NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Monday, January 18, 2016

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 16: உதவி சிறிது; பதவி பெரிது...!


வாடிய பயிர் கண்டு வாடியவர் வள்ளலார் பெருமானார். வாடிய உயிர்களைக் கண்டு வாடியதோடு மட்டுமில்லாமல் அவற்றின் வாட்டம் போக்க வழிமுறைக் கண்டவர் நபிகள் பெருமானார்.

சக உயிர்களுக்கு செய்யும் உதவியானது.. பெரும் பதவிகளைப் பெற்றுத் தரும் என்று அழுத்தம் திருத்தமாக போதித்தவர் அன்பு நபி.

நண்பர்களே, இன்றைய 'அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்..!' இரண்டு அற்புதமான சம்பவங்களைக் காட்டி தமது தோழர்களை சக உயிர்களிடம் இரக்கம் கொள்ளச் சொல்கிறார்கள் நபி பெருமானார். இத்தொடரின் இன்றைய பகுதியையும் வழக்கம் போல, உங்களது முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு எத்தி வைப்பதுதான் உங்களது பங்களிப்பு!

ஓர் ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அவள் ஒரு பூனையை வளர்த்து வந்தாள். அப்பூனைக்குக் கிழவி சரியாக உணவளிப்பதில்லை; நீரும் அளிப்பதில்லை. பூனையைக் கட்டிப் போட்டு அதை வருத்தி வந்தாள். இந்நிலையில் அவள் மரணமடைந்துவிட்டாள். அவளது செயலுக்காக அவள் நரகம் சென்றாள்.

பாலைவனம்.

உச்சிவேளையில் ஒரு மனிதன் நடந்து வந்தான். தீய்க்கும் வெய்யிலால் நீர்த்தாகம் அவனை வாட்டியது.

பாலையில் ஒரு கிணறு இருந்தது. அதில் இறங்கிய வழிப்போக்கன் போதிய மட்டும் நீர் அருந்தினான்.

கிணற்றுக்கு வெளியே தாகத்தால் ஒரு நாய் தவித்துக் கொண்டிருந்தது. கிணற்றைச் சுற்றி இருந்த ஈர மணலை தாகம் தாங்காமல் அது நக்கியது.

இதைக் கண்ட மனிதனின் உள்ளத்தில் இரக்கம் சுரந்தது. திரும்பவும் கிணற்றில் வழிப்போக்கன் இறங்கினான். தன் தோல் காலுறையில் நீர் மொண்டான். அதை பல்லில் கடித்து சிரமத்துடன் மேலே கொணர்ந்தான். தாகம் தீர நாய்க்கு உதவினான். இவனது செயலைக் கண்ட இறைவன் அவனுக்குச் சொர்க்கம் தந்தான்.

'உயிர்களிடம் இரங்குதல் வேண்டும்!' - என்பது சம்பந்தமாக முஹம்மது நபிகளார் (ஸல்) போதனை செய்யும்போது தம் தோழர்க்கு சொன்ன சம்பவங்கள் இவை.

சிறிய செயல்களானாலும் அவற்றின் முக்கியத்துவத்தையும், செயல் துடிப்பையும் வைத்து இறைவனிடம் அவை உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றன.

- இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.




முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:


1. அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html
2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html
3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html
5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html
6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html
7.ஓர் இறை.. ஓர் நிறை..  : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html
8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html
9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... : http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html
10. அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி : http://ikhwanameer.blogspot.in/2015/11/10.html
11. அவர்கள் எதிரிகள் குழந்தைகளாயினும்... : http://ikhwanameer.blogspot.in/2015/11/11.html
12. குற்றம் குற்றமே!:  http://ikhwanameer.blogspot.in/2015/11/blog-post_19.html
13 . பாவங்களின் பரிகாரம்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/13.html
14. அழுதபடியே தொழுத அண்ணல்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/14.html
15 இருளில் வந்த வெளிச்சம்: http://ikhwanameer.blogspot.in/2016/01/15.html
Share:

Friday, January 1, 2016

கருத்துப்படம் - பீஜிங்கில், காற்று மாசு எச்சரிக்கை!


சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இதுவரையிலும் வரலாறு காணாத அளவுக்கு காற்று மாசு அடைந்துள்ளது. இது சம்பந்தமாக ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக காற்று மாசு சம்பந்தமாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Share:

அண்ணல் நபியின் கன்னல் மொழி - 1, வணிகம் : 'சிறந்த சம்பாதியம் எதுவென்றால்...?'


"மோசடி செய்யாமலும், பொய்ப் பேசாமலும், உழைத்து ஒருவன் செய்யும் வணிகமே சிறந்த சம்பாதியமாகும்" - அண்ணல் நபி




Share:

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 15: இருளில் வந்த வெளிச்சம்..!


சில தலைவர்கள் பேசுவார்கள்! செயல்பட மாட்டார்கள். இன்னும் சிலரோ தத்துவங்களாய் சமைப்பார்கள்! அவை செயலுருவம் பெறாது.

ஆனால், இந்தத் தலைவரோ சொன்னார். சொன்னதை செய்தார். சொல்-செயல் இவற்றின் முன்மாதிரியாய் இருந்து அடுத்தவர் பின்பற்றிடவும் வழிவகுத்தார்.

தமக்குப் பின்னரும் ஓர் உன்னதமான சமூக அமைப்பு நிர்மாணத்துக்கான குழிகற்களாகவும் அவரது போதனைகள், கொள்கைகள் அமைந்தன.

வெறும் கற்பனை கதைகள் அல்ல அவை! நிஜங்கள் காலந்தோறும் .. வியப்பூட்டும் நிஜங்கள்..!

அந்த மாபெரும் தலைவர், உலக மக்கள் அனைவருக்கும் அருள் மழையாக வந்தவர்தான் நபிகள் நாயகம்!

இன்றையை 'அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடையில்..' உடல புல்லரிக்கச் செய்யும் ஒரு முன்மாதிரி இதோ!

  நள்ளிரவு உறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட மதீனா நகரம்.

சலசலக்கும் பேரீத்த மர ஓலைகளின் ஓசையைத் தவிர எங்கும் நிலவியது நிசப்தம்.

நெடிதுயர்ந்த உருவம் ஒன்று ஒவ்வொரு தெருவாய் நடந்து கொண்டிருந்தது. சற்றுத் தொலைவில் ஆளரவமற்ற பாலைவனத் திடலில் 'மினுக் மினுக்' கென்று விளக்கு எரிய அதை நோக்கி நடந்தது.

அங்கே ஒரு மனிதர் சோகத்துடன் அமர்ந்திருந்தார்.

விசாரித்ததில் கூடாரத்தில் பிரசவ வேதனையில் அவரது மனைவி துடிக்கும் விஷயம் தெரிந்தது. மருத்துவம் பார்க்க பணமுடை வேறு.

இதைக் கேள்விப்பட்டதும் தன் வீட்டுக்கு விரைந்தது அந்த உருவம். தனது மனைவியை உடனே தன்னுடன் கிளம்பும்படி பணித்தது.

"நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையே?"- மனைவி கேட்டார்.

"ஆமாம். அந்த உணவு இன்னொருவருக்குத் தேவைப்படுகிறது!"

"கொஞ்சம் பாலாவது சாப்பிடலாமே?"

"வேண்டாம்.. பிரசவ வேதனையிலிருக்கும் அந்தப் பெண்மணிக்கு அது தேவைப்படலாம். அவற்றை எடுத்துக் கொண்டு சீக்கிரம் கிளம்பு.. போகலாம்!"- என்றது அவ்வுருவம்.

சற்று நேரத்தில் அவர்கள் கூடாரத்தை அடைந்தார்கள்.

மனைவியை உள்ளே அனுப்பி வைத்த உருவம் கூடாரவாசியிடம் பேசிக் கொண்டிருந்தபோதே, கூடாரத்திலிருந்து.. "ஜனாதிபதி அவர்களே! உங்கள் நண்பருக்கு வாழ்த்துக் கூருங்கள். அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!" - என்று குரல் வந்தது.

ஜனாதிபதி என்ற சொல் கூடாரவாசியை நிலைகுலைய வைத்தது.

பதறியவாறு அவர், "இந்த நாட்டின் தலைவரான தாங்களா.. இப்படி..?" - என்றார்.

"இதில் வியப்படைய என்ன இருக்கிறது சகோதரரே? ஒரு நாட்டின் தலைவன் உண்மையில் மக்களின் தலையாய ஊழியனில்லையா?" - என்றார்கள் மாறு வேடத்தில் இருந்த ஜனாதிபதி உமர் (இறையருள் பொங்கட்டுமாக!) அவர்கள்.

பரந்து விரிந்த இஸ்லாமிய பேரரசின் தலைவர் ஒரு முதல்நிலை மக்கள் சேவகராக அங்கே விளங்குகிறார். அவரது துணைவியாரோ மகப்பேறு மருத்துவம் பார்க்கும் மருத்துவச்சியாக வரலாற்றில் பதிகிறார்.

இதே உமர் (இறையருள் பொழிவதாக!) அவர்களின் ஆட்சியைத்தான் இந்தியாவில் கனவு கண்டார் காந்தியடிகள்.


 - இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.

 

முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:

1. அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html
2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html
3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html
5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html 
6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html
7.ஓர் இறை.. ஓர் நிறை..  : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html
8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html
9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... : http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html
10. அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி : http://ikhwanameer.blogspot.in/2015/11/10.html
11. அவர்கள் எதிரிகள் குழந்தைகளாயினும்... : http://ikhwanameer.blogspot.in/2015/11/11.html 
12. குற்றம் குற்றமே!:  http://ikhwanameer.blogspot.in/2015/11/blog-post_19.html
13 . பாவங்களின் பரிகாரம்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/13.html
14. அழுதபடியே தொழுத அண்ணல்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/14.html
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive