NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Thursday, October 25, 2018

மரணமில்லாத நித்திய ஜீவன்

“தொழுகை.. தொழுகை.. தொழுகை.. பணியாட்கள்… பணியாட்கள்.. பணியாட்கள்.. பெண்கள்.. பெண்கள்.. பெண்கள்..” இந்த முணு முணுப்பினூடே...

நேரம் செல்லச் செல்ல கனக்க ஆரம்பித்தது அந்தப் பொன்னுடல்.

மூச்சுவிட மிகவும் சிரமமான அந்நிலையிலும், தொழுகையை அதற்குரிய பேணுதலுடன் நிறைவேற்றும்படியும், பணியாட்களின் உரிமைகளை நிறைவேற்றும்படியும், பெண்ணுரிமைகளை அளித்து பெண்ணினத்தைப் போற்றும்படியும் வார்த்தைகள் உதிர்ந்தன.

கடைசியான அந்தத் தருணம் வரவும் செய்தது.

“உயரிய தோழனான இறைவனிடமே நான் மீள்கிறேன்!” என்று மும்முறை அசைந்த அதரங்கள் அதன்பின் அசையாமல் மௌனமாயின.

பேரருள் சுமந்துவந்த கண்கள் காரிருளில் கரைந்தன.

இவ்வளவு நேரமாக தமது அருமைக் கணவரும், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரும், இறைவனின் திருத்தூதருமான நபிகளாரை தமது மடியில் சுமந்திருந்த அன்னை ஆயிஷாவின் விழிகள் அருவியாயின. அந்த பேரிழப்பைத் தாங்க முடியாமல் விம்மல் வெடித்துச் சிதறியது.

நொடியில், இறைவனின் திருத்தூதர் காலமான செய்தி மதீனா பெருநகரெங்கும் எரிதழலாய் பற்றிப் படர்ந்தது.

நபிகள் காலமான தகவல் நபித்தோழர் அபுபக்கருக்கும் எட்டுகிறது. அவர், அதை உறுதிப்படுத்திக் கொள்ள நேராகத் தனது அருமை மகள் ஆயிஷாவின் இல்லத்தை நோக்கி விரைந்தார். நபிகளாரின் பொன் முகத்தை இமைக்காமல் நோக்கினார். இறைத்தூதரின் வரலாறு நெடுக நிறைந்திருந்த சம்பவங்கள் எல்லாம் அவர் மனதில் தோன்றி.. தோன்றி மறையலாயின. அந்த பேரிழப்பை எப்படி உள்வாங்குவதென்று ஒரு கணம் தடுமாறினார்.

“உயிருடனிருந்தபோது பூரண நிலவாய் தகதகத்தது போலவே, இப்போதும் நான் உங்களைக் காண்கிறேன் எனதருமைத் தோழரே! இறைவனின் திருத்தூதரே, “தாங்கள் மரணமுற்றது உண்மைதான்..!” – என்று கனத்த இதயத்துடன் கூறியவாறு நபிகளாரின் நெற்றியில் முத்தமிட்டார். துணியால் நபிகளாரின் திருமுகத்தைப் போர்த்திவிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

வீட்டுக்கு வெளியே தமது தோழர் உமர், நபிகளாரின் இறப்புச் செய்தியைத் தாங்க இயலாமல் வலியோடு நடந்து கொண்டிருப்பதைக் கண்டார். அவரைச் சமாதானப்படுத்தி அமர வைத்தார். பிறகு அங்கு கூடியிருந்த மக்களிடம் சொன்னார்:

“தோழர், தோழியரே! அருமை சகோதர, சகோதரிகளே! நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள்; இறைவனின் திருத்தூதரை வணங்குபவர்கள் உங்களில் யாராவது இருந்தால் அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நபிகளார் இறந்துவிட்டார். மாறாக, இறைவனை வணங்குபவர்கள் இருந்தால் அவர்கள் அறிந்து கொள்ளட்டும். இறைவன் பிறப்பு, இறப்பு அற்றவன். அவன் மரணமில்லா நித்திய ஜீவன்..!”

இந்தப் பிரகடனத்துக்குப் பின் நபித்தோழர் அபுபக்கர் தொடர்ந்து உரையாற்றினார். மக்களை ஆற்றுப்படுத்தினார்.

நபித்தோழர் அபூபக்கரின் இந்தப் பிரகடனத்தைக் கேட்டு நபித்தோழர் உமர் வாளை வீசி எறிந்து அழுது புலம்பலானார்.

மதீனா பெருநகர் முழுவதும் கண்ணீர் சூழ்ந்து கொண்டது.
 
(இந்து தமிழ் திசை, ஆனந்த ஜோதி இணைப்பில் 25.10.2018 அன்று வெளியான எனது கட்டுரை. கட்டுரை இணைப்புக்கு: https://tamil.thehindu.com/society/spirituality/article25319140.ece)



Share:

அழுத்தம்

உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக தற்போது சவுதி அரசு, ஊடகவியலாளர் ஜமால் கசோகி தவறுதலாக கொல்லப்பட்டதாக ஒப்புக் கொண்டுள்ளது.

முன்னதாக துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்துக்கு ஊடகவியலாளர் ஜமால் கசோகி சென்றதும், அதன்பின் காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Pages

Labels