்தார்கள்.

இதனை ஜனாதிபதி உமர் அவர்கள் கண்டார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு தமது நண்பரான நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபிடம் சொன்னார்கள்:

"கொஞ்சம் இந்த பரிவாரங்களுக்கு என்னோடு சேர்ந்து காவல் நிற்க முடியுமா?"

இதற்கு அந்த நபித்தோழரும் ஒப்புக் கொண்டார்கள்.

இருவரும் சேர்ந்து இரவு முழுவதும் அந்தக் குழுவினருக்குக் காவலாய் நின்றார்கள். பிந்தைய இரவான தஹஜ்ஜுத் நேரத்தில் இருவருமாய் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது.

ஜனாதிபதி உமர் அவர்கள் கூட்டத்தினரை நெருங்கி குழந்தை அழாமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள்.

கொஞ்ச நேரம் சென்றது. மீண்டும் அதே இடத்திலிருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது.

ஜனாதிபதி உமர் அவர்கள் தாயிடம் விரைந்து சென்றார்கள். "அம்மா! இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையை அழாமல் கவனித்துக் கொள்ளுங்கள்!" - என்றார்கள்.

மீண்டும் அதே குழந்தை அழும் சத்தம் கேட்டது.

ஜனாதிபதி அவர்கள் குழந்தையின் தாயிடம் சென்று குழந்தை அழாமல் பார்த்துக் கொள்ளும்படி வலியுறுத்தினார்கள்.

இப்படி மூன்று முறை நடந்தது.


கடைசியாக, குழந்தை அழும் குரல் கேட்டு தாயாரிடம் சென்ற ஜனாதிபதி அவர்கள், "அம்மா! நீங்கள் நல்ல தாய் போல நடந்து கொள்ளமாட்டேன் என்கிறீர்கள். இந்தக் குழந்தை இரவு முழுவதும் அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது!" - என்றார்கள்.

தான் ஜனாதிபதி உமர் அவர்களிடம் பேசுகிறோம் என்று தெரியாமல் அந்தத் தாய் சொன்னாள்:

"இறைவனின் அருள் உங்கள் மீது பொழிவதாக! இரவு பல முறை நீங்கள் தேவையில்லாமல் எனக்கு அறிவுரை என்றப் பெயரில் தொந்திரவு செய்துவிட்டீர்கள். நான் இந்தக் குழந்தைத் தாய்ப்பால் குடிப்பதை மறக்கடிக்க முயன்று வருகின்றேன். இந்தக் குழந்தையும் தாய்ப்பால் குடிப்பதை விடமாட்டேன் என்கிறது!" - என்று சலித்துக் கொண்டாள்.

இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற ஜனாதிபதி உமர் அவர்கள், "அம்மா, குழந்தையைக் கட்டாயப்படுத்தி பால்குடி மறக்கடிக்கும் அவசியம்தான் என்ன?" - என்று கேட்டார்கள்.

"காரணமில்லாமல் செய்ய நான் என்ன கல் நெஞ்சம் கொண்டவளா? எங்கள் ஜனாதிபதி உமர் அவர்கள் பால்குடி நிறுத்திய குழந்தைகளுக்குத்தான் பைத்துல்மாலிலிருந்து (அரசு பொது நிதியகம்) நிதி உதவி செய்கிறார்கள்!"

"சரி..இந்த குழந்தைக்கு வயதென்ன?"

"குழந்தை பிறந்து சிலமாதங்கள்தான் ஆகின்றன!"

"குழந்தையைப் பால்குடி மறக்கடிக்க அவசரம் காட்ட வேண்டாமம்மா!" - என்றவாறு ஜனாதிபதி அங்கிருந்து சென்றார்கள்.

அதிகாலைத் தொழுகையை முன்நின்று நடத்திக் கொண்டிருக்கும் போதே ஜனாதிபதி உமர் அவர்கள் அழுதுவிட்டார்கள். மேற்கொண்டு திருக்குர்ஆன் வசனங்களை ஓத முடியாமல் நா தழு தழுத்தது. தொழுகையின் முடிவில் சொன்னார்கள்:

"உமர் அழிந்தான்! அவன் இறைநம்பிக்கையாளர்களின் குழந்தைகளைக் கொன்று விட்டான்!"

அத்தோடு நில்லாமல் தமது ஆட்சிக்குட்பட்ட எல்லா பகுதிகளுக்கும் இப்படி ஆணை பிறப்பித்தார்கள்:

"குழந்தைகளுக்கான நிதி உதவி பெறும் பொருட்டு எந்தத் தாயும் குழந்தையைக் கட்டாயப் படுத்தி பால் குடியை நிறுத்தக் கூடாது! இனி, பால்குடிக்கும் குழந்தைகளுக்கும் அரசின் நிதி உதவி உண்டு!"

சிறப்பு மிக்க இந்த வரலாற்று நிகழ்ச்சிகளை இதுவரை உலகம் கண்டதில்லை.

ஓர் அகண்ட பேரரசின் ஜனாதிபதியின் குடும்பத்தார் வறுமையில் உழன்றார்கள்.

சர்வ வல்லமைக் கொண்ட ஜனாதிபதி தமது குடிமக்களின் பரிவாரத்துக்கு காவலனாய் நின்றார்கள்.

அந்த பரிவாரத்தின் கால்நடைகளும், மனிதர்களும் நன்றாக ஓய்வெடுக்க உதவினார்கள்.

ஜனாதிபதி உமர் அவர்கள் (இறையருள் பொழிவதாக!) ஒரு சாமான்ய கடைநிலைக் காவலனைப் போல தங்களின் பொறுப்பை நிறைவேற்றுவதில் எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:


1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html

3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html

4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html

5. சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html

6. சான்று வழங்குதல் என்றால் என்ன? http://ikhwanameer.blogspot.in/2015/08/6_14.html
7. கடல் பிளந்தது. நெருப்பு குளிர்ந்தது : http://ikhwanameer.blogspot.in/2015/08/13_18.html

8. அந்த நாள் வரும்முன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/8.html

9. அழைப்பாளர்களின் இலக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/08/9_22.html

10 ஊடகங்களின் இரண்டு அளவுகோல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/10_24.html

11.அடிப்படை விஷயங்களும், அழைப்பாளர்களும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/11.html
Share:

Monday, September 7, 2015

அழைப்பது நம் கடமை-11, ''அடிப்படை விஷயங்களும், அழைப்பாளர்களும்!''


உலகின் பல பகுதிகளில் சிறுபான்மையினராக வசிக்கும் முஸ்லிம்கள் தத்தம் பகுதிகளில் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுடன் கலந்து பழகிவருகிறார்கள். அதேபோல, இந்தியா போன்ற இறையருள் சொரியப்பட்ட நாட்டில் வாழும் மக்களின் இந்த நெருக்கம் இன்னும் அதிகம். அதிலும் குறிப்பாக, தமிழகம் போன்ற பெரியார் மண்ணில் ... அமைதி பூங்காவில் வசிக்கும் மக்கள் சொந்த சகோதர நெருக்கத்தை விட மாமன் மச்சான் உறவுமுறைகளையும் தாண்டி நெருக்கமாக பழகிவருகிறார்கள்.

இந்த உறவில் எப்போதும் சகோதரத்துவத் தோழமை நேசம் இருக்கும் என்பதற்கு எத்தகைய உத்திரவாதமும் இல்லை. வகுப்புவாத விஷமிகளால் சக சகோதர உறவில் பேதங்கள் உருவாவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதன் உச்சக் கட்டமே வகுப்புக் கலவரங்கள் சமூக நல்லிணக்க சீர்குலைவுகள்.

இன்று நமது தாய் மண்ணில் நடந்துவருவதும் இதுதான்.

வகுப்புவாத சக்திகள் காலங்காலமாக இந்த மண்ணில் நிலவிவரும் சகோதர உறவைத் துண்டித்து ரத்த ஆற்றைப் பாய்ச்சும் முயற்சியில் பெரும் பகுதி வெற்றிபெற்று வருகின்றன.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக,

>>>>ஜனசங்க் என்ற வகுப்பு தீவிரவாத இயக்கத்தில் ஆரம்பித்து. >>>>ஆர்.எஸ்.எஸ் என்ற சிந்தனை அறிவு ஜீவிகளிடையே வேர்விட்டு..
>>>>அதிலிருந்து பி.ஜே.பி. என்ற அரசியல் இயக்கமாக கிளைவிட்டுப் படர்ந்துள்ளது.


மக்களவையில் சொற்ப எண்ணிக்கையில் கால்பதித்து இன்று பொய்மையையே கொள்கையாக்கி நிலைக்கொண்டுள்ளது.

இந்த நச்சு விருட்சத்தின் கிளைகளான எண்ணிலடங்காத வகுப்புவாதப் பிரிவு இயக்கங்கள் இந்திய மண் முழுவதும் பரவி கிளைவிட்டுள்ளன. பகுதிதோறும், சிவசேனை, இந்து முன்னணி, பஜ்ரங்தள், விஸ்வ இந்து பரிஷத் என்று பல்வேறு பெயர்களுடன் இவை தம் கொடுரக் கரங்களை விரித்திருக்கின்றன. மாணவர்கள் மகளிர் என்று கூட விட்டு வைக்காமல் அமைப்பு ரீதியாக திரட்டி நச்சு சித்தாந்த விதைகளை தூவி வருகின்றன.

ஒடுக்கப்பட்ட.. நசுக்கப்பட்ட.. மண்ணின் மைந்தர்களான ஆதிவாசிகள், தலித்துகளை அடித்தளமாகக் கொண்டு இந்த நாட்டின் சமநிலையைச் சீர்குலைக்கப் பெரிதும் முயன்று வருகின்றன. அதன் கொடுமையான நிகழ்கால உதாரணம்தான் குஜராத் மண்ணெங்கும் பிரவாகமெடுத்து ஓடிய இந்திய முஸ்லிம்களின் ரத்தப் பெருவெள்ளம். மனிநேயம் வெட்கித் தலைகுனியும் வண்ணம் அரங்கேறிய , முஸ்லிம் பெண்களுக்கெதிரான அகோர பாலியல் வன்கொடுமைகள் நெஞ்சைப் பதற வைப்பவை. எந்த மனித நேயம் மிக்கவரும், ஊடகங்களும் இந்த கொடுமையைக் கண்டிக்கவில்லை என்பது கவலையளிப்பது.


வெறும் இரண்டு விழுக்காடுக்கும் குறைவாக உள்ள மேல்சாதியினரின் தன்னலங்களுக்கான அரசியல் சூதாட்டங்களை இந்த வகுப்புவாதப் பேய்கள் ஆடி வருகின்றன. அதிகார மேலாண்மைக்காக எல்லாவிதமான சக்தி சாமார்த்தியங்களையும் கையில் எடுத்துள்ளன. இந்தத் தீய சக்திகள் சித்தாந்த ரீதியாக எந்த விதத்திலும் தம்மோடு தொடாபில்லாத சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் போன்ற சகோதரர்களையும் ஒன்று திரட்டியுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தம் தொடுத்திருக்கின்றன.

சிறுபான்மை இனம், எதுவாக இருந்தாலும், அதன் கொள்கை, கலாச்சாரத் தனித்தன்மைகளை ஒழித்தொழிக்கும் போக்கின் பாசிச பயங்கரவாதத்தின் நவீன வடிவமிது!

 இந்தக் கொன்றொழிப்பில் இன்று முஸ்லிம்கள், நாளை கிருத்துவர்கள் என்று இருந்தாலும் அதற்கு அடுத்ததாக சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், ஆதிவாசிகள் தலித்துகள் என்று இந்தப் பட்டியல் தொடரும்.

இந்த நிலையில் அழைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் சில முக்கியமான அம்சங்களை நெஞ்சில் பதித்துக் கொள்ள வேண்டும். அழைப்பியல், முஸ்லிம் சமூகத்தின் ஒட்டு மொத்தப் பணியாக இருப்பதால் ஒவ்வொரு முஸ்லிமும் கீழ்க் கண்ட இந்த அம்சங்களை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

<<<< இந்த மண்ணின் ஒவ்வொரு துகளும், தங்கள் மூதாதையரான ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்கள்.. மண்ணின் மைந்தர்கள்... உதிரம் சிந்தி கட்டிக் காத்தது. அதனால், இந்த மண் தங்களுக்குச் சொந்தமானது.

<<<< மேல்சாதியினரின் தீண்டாமை.. அடக்குமுறைகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களே முஸ்லிம்கள்.

<<<< தாய் மண்ணான தங்களது இந்தியாவில் மிகத் தேர்ந்த மேல்சாதி வகுப்புவாத அமைப்புகள் திட்டமிட்டு தொலைநோக்குடன் முஸ்லிம்களையும் அவர்கள் சார்ந்த கொள்கையான இஸ்லாத்தையும் முற்றிலும் ஒழித்திட முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

<<<< இந்த வகுப்புவாத மனித இன விரோதிகள் மக்கள் மனங்களில் துவேஷ நச்சுக் கலப்பதில் வெற்றியும் பெற்றுவருகிறார்கள்.

<<<< முஸ்லிம்கள் தங்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் சூழ்ச்சிகள் கடும் விளைவுகளின் தீவிரத்தனத்தை அறியவில்லை.

<<<< இஸ்லாத்தை நடைமுறை வாழ்வில் செயல்படுத்துவதற்கு முஸ்லிம்கள் முயல்வதில்லை.

<<<< உயிரினும் மேலாக, தாங்கள் பின்பற்றிவரும் கொள்கையை அடுத்தவர்வரை எத்தி வைப்பதில் முஸ்லிம்கள் அக்கறை காட்டுவதில்லை.

அழைப்புப் பணியின் முக்கிய அடிப்படை இது:

வாழும் சமூகத்தின் மேல் கொள்ளும் அளவில்லாத பாசம்!

சக மனிதர்களின் மீது காட்டும் அபரீதமான நேசம்!

- இறைவன் நாடினால்... அழைப்பது தொடரும்

'''''''''''''''''''''''''''''''''''''''''
அழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:

1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html

3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html

4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html

5. சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html

6. சான்று வழங்குதல் என்றால் என்ன? http://ikhwanameer.blogspot.in/2015/08/6_14.html

7. கடல் பிளந்தது. நெருப்பு குளிர்ந்தது : http://ikhwanameer.blogspot.in/2015/08/13_18.html

8. அந்த நாள் வரும்முன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/8.html

9. அழைப்பாளர்களின் இலக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/08/9_22.html

10 ஊடகங்களின் இரண்டு அளவுகோல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/10_24.html
Share:

Monday, August 24, 2015

அழைப்பது நம் கடமை : 10, ''ஊடகங்களின் இரண்டு அளவுகோல்கள்!''


நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. ஒரு காலத்தில் உலகின் இரும்புத் திரையாய் வழங்கப்பட்ட சோவியத் யூனியன் சிதறிப் போனது. அந்த வெறுமையைப் பயன்படுத்திக் கொண்டு தற்போது அமெரிக்கா புஜபலத்தால் உலக நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது. அமெரிக்கா அராஜகத்துக்கு உலக நாடுகளிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. துப்பாக்கி முனைகள் தீர்வாகாது என்று உலக நாடுகள் உணரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், மேற்கத்திய சிந்தனையாளர்கள் எண்டிஸம் என்ற வார்த்தைப் பிரயோகம் ஒன்றைத் தற்போது கண்டு பிடித்துள்ளனர். உலகின் அனைத்துச் சித்தாந்தங்களும், இஸங்களும் மனிதரிடையே நம்பகத் தன்மையை இழந்துவிட்டன என்பதே  இதன் பொருள். இந்த சிந்தனைப் போக்கு மிகவும் ஆபத்தானது. மறைமுகமாக இஸ்லாத்தைச் சேதப்படுத்துவது. இஸ்லாம் என்னும் கதிரொளியை மறைப்பதற்கான முயற்சி. ஆனால், அச்சப்படத் தேவையில்லை. திருக்குர்ஆன சொல்கிறது: "திண்ணமாக சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது" (94:6) ஒவ்வொரு சிரமத்திற்கு பிறகும், அது கடந்த ஒரு லேசான நிலைமையும் ஏற்படும். ஒவ்வொரு மாற்றத்திலும், நிகழ்விலும் மேலெழுவதற்கான வாய்ப்புகள் இறையருளால் பிரகாசமாக பெருகியவாறு இருக்கும். இந்த கிடு.. கிடு மாற்றங்கள் இஸ்லாத்திற்கு பெரும் சாதகங்களை ஏற்படுத்துபவை.

இன்றைய நாட்களில் உலக மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள மார்க்கம் இஸ்லாம். அதேபோல, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் முஸ்லிம்கள். இதற்கு முக்கியக் காரணம் திட்டமிட்டு இந்த பொய்மையை பரப்ப தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வரும் தகவல் தொடர்பு சாதனங்கள்.. பத்திரிகைகள் போன்ற எழுத்து ஊடகமாக இருந்தாலும் சரி அல்லது டிவி. போன்ற மின்னணு ஊடகங்களாக (விஷீவல் மீடியாக்களாக) இருந்தாலும் சரியே!  இஸ்லாத்துக்கு எதிராக இவை முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. 

  • தீவிரவாதிகள்
  • மதவாதிகள்
  • கடத்தல்காரர்கள்
  • விமானக்கடத்தல்கள்
  • கொடுரமானவர்கள்
  • சர்வாதிகாரிகள்
  • காட்டுமிராண்டிகள்
இந்த சொற்பிரயோகங்கள் முஸ்லிம்களுக்கான செய்திகளில் சர்வசாதாரண மாகப் பயன்படுத்தப்படுகின்றன. 

  •     இஸ்லாமிய தீவிரவாதம்
  •     இஸ்லாமிய பழமைவாதம்
  •     இஸ்லாமிய கற்காலத் தண்டனைகள்
  •     முஸ்லிம் கலகக்காரர்கள்
போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்த எழுத்து மற்றும் மின்னணு ஊடகங்கள் தயங்குவதில்லை!


இஸ்லாத்தின் மீது களங்கம் சுமத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையிலான சக்திகள் பல நூற்றாண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்த துர்பிரசாரத்துக்காக அவர்கள் எது ஒன்றையும்  பயன்படுத்தத் தயங்குவதில்லை. தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நழுவவிடுவதில்லை. தற்போதைய யுகத்தில் இந்தத் தீய சக்திகள் நவீன தகவல் தொடர்பு ஊடகங்களை அதிதீவிரமாக இத்தகைய பணிகளுக்கு முடுக்கிவிட்டுள்ளன. அதேநேரத்தில், முஸ்லிம்களின் தரப்பிலோ இஸ்லாத்துக்கு எதிரான இந்த இமாலயப் பிரச்சாரத்துக்கு எதிர்வினையோ குன்றளவும் இல்லை.

சத்தியத்தைத் தடுக்கும் எதிரிகளின் பிரச்சாரத்தை முறியடிக்க அவர்கள் பதிலியான தகவல் தொடர்புக் களத்தில் இறங்கவேயில்லை. பல நூற்றாண்டுகளாக எதிரிகளால் திட்டமிட்டு செய்துவரப்படும் இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரப் பணிகளை ஒரே நாளில் முறியடித்துவிடவும் முடியாது!

சொந்த தாய் நாட்டை அநீதியாக கைப்பற்றிக் கொண்ட அமெரிக்கர்களை எதிர்க்கும் இராக்கியர்கள் பயங்கரவாதிகள் என்று செய்திகளில் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால், அப்பாவி இராக்கியர்களையும், ஆப்கானியர்களையும் கொன்று குவிக்கும் அமெரிக்கப் படையினரை ஆக்கிரமிப்பாளர்கள் - பயங்கரவாதிகள் என்று அவர்கள் சார்ந்துள்ள சமய அடையாளங்களை வைத்து இதே ஊடகங்கள் அழைப்பதில்லை. அதேபோல, சொந்தத் தாய் மண்ணை இழந்து நிற்கும் பலஸ்தீன சுதந்திரப் போராளிகளை தீவிரவாதிகள் என்கின்றன ஊடகங்கள்.

ஆனால், ஐநாவின் எந்தக் கட்டளைக்கும் .. எந்தத் தீர்மானத்துக்கும் அடிபணியாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களை யூதத் தீவிரவாதிகளாக இதே ஊடகங்கள் பெயர் சூட்டி அழைப்பதில்லை.

இத்தகைய இருவிதமான அளவுகோல்கள் இஸ்லாத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இந்த அளவுகோள்களின்படியே இந்திய ஊடகங்களும், மேற்கத்திய ஊடகங்களும் கொஞ்சமும் குறையாமல் செய்திகளைத் தருகின்றன. இஸ்லாத்துக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் செய்திகளை வெளியிடுகின்றன. 

  • பாபரி மசூதி இடித்தவர்கள்
  • அந்தப் பள்ளிவாசல் இடிபடுவதற்கு தூண்டுகோலாய் இருந்தவர்கள்
  • அதைத் தொடர்ந்து நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலை களுக்குக் காரண கர்த்தாக்கள்.
  • குஜராத்தில் முஸ்லிம்களை உயிரோடு எரித்தவர்கள்.
  • கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து கருக்களை கொன்றவர்கள்.
  • முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷங்களிலேயே முதல்வராக தொடர்ந்து வருபவர்கள்.
முன்னாள் பிரதமர் இந்நாள் முதல்வர்கள் என்று சங்பரிவார் தீவிரவாதிகள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று இந்த ஊடகங்கள் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். உண்மையும் அதுதான்!

அப்படிச் செய்திருந்தால்... பாசிஸ்டுகளான இந்து பயங்கரவாதிகள் ஆட்சி பீடம் ஏறுவதைத் தடுத்திருக்கலாம். இந்திய நாட்டின் வரலாற்றில் களங்கம் பதியாமல் காத்திருக்கலாம். ஒருமைப்பாட்டுக்கும், சமய நல்லிணக்கத்துக்கும் அடித்தளமிட்டிருக்கலாம். நரேந்திர மோடி போன்ற நர மாமிச தின்னிகளை தூக்கு மேடைக்கு எப்போதோ அனுப்பியிருக்கலாம்.

இந்த ஒரு சார்புடைய போக்கால்.. பாதிக்கப்படுவது.. முஸ்லிம்கள் மட்டுமல்ல.. ஒடுக்கப்பட்ட அனைவரும்தான்! இதற்கு விலை கொடுக்கப்போவது முஸ்லிம்கள் மட்டுமல்ல. நாளைய இந்தியத் தலைமுறையும்தான்!


இந்த யதார்த்தங்களை முஸ்லிம்கள் புரிந்துகொள்வதோடு தங்கள் பொறுப்புகளையும் உணர வேண்டும்.

அநீதிக்கு எதிரான மாற்றாக சத்தியத்தை இன்னும் பல மடங்கு உத்வேகத்தோடு எடுத்து வைக்க வேண்டும். அசத்தியம் என்னும் காரிருளை விரட்ட வேண்டும். சத்தியம் என்னும் பேரொளியை ஏற்ற வேண்டும்.

இதில்தான் இம்மை - மறுமைக்கான வெற்றி அடங்கியிருக்கிறது. இஸ்லாம் சம்பந்தமாக தப்பும் தவறுமாக பரப்பப்படும் பிரச்சாரத்துக்கு எதிராக உண்மையை எடுத்துரைக்க வேண்டிய பெரும்பணி இது. விழுவதும், எழுவதுமாய் முஸ்லிம்கள் தங்கள் அழைப்புப் பணி என்னும் கடமையை தொடர வேண்டிய தருணம் இது.


இந்த ஊடகப் பிரச்சாரங்கள் முஸ்லிம் இளைய சமுதாயத்தைக் கடுமையாக பாதிக்கும். அவர்களிடையே தாழ்மை உணர்ச்சியை உருவாக்கிவிடும். கற்பனையான குற்ற உணர்வு அவர்களைப் பிடித்தாட்டும். அருள் மார்க்கத்தில் பிறந்தவர்கள் அந்த மார்க்கத்தில் பிறந்ததற்கு தங்களை நொந்து கொள்ள வேண்டிய துரதிஷ்டநிலை அது!

சத்தியவானில் இருளாய் கப்பியிருக்கின்றன அசத்திய கருமேகங்கள்! புயலென சீறி இவற்றை விரட்டியடிக்க வேண்டும். இந்தத் துடிப்பு முஸ்லிம் சமுதாயத்துக்கு முதலில் தேவை. 

  • இழந்துபோன ஆளுமைப் பண்பிலான அசல் முகங்களை முஸ்லிம்கள் திரும்பப் பெற வேண்டும்.
  • மனிதகுல நன்மைக்காக ஒன்று திரண்டு பாடுபட வேண்டும்.
  • இதற்காக ஒடுக்கப்பட்ட.. பிற்படுத்தப்பட்ட மண்ணின் மைந்தர்களை ஓரணியில் திரட்டி அழைப்புப் பணியை முடுக்கிவிட வேண்டும்.
உண்மையில் இன்று மனிதகுலத்துக்கு மிக மிக அத்யாவசியமான தேவை ஒரு சீரிய வழிகாட்டுதல். அது இஸ்லாத்தால் மட்டுமே முடியும்.

- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html

3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html

4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html

5. சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html

6. சான்று வழங்குதல் என்றால் என்ன? http://ikhwanameer.blogspot.in/2015/08/6_14.html

7. கடல் பிளந்தது. நெருப்பு குளிர்ந்தது : http://ikhwanameer.blogspot.in/2015/08/13_18.html

8. அந்த நாள் வரும்முன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/8.html

9. அழைப்பாளர்களின் இலக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/08/9_22.html

Share:

Saturday, August 22, 2015

அழைப்பது நம் கடமை - 9 - அழைப்பாளர்களின் இலக்கு!


யூதர்களும், கிருத்துவர்களும் இறைவனின் திருச்  செய்தியை பின்பற்ற மறுத்தார்கள். அதை அடுத்தவர்க்கு எடுத்துரைக்கவும் மறந்தார்கள். இறைவனின் கோபத்துக்கு ஆளானார்கள். இவை படிப்பினை மிக்க முஸ்லிம் சமுதாயத்துக்கான வரலாறுகளாகும். இறைவனின் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இறைவனின் எச்சரிக்கையிலேயே அறிவுரையும் இருக்கிறது.

"நாம் இறக்கியருளிய தெளிவான அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் அவற்றை மக்கள் அனைவருக்காகவும் நம் வேதத்தில் எடுத்துரைத்த பின்னரும், எவர் அவற்றை மறைக்கின்றாரோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கின்றான். மேலும், சபிப்போர் அனைவரும் அவர்களைச் சபிக்கிறார்கள். ஆனால், யார் (இந்தத் தவறிலிருந்து) திருந்தி தம் செயல்முறையை ஒழுங்குப்படுத்திக் கொண்டு (தாம் மறைத்திருந்தவற்றை) எடுத்துரைக்கின்றார்களோ, அவர்களை நான் மன்னிப்பேன். நான் பெரிதும் மன்னிப்பவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றேன்!" - ( திருக்குர்ஆன் - 2:159,160)

மன்னிப்பதற்கு இறைவன் வைத்துள்ள நிபந்தனைகள் இவை:

  • இறைவனின் திருச்செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துரைக்காத கடமையை செய்யத் தவறியதற்காக பாவமன்னிப்புக் கோர வேண்டும். 
  • தங்களைச் சீர்த்திருத்திக் கொண்டு இறைவனின் திருப்பணியை தொடர வேண்டும்.

வெறும் கையளவு முஸ்லிம்கள் மக்காவில் இருந்த அந்தக் காலம்! அதுவும் விரல்விட்டு எண்ணிவிடக் கூடியவர்கள் அவர்கள். இவர்களைத் தவிர பெரும்பான்மையினராக இருந்தவர்கள் இறைமறுப்பு குறைஷியர்தான்!

இறைநம்பிக்கைக் கொண்ட சிறுபான்மை முஸ்லிம்கள் குறைஷிகளால் கடுமையாக துன்புறுத்தப்பட்டார்கள். எதிரிகள் இஸ்லாமிய இயக்கத்தினரை வேறோடு வேரடி மண்ணோடு கெல்லி எறிந்திட துடியாய் துடித்தார்கள். அதற்காக தங்களின் அனைத்து சக்தி சாமார்த்தியங்களையும் பயன்படுத்தினார்கள். ஆள் பலம், ஆயுத பலம் என்று அனைத்தையும் பிரயோகித்தார்கள்.

ஆனால், 14 நூற்றாண்டுகளுக்குப் பிறகு இஸ்லாமிய எதிரிகளின் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதை இன்று நாம் கண்ணாரப் பார்க்கின்றோம்.

அரபுலகையும் தாண்டி உலகின் மூலைமுடுக்கெல்லாம் இஸ்லாம் வாழும் நெறியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள இந்தியாவின் தழிழகம்வரை அந்த இஸ்லாமிய இயக்கம் பரவி ஆல்போல் தழைத்து வளர்ந்துள்ளது.

ஆபத்துகளிலும், பிரச்சினைகளிலுமே இஸ்லாம் என்ற விருட்சம் வேர் பிடித்து வானுயர வளர்ந்திருக்கிறது! 


வரலாற்றுக் கால பிர்அவ்ன் (பாரோ மன்னன்) மூஸா நபியையும் அவர்களைப் பின்பற்றிய முஸ்லிம்களையும் அழித்திட பயங்கரவாத்தை கட்டவிழ்த்துவிட்டான். இஸ்லாத்தை அழிக்க முடியாமல் கடைசியில் நீரில் மூழ்கி இறந்துபோனான்.

இறைத்தூதர்களின் தந்தையார் என்று அழைக்கப்படும் இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் காலத்து நம்ரூத் (நிம்ரூத்) மன்னனும் இத்தகைய சாயல் கொண்டவன்தான்! இந்தக் கொடுங்கோலனும் ஆள்பலம், மிருகத்தனமான ஆட்சிபலம் இவற்றைக் கொண்டு முஸ்லிம்களை நசுக்கிட முயன்றான். இஸ்லாத்தை அழிக்க முடியாமல் அழிந்து போனான்.

இதைத் தொடர்ந்து மங்கோலிய-தார்த்தாரியர்கள் மனிதத்தன்மையை ஆழக் குழித்தோண்டிப் புதைத்து முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இவை வரலாற்றின் கருப்பேடுகள்!


ஆனால், இஸ்லாம் அந்த உக்கிரங்களையெல்லாம் தாண்டி வளர்ந்தது. இத்தனை இன்னல்களையம், இடுக்கண்களையும்  உள்வாங்கி முஸ்லிம்கள் நிலைகுலையாமல் நின்றார்கள். இந்தப் பொறுமை முஸ்லிம்களை அழிக்கவந்த கொடியவர்களைச் சிந்திக்க வைத்து பின்னாளில் அவர்களையும் இஸ்லாத்தின்பால் ஈர்த்தது. மிகச் சிறந்த மனித இன குணவான்களாகவும், மனித நேயம் மிக்கவர்களாகவும் மாற்றியது.

இப்படி எரிமலையின் தீக்குழம்பில் இஸ்லாம் பூத்து மலர்ந்துள்ளது. உலகெங்கும் மனித இனம் இருக்கும்வரை மணம் பரப்ப வல்லது!

இத்தகைய தொடரான கொள்கைப் போராட்டங்களிடையே இன்று முஸ்லிம் நாடுகளின் எண்ணிக்கை இஸ்லாமிய நாடுகளின் அமைப்புப் பட்டியலில் 57 ஆக உயர்ந்துள்ளது. உலக மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 1.4 பில்லியனுக்கும் அதிகம். உலகளவில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம்! இஸ்லாம் இன்று வெகு வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம்.

உதாரணத்துக்காக ...

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் வெகுவேகமாக இஸ்லாம் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு 2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட  மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2001-2011 இடைப்பட்ட ஆண்டுகளில் 1.5 மில்லியனிலிருந்து 3 மில்லியனாக முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.  இங்கிலாந்தின் பல நகரங்களில் முஸ்லிம்களின் மக்கள்  தொகை 50 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. 'இலண்டன்', 'மான்செஸ்டர்' போன்ற பெருநகரங்களில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 14 விழுக்காடு! இவர்களில் யாரும் அந்நிய நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் அல்ல. இங்கிலாந்தை தாயகமாகக் கொண்ட வெள்ளையர்கள்!


1994,1995-ஆம், ஆண்டுகளில் ஐ.நா-வால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி, ஆண்டுதோறும் 6.40 விழுக்காடு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

1998-ஆம், ஆண்டுவரை உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 167 கோடியே 84 லட்சத்து 42 ஆயிரம்!

உலகின் இரண்டாவது மிகப் பெரிய சமயம் இஸ்லாம்.

அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிற நாடுகளுக்குச் சென்று குடியேறியதால் பரவிய இனமா முஸ்லிம்கள்? அப்படியானால்... உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அரபிகளா? இல்லை!

உண்மையில், வரலாற்றின்படி உலக முஸ்லிம்கள் எல்லாம் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள். அவர்கள் எல்லாம் இஸ்லாத்தின் உயரிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள். இஸ்லாத்தின் தூதை சிரமேற்கொண்டு நடைமுறைப்படுத்தியவர்கள். தங்களின் உயரிய பண்புகளாலும், கொள்கையாலும் மற்றவர்களையும் ஈர்த்தவர்கள். செயல்முறையில் அழைப்பு விடுத்தவர்கள். அதேபோல, சொல்லாலும், இஸ்லாத்தின் பலவேறு கூறுகளை விளக்கி இறைவனின் திருத்தூதை சமர்பித்தவர்கள். இந்த மூதாதையர்களின் தொடர் பணிகளால்.. மாபெரும் அர்ப்பணிப்புகளால்.. அனைத்தையும் இழந்த வாழ்வியல் போராட்டங்களால்.. நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்தான் இஸ்லாம்! இம்மை - மறுமை ஈருலகின் வெற்றிக்கான அருள்நெறி!


அழைப்புப் பணியின் நோக்கமே இறைவனின் திருப்பொருத்ததிற்கு ஆளாவதுதான். அத்தோடு நல்ல முஸ்லிம் என்று நடைமுறைப்படுத்துவதும்கூட!

நபிகளார் நவில்கிறார்கள்:

:"செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்!" (புகாரி, முஸ்லிம்)

இறைவனின் திருப்பொருத்தத்தை சம்பாதிப்பதே அழைப்பாளர்களின் தலையாயப் பணியாகும். அழைப்புப்பணிக்குப் பின் பொதிந்துள்ள நோக்கமும் இதுதான்.

அழைப்பாளன் இந்த இலக்கை அடைவதில் கண்ணும்-கருத்துமாக இருக்க வேண்டும். இதன் மூலமே, அவன் சமூகத்திலும்... சூழல்களிலும் வெல்ல முடியும்!

-- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html

3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html

4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html

5. சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html

6. சான்று வழங்குதல் என்றால் என்ன? http://ikhwanameer.blogspot.in/2015/08/6_14.html

7. கடல் பிளந்தது. நெருப்பு குளிர்ந்தது : http://ikhwanameer.blogspot.in/2015/08/13_18.html

8. அந்த நாள் வரும்முன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/8.html
Share:

Wednesday, August 19, 2015

அழைப்பது நம் கடமை - 8: அந்த நாள் வரும்முன்..!



அந்த நாள்!

சூரியன் சுருட்டப்பட்டு...

தாரகைகள் உதிர்ந்து..

மலைகள் நடத்திச் செல்லப்படும் அந்த நாள்!!

நிறைமாத கர்ப்ப ஒட்டகங்கள் அப்படியே விடப்பட்டு...

வனவிலங்குகள் ஒன்று திரட்டப்படும் அந்த நாள்!

உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியிடம், அவள் எந்தக் குற்றத்துக்காக கொல்லப்பட்டாள்? - என்று கேட்கப்படும் அந்த நாள்!

வினைச்சுவடிகள் விரிக்கப்பட்டு...

வானத்திரை அகற்றப்பட்டு..

நரகம் எரிக்கப்பட்டு..

சுவனம் அருகே கொண்டுவரப்படும் அந்த நாள்!!

ஒவ்வொரு மனிதனும் எதனைக் கொண்டுவந்துள்ளான் என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளும் அந்த நாள்!

மனிதர்களிடம் இறைவன் நேரிடையாகப் பேசும்... கணக்கு வாங்கும் நாள்!

அங்கு பரிந்துரை செய்பவர் எவரும் இருக்க மாட்டார். அவனை மறைத்துக் கொள்ளும் திரை எதுவும் இருக்காது. அங்கே மனிதன் தன் வலப்பக்கம் பார்ப்பான்; பரிந்துரை செய்பவர்... உதவுபவர் யாராவது இருக்க மாட்டாரா என்று!

"ஊஹீம்..!" அவனுடைய செயல்களைத் தவிர வேறெதுவும் அவனுக்குத் தென்படாது.

பின்னர், இடப்பக்கம் பார்ப்பான்; அங்கும் அவனது செயல்களைத் தவிர வேறெதுவும் தெனபடாது!

பின்னர், முன்பக்கம் பார்வையினை செலுத்துவான். அஙகே அதற்கே உரிய பயங்கரங்கள் அனைத்தும் தெரியும்! நரகம் மட்டுமே தென்படும்!

நல்லவர்கள் இன்பத்திலும், தீயவர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நரகத்திலும் கொண்டு செல்லப்பட்டு கூலி கொடுக்கப்படும் நாள்!

அந்த நாளில், எந்த மனிதனுக்காகவும் எதையும் செய்திட எவருக்கும் சக்தி இருக்காது. தீர்ப்பு வழங்குவது முற்றிலும் இறைவனின் அதிகாரத்தில் இருக்கும்.


அன்பு நபிகளார் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்: "நான் நிம்மதியான.. கவலையற்ற .. வாழ்க்கையை எப்படி வாழ முடியும்? ஸீர் என்னும் எக்காளத்தை ஊதும் பொறுப்புடைய வானவர் - இஸ்ராஃபீல் - எக்காளத்தை வாயில் வைத்துக் கொண்டு செவி சாய்த்து.. தலை தாழ்த்திய விதமாக எப்போது ஊதும்படி கட்டளைவரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது!" (திர்மிதி)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்: "இறைவனின் தூதர் நபிகளார் சில தொழுகைகளில், இறைவா! என்னிடம் இலேசான கணக்கு வாங்குவாயாக! - என்று இறைஞ்சுவதை நான் கேட்டிருக்கின்றேன். இலேசான கணக்கு என்பதன் பொருள் என்ன? - என்று நான் வினவினேன். அதற்கு அண்ணலார் பின்பவருமாறு பதிலளித்தார்கள்: இறைவன் மனிதனின் வினைச் சுவடியைப் பார்த்து அதில் பதிக்கப்பட்டிருக்கும் தீய செயல்களைப் புறக்கணித்து விடுவதே இலேசான கணக்காகும்! ஆயிஷாவே! கணக்கு வாங்கப்படும்போது, எவனுடைய ஒவ்வொரு செயலும் துருவித் துருவி ஆராயப்படுகின்றதோ அவன் அழிந்துவிட்டான் என்றுதான் பொருள்!" (முஸ்னத் அஹ்மது)

அந்த மறுமை நாளில் ஒவ்வொரு இறைத்தூதரும் இறைவனால் கேள்வி கேட்கப்படுவார்கள்; அவரவர் பொறுப்புகளை நிறைவேற்றியது சம்பந்தமாக. இறைவனின் திருச்செய்தியை மக்களுக்கு சமர்பித்துவிட்டது சம்பந்தமாக மக்களிடமும் கேள்வி கேட்கப்படும். இதை திருக்குர்ஆன் இப்படி சொல்கிறது:

"எந்த மக்களிடம் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ. அந்த மக்களிடம் திண்ணமாக நாம் விசாரணை நடத்துவோம். மேலும், தூதர்களிடமும், தூதுத்துவ கடமையை நிறைவேற்றியது சம்பந்தமாகவும், அதற்கு மக்கள் என்ன பதிலளித்தார்கள் என்பது குறித்தும் நிச்சயம் விசாரிப்போம்!" (7:6)


முஹம்மது நபிகளார் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் ஆவார்கள். இஸ்லாமிய வாழ்வியலை மனித குலத்துக்காக இறைவனிடமிருந்து தாங்கி வந்தவர்கள். தங்களின் முழு வாழ்வையும் இஸ்லாத்தை மக்களுக்கு எத்தி வைப்பதிலேயே செலவு செய்தார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இறைவன் கேட்கின்றான்:

"(நபியே!) ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் கொண்டு வரும்போது, இவர்களுக்கு (விரோதமான) சாட்சியாக உம்மை நாம் கொண்டு வந்தால்.. நிராகரித்த இவர்களுடைய நிலைமை எப்படியிருக்கும்? (திருக்குர்ஆன் - 4:41)"

நபிகளாரைவிட இறைவனின் திருச்செய்தியை பொறுப்புடன் மக்களிடம் சமர்பித்தவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. அத்தகையவர்கள் இறைவனின் சந்நிதியில் நிறுத்தப்படுவார்கள். கேள்வி கேட்கப்படுவார்கள் என்பது எவ்வளவு முக்கியமானது!

நபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (இறையருள் பொழிவதாக!) நபிகளாரின் நெருங்கியத் தோழர் ஆவார்கள். இனிமையான குரலில் திருக்குர்ஆனை ஓதுபவர்கள்.

ஒருமுறை நபிகளார் கேட்டார்கள்: "மஸ்ஊதே! திருக்குர்ஆனை ஓதுங்கள்! நான் கேட்க வேண்டும்!"

"இறைவனின் தூதரே! திருக்குர்ஆன அருளப்பட்டதே தங்கள் மீதுதானே! நான் ஓத தாங்கள் கேட்பதா?" - என்றார்கள் நபித்தோழர்.

அதற்கு நபிகளார், "ஆமாம்! நீங்கள் ஓதுங்கள் நான் கேட்க வேண்டும்!" - என்கிறர்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் திருக்குர்ஆனின் 4:41 திருவசனங்களை ஓத ஆரம்பித்தார்கள்.

நபிகளாரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது. உடல் நடுக்கமெடுக்கிறது. "போதும்..! போதும்...!! ஓதியது போதும்.. மஸ்ஊதே!" பதறுகிறார்கள்.

நபித்தோழர் நபிகளாரை ஏறெடுத்துப் பார்க்கிறார்கள்.

நபிகளார் மறுமையின் அச்சத்தால் தங்களின் தாடி நனையுமளவுக்கு அழுது கொண்டிருந்தார்கள்.

நபிகளார் தங்களின் 63வயதில் இறையடி சேர்க்கிறார்கள். அன்பு நபிகளாரின் மறைவுக்குப் பிறகு நபித்துவம் என்ற முத்தாரத்தின் தொடர் முற்றுப் பெறுகிறது. இனி வேறு நபி வர முடியாது. இதில் எந்த முஸ்லிமுக்கும் கருத்து வேறுபாடு இருக்காது. ஆனால், இந்த முடிவில் மற்றொரு கேள்வி எழுவதை யாராலும் தடுக்க முடியாது.

நபிகளாருக்குப் பிறகு வேறொரு நபி வரமுடியாத நிலையில் இனி நபிகளாரின் திருப்பணியை யார் செய்வது? இனி இஸ்லாத்தின் திருச்செய்தியை மனித இனத்துக்கு எத்தி வைப்பது யார்?

இதற்கான எளிய பதில் இதுதான்: "அன்பு நபியை பின்பற்றுபவர்கள்தான் நபிகளார் செய்த அந்தத் திருப்பணியை செய்ய வேண்டும்!".

உண்மைதான்!

எந்த இறைச்செய்தியை நபிகளார் அல்லும்-பகலும் சுமந்தவாறு மக்களிடம் சமர்பித்து வந்தார்களோ... அந்தப் திருப்பணியை செவ்வனே நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இனி முஸ்லிம்களையே சார்கிறது. மனித இனத்துக்கு இறைநெறியாம் இஸ்லாத்தை எத்தி வைக்க வேண்டிய பொறுப்பு இனி முஸ்லிம்களின் பலவீனமான தோள்களில் சுமத்தப்படுகிறது.

இறைவன் தனது திருநபியை நோக்கி மக்களிடம் இப்படி கூறும்படி சொல்கிறான்:

"இந்தக் குர்ஆன் எனக்கு வஹீ மூலம் அருளப்பட்டது. எதற்காகவெனில், உங்களையும் இன்னும் யார் யாரையெல்லாம் இது எட்டுகிறதோ அவர்களையும் நான் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக!" (6:19)

நபிகளார் இந்த உலகைவிட்டு சென்றுவிட்டார்கள். ஆனால், அவர்கள் உலக முடிவு நாள்வரை செயல்படும் வாழ்கை நெறியாம் இஸ்லாத்தின் செய்தியை விட்டுச் சென்றுள்ளார்கள். முஸ்லிம் சமுதாயம் இந்த உலகில் இருக்கும்வரை இறைத்தூதரின் திருத்தூதை சுமந்து செல்ல வேண்டிய பொறுப்பு கொண்டது. இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைக்க வேண்டியவர்கள், இறைவனின் திருச்செய்தியை மனித இனத்துக்கு சேர்க்க வேண்டியவர்கள் முஸ்லிம்கள்.


நபிகளார் மேற்கொண்ட புனித யாத்திரை  ஹஜ்ஜதுல் விதா!

அரஃபா திடல்.

லட்சக்கணக்கான நபித்தோழர்கள், தோழியர்கள் அங்கு குழுமியிருக்கிறார்கள்.

அன்பு நபிகளார் உணர்சிகரமான ஒரு சொற்பொழிவாற்றுகிறார்கள். கேட்பவர் இதயங்களை பிழிந்தெடுக்கும் நல்லுரை அது. இந்த உலகைவிட்டு நபிகளார் பிரிவதற்கு முன் நடத்தப்பட்ட உரை அது. அதை சூசகமாகவும் நபிகளார் தெரிவிக்கிறார்கள்.

அத்தகைய ஒரு கூட்டத்திரல் தங்களின் உரையின் ஒரு பகுதியாக மக்களை நோக்கி கேட்கிறார்கள்: "மக்களே! நான் இஸ்லாத்தின் திருச் செய்தியை உங்களுக்கு எத்தி வைத்துவிட்டேனா?

"ஆம்! இறைவனின் தூதரே! தாங்கள் எடுத்துரைத்துவிட்டீர்கள்!" - மக்களும் சான்று பகர்கிறார்கள்.

இறைத்தூதர் முஹம்மது நபிகளார் (ஸல்) தங்களின் சுட்டுவிரலை வானத்தை நோக்கி சுட்டியவர்களாக மூன்று முறை, "இறைவா! இதற்கு நீயே சாட்சி..! இறைவா! இதற்கு நீயே சாட்சி..!! இறைவா! இதற்கு நீயே சாட்சி...!!!" - என்கிறார்கள்.

அதன்பிறகு நபிகளார் தமது இன்னுயிர் தோழர்-தோழியரை நோக்கி கூறுகிறார்கள்: "இங்கு வந்தோர், இங்கு வராதோர்க்கு எனது செய்தியை எத்தி வைத்துவிடுங்கள்!"

யார் யாருக்கெல்லாம் இந்த இஸ்லாத்தின் செய்தி எட்டியதோ அவர்கள் எல்லாம் அந்த செய்தியை அடுத்தவர்க்கு எத்தி வைக்க வேண்டிய பொறுப்பு கொண்டவர்கள் என்பதே இதன் பொருள். இஸ்லாத்தைக் குறித்து மக்களுக்கு சான்று பகர வேண்டிய பொறுப்பு முஸ்லிம் சுமூகத்தின் மீது உள்ளது. இதை அவர்கள் மறந்துவி

ஏனெனில்,

கோடிக்கணக்கான மக்களுக்கு சொந்தமான இறைவனின் திருச் செய்தி இஸ்லாம். இந்த வாழ்வியல் நெறியை மறைத்து வைத்ததற்கான குற்றம் செய்தவர்கள் ஆவார்கள்.

இன்றைய உலகம் வாழ வழித் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. அமைதியைத் தொலைத்துவிட்டிருக்கிறது. அத்தகைய நிலையில் மனித இனத்துக்கு நேர்வழிக் காட்ட மறுப்பவர்கள் பட்டியலில் முஸ்லிம்கள் இடம் பெற்றுவிடுவார்கள்.

இதைத்தான் இறைவன் இப்படி கேட்கின்றான்:

"இறைவனிடமிருந்து வந்த ஒரு சான்றைத் தன்னிடம் வைத்துக் கொண்டு அதை மறைப்பவனைவிட கொடிய அக்கிரமக்காரன் யார்?" (2:140)

"நாம் இறக்கியருளிய தெளிவான அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் அவற்றை மக்கள் அனைவருக்காகவும் நம் வேதத்திலர் எடுத்துரைத்த பின்னரும் எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக இறைவன் சபிக்கின்றான். மேலும், சபிப்போர் அனைவரும் அவர்களைச் சபிக்கின்றனர்" (2:159)

-- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''
அழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html

3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html

4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html

5. சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html
 
6. சான்று வழங்குதல் என்றால் என்ன? http://ikhwanameer.blogspot.in/2015/08/6_14.html

7. கடல் பிளந்தது. நெருப்பு குளிர்ந்தது : http://ikhwanameer.blogspot.in/2015/08/13_18.html
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive