NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Saturday, April 30, 2016

எருக்கன் பூக்கள்


எருக்கஞ்செடிகளில் நீல எருக்கன், வெள்ளை எருக்கன், முத்து எருக்கன் என பல்வேறு வகைகள் உள்ளன.
Share:

முக்கியச் செய்திகள்: "இந்தியா திரும்பும் திட்டம் இல்லை: மல்லையா"

 
 
'கட்டாய நாடு கடுத்தல்' நிலைக்கு தான் ஆளானதாகவும், இப்போதைக்கு இந்தியா திரும்பும் எண்ணம் இல்லை என்றும் தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் எனது பாஸ்போர்ட்டை முடக்கலாம் அல்லது என்னை கைது செய்யலாம் ஆனால் வங்கிகளுக்கு பணம் கிடைக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் 'ஃபினான்ஸியல் டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நான் இந்தியா திரும்புவதற்கே நிச்சயமாக விரும்புகிறேன். ஆனால், இப்போது நிலைமை கைமீறிவிட்டது. என் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. அரசு அடுத்து என்ன செய்யும் என்று தெரியவில்லை.

இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதே முக்கியம். மக்களை மட்டுமின்றி அரசிடமும் தேவையின்றி டிவி, இணைய ஊடகங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், பிரிட்டனில் இருப்பதே இப்போதைக்குப் பாதுகாப்பு என்றும், நாடு திரும்பும் திட்டம் எதுவும் தன்னிடம் இல்லை என்றும் கூறியுள்ள அவர், கட்டாய நாடு கடத்தலுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, விஜய் மல்லையா வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் வங்கிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு சென்று விட்டார்.

தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் எடுத்து வருகிறது.

முன்னதாக அமலாக்கப் பிரிவினர் கோரிக்கைக்கு இணங்க விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக முடக்கிய மத்திய வெளியுறவு அமைச்சகம் தங்களது நோட்டீஸுக்கு மல்லையா அளித்த பதில், அமலாக்கத் துறையினர் அளித்த தரவுகள், மற்றும் ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்போது நிரந்தரமாக விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளது.
 
தன்னுடைய வெளிநாட்டு சொத்துகளை தான் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று விஜய் மல்லையா திட்டவட்டமாக மறுத்ததையடுத்து, மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் அமலாக்கத் துறையினர் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கினர்.

இதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையாவை, நாடு கடத்தக் (தங்களிடம் ஒப்படைக்க) கோரி பிரிட்டன் அரசுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, “விஜய் மல்லையாவுக்கு எதிராக, கிரேட்டர் மும்பையில் உள்ள நீதிமன்றம் ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்துள்ளதாக அமலாக்கத் துறை எங்கள் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மல்லையாவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்த வேண்டி உள்ளது. எனவே, அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரிட்டன் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம்” என்றார்.
Share:

Friday, April 29, 2016

இக்வான் காமெடி: ப்ளீஸ்.. ப்ளீஸ்..


மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புங்கள். பிரிட்டனிடம் மத்திய அரசு வலியுறுத்தல்.  (செய்தி ஆதாரம் - தினமணி 29.04.2016 முதல் பக்கம்)
Share:

Friday, April 22, 2016

அண்ணல் நபியின் கன்னல் மொழி 2, வணிகம்: அருள்பொழிவாய் இறைவா!


”கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்வதிலும், கடனைக் கோருவதிலும் மென்மையுடனும், நற்பண்புடனும் நடந்து கொள்ளும் மனிதர் மீது இறைவன் அருளைப் பொழிகின்றான்!” - அண்ணல் நபி
Share:

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 17: 'தலைக்கு மேல் பறந்த தாய்க் குருவி!'


மனிதனின் சுயநலத்தால்.. தன்னைச் சுற்றியும் உள்ளதை எல்லாம் அவன் இழந்துவிட்டான். இன்னும் கொஞ்சம் நாளில் இயற்கையின் ஒவ்வொரு அழகையும், அம்சத்தையும் அவன் விலைக் கொடுத்து வாங்கியே ஆக வேண்டிய துரதிஷ்ட நிலை எதிர்பட இருக்கிறது.

சுற்றுச் சூழல் மாசு என்னும் பெருங் கேடுக்கு ஆளாகி அற்புதமான எத்தனையோ பறவை இனங்களை நாம் தொலைத்து விட்டோம். அதில் மிக முக்கியமானது சிட்டுக் குருவி!

நபி பெருமானார் சின்னஞ் சிறு குருவி இனத்து மேல் கூட அபரீதமான பாசம் பொழிந்தார்கள் என்பது வியப்புற வைக்கிறது.

இன்றைய 'அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்', தலைக்கு மேல் பறந்த அந்த தாய்க் குருவியின் சம்பவம்.


ஒரு நாள்.

அன்பு நபி தமது தோழர்களுடன் பயணத்தில் இருந்தார்கள்.

இடையில், நபிகளார் தமது தோழர்களை விட்டு பிரிந்து எங்கோ சென்றார்கள்.

வானத்தில் அழகான பறவைகள் பறந்து கொண்டிருந்தன. நபித் தோழர்கள் அதை கவனித்தார்கள்.


"அதோ, பாருங்கள்! " - நபித்தோழர்களில் ஒருவர் ஒரு குருவியைச் சுட்டிக் காட்டிச் சொன்னார்.

"எவ்வளவு அழகான குருவி! இது அம்மாவாகதான் இருக்க வேண்டும். அதோ..! பார்த்தீர்களா? அந்த இரண்டும் இதன் குஞ்சுகளாக இருக்கும்..! - என்றார் அவர் தொடர்ந்து.

அது ஒருவகையான சிட்டுக் குருவி. அந்த இரண்டும் அதனோட குஞ்சுகள்.

மூன்று குருவிகளும் நபித்தோழர்களின் தலைக்கு மேலாக பறந்தன. "விருட்.. விருட்.." என்று அவை பறந்த விதம் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

நபித்தோழர்களும் அவற்றை ஆர்வத்துடன் பார்த்தார்கள்.

குஞ்சுகள் அப்போதுதான் பறக்கத் தொடங்கியிருந்தன போலும்! அதனால், நீண்ட நேரம் பறக்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நபித் தோழர்களின் தலைக்கு மேலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தன.

"ஆஹா..! எவ்வளவு அழகான குஞ்சுகள்! கைக்கு எட்டும் தூரத்தில்தானே பறக்கின்றன. இவற்றைப் பிடித்தால் என்ன?" - என்றார் நபித்தோழர்களில் ஒருவர். மற்றவரும் அதற்குச் சம்மதித்தார்கள்.

பறந்து கொண்டிருந்த குருவிக்குஞ்சுகள் சோர்வடைந்தன. தொடர்ந்து பறக்க முடியாமல் கீழே இறங்க ஆரம்பித்தன.

நபித்தோழர்களில் ஒருவர் சட்டென்று குருவிக் குஞ்சுகளைப் பிடித்தார். கவனமாக கைகளில் ஏந்திக் கொண்டார். ஏனென்றால்.. உயிரினங்களிடம் அன்புடன் நடந்து கொள்ளும்படி அன்பு நபி அறிவுறுத்தி இருந்தார்கள்; அதனால்தான்!

நபித்தோழர்கள் குருவிக்குஞ்சுகளுக்கு எந்தவிதமான தீங்கும் விளைவிக்கவில்லை. அதற்காகவும் அவற்றை அவர்கள் பிடிக்கவில்லை.

குருவிக்குஞ்சுகளைப் பிடித்தது அவற்றின் அழகை அருகில் கண்டு ரசிக்கத்தான்!


பயந்துபோன குருவிக் குஞ்சுகள் "கீச் ... கீச்.." - என்று கத்தின. சின்ன அலகால் பிடித்திருந்தோரின் கைகளைக் கொத்தின. ஆனால், பிடியிலிருந்து விடுபட முடியவில்லை.

குருவிக்குஞ்சுகளைப் பிரிந்த தாய்ப்பறவையோ, 'பட பட' என்று சிறகு அடித்துப் பறந்தது.

நபித்தோழர்களின் தலைக்கு மேலாக பறந்து .. பறந்து.. அழுவது போல கத்தியது. "அய்யோ.. என் குழந்தைகளை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!" - என்று கதறுவது போல, அது இருந்தது. அவர்கள் தன் அருமைக் குஞ்சுகளை ஏதாவது செய்துவிடப் போகிறார்கள் என்று பதற்றத்துடன் சுற்றிச் சுற்றி பறந்தது. "கீச்..கீச்..- என்று கத்திக் கதறியது.
நபித்தோழர்கள் தாய்க் குருவியை விரட்டிப் பார்த்தார்கள். "... ச்சூ..ச்சூ..!" -என்று கைகளை வீசினார்கள்.

ஊஹீம்..தாய்க் குருவி பயப்படுவதாக இல்லை. அங்கிருந்து அது போவதாகவும் இல்லை. " என் குழந்தைகளை கொடுத்துவிடுங்கள்!" - என்று கெஞ்சுவது போல சுற்றிச் சுற்றி வந்தது. " என் குழந்தைகள் இல்லாமல் என்னால்.. வாழவே முடியாது!" - என்று கதறி அழுவது போல பறந்தது.

அந்த நேரம் பார்த்து அங்கு நபிகளார் திரும்பி வந்தார்கள். தாய்க் குருவி பதற்றத்துடன் பறப்பதைக் கண்டார்கள். அது ஏதோ துன்பத்தில் சிக்கி இருப்பதை உடனே புரிந்து கொண்டார்கள். நபித்தோழர்களின் கைகளில் இருந்த குருவிக் குஞ்சுகளை கண்டதும் அவர்களுக்கு எல்லா விஷயமும் விளங்கிவிட்டது. தாய்க் குருவியின் துன்பமும் புரிந்துவிட்டது.

" குருவிக்குஞ்சுகளைப் பிடித்து இந்த தாய்க்குருவிக்கு துன்பம் இழைத்தவர் யார்?" - என்று நபிகளார் சற்று கோபமாக கேட்டார்கள். " ... உடனே குருவிக் குஞ்சுகளை விட்டுவிடுங்கள்!"- என்று அதட்டவும் செய்தார்கள்.

நபித்தோழர்களின் குற்ற உணர்வால்.. அங்கே இறுக்கமான சூழல் நிலவியது.

தமது தவறை உணர்ந்த நபித்தோழர் கையை விரித்தாரோ இல்லையோ குருவிக்குஞ்சுகள் இரண்டும் "விர்" என்று பறந்து சென்று தாய்க்குருவியிடம் சேர்ந்து கொண்டன.

இப்போது தாய்க்குருவியின் பதற்றம் மறைந்தது. மகிழ்ச்சியின் அடையாளமாக குஞ்சுகளை இறககைகளால் பொத்தி அணைத்துக் கொண்டது. நன்றியுடன் நபித்தோழர்களின் தலைக்கு மேலாக ஒரு வட்டம் போட்டது. பிறகு தனது குஞ்சுகளோடு மேலே பறந்து வானத்தில் மறைந்தது.

தாய்க்குருவியும் அதன் குஞ்சுகளும் பறக்கும் காட்சி, பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.அதுவரை அங்கே நிலவிய இறுக்கமான சூழலும் கலைந்தது. மீண்டும் கலகலப்பு திரும்பியது.

அன்பு நபிகளாரின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

~~~~ இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.


முந்தைய அருட்கொடைகளுக்கு:

1. அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html
2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html
3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html
5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html
6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html
7.ஓர் இறை.. ஓர் நிறை..  : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html
8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html
9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... : http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html
10. அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி : http://ikhwanameer.blogspot.in/2015/11/10.html
11. அவர்கள் எதிரிகள் குழந்தைகளாயினும்... : http://ikhwanameer.blogspot.in/2015/11/11.html
12. குற்றம் குற்றமே!:  http://ikhwanameer.blogspot.in/2015/11/blog-post_19.html
13 . பாவங்களின் பரிகாரம் http://ikhwanameer.blogspot.in/2015/12/13.html
14. அழுதபடியே தொழுத அண்ணல்http://ikhwanameer.blogspot.in/2015/12/14.html
15 இருளில் வந்த வெளிச்சம்: http://ikhwanameer.blogspot.in/2016/01/15.html
16 உதவி சிறிது. பதவி பெரிது: http://ikhwanameer.blogspot.in/2016/01/16.html



Share:

Friday, April 1, 2016

வைகறை நினைவுகள்: 30: ஓ...! ஜமீலாபாத்..! சாட்சியாக இருப்பாய் நீ!



ஐஎஃப்டியின் தமிழாக்கம் திருக்குர்ஆனை சென்னை அண்ணா சாலை மக்கா பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலான சுலைமான் பாகவியின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே வினியோகம் செய்தோம்.

ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன் என்று அந்த வேதநூலுக்கு சான்றாய் நான் முழங்கி நின்றேன்.

அடுத்ததாக, தமிழகமெங்கும் திருக்குர்ஆனை கொண்டு சேர்க்கும் பணி ஆரம்பித்தது.


சென்னை எண்ணூரிலிருந்து சுமார் 25 கி.மீட்டர் தொலைவில் உள்ள பழவேற்காட்டை மையமாக வைத்து சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளிகளுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கத்தை அறிமுகம் செய்வது என்று தீர்மானமானது.

பழவேற்காடு தேர்ந்தெடுத்ததற்கு காரணமிருந்தது. இந்தியாவில் இஸ்லாம் பரிச்சயமான கடற்கரை கிராமங்களில் பழவேற்காடும் ஒன்று. அங்கு அரபுநாட்டைச் சேர்ந்த பூர்வீக குடிகள் வசிக்கிறார்கள். இத்துடன் முஸ்லிம்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். மேலும், ஜமீலாபாத் என்று புதிதாக மீனவமக்கள் இஸ்லாத்தை தழுவிய கிராமம் ஒன்றும் அங்கு உண்டு.

இவற்றையெல்லாம் சாதகமாக வைத்துதான் திருக்குர்ஆன் பிரதிகளை கொண்டு சென்றதும்.



பழவேற்காட்டின் அரபு பூர்வீக குடிகள் வாழும் பகுதியில் பெரிய பள்ளி, சிறிய பள்ளி என்று இரண்டு பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளியின் இமாம்களை சந்தித்து திருக்குர்ஆனை காட்டியதும் அவர்கள் அவ்வளவாக அக்கறைக் காட்டவில்லை. அந்தப் பணியைப் பற்றி விருப்பமில்லை என்பது அவர்களின் முக சாடையிலிருந்தே தெரிந்தது.

தொழுகைக்குபின், அங்கிருந்து அனுப்பி வைப்பதிலேயே குறியாக இருந்தார்கள். இரண்டு பள்ளிகளிலும் இத்தகைய நிலைதான் ஏற்பட்டது.

அங்கிருந்து கிளம்பி நேராக ஜமீலாபாத்துக்கு சென்றால்… இந்த தகவல் அங்கு காட்டுத்தீயாக ஏற்கனவே பரவிவிட்டிருந்தது.

பழவேற்காடுக்கு வடக்கே அமைந்துள்ள கால்வாய் நீரில் நடந்து சென்றுதான் ஜமீலாபாத்தை அடைய வேண்டும்.


ஏதோ அந்நியராய் பார்த்தார்கள்.

முதல் முறையாக வாழ்க்கையில் லேசான பதட்டம் தொற்றிக் கொண்ட இடமது.

தொழுகைக்கு பிறகு அந்தப் பகுதியில் எந்தக் காரணம் கொண்டும் தங்கியிருக்கக் கூடாதென்றும், யாரையும் சந்திக்கக்கூடாதென்றும் எழுதப்படாத கட்டளையாக ஜமீலாபாத்வாசிகள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள். அவர்களின் பிரதான தொழில் மீன் பிடித்தல். கல்வியறிவும் அவ்வளவாக இல்லாதவர்கள். உழைப்பியலின் கடினம் போலவே அவர்களின் மனங்களும் கடினப்பட்டிருந்தன.

எடுத்துச் சென்ற திருக்குர்ஆன் பிரதிகளை மீண்டும் சுமந்துகொண்டு நானும் நண்பர் அப்துற் றஹீமும் நடக்க, ஊர் எல்லைவரை பின்தொடர்ந்து வந்து எங்களை வெளியேற்றினார்கள்.

இது ஒரு மறக்க முடியாத அனுபவமாகும்.

தற்போது, வாரத்தில் ஓரிருமுறை, காட்டுயிர் ஆய்வுக்காகவும், ஒளிப்படங்களை எடுக்கவும், செய்தி ஆவணப்படங்களைத் தயாரிக்கவும் பழவேற்காடுக்கு செல்லும்போதெல்லாம் இந்த சம்பவம் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகிறது.


06.06.2015 அன்று, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பாக பழவேற்காடு ஜமீலாபாத்துக்கு ஒட்டிய கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. சங்கத் தலைவர் சுபாஷ் வந்திருந்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும், ஜமீலாபாத்துக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது. உள்ளுக்குள் ஒரு தயக்கமும் இருந்தது. இத்தனைக்கும் தமிழகத்தை சுனாமி தாக்கியபோது, பாதிக்கப்பட்ட ஜமீலாபாத்வாசிகளுக்கு ஜமாஅத்தே இஸ்லாமியின் நிவாரணக்குழு படகுகள், வலைகள் போன்றவற்றை வழங்கி சமூக தொண்டாற்றியிருந்தது. இருப்பினும் உள்ளுக்குள் எழுந்த ஒருவிதமான சங்கடத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை.

கடைசியில், ஒரு பத்திரிகையாளனாக ஜமீலாபாத்தில் நுழைந்தேன்.

சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. புதிய பள்ளிவாசல் எழும்பியிருந்தது. ஆனால், வாழ்க்கைத்தரத்தில், மக்களின் மனோநிலையில் பெரிய அளவு மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.

மதிய தொழுகையை (லுஹர்) தொழுதுவிட்டு, பக்கத்திலிருந்த படகுதுறைக்கு சென்று படங்களை எடுத்தேன்.


ஊருக்கு வெளியே எல்லையில் சற்று நேரம் வாகனத்தை நிறுத்தினேன். ஜமீலாபாத்தை திரும்பிப் பார்த்தேன். எனது மனக்கண்ணில் தாயிப் நகரும், அருமை நபிகளாரின் புனித உடலிலிருந்து உதிர்ந்த உதிரமும் நினைவில் எழுந்தன.

“ஓ..! ஜமீலாபாத்! நீயும் சாட்சியாக இருப்பாய்! இந்த எளியவனின் பணியில்!” - என்று முணுமுணுத்தவாறு புறப்பட்டேன்.


இறைவன் நாடினால்…  அடுத்த வைகறை நினைவுகளில்..



இதற்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்: 


வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23:  மர்யம் ஏன் அழுதாள்?:  http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html
வைகறை நினைவுகள் பகுதி 24:  வேட்டைக்காரன்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/24.html
வைகறை நினைவுகள் பகுதி 25:  லென்ஸ் விழி வழியே..:  http://ikhwanameer.blogspot.in/2015/12/25.html
வைகறை நினைவுகள் பகுதி 26:  ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன்: http://ikhwanameer.blogspot.in/2016/02/26.html
வைகறை நினைவுகள் பகுதி 27:  ஈந்து கசிந்த மனம்:  http://ikhwanameer.blogspot.in/2016/02/27.html    
வைகறை நினைவுகள் பகுதி 28: நான் புரிந்துகொண்ட இஸ்லாம்: http://ikhwanameer.blogspot.in/2016/02/28.html
வைகறை நினைவுகள்: 29 காலப்பெட்டகம்: நூற்றாண்டே சாட்சியாக…!: http://ikhwanameer.blogspot.in/2016/02/29.html
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive