NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Tuesday, February 20, 2018

மராட்டிய மன்னர் சிவாஜி முஸ்லிம்களுக்கு எதிரானவரா?



''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''


பிரபல நூலாசிரியரும், சிந்தனை யாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ராம் புன்யாணி பிபிசி-தமிழ் இணையத்தில் எழுதிய கட்டுரை இது. வலுக்கட்டாயமாக, சிவாஜிக்கு இந்துத்துவ வர்ணம் பூசி ஒரு தரப்பு நாட்டு மக்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை நடத்த எத்தனிக்கும் பாசிசவாதிகளின் முகமூடியை கிழிக்கும் எழுத்துக்கள் இவை - இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் நினைவில் நிற்கும் மிகப் பிரபலமான மன்னர் சிவாஜி. மும்பையின் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்துக்கு சிவாஜி பெயர் சூட்டப்பட்டிருப்பது மட்டுமல்ல, அரபிக் கடலில் அவரது பிரம்மாண்டமான சிலை ஒன்றை நிறுவவும் திட்டமும் உள்ளது.

இரண்டு அரசியல் நோக்குகள் சிவாஜியை இருவேறு வழிகளில் நினைவுகூறுகின்றன. சிலர் அவரை பிராமணர்களையும், பசுக்களையும் காத்தவராகவும், வேறு சிலர் அவரை மக்கள் நலன் பேணிய மன்னராகவும் பார்க்கின்றனர்.

அதே நேரத்தில் அவரை முஸ்லிம் விரோதியாகக் கட்டமைக்கும் ஆழமான கருத்தோட்டம் ஒன்றும் நடந்துவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விநாயகர் சதுர்த்தியின்போது மும்பையில் அமைக்கப்பட்ட ஒரு அலங்கார வளைவில் மிராஜ்-சங்லி யுகத்தைச் சேர்ந்த அஃப்சல்கானை சிவாஜி வெட்டுவதைப் போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்தக் காட்சி அடங்கிய துண்டறிக்கை மகாராஷ்டிரா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. இதன் விளைவாக, இந்த வளைவு அமைக்கப்பட்டிருந்த பகுதியில் வகுப்பு மோதலும் நடந்தது. சிவாஜி என்ற இந்து மன்னர் அஃப்சல்கான் என்ற முஸ்லிம் மன்னரை கொன்றதாகவே பார்வை இருக்கிறது.

பிரதப்காவில் உள்ள அஃப்சல் கானின் கல்லறையை இடிப்பதற்கான நடவடிக்கைகளும் இந்து வலதுசாரி செயல்பாட்டாளர்களால் எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த கல்லறை, சிவாஜியால் உருவாக்கப்பட்டது என்ற தகவல் வெளியான பிறகே, இந்த செயல் நிறுத்தப்பட்டது.

சிவாஜி, அனைத்து மதங்களையும் மதித்த மன்னர். இது அவரின் அனைத்து கொள்கைகளிலும் பிரதிபலித்ததோடு, அவரின் நிர்வாகம் மற்றும் ராணுவம் அதற்கு ஒரு ஒருங்கிணைந்த சான்றாக உள்ளது.

மன்னர் சிவாஜியின் தாத்தாவான மலோஜிராவோ போஷ்லே குறித்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. அவர், சுஃபி ஞானியான ஷா ஷரிஃபை சிறப்பிக்கும் விதமாக, தனது இரு மகன்களுக்கும் ஷாஜி மற்றும் ஷரிஃப்ஜி என்று பெயரிட்டார்.

உள்ளூர் இந்து மன்னர்களுடன் சண்டையிட்ட சிவாஜி, ஔரங்கசிப்பையும் எதிர்த்தார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஔரங்கசிப்பின் ராணுவத்தை முன்னின்று வழிநடத்தியவர், ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த ராஜா ஜெய்சிங் என்பவர். இவர், ஔரங்கசிப்பின் அமைச்சரவையில் பெரும்பதவி வகித்தார்.

சிவாஜி மன்னர், மனிதாபிமான அடிப்படையிலான கொள்கைகளை நிர்வாகத்திற்காக அவர் எடுத்தார். அவை எந்த மதத்தையும் சார்ந்திருக்கவில்லை. அவரின் ராணுவத்திற்கு, கடற்படைக்கும் ஆட்களை சேர்க்கும் போதும், அதில் மதம் ஒரு பகுதியாக இருக்கவில்லை. சிவாஜியின் கடற்படையின் தலைமை தளபதியாக இருந்தவர் சித்தி சம்பால். என்பதோடு அவரின் ராணுவத்தில் மூன்றில் ஒரு பங்கினர் முஸ்லிம்களாகவே இருந்தனர். அதேபோல, சிவாஜியின் கடற்படையில், முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தனர்.

ஆக்ரா கோட்டையில் சிவாஜி கைது செய்யப்பட்டபோது கூட, அவரின் தப்பிக்கும் திட்டத்திற்கு உதவுவோராக அவர் மனதார நம்பியவர்களில் ஒருவர் முஸ்லிம்தான். அவருடைய  பெயர் மதாரி மெஹ்தர்.

சிவாஜியின் மிக முக்கிய விவகாரங்களுக்கான உதவியாளாராக இருந்தவர், மௌலானா ஹைதர் அலி. அவரின், பீரங்கிப்படையின் தலைவராக இருந்தவர் இப்ராஹிம் கார்டி.

பிற மதங்களின் மீது சிவாஜிக்கு இருந்த மரியாதை தெளிவாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. `ஹஸ்ரத் பாபா யகுப் பஹுத் தோர்வாலே` போன்ற துறவிகளை அவர் மிகவும் மதித்தார். அவருக்கு வாழ்நாளுக்கான உதவித்தொகையை வழங்கினார். இதேபோல, குஜராத்தில் தாக்குதலுக்கு உள்ளான தேவாலயத்தின் பாதிரியார் அம்ரூஸிற்கு அவர் உதவினார்.

தனது தினசரி வழிபாட்டுக்கு ஜகதீஷ்வர் கோவிலை கட்டியதுபோலவே, முஸ்லிம்களின் வழிபாட்டுக்காகவும், தனது அரண்மனைக்கு எதிரே ஒரு மசூதியையும் அவர் தலைநகர் ரைகாத்தில் கட்டினார்.

முஸ்லிம் பெண்களும், குழந்தைகளும் ஒருகாலும், தவறாக நடத்தப்படக்கூடாது என தனது ராணுவத்தினருக்கு மிகவும் கண்டிப்பான கட்டளைகளை அளித்திருந்தார் சிவாஜி.

சிவாஜியின் அரசாட்சியில், தர்கா மற்றும் மசூதிகளுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டது. தனது படையினரின் கைகளில் எப்போது திருக்குரான் கிடைத்தாலும், அதை முறையாக ஒரு முஸ்லிமிடம் அவர்கள் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கட்டளையிட்டிருந்தார்.

பசீன் பகுதியில் நவாபின் மருமகளின் முன்பு, அவர் தலைகுனிந்து மரியாதை செய்த வரலாற்றுச் சம்பவம் பலரும் அறிந்ததே. அபகரிக்கப்பட்ட பொருட்களின் ஒரு பகுதியாக அப்பெண்ணும், சிவாஜி மன்னரின் முன்பு கொண்டு நிறுத்தப்பட்ட சம்பவம் அது. அப்போது, அப்பெண்ணின் முன் தலைகுனிந்து தமது செயலுக்கு மன்னிப்புக் கோரிய மன்னர் சிவாஜி, மீண்டும் அப்பெண்மணியை அவரது இல்லத்தில் பாதுகாப்புடன் கொண்டு சேர்க்குமாறு தனது வீரர்களுக்கு கட்டளையிட்டார்.

அஃப்சல் கானை கொன்ற சம்பவத்திலிருந்தும் பல செய்திகள் வெளிப்படுகின்றன.

அந்த காலத்தில், மன்னர் சிவாஜியுடன் பல ஆண்டுகளாக பகைமைக் கொண்டிருந்த ஆதில்ஷாஹியின் பிரதிநிதியாக இருந்தவர்தான் அஃப்சல்கான்.

சிவாஜியை தனது கூடாரத்திற்கு அழைத்து, அவரை கொல்வதற்காக அஃப்சல்கான் திட்டமிட்டது குறித்து, ருஸ்தாமே ஜமன் என்ற முஸ்லிம் மூலமாகவே சிவாஜி தெரிந்துகொண்டார். பாதுகாப்புக்காக, சிவாஜியிடம் இரும்பு நகங்களை தன்னுடன் கொண்டுவருமாறு அறிவுறுத்தியதும் அந்த முஸ்லிம்தான்.

அதேபோல, அஃப்சல்கானின் முக்கிய ஆலோசகராக இருந்தவர், கிருஷ்ணஜி பாஸ்கர் குல்கரி என்பவர் என்பதை மக்கள் மறந்துவிட்டனர்.

இந்த கிருஷ்ணஜி பாஸ்கர் குல்கரி சிவாஜிக்கு எதிராக வாளை ஏந்தியவர்.

மன்னர்களுக்கு இடையே பதவிக்காக இருந்த சண்டைகளை, வெள்ளையர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். தங்களின் எழுத்தாண்மையால், மக்களை மதரீதியாகப் பிளவுப்படுத்தியதால், வரலாறு மதப்பிரச்சனை என்ற திருப்புமுனையை சந்தித்தது.

உண்மையில், சிவாஜி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்` என்ற பார்வை அரசியல் நோக்கங்களுக்காகவே சித்தரிக்கப்பட்டது. இந்த பார்வையிலிருந்து பிரச்சனையை பேசும் பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன. `ஜான்தா ராஜா (எல்லாம் அறிந்த அரசர்)` என்ற நாடகத்தை புரந்தரா என்பவர் எழுதியிருந்தார், அது, மஹாராஷ்டிரா முழுவதும் பிரபலப்படுத்தப்பட்டது. அந்த நாடகம், சிவாஜியை முஸ்லிம்களுக்கு எதிரானவராக காட்டுகிறது.

இந்தப் புனைவுக்கு எதிராக, சரியான வரலாற்றை குறிப்பிட்டு வரலாற்று ஆய்வாளர் சர்தேசி, 'மராத்தியர்களின் புதிய சரித்திரம்` என்ற நூலை எழுதினார். அதில், சிவாஜி முஸ்லிம்களுக்கு எதிராகவே, அவர்கள் பின்பற்றும் சமயமான இஸ்லாத்துக்கு எதிராகவோ ஒருபோதும் நடந்ததில்லை என்று வரலாற்று உதாரணங்கள் மூலமாக நிறுவுகிறார். இவை எல்லாமே, சிவாஜி மன்னர் சமயங்களுக்கிடையிலான நல்லுறவை எப்படி கட்டிக் காத்தார் என்பதை வெளிப்படுத்துகின்றன.

உண்மையில், மன்னர் சிவாஜயின் அடிப்படை இலக்கு என்பது, முடிந்த அளவு பெரும் நிலப்பரப்பில் தனது ராஜியத்தை எப்படி விஸ்தரித்து நிறுவவேண்டும் என்பதாகவே இருந்தது. அப்படிப்பட்ட சிவாஜியை முஸ்லிம்களுக்கு எதிரானவராக சித்தரிப்பது என்பது உண்மைக்கு புறம்பானதாகும்.

(நன்றி: பிபிசி-தமிழ்)
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Pages

Labels