NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Friday, December 22, 2017

Tuesday, December 19, 2017

தேர்தல்கள்: இதில் பீற்றிக் கொள்ள என்ன இருக்கிறது .. மோடி சர்க்காரின் புளுகு மூட்டைகளைத் தவிர?


 "இந்தியா கடந்த ஓராண்டில்தான் சுதந்திரம் பெற்றது. சுதந்திரத்திற்காக 150 ஆண்டுகள் போராட்டம் நடத்தப்பட்டது என்பதெல்லாம் சுத்தப் பொய்!” – என்று புதியதொரு வரலாறு எழுதப்பட்டாலும் ஆச்சரியப்படு வதிற்கில்லை என்று சாம்னா தலையங்கம் காட்டமாக குறிப்பிட்டுள்ளது. ~இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நாட்டின் தென்பகுதியான தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள மலை அடிவார கிராமங்களான முருகன்பதி, அய்யன்பதி மலைவாழ் பழங்குடி மக்கள் பேருந்து வசதியில்லாமல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நாட்டின் வடபகுதியில் ஹிமாசலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவை கரை சேர்த்த டிஜிட்டல் பொய்யுரை நாயகன் மோடி சர்க்கார் குதுகலம் அடைவதற்கு ஒன்றுமேயில்லை.

காங்கிரஸ் மீதான ஊழல்குற்றச்சாட்டுகள் ஹிமாசலப் பிரதேசத்தின் அரியணையைப் பெற்றுத் தந்தது என்றால், குஜராத்தோ மோடி சர்க்கார் தில்லியை மறக்கடித்து தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் வேர்த்து விறுவிறுக்க செய்து தண்ணீர் காட்டியதை எப்படி மறக்க முடியும்? இத்தனைக்கும் குஜராத்தில் 2002 முதல் அடுத்தடுத்து நடந்த மூன்று தேர்தல்களிலும் பாஜகதான் ஆளும் கட்சி. இந்நிலையில் ஜிக்னேஷ் மேவானி, ஹார்திக் பட்டேல், அல்பேஷ் தாக்குர் போன்ற 'சின்னப் பையன்'களுடன் சேர்ந்து ராகுல் காந்தி என்ற 'பொடியனும்' சேர்ந்து தேர்தல் அறுவடைகளில் தேர்ந்த ஜாம்பவான்களான நரேந்திர மோடி – அமித் ஷா அண்ட் கோவுக்கு தண்ணீர் காட்டியதை இந்தியர்கள் எப்படி மறக்க முடியும்?

2002-ல், 182 இடங்களைக் கொண்ட குஜராத்தின் சட்டமன்ற தேர்தல்களில் 127 இடங்களைப் (49.8 விழுக்காடு) பெற்று ஆட்சி அமைத்த பாஜக அதைத் தொடர்ந்து 2007-ல், 117 இடங்களையும், 2012-ல், 115 இடங்களையும் தற்போது சரிந்துபோன வாக்கு  விழுக்காடுடன் 99 இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் எதிர்ப்பாளர்களை சுத்தமாக துடைத்திட கங்கணம் கட்டிய மோடி சர்க்காரின் தலையில்  விழுந்த இடி இது.

குஜராத் சட்டமன்றத்தில் வெறும் 61 இடங்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தற்போதைய தேர்தல்களில் முன்னேறி 77 இடங்களாக தனது பலத்தை அதிகரித்துக் கொண்டுள்ளது. மாநிலத்தின் அத்தனை எதிர்க்கட்சிகளையும் 'பொடியன்' ராகுல் காந்தி திரட்டியிருந்தால் பாஜக குஜராத்தைவிட்டே அப்புறப்படுத்தப்பட்டிருக்கும். நடுத்தர, விளிம்புநிலை, ஆதிவாசி, சிறுபான்மை இன மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள்.

நாட்டின் எல்லா பகுதிகளிலும், பண மதிப்பு இழப்பு, சரக்கு சேவை வரி விதிப்பு, இந்தியாவை அந்நியர்களிடம் தாரைவார்க்கும் பாஜகவின் வெளிவிவகாரக் கொள்கைகள் சம்பந்தமாக நாட்டு மக்கள் அக்கட்சியின் மீது கடும் அதிருப்தியை கொண்டிருந்தார்கள். ஆனால், அவற்றை எல்லாம் மறக்கடிக்கும் விதத்தில் சமய காழ்ப்புணர்ச்சிகள் என்னும் 'அபினை' அளவுக்கடந்து புகட்டி, உணர்ச்சியைத் தூண்டும் துவேஷக் கோஷங்களால் மக்களை திசைத்திருப்பி உத்திரப்பிரதேசத்தைப் போலவே மகத்தான அறுவடை  செய்ய நினைத்த மோடி சர்க்கார்-அமித் ஷா அண்ட் கோக்கள் தோல்வியடைந்தார்கள் என்பதே உண்மை.

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல்களின் பாஜகவின் வெற்றி மோடி சர்க்காரின் சர்வாதிகாரப் போக்கை மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் குஜராத்தில் உண்மையில் வெற்றிப் பெற்றது காங்கிரஸ்தான் என்று சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தலையங்கம் தீட்டியுள்ளது.

ராகுல் காந்தி நிச்சயம் பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமேயில்லை என்று குறிப்பிட்டுள்ள சாம்னாவின் தலையங்கம், “இக்கட்டான தருணத்தில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்ற ராகுல் காந்தி குஜராத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பது குறித்து கவலைப்படாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் பாஜக மூத்த தலைவர்களின் முகங்கள் இருண்டிருந்த நிலையில் ராகுல் காந்தி கவலைப்படாமல் செயல்பட்டார். இந்த நம்பிக்கைதான் அவரைத் தனது பாதையில் முன்னெடுத்துச் செல்லும்.

கடந்த 60 ஆண்டுகளாக நாட்டில் எதுவும் நடக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளில்தான் அனைத்தும் நடந்தது என்று நினைப்போர் மனிதப்பிறவிகளா? அல்லது முட்டாள்களா?

"இந்தியா கடந்த ஓராண்டில்தான் சுதந்திரம் பெற்றது. சுதந்திரத்திற்காக 150 ஆண்டுகள் போராட்டம் நடத்தப்பட்டது என்பதெல்லாம் சுத்தப் பொய்!” – என்று புதியதொரு வரலாறு எழுதப்பட்டாலும் ஆச்சரியப்படு வதிற்கில்லை என்று சாம்னா தலையங்கம் காட்டமாக குறிப்பிட்டுள்ளது.

குஜராத், ஹிமாசலப் பிரதேச தேர்தல் வெற்றிகள் பாஜக கொண்டாட ஒன்றுமேயில்லை. 2019 தேர்தல் வெற்றிகளுக்கான முன்னோட்டமும் இதுவல்ல என்று மோடி சர்க்கார் உணர வேண்டிய தருணமிது. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில செல்வந்தர்களின் கைப்பாவையாக பாஜகவும், அதன் இமாலய பிம்பமாக்கப்பட்டுள்ள மோடி சரக்காரும் இனியும் தொடரக்கூடாது என்று மேலெழுந்துள்ள சாமான்ய மக்களின் குரல் இது.   

Share:

Friday, December 8, 2017

படைத்தவனுக்கே அடிபணிவீர்

"மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்! அவ்வாறு செய்வதால் மட்டுமே நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். 

அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் ஆக்கினான். 

அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகின்றான். 

எனவே, இவற்றை எல்லாம் நீங்கள் அறிந்திருந்தும் இறைவனுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்" ~(திருக்குர்ஆன்: 2:21,22)
Share:

இவரே வெற்றியாளர்

"அவர்கள் எத்தகையவர்கள் என்றால், 

• மறைவானவற்றை நம்புகிறார்கள்.

• மேலும், தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள்.

• நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள்.

• மேலும், உமக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் - வேதத்தின் மீதும் -

• உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்.

• இறுதித் தீர்ப்பு நாளின் - மறுமை - மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கிறார்கள்.

இவர்கள்தான் தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள்.

மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள்"

~ (திருக்குர்ஆன்: 2:3-5)


Share:

இறைவனின் வேதமிது

இது இறைவனின் வேதமாகும்.

இதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

இறையச்சமுடையோர்க்கு இது சீரிய வழிகாட்டியாகும். ~ (திருக்குர்ஆன்: 2:2)
Share:

Thursday, December 7, 2017

பொறாமை நற்செயல்களை அழிக்கிறது

பொறாமையை இஸ்லாம் ‘ஹராம்’ (விலக்கப்பட்டது) தீய செயலாக எச்சரிக்கிறது. பொறாமை கொள்பவர்களின் தீங்குகளிலிருந்து அபயம் தேடிக் கொள்ளும்படி தனது திருத்தூதரான நபிகளாரை இறைவன் எச்சரிக்கிறான். பொறாமை, இறை நம்பிக்கையார் உள்ளத்தில் உறைவிடம் கொள்ளவே முடியாது என்று அறிவுறுத்தும் நபிகளார் இன்னும் எச்சரிக்கிறார். >>> இக்வான் அமீர் <<<
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நபிகளாரின் திருச்சபை வழக்கம் போல, ‘மஸ்ஜிதுன் நபி’யில் கூடியிருந்தது. நபிகளாரின் அருளுரைகளைக் கேட்டு அவற்றைத் தங்கள் வாழ்வில் செயல்படுத்தத் தயாராய் நபித்தோழர்கள் அங்கு குழுமியிருந்தனர். அவர்களிடம் நபிகளார் சொன்னார்: “தோழர்களே, இப்போது சுவனவாசி ஒருவர், உங்கள் முன் வர இருக்கிறார் பாருங்கள்”

நபிகளாரின் மதிப்புக்குரிய அந்த மனிதரைப் பார்க்க நபித்தோழர்கள் ஆவலுடன் காத்திருக்க அங்கே மதீனாவாசியான அன்சாரியின் தோழர் ஒருவர் வந்தார். தொழுவதற்குத் தயாராய் தாடியில் நீர் சொட்டச் சொட்ட, தனது செருப்புகளை சுமந்துகொண்டு அவர்களைக் கடந்து சென்றார்.

இரண்டாவது நாளும் அவர் அங்கே வந்தார். மூன்றாவது நாளும் இப்படியே நடந்தது. நபிகளாரும் சுவனவாசிக்குரிய அந்த அன்சாரியின் தோழரை முன்அறிவிப்பு செய்தார்.

மூன்று நாட்கள் கழிந்தன

இதைக் கேட்டு அங்கு குழுமியிருந்த நபித்தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அம்ர் வியப்படைந்தார். நபிகளாரின் திருச்சபை கலைந்ததும், நபிகளாரால் சுவனவாசி என்று அறிவிக்கப்பட்ட அன்சாரி தோழரிடம் சென்றார். ஒரு மூன்று நாள் அவரோடு தங்கியிருக்க அனுமதி வேண்டினார். அவரும் அதற்குச் சம்மதித்தார்.

அன்சாரியின் தோழரோடு மூன்று நாட்கள் தங்கியிருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் எந்தவிதமான பிரத்யேக வணக்கமுறைகளையும் அவரிடம் காணவில்லை. எல்லாம் வழக்கம்போலவே இருக்கக் கண்டார். ஆனால், அவர் தூங்கச் செல்லும்போது, இறைவனை நினைவுகூர்ந்து தியானிப்பவராக இருந்தார். அதேபோல, யாரைக் குறித்தும் எவ்விதமான தீயவார்த்தைகளையும் அவர் கூறாமலிருப்பதையும் கண்டார். இப்படியே மூன்று நாட்களும் கழிந்தன.

வழக்கமான நடத்தைகள் கொண்ட ஒருவரை ‘சுவனவாசி’ என்று நபிகளார் முன்அறிவிப்பு செய்தது எப்படி? குழம்பித் தவித்த அப்துல்லாஹ் பின் அம்ர் தனது சந்தேகத்தை விடைபெறும்போது, அந்த அன்சாரி தோழரிடம் கேட்கவும் செய்தார்.

அதைக் கேட்ட அன்சாரி தோழர், புன்முறுவலுடன் சொன்னார்: “சகோதரரே! நீங்கள் மூன்று நாட்கள் என்னோடு தங்கியிருந்து கண்டது முழுக்க முழுக்க உண்மைதான்! அதே நேரத்தில் நீங்கள் காணாத ஒரு விஷயமும் இருக்கிறது. நான் யார் மீதும் குரோதம் கொள்வதில்லை. அதேபோல, பிறருக்கு இறைவனால் அருளப்படும் அருட்கொடைகளைக் கண்டு பொறாமைப்படுவதும் இல்லை!”

இந்த அருங்குணங்கள் பெற்றிருந்ததாலே அந்த அன்சாரி தோழர், சுவனவாசி என்று நபிகளாரால் முன்னறிவிப்பு செய்யப்பட்டார் என்பதை அப்துல்லாஹ் பின் அம்ர் புரிந்து கொண்டார்.

பொறாமையை இஸ்லாம் ‘ஹராம்’ (விலக்கப்பட்டது) தீய செயலாக எச்சரிக்கிறது. பொறாமை கொள்பவர்களின் தீங்குகளிலிருந்து அபயம் தேடிக் கொள்ளும்படி தனது திருத்தூதரான நபிகளாரை இறைவன் எச்சரிக்கிறான். பொறாமை, இறை நம்பிக்கையார் உள்ளத்தில் உறைவிடம் கொள்ளவே முடியாது என்று அறிவுறுத்தும் நபிகளார் இன்னும் எச்சரிக்கிறார்.

“பொறாமையிலிருந்து விலகியிருங்கள். ஏனென்றால், நெருப்பு விறகுகளை எரித்துவிடுவதைப் போல, பொறாமை நற்செயல்களை அழித்துவிடுகிறது”

(தி இந்து - தமிழ், ஆனந்த ஜோதி இணைப்பில் 30.11.2017 அன்று பிரசுரமான எனது கட்டுரை)

இந்துவில் வாசிக்க: http://tamil.thehindu.com/society/spirituality/article21085286.ece

Share:

The Hunters - கடலோடிகள்

Share:

பாஜகவின் அறுவடை காலமிது


விதைப்பவைதானே முளைக்கும். ஆம்.. இது பாஜகவின் அறுவடைக்காலம். விதைப்பவை முளைக்கின்றன..!

சமய துவேஷங்களாலும், அதன் விபரீத விளைவு அச்சத்தாலும், வெறுப்பு அரசியலாலும் வளர்ந்த பாஜகவின் அறுவடைக்காலம் இது.

குஜராத்தில் இடஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தை முன்னெடுத்தவரும் ‘படிதார் அனாமத் அந்தோலன்’ அமைப்பின் தலைவருமான ஹர்திக் படேல் ‘தி இந்து – தமிழ்’ (07.12.2017) அளித்துள்ள பேட்டி இதை இன்னும் உறுதிபடுத்துகிறது.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துதானே ஆக வேண்டும்..?

ஆனால், துரதிஷ்டவசமாய் இந்தியர்கள், பாஜகவின் முடிசூடல்களுக்காக கொடுத்த விலையோ சொல்லி மாளாதது.

பறிக்கப்பட்ட பெண்களின் மானம், கருறையிலிருந்து குத்திக் கிழிக்கப்பட்ட சிசுக்களின் உயிர்கள், விண்ணுயர தீச்சுவாலைகள் எழுந்து அதில் பொசுக்கப்பட் நாட்டின் நீதி, நியமங்கள், இட்டுக்கட்டப்பட்டு துப்பாக்கி குண்டுகளால் பறிக்கப்பட்ட அப்பாவிகளின் உயிர்கள் என்று இந்தியர்கள் அர்ப்பணித்துள்ள தியாகம் இணையற்றது. பாஜகவிடமிருந்து மற்றுமோர் சுதந்திரத்துக்காக கொடுத்த விலையின் முன்பணம் இது.

குஜராத்தில் தற்போது பாஜக தோற்கலாம். வெல்லலாம். ஆனால், அது எதை விதைத்ததோ அதை இன்றில்லாவிட்டாலும் நாளை அறுவடை செய்துதான் ஆக வேண்டும். இனி ஹர்திக் படேல் சொல்வதைக் கேளுங்கள்   -  இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''

? குஜராத் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரம் செய்து வரும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

! குஜராத்தில் பாஜகவின் ஆட்சியில் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். பாஜகவின் மிக மோசமான ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இந்த ஆட்சியில் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், வர்த்தகர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என யாருமே மகிழ்ச்சியாக இல்லை. எனது பிரச்சாரக்கூட்டங்களுக்கு ஏராளமான அளவில் மக்கள் வருகின்றனர். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராகி விட்டனர்.

? ஆனால் உங்கள் பிரச்சாரத்திற்கு வரும் கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறாது என பாஜகவினர் கூறுகின்றனேரே?

! குஜராத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற மக்களின் மனநிலையை என்னால் உணர முடிகிறது. பாஜகவினர் கூறுவது உண்மை என்றால் பிறகு ஏன் அவர்கள் பயப்பட வேண்டும். பாஜகவின் மீது நம்பிக்கை இழந்த மக்கள், ஏராளமான அளவில் எனது பிரச்சாரக்கூட்டங்களுக்கு திரண்டு வருகின்றனர். படேல் சமூக மக்கள் மட்டுமின்றி பழங்குடியினர்கள் கூட எனது கூட்டத்திற்கு அதிகஅளவில் வருகின்றனர். இடஒதுக்கீடு போராட்டத்தை விலக்கிக் கொள்ள எனக்கு பாஜகவினர் 1,200 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசினர். இதை மீண்டும் மீண்டும் கூறுகின்றேன். ஆனால், படேல் சமூக மக்களுக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த குஜராத்தின் நலனுக்காக அதை நான் நிராகரித்து விட்டேன். அதே பாஜகவினர் தற்போது தேர்தலுக்காக, 5 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கின்றனர்.

? இடஒதுக்கீடு தவிர இந்த தேர்தலில் நீங்கள் முன் வைக்கும் திட்டம் என்ன?

! அரசியலில் தலைமையை வழிபடும் கலாச்சாரத்தை முற்றிலுமாக வெறுக்கிறேன். சர்தார் வல்லபாய் படேல் இந்த கலாச்சாரத்திற்கு எதிராக குரல் கொடுத்தார் அவரது வழியை நானும் பின்பற்றுகிறேன். மக்கள் தங்கள் உரிமைக்காக போராட அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

? குஜராத் தேர்தலில், உங்கள் பிரச்சாரத்தால் மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறீர்களா?

! நிச்சயமாக நான் முழு நம்பிக்கையுடன் உள்ளேன். பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படும் பாஜகவின் நடவடிக்கையை குஜராத்தின் அனைத்து தரப்பு மக்களும் எதிர்க்கின்றனர். வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவிக்கின்றனர். தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அழுது புலம்புகின்றனர். மாநிலம் முழுவதும் சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. கல்விக்காக மக்கள் செலவழிக்கும் பணம் அதிகரித்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை பற்றி பாஜகவினர் பேசுகின்றனர். குஜாரத்தின் உள்பகுதி சாலைகளை பாருங்கள். பாஜக ஆட்சியில் அவை மிக மோசமாக உள்ளது.

? குஜராத் முதல்வர் விஜய் ரூபானி போட்டியிடும் ராஜ்கோட் மேற்கு தொகுதியில் உங்கள் பிரச்சாரக் கூட்டத்திற்கு பிறகு உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்கள் கூட்டத்திற்கு செலவு செய்தது யார் என்பது குறித்து தேர்தல் ஆணையமும் விசாரணை நடத்துகிறதே?

! இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதற்கும் தயாராக உள்ளனர். எவ்வளவு மோசமாக நடந்து கொள்ளவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதால் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. இடஒதுக்கீடு போராட்டத்தின் போதும் இதேபோன்ற செயலில் அவர்கள் ஈடுபட்டார்கள். என் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள். எங்கள் அமைப்பை சேர்ந்த சிலருக்கு பணம் கொடுத்து போராட்டத்தை உடைக்க பார்த்தார்கள். இறுதியில் அவர்களின் செயல் வெட்ட வெளிச்சமானது. குஜராத் மக்கள் அவர்களை பார்த்துக் கொண்டு தான் உள்ளனர். இந்த தேர்தலில் சரியான தீர்ப்பு வழங்குவர்.



Share:

Wednesday, December 6, 2017

பொதுவெளியில், ஒற்றைச் சொல்லாடல்களால் குறைந்துவிடப் போவதுதான் என்ன?

 
நான் அழுத்தமாக சொல்ல வருவது இதுதான்:

நபிகளார் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் மொத்த மனித இனத்துக்கானவர்.

இன்னும் விரிவாக சொல்லப்போனால் நபிகளார் மொத்த உயிரினத்துக்கானவர்.

அதனால், அவரை முஸ்லிம்  சமுதாயத்துக்குள் மட்டும் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டாம். பொதுவெளியில் அன்னியப்படுத்தவும் வேண்டாம். ~ இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எனது பெருமதிப்பிற்குரிய நண்பர் கோவை Abdul Hakkim அப்துல் ஹகீம் ஒரு செய்தியை இன்பாக்ஸில் https://www.facebook.com/jih.kovai.1/posts/524138047961762 அனுப்பியிருந்தார். அதை சொடுக்கினால் மற்றொரு பக்கத்தில் கண்ணாடி என்ற தலைப்பில் ஓர் அழகிய நபிமொழி அதன் விரிவாக்கத்துடன் இருந்தது.

அதை அப்படியே கீழே தந்துள்ளேன்.

நண்பர்கள் அதை முதலில் படித்துவிட்டு தொடர்ந்து எனது கருத்துக்களை வாசித்தல் நலம் என்று கருதுகிறேன்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கண்ணாடி..!!
'''''''''''''''''''''''''''
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமின் சகோதரராவார். அவருக்கு உதவி-ஒத்தாசை ஏதுமளிக்காமல் அவரை வெறுமனே விட்டுவிடமாட்டார். அவரிடம் பொய்யுரைக்கமாட்டார். அவருக்கு அநீதி இழைக்கவும் மாட்டார். மேலும், திண்ணமாக உங்களில் ஒருவர் தம் சகோதரருக்குக் கண்ணாடியாவார். அவரிடம் ஏதேனும் குறையை அவர் கண்டால் அதனை அவரை விட்டு அகற்றிவிடட்டும்.” நூல்: திர்மிதி, மிஷ்காத்

இந்த நபிமொழியில் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு கண்ணாடி போன்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உவமை மூலம் ஒரு முஸ்லிமுடன் மற்றொரு முஸ்லிமுக்கு உள்ள தொடர்பு பின்வரும் முறைகளில் அமைந்திருப்பது தெரியவருகிறது.

• உண்மையில் முகத்தில் எவ்வளவு கரைகள்-குறைகள் உள்ளனவோ அவற்றையே கண்ணாடி காண்பிக்கின்றது. அவற்றில் குறைப்பதுமில்லை, கூட்டுவதுமில்லை.

• அக்குறைகளைக் கூட முகக் கண்ணாடியின் முன்னாள் இருக்கும்போது மட்டுமே காட்டுகிறது.

• எவரேனும் ஒருவர் கண்ணாடியில் தன் குறைகளைக் கண்டதும் கண்ணாடியின் மீது கோபத்தை வெளிப்படுத்தினார் என்று கேள்விப்பட்டதில்லை. மாறாக நன்றி கூறாமல் மௌனமாய் இருந்தவாறு கண்ணாடியை பாதுகாப்பாக வைக்கின்றனர்.

• கண்ணாடி முகத்திற்கு முன் இருக்கும் வேலையில்தான் முகத்தின் குறைகளைக் காண்பிக்கிறது.

கண்ணாடி உவமை மூலம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இதில் நமக்கு கீழ்காணும் நான்கு அறிவுரைகளை வழங்குகின்றார்கள்.

1. உண்மையில் ஒரு முஸ்லிமிடம் எந்த அளவுக்கு குறைகள் உள்ளனவோ அந்த அளவிற்கு மட்டுமே அவரது குறைகளை எடுத்துக் கூறுங்கள்.
2. குறைகளை நேரடியாக அவரின் முன்னால் கூறவேண்டுமே தவிர அவர் இல்லாதபோது கூறாதீர்கள்.
3. குறைகளைச் சுட்டிக்காட்டுபவரை அல்லது விமர்சிப்பவரை கோபித்துக்கொள்ளாதீர், மாறாக அவருக்கு நன்றி கூறுங்கள்.
4. பிறரை விமர்சிப்பதாலும் அல்லது அறிவுரை கூறுவதாலும் தான் சிறந்தவன், உயர்ந்தவன் என்பதை வெளிப்படுத்தலாகாது. தற்புகழ்ச்சியையோ தேவையற்ற புகழையோ விரும்பலாகாது.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
மேலே குறிப்பிட்டுள்ள நபிமொழியும், அதன் வீச்சும் மிகவும் பிரமாண்டமானது. ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரையும் வசீகரிப்பது. சமயங்களைத் தாண்டி ஒவ்வொரு தனிநபரையும் ஈர்த்து சீர்த்திருத்த வைப்பது.

ஒரு முஸ்லிமாக நின்று முஸ்லிம்களுக்கான வெளியில் இதே நபிமொழியை கேட்டு நான் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்.

அண்ணலாரின் ஆளுமைப் பண்பால் எனக்கு முன்னிருந்தோர் ஈர்க்கப்பட்டதைப் போலவே ஈர்ப்புக்கு ஆளாகி நானும் அந்த மாபெரும் வரலாற்றில் கரைந்திருக்கிறேன்.

ஆதாரப்பூர்வமான அண்ணலாரின் சொல்லுரைகளைத் தேடித்தேடி வாசித்திருக்கிறேன். அந்த ஆதாரங்களை எனது எழுத்து, சொல்லுக்கு குழிகற்களாக அமைத்திருக்கிறேன். அவற்றை எனது வாழ்வில் பொருத்தி அதை செம்மைப்படுத்தி அழகாக்கி இருக்கிறேன்.

ஆனால், இந்த செம்மையை, நபிகளாரின் ஆளுமைப் பண்புகளை, நட்சத்திரப்பூக்களாய் மின்னும் அந்த ஒளிக்கீற்றுகளை பொதுவெளியில் சேர்ப்பது எப்படி?

இதற்கான எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முன் நீங்கள் ஏற்கனவே வாசித்த கண்ணாடியை நானும் 'தி இந்து தமிழ் ஆனந்த ஜோதி' இணைப்பில் எழுதியிருக்கிறேன்.

கீழே தந்துள்ள அவ்வரிகளை சற்றும் சிரமம் பார்க்காமல் வாசிக்கும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நபிகள் மொழி: கண்ணாடியின் ஐந்து குணங்கள்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

உங்களில் ஒருவர் மற்றொரு சகோதரருக்குக் கண்ணாடி போன்றவராவார். எனவே, தம் சகோதரரிடம் ஒரு குறையைக் கண்டால் அதனைக் களைய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

கண்ணாடி நேருக்கு நேராக குற்றங்குறைகளைக் காட்டிவிடுகிறது. விலகி நின்றால் மௌனமாகிவிடுகிறது. பிறர் குற்றங்களை நேருக்கு நேராகக் காட்ட வேண்டும். அவர்கள் குறித்து புறம் பேசக் கூடாது. இதுவே முதல் அம்சம்.

முகத்தில் உள்ள குறைகளை உள்ளதை உள்ளபடியே காட்டுகிறது கண்ணாடி. மிகைப்படுத்தியோ குறைத்தோ ஒருக்காலும் காட்டுவதில்லை. சக மனிதர்களின் குற்றங்குறைகளை மிகைப்படுத்தியோ, குறைத்தோ காட்டாதீர் என்பது இரண்டாம் அம்சம்.

உங்கள் சகோதர்களின் குறைகளைக் கண்டறிய அவர்களைப் பின்தொடர்ந்து திரியாதீர்கள். தமது சகோதரரின் மறைவான குறைகளை வெளிப்படுத்த ஒருவர் முற்படுவாராயின், இறைவனும் அந்த மனிதரின் மறைவான குறைகளை வெளிப்படுத்திவிடுவான். பிறகு அவர் அவமானத்தால் கூனிக்குறுகிப் போக வேண்டியிருக்கும் என்று நபிகளார் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எச்சரிக்கிறார்.

கண்ணாடி, எவ்வித எதிர்பார்ப்பும் சுயலாபமும் இன்றித் தனது கடமையைச் செய்கிறது. யாரிடமும் பகைமை, குரோதத்தைக் காட்டுவதில்லை. யாரையும் பழிவாங்குவதுமில்லை. கோபதாபங்களின்றி, எதிரிலிருப்பவர் அழகிய தோற்றம் பெறக் கண்ணாடி உதவுவதுபோலவே சக மனிதர்களின் அகம், அழகுபெற உதவ வேண்டும் என்பதே மூன்றாவது அம்சம்.

கண்ணாடியில் முகம் பார்ப்பவர், தமது குற்றங்குறைகளைக் கண்டு வெறுப்படைவதில்லை. கோபப்படுவதில்லை. கோபத்தைக் கண்ணாடி மீது காட்டுவதுமில்லை. மாறாக அழகுபடுத்திக் கொள்வதிலேயே முனைப்பு காட்டுகின்றான். மகிழ்ச்சியோடு கண்ணாடியைத் துடைத்து வைத்துப் பாதுகாக்கிறான். உங்கள் குற்றங்குறைகளை நளினமாகச் சுட்டும்போது வெறுப்படையாதீர்கள். கோபப்படாதீர்கள். மாறாக, மகிழ்ச்சியடைந்து, சக மனிதர்களின் தோழமையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். சீர்த்திருத்தத்துக்குத் தயாராகுங்கள் என்பதே கண்ணாடி சொல்லும் அடுத்த அம்சம்.

தோழமைக்குக் கண்ணாடி உவமானப்படுத்தப் பட்டிருப்பது சக மனிதர்களிடம் நிலவும் நட்பும் தோழமையும் அன்பின் வடிவமாக நலன்விரும்பியாகத் திகழ வேண்டும் என்பதற்குத்தான்!

நீங்கள் உங்கள் நண்பர்களின், சக மனிதர்களின் சுகதுக்கங்களில் பங்கெடுங்கள். உங்கள் விமர்சனங்கள், மன உருக்கம் என்னும் அந்த அன்பில் கரைந்துவிடும். உள்ளங்கள் பிணைந்துவிடும்.

அன்பளிப்புகள் சிறியதானாலும் பெரிதானாலும், அவை மனித உள்ளங்களைப் பிணைக்கும் என்பதை உறுதிப்படுத்தி நபிகளார் இப்படிச் சொல்கிறார்.

“ஒருவர் மற்றொருவருக்கு அன்பளிப்புகளை அளித்தவண்ணம் இருங்கள். இதனால், பரஸ்பரம் அன்பு பெருக்கெடுக்கும். உள்ளங்களிலிருந்து கபடங்கள் விலகும். ஒருவர் ஓர் ஆட்டின் கால்களை எனக்கு அன்பளிப்பாக வழங்கினாலும் நான் அவற்றை அவசியம் ஏற்றுக்கொள்வேன். ஒருவர் ஆட்டின் கால்களை சமைத்து விருந்து வைத்தாலும் நான் கட்டாயம் அந்த விருந்தை ஏற்றுக்கொள்வேன்!”

http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8532117.ece

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எழுத்து நடையோ, சொற்சிறப்புகளோ அவற்றுக்கான வலியுறுத்தலோ எனது எழுத்தின் நோக்கமல்ல என்பதை முதலிலேயே தெரிவித்து விடுகிறேன்.

என்னிலும் அழகாய் எழுதுபவர்கள், சொல்லடுக்குபவர்கள், திறமையானவர்கள் அதிகமதிகம் என்பதை நன்கறிவேன்.

நான் அழுத்தமாக சொல்ல வருவது இதுதான்:

நபிகளார் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் மொத்த மனித இனத்துக்கானவர்.

இன்னும் விரிவாக சொல்லப்போனால் நபிகளார் மொத்த உயிரினத்துக்கானவர்.

அதனால், அவரை முஸ்லிம்  சமுதாயத்துக்குள் மட்டும் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டாம். பொதுவெளியில் அன்னியப்படுத்தவும் வேண்டாம்.

உலக மக்களுக்கு அருளாக அனுப்பப்பட்ட அண்ணலாரை எல்லோரும் கொண்டாட விடுங்கள். அவரை எல்லோரும் அணுகும்விதமாக சொல்லாடல்களைக் கையாளுங்கள். மண்ணுக்கேற்ற மைந்தராய் அவர் மனித உள்ளங்களை ஈர்க்க வழிவிட்டு நில்லுங்கள்.

முஃமின் என்பவர் முஸ்லிம் என்பது விளங்கிக்  கொள்ளக்கூடியதுதான். ஆனால், பொதுவெளியில் இறைநம்பிக்கைக் கொண்டவர் என்றால் குறைந்துவிடப்போவதுதான் என்ன?

அந்த ஒற்றைச்சொல்லாடலால், நபிகளார் எனக்குமானவர், என் நலனும் நாடுபவர் என்று ஒவ்வொரு சமயத்தாரும் எண்ணி பூரிக்க வழிவகுத்தால்தான் என்ன?

ஆதாரங்கள், குறிப்பெண்கள் எல்லாம் தவிர்த்து நேரிடையாய் செய்தியை வைத்தால்தான் என்ன?

எந்த மொழி சிறந்தது என்ற சர்ச்சைக்குள் சிக்காமல், மூலமொழிக்குள்ளேயே நிற்காமல் அவரவர் அழகிய தாய் மொழியில் நபிகளாரை பேசவிட்டால்தான் என்ன?

அடைப்புக்குறிக்குள் எல்லாம் நபிகளாரை வாட்டாமல் பொதுவெளியில் எல்லோருக்குமானவர் என்றொரு உறவை பிணைத்தால்தான் என்ன?

இது போன்ற கேள்விகள், இன்னும் பல கேள்விகள் என்னுள் அடுக்கடுக்காய் எழுவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.
எனது இந்தக் கருத்தில் முரண்படுவர்கள் ஏராளமானோர் இருக்கலாம். ஆதரிப்போரும் இருக்கலாம்.

முரண்படுபவர் தமது கருத்துக்களை முன்வைப்பதைவிட்டு எனக்கு ‘பட்டப் பெயர்களை’ சூட்டாமலிருக்கட்டும்.

ஏனென்றால், எனக்கு நபிகளாரைவிட்டால் வேறு நாதியில்லை என்பதில் மட்டும் உறுதியான நம்பிக்கை இருக்கிறது.

நாத்திகனாக திரிந்து இளமையை வீணடித்த எனக்கு இறைநம்பிக்கை ஊற்றைக் அடையாளம் காட்டி தாகம் தீர்த்தவர்.

ஒப்பற்ற அருங்குணங்களால் என்னை புடம்போட வைத்து என் வாழ்வின் தடம் மாற்றியவர்.

வாழ்வின் அடிதோறும் காலத்தால் அழியாத பொன்மொழிகளால், ஒப்பற்ற வழிமுறைகளால் என்னை கைத்தாங்கலாய் வழி நடத்தி இறையன்புச் சுனையை சுவைக்க வைப்பவர்.

சோர்ந்திருக்கும் போதெல்லாம் தாயுமானவராய் நினைவில் எழுந்து இறையருள் பொழிய வழி வகைச் செய்பவர்.

நாயகமே..! நீரின்றி எனக்கு உய்வில்லை… இறையன்பை பெற்றுத்தரும்  வேறு யாருமில்லை என்றே சான்றளிக்கிறேன்.




 


Share:

Tuesday, December 5, 2017

Monday, December 4, 2017

அருள்வாய் இறைவா..!



"உனக்கே நாங்கள் அடிபணிகின்றோம். மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கின்றோம். நீ எங்களுக்கு நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக! அவ்வழி, எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்களின் வழி. உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாதவர்களின், நெறித்தவறிப் போகாதவர்களின் வழி" (திருக்குர்ஆன்: 1:4-7)
Share:

Thursday, November 30, 2017

Fire Trust

Share:

Monday, November 27, 2017

Friday, November 17, 2017

Tuesday, November 14, 2017

Saturday, November 11, 2017

சீமானுக்கு மடல்: 'அந்த வாசிப்புக்கு தக்க தருணம் இதுதான்!



 அன்புள்ள தம்பி சீமானுக்கு,

“நலம் பெற வாழ்த்துகள்..!”

தங்களை, இந்த மடல் நல்ல உடல் நிலையுடனும், வீரியமான நல்லெண்ணங்களுடனும் சந்திக்கும் என்று நம்புகின்றேன். அதற்காக இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கின்றேன்.

தம்பி சீமான்,

இளமைக்காலந்தொட்டே நீங்கள் முஸ்லிம்களுடன் தொடர்புள்ளோராக இருந்திருப்பீர்கள். இன்னும் மிகச் சிறந்த தொடர்புகள் அந்த சமூகத்திலிருந்து உங்களுக்கு நட்புகளாக கிடைத்திருக்கலாம். அவர்களின் சாயல்கள் உங்களை பாதித்திருக்கலாம். இதன் மூலம் குறைந்தபட்சம் முஸ்லிம்கள் மீதான நல்லபிப்பிராயம்கூட விளைந்திருக்கலாம். இருப்பினும் அவர்களின் கொள்கை, கோட்பாடுகளின் வெளிப்பாடுகளை முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இதை அண்மையில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முஸ்லிம்களின் மேடையில் சில வார்த்தைகளுக்கு விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டது மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய மேடைகளில் இனி தாங்கள் அடிக்கடி கலந்துகொள்ள வேண்டியிருக்கும். தங்களின் பேச்சுரைகள் முஸ்லிம் சமூகத்து இளைஞர்களை பாதித்திருப்பதன் விளைவாக்கூட இருக்கலாம். தங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிப்பதாகவும் இருக்கலாம். அதனால், இஸ்லாம் குறித்து உங்கள் வாசிப்பும், உள்வாங்கலும் இன்னும் அதிகரித்துக் கொள்ள வேண்டியிருக்கும். இதை சொல்லும்போது, நீங்கள் தொப்பி, தாடியுடன் காட்சி அளிக்க வேண்டுமென்றோ, அவர்களின் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கஞ்சி அருந்த வேண்டும் என்பதோ பொருளல்ல. நீங்கள் இஸ்லாம் குறித்து மிக ஆழமாக வாசிக்க வேண்டிய தருணம் இது என்பதுதான் நான் சொல்ல வந்த உள்ளடக்கம்.

உலக மக்கள் தொகையில், நாலுபேருக்கு ஒருவர் முஸ்லிம் என்ற விகிதாச்சாரம் கொண்ட ஒரு சமூகத்தாருடன்தான் தாங்கள் தோள் இணைத்திருக்கிறீர்கள்.

இஸ்லாத்தின் எதிரிகளால், முஸ்லிம்கள் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு விதமான அடக்குமுறைகளுக்கும், அபாண்டங்களுக்கும், பழிபாவங்களுக்கும், அழிச்சாட்டியங்களுக்கும் தொடர்ந்து ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள் தாங்கள் நன்கறிந்தவைதான்.

உலகளவில், இத்தனை சிலுவைகளையும் சுமக்கும் ஒரு சமுதாயமாக இருந்தும் அவர்களை ஒழிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாத்தின் எதிரிகள்.

ஏனென்றால், முஸ்லிம்களுக்கு என்று உலகளாவிய ஒரு வழிகாட்டி வேதநூல் இருக்கிறது. அந்த வேதநூலின் வழியிலான செயலுரும் தந்த ஒரு தூதரும் இருக்கிறார். அந்த போதனைகள் வாழ்வியல் ஆளுமைகளாய் முஸ்லிம்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.

அதனால், மலைப்போல் எழும் துன்பங்களை எல்லாம் முஸ்லிம்கள் அந்த பேரழகிய ஆளுமைகளைக் கொண்டே தற்காத்துக் கொள்கிறார்கள். எதிரிகளால் திட்டமிடப்பட்டு அவர்கள் தொடர்ந்து வீழ்த்தப்பட்டும், அவர்கள் நிலைகுலையாமல் தங்கள் வாழ்வியல் களத்தில் உறுதியுடன் இருக்கிறார்கள். மொழிவாரியாக, இனவாரியாக, நிறவாரியாக, பல்வேறு மண்வாரியாக அவர்கள் தனித்திருந்தாலும் கொள்கையளவில் ஒன்று திரள இந்த அரும் போதனைகளே காரணம்.

தம்பி சீமான்,

நபிகளார் இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கத்தரிசி என்பது ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும். சரி… நபிகளார் கொண்டு வந்த செய்திதான் என்ன தெரியுமா உங்களுக்கு?

ரோமப் பேரரசர் ஹெர்குலஸ். அவர் ‘பைத்துல் முகத்தஸ்’ எனப்படும் ஜெருசலேத்தில் இருந்தபோது, நபிகளார் அவருக்கு எழுதியிருந்த கடிதம் கிடைத்தது. யாராவது ஒரு அரபியர் கிடைத்தால். அவரிடம் நபிகளார் பற்றிய தகவல்களை விசாரிக்கலாம் என்று அவர் காத்திருந்த வேளையில்தான் மக்கத்து குறைஷி பிரமுகர் அபூ சுப்யானையும், அவரது தோழர் சிலரையும் தற்செயலாகச் சந்தித்தார்.

அபூ சுப்யானை நோக்கி ஹெர்குலஸ் இப்படி கேட்டார்: “முஹம்மது உங்களிடம் அப்படி என்னதான் கூறுகின்றார்?’

நபிகளாரிடம் கடும் விரோதம் பாராட்டி வந்தவர் அபூசுப்யான். ஆனாலும், நபிகளார் குறித்து நேர்மையான முறையில்தான் அவரால் பதிலளிக்க முடிந்தது. அவர் இப்படி சொன்னார்:

“ஒரே இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள். வானங்களிலும், பூமியிலும் இறைவனின் ஆட்சியே நடக்கிறது. சர்வலோகங்களிலும் அவனுடைய ராஜாங்கமே நடக்கிறது. இந்த அதிகாரத்திலும், நிர்வாக அமைப்பிலும் அவன் யாரையும் இணை, துணையாக வைத்துக் கொள்ளவில்லை.

இறைவனின் சக்திக்கு நிகர் வேறு சக்தியில்லை. யதார்த்தம் இதுவாக இருக்கும்போது, மனிதர்கள் இறைவனுக்கு மட்டுமே தலை தாழ்த்தி வணங்கிட வேண்டும். அவன் மீதே அன்பு வைக்க வேண்டும்.

இறைவனுக்கு அடிபணிவதிலும், இறைவனை வணங்குவதிலும், இறைவனின் மேலாதிக்கத்திலும் எவரையும் இணை வைக்கக் கூடாது. எல்லாவற்றுக்காகவும் அவனிடமே உதவி கேட்க வேண்டும்.

முன்னோர்களின் கோட்பாடுகளையும், இணைவைப்புச் செயல்களையும் விட்டுவிட வேண்டும்.

தொழ வேண்டும்.

சொல்லாலும், செயலாலும் வாய்மையுடன் வாழ வேண்டும்.

ஆணும் – பெண்ணும் ஒழுக்கத்தையும், கற்பையும் பேணி வாழ வேண்டும்.

சக மனிதர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே! ஒருவருக்கொருவர் சகோதரர்களே! ரத்த உறவு முறைகளே!”

ஹெர்குலஸ் மன்ன்னிடம், நபிகளார் குறித்து கூடுதல், குறைவின்றி இப்படிதான் அபுசுப்யானால் சாட்சி அளிக்க முடிந்தது. நபிகளாரின் அழைப்பு, அன்னார் கொண்டு வந்த திருச்செய்தியின் உள்ளடக்கம் இதுதான்!

‘அம்ரு இப்னு அபஸா’ என்பது அந்த நபித்தோழரின் பெயர். இவர் நபிகளாருக்கு நபித்துவம் கிடைத்த தொடக்கக் காலத்தில் நபிகளாரை மக்கா நகரில் சந்தித்தார். அப்போது அவருக்கும் நபிகளாருக்கும் நடந்த உரையாடல் இது:

“நீங்கள் யார்?”

“நான் இறைவனின் தூதராவேன்!”

“… இறைத்தூதர் என்றால்…?”

“இறைவன் என்னைத் தனது தூதராக.. அனுப்பியுள்ளான்!”

“என்ன செய்தியுடன் இறைவன் உங்களை அனுப்பியுள்ளான்?”

மக்கள் தம் உறவினருடன் இணைந்து வாழ அறிவுறுத்த வேண்டும்!

இறைவன் ஒருவன் என்ற ஏகத்துவக் கொள்கை பரப்ப வேண்டும்!

இறைவனுடன் வேறு எவரையும், எதையும் இணை வைக்கக் கூடாது!

இது போன்ற நோக்கங்களுடன் இறைவன் என்னை அனுப்பியுள்ளான்!”

நபிகளார் தமது வருகையின் நோக்கத்தை வாய்ப்பட ரத்தினச் சுருக்கமாக சொன்னது இது:

"இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையிலான உறவை சீர்ப்படுத்த வேண்டும். அந்த உறவு சரியான அடிப்படைகள் மீது நிறுவ வேண்டும். அதற்கான அடிப்படை …. ‘இறைவன் ஒருவன்’ – என்ற ஏகத்துவமாகும். இறைவனின் அதிகாரத்தில் வேறு எவரது தலையீட்டையும் அனுமதிக்கக் கூடாது! இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். இறைவனின் கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும்.

மனிதர்களுக்கிடையிலான சரியான தொடர்பின் அடிப்படைகள் பரஸ்பர அனுதாபமும், பரிவும், இரக்கமுமேயாகும். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள். ரத்த பந்த உறவு முறையினர். அதனால், ஒருவர் மற்றொருவரிடம் பரிவுடனும், இரக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் அநீதிக்கு ஆளாகும்போது, அனைவரும் அநீதி இழைக்கப்படுபவருக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழ வேண்டும். ஆபத்தில் சிக்கிக் கொண்டோரை ஓடோடிச் சென்று காக்க வேண்டும்"

நபிகளாருக்கு முன் எல்லா இறைத்தூதர்களும் இந்த அடிப்படைச் செய்திகளைத்தான் சொன்னார்கள். அதாவது, ஏகத்துவம் எனப்படும் ஓரிறைக் கொள்கையும், மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும் … முதல் இறைத்தூதருமான ஆதிபிதா ஆதம் அவர்களின் சந்ததிகள். சகோதர உறவுமுறை கொண்டவர்கள் என்பதுதான் அனைத்து இறைத்தூதர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியின் சாராம்சம்.

முகீரா பின் ஷீஃபா மற்றொரு நபித்தோழர்.

ஒருமுறை, பாரசீகத்து தளபதி ருஸ்தூமுடன் நடந்த உரையாடலில் சொன்னார்:

“அய்யா! நாங்கள் வணிகர்கள் அல்ல. வணிகத்துக்கான புதிய புதிய சந்தைகளைத் தேடிக் கொண்டிருப்பதற்கு! அது எங்கள் நோக்கமும் அல்ல; எங்கள் இலக்கும் அல்ல. எங்களது நோக்கமும், குறிக்கோளும் மறு உலகம்தான்!

நாங்கள் இறைவனின் கட்டளைகளான இஸ்லாத்தின் கொடியை தோளில் சுமந்து நிற்பவர்கள். அந்த வாழ்க்கையின் பக்கம் மக்களை அழைப்பதே எங்கள் குறிக்கோள். வணக்கத்துக்குரியவன் ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதும், முஹம்மது நபிகளார் இறைவனின் திருத்தூதர் என்று சான்று பகர்வதும் இந்த மார்க்கத்தின் அடிப்படை. மனிதன் தன்னைப் போன்ற சக மனிதனுக்கு அடிபணிவதிலிருந்து அவனை விடுத்து இறைவனுக்கு அடிபணிந்து வாழச் செய்ய வேண்டும் என்பதும் இந்த வாழ்க்கை நெறியின் அறிவுரையாகும்!”

இதைக் கேட்ட பாராசீக தளபதி வியந்து சொன்னார்:

“நல்ல அறிவுரைதான்! இன்னும் என்ன சொல்கிறது உங்கள் மார்க்கம்?”

அதற்கு நபித்தோழர் முகீரா பதிலளித்தார்:

“மனிதர்கள் அனைவரும் ஆதமின் வழித்தோன்றல்களே! அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்பதும் அந்த அறநெறியின் போதனைகளாகும்”

இவை நபிகளார் கொண்டு வந்த இஸ்லாம் என்னும் இறைநெறியின் அடிப்படை செய்திகளில் சில. எவர் விரும்புகின்றாரோ அவரை மனிதர்களின் அடிமைப்படும் தளைகளிலிருந்து விடுவித்து இறைவனுக்கு, எங்கும் வியாப்பித்திருக்கும் அந்த பரம்பொருளுக்கு அடிபணியும் வாழ்க்கை நெறிக்கு அழைத்துச் செல்லும் திருப்பணி இது.

படைத்தவனின் கட்டளைப்படி மனித குலத்தை வாழ அழைப்பதே நபிகளாரின் திருச்செய்தியாகும்.

இஸ்லாம் குறித்து தாங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய வாசிப்புக்கு மேலே நான் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் உங்களுக்கு துவக்கமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

நபிகளார் இந்த திருச்செய்தியை முன்வைத்துதான் காலங்காலமாக பிளவுப்பட்டுக் கொண்டிருந்த பல்வேறு குலங்களை, கோத்திரங்களை, உட்கிளைகளை ஒன்றிணைத்து ஒரு தாய் மக்களாக காட்டினார்கள். உலகளாவிய மார்க்கமாய் இஸ்லாத்தை நிலைநிறுத்தினார்கள்.

அதனால், சீமான் இனி தாங்கள் இத்தகைய வரலாறுகளை எல்லாம் வாசித்தேயாக வேண்டியிருக்கும்.

வாழ்க, ஒழிக என்ற கோஷங்களை உச்சரிக்காத முஸ்லிம் பெருமக்களின் மேடைகளை அப்போதுதான் உங்களால் அலங்கரிக்க முடியும்.

எந்த உசுப்பேத்தலுக்கும் ஆளாக்க முடியாத முஸ்லிம் இளைஞர்களின் நன்மதிப்பையும் பெற முடியும். உங்கள் கொள்கை – கோட்பாடுகள், முஸ்லிம்களின் கொள்கை, கோட்பாடுகள் ஆகியவற்றின் ஊடே ஒரு பொதுவெளியை உருவாக்கிக் கொள்ள முடியும்.

உங்களின் நன்மையான பணிகளில் முஸ்லிம் இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கொள்ளவும் முடியும்.

தம்பி சீமான்,

இந்த மடலை ஒரு பத்து நாட்களுக்கு முன்னரே தங்களுக்கு எழுத இருந்தேன். நேரமின்மையால் தாமதமானது.

தங்களுக்கு மடல் எழுத இருப்பதை எனது நண்பர் பாலாவிடம் பகிர்ந்து கொண்டபோது அவர் சொன்னார்: முதலில் மக்களை பிளவுபடுத்த வேண்டாம் என்று அவரிடம் சொல்லுங்கள்.!” இத்தனைக்கும் அவர் பத்தரைமாற்று தமிழர். இந்த மண்ணின் ஆதிகுடி!

ஆட்சி, அதிகாரம் வெறும் இனம் சார்ந்ததல்ல. எந்த மதம், மொழி சார்ந்ததும் அல்ல. இந்திய உபகண்டத்தின் அதிகார வரலாறே அதற்கான சாட்சி. பாரசீகத்திலிருந்து வந்த முகலாயர்கள், முஸ்லிம் மன்னர்கள். அவர்களின் உயரிய விழுமியங்கள் நசிந்துபோன நிலையில், வெள்ளைத்தோலுடன், பழுப்பு நிறக் கண்களுடன் எங்கிருந்தோ வந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் என்று கடந்தகால வரலாறு சாட்சியாய் நம் முன் நிற்கிறது.

மனித மனங்களை கொள்ளைக் கொள்ளும் நல்லாட்சியரே நமது நாட்டின் இன்றைய தேவை.

என் கருத்துக்களை பரிசீலியுங்கள். முயலுங்கள். வெற்றியடைவீர்கள்.

இறைவன் நாடினால் மீண்டும் மற்றொரு அறிவுறுத்தலோடு உங்களைச் சந்திப்பேன்.

அன்புடன்,

தங்கள் சகோதரன்,

இக்வான் அமீர்

மூத்த இதழியலாளர்.
Share:

Friday, November 10, 2017

திப்பு சுல்தான்: மதச்சார்பின்மையின் மகத்தான முன்னோடி!



இன்று மாவீரர் திப்பு சுல்தான் பிறந்த தினம் .திப்புவின் மதச்சார்பின்மைக் குறித்து தி இந்து, (தமிழ்) ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. கட்டுரையாளர் செல்வ புவியரசன் அதை எழுதியிருந்தார்.. அக்கட்டுரையை மாற்றான் தோட்டத்து மல்லிகையில் இங்கே பதிவு செய்யப்படுகிறது. (நன்றி: தி இந்து-தமிழ்.10.11.2017)

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

சிறீரங்கப்பட்டணத்தின் புகழ்பெற்ற ரெங்கநாதர் கோயிலிலிருந்து கூப்பிடு தொலைவில்தான் திப்பு சுல்தானின் அரண்மனை இருந்தது. திப்பு மதவெறியராக இருந்ததில்லை என்பதற்கு அந்தக் கோயிலே முதன்மைச் சான்று. இன்றும் நஞ்சன்கூடு கோயிலில் அவர் அளித்த மரகத லிங்கமும் மேல்கோட்டை நரசிம்மர் கோயிலில் அவர் வழங்கிய முரசும் பார்வைக்கு இருக்கின்றன. மேலும், அவரது அரசாங்கத்தால் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளில் 90% இந்து சமய நிறுவனங்களுக்கே அளிக்கப்பட்டன. அதனால்தான் நரசிம்மர் கோயிலில் புராண நிகழ்ச்சிகளை விவரிக்கும் ஓவியங்களுக்கு இடையே திப்பு சுல்தானின் படத்தையும் வரைந்து பெருமை சேர்த்திருக்கிறார்கள். ~- செல்வ புவியரசன்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கர்நாடகத்தில் மூன்றாவது ஆண்டாக திப்பு சுல்தானின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு இந்துத்துவ அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. திப்பு சுல்தான் இந்து மதத்தினரைத் துன்புறுத்தியவர் என்று ஆங்கிலேயர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள புனைந்த கதைகளை இப்போது இந்துத்துவவாதிகள் கையிலெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

திப்பு சுல்தானின் ஆட்சி எல்லையைத் தற்போதைய மாநில எல்லைகளின்படி கர்நாடகத்துக்குள்ளேயே அடக்கிவிட முடியாது. கேரளமும் ஆந்திரத்தின் சில பகுதிகளும் தமிழ்நாட்டின் கொங்குப் பகுதியும் அவரது ஆளுகைக்கு உட்பட்டு இருந்திருக்கின்றன. திப்பு சுல்தான், குடகுப் பகுதியை இணைத்துக்கொண்ட போது 80,000 பேரை இஸ்லாமிய சமயத்துக்கு மதம் மாற்றியதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால், அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் குடகில் 10,000 சொச்சம் பேரே இஸ்லாமியர்களாக இருந்தார்கள் என்று தெரிகிறது. உண்மையில், தனது ஆட்சிக் காலத்தில் திப்புவின் சமய அணுகுமுறை இந்துக்களுக்கு எதிராகவும் இல்லை, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் இல்லை. மதச்சார்பற்ற ஆட்சியையே அவர் நடத்தியிருக்கிறார்.

சுல்தானின் பெருமை

சிறீரங்கப்பட்டணத்தின் புகழ்பெற்ற ரெங்கநாதர் கோயிலிலிருந்து கூப்பிடு தொலைவில்தான் திப்பு சுல்தானின் அரண்மனை இருந்தது. திப்பு மதவெறியராக இருந்ததில்லை என்பதற்கு அந்தக் கோயிலே முதன்மைச் சான்று. இன்றும் நஞ்சன்கூடு கோயிலில் அவர் அளித்த மரகத லிங்கமும் மேல்கோட்டை நரசிம்மர் கோயிலில் அவர் வழங்கிய முரசும் பார்வைக்கு இருக்கின்றன. மேலும், அவரது அரசாங்கத்தால் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளில் 90% இந்து சமய நிறுவனங்களுக்கே அளிக்கப்பட்டன. அதனால்தான் நரசிம்மர் கோயிலில் புராண நிகழ்ச்சிகளை விவரிக்கும் ஓவியங்களுக்கு இடையே திப்பு சுல்தானின் படத்தையும் வரைந்து பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

மராட்டியர்கள் சிருங்கேரி மடத்தைக் கொள்ளையிட்டு, அங்கிருந்த பிராமணர்களைக் கொன்று, சாரதாதேவி யின் பொற்சிலையைக் கொண்டுசென்றபோது, அம்மடத்தின் பணிகள் மீண்டும் தொடர்வதற்குக் கொடைகளை அளித்ததுடன் சிருங்கேரி சங்கராச்சாரியாருக்குப் பாதுகாப்பாக சையத் முகமது என்ற தளபதியையும் ஒரு படையையும் அனுப்பிவைத்தவர் திப்பு சுல்தான்.

திப்பு சுல்தான் கேரளத்தின் மலபார் பகுதியை நோக்கிப் படையெடுத்துச் சென்றபோது, குருவாயூர் கோயிலில் இருந்த பிராமணர்கள் அங்கிருந்த சிலையை மறைத்து வைத்தனர். அவர்களது அச்சத்தை அறிந்த திப்பு சுல்தான், சிலை இருந்த இடத்தில் மீண்டும் அதை நிறுவச் செய்து அக்கோயிலுக்குக் கொடையளித்துத் திரும்பினார். மலபார் பகுதியில் பெண்கள் மேலாடை இல்லாமல் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த திப்பு சுல்தான், அவ்வழக்கத்துக்குக் காரணம் எதுவென்றாலும் அது உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே சச்சரவுகள் எழுந்தபோதும் திப்பு சுல்தான் சமயச் சார்புக்கு ஆளாகிவிடவில்லை. சிறீரங்கப்பட்டணத்தில் நடந்த ஒரு இந்து மத ஊர்வலத்தின்போது இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர். இஸ்லாமிய சமய அறிஞரான பீர்லதா அரசரிடம் புகார் செய்தார். விசாரித்த திப்பு சுல்தான், அந்த ஊர்வலத்தில் சிக்கல் உருவாவதற்கு இஸ்லாமியர்களே காரணம் என்று அறிந்து அவர்களைத் தண்டித்தார். இஸ்லாமியர்களுக்கு ஆதரவு அளிக்கப்படாவிட்டால் நாட்டை விட்டே தான் வெளியேறப் போவதாகப் பயமுறுத்தினார் பீர்லதா. ‘தங்களது விருப்பம் அதுவானால் அப்படியே நடக்கட்டும்!’ என்று பதிலளித்தவர் திப்பு சுல்தான்.

திரிக்கப்பட்ட வரலாறு

1787-ல் திப்பு சுல்தான் வெளியிட்ட பிரகடனம், பிற மதங்களிடம் சகிப்புத்தன்மையே புனித குர்ஆனின் கோட்பாடு என்று தொடங்கி சாதி, மதம், இனம் இவற்றின் பெயரால் மைசூர் அரசின் ஆளுகையில் உள்ள எவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதும் ஒதுக்குவதும் சட்டவிரோதமானது என்று முடிகிறது.

இப்படியெல்லாம் நடந்திருந்தும் திப்பு சுல்தானின் மீது மதவெறியர் என்று பழிசொல்ல நேர்ந்தது எப்படி? திப்பு வரலாற்றை எழுதிய ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் முதல், இரண்டாம் மைசூர் போர்களில் அவரால் சிறைபிடிக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டவர்கள். திப்புவின் வரலாற்றை எழுதிய இஸ்லாமியர்களோ ஆங்கிலேய அரசிடம் ஓய்வூதியம் பெற்றவர்கள். இரண்டு வகையிலும் திப்புவின் வரலாறு திரித்து எழுதப்பட்டிருக்கிறது.

திப்பு சுல்தானுக்கு இந்திய விடுதலைப் போராட்டத் தில் தவிர்க்கவே முடியாத இடம் உண்டு. ஆங்கிலேயர் களுக்கு எதிராக துருக்கி, ஆப்கானிஸ்தான், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆதரவை அவர் பெற முயற்சித்தார். சூழல் கைகூடவில்லை. மராட்டியர்களும் சரி, நிஜாமும் சரி நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லை என்பதால், அவர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்க்கவும் வாய்ப்பில்லாமல் போனது. தோல்வி உறுதி என்றபோதும் ஓடி ஒளியாமல், சரணடையாமல் போரிட்டு மடிந்தது திப்பு சுல்தானின் வீரத்தை எடுத்துச் சொல்லும்.

மைசூரை ஆண்ட இந்து அரசர்களான உடையார் களிடமிருந்து ஹைதர் ஆட்சியைக் கைப்பற்றினார். எனவே, அவரும் அவரது மகன் திப்புவும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்ற பார்வையும் இருக்கிறது. ஔரங்கசீப்புக்கும் அதன் பிறகு மராட்டியர்களுக்கும் கப்பம் கட்டும் சிற்றரசாகத்தான் மைசூர் இருந்தது. உடையார்கள் வலிமை இழந்துபோய் அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் அதன் ஆட்சிப்பொறுப்பை ஹைதர் ஏற்றுக்கொண்டார். அதனால், மராட்டியர்கள் கப்பம் பெறும் வாய்ப்பை இழந்தனர்.

விவசாயிகளின் நண்பர்

திப்பு சுல்தான் தொலைநோக்கு கொண்ட நிர்வாகத் திறமையாளரும்கூட. 17 ஆண்டுகால ஆட்சியில் அவர் மேற்கொண்ட திட்டங்கள் இன்றைக்கும் வியந்துநோக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொழில் மற்றும் வணிகக் கொள்கையை வகுத்த மன்னர் அவர். விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்து, அவற்றை நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்கும் முறையை அறிமுகப்படுத்தியவர். விவசாயம் செய்யப்படாத நிலங்களைக் கண்டறிந்து, அவற்றை நிலமில்லாதவர்களுக்கு அளித்தார்.

நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவியவர், ‘‘குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி அளிக்காத தந்தை கடமையை மறந்தவன்’’ என்று அறிவித்தார். பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்திய திப்பு சுல்தான், அதனால் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பைப் பற்றி கவலைப்படவே இல்லை. திப்பு சுல்தானின் இச்செயலுக்காக அவரை உன்னதமான மன்னர் என்று வியந்து பாராட்டி எழுதியிருக்கிறார் காந்தி. காவிரிக் கரையோரத்தில் இருந்த ஆயுதத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கந்தகக் கழிவால் நதிநீர் மாசுபட்டு, நீர்வாழ் உயிரினங்கள் அழியுமென்று அத்தொழிற்சாலையை வேறிடத்துக்கு மாற்றியவர் திப்பு சுல்தான். இன்றைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அவர் முன்னோடி.

விடுதலை வீரர், சிறந்த நிர்வாகி என்ற காரணங்களுக்காக திப்பு சுல்தான் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டியவர். குறிப்பாக, மதச்சார்பற்ற ஆட்சிமுறைக்காக அவரைப் போற்றுவது இன்றைய சூழலில் மிகவும் பொருத்தம்.

- செல்வ புவியரசன் தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

Share:

Wednesday, October 11, 2017

உலக பெண் குழந்தைகள் தினம்: சுவனத்தின் நுழைவுச் சீட்டுகள்


”யார் மூன்று பெண் மக்கள் அல்லது சகோதரிகளுக்குப் பொறுப்பேற்று அவர்களுக்குக் கல்வி, ஒழுக்கத்தைப் புகட்டி, அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரை கருணையுடனும், பரிவுடனும் அவர்களிடம் நடந்து கொள்கிறார்களோ அத்தகையோருக்கு இறைவன் சுவனத்தைக் கடமையாக்கிவிட்டான்” – என்று நபிகளார் கூறியபோது, அங்கிருந்தவர்களில் ஒருவர், ”ஒரு பெண் குழந்தை இருந்தபோதும் இந்த உயர் பதவி கிடைக்குமா?” – என்று விசாரிக்க ”ஆம்..!” – என்று ஆமோதிக்கிறார் நபிகளார். >>> இக்வான் அமீர் <<<

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
”பெண்ணே! நான் எப்போது திரும்பி வருவேன் என்று தெரியாது! அதோ! உனது கட்டிலுக்குக் கீழே ஒரு பள்ளம் வெட்டியுள்ளேன். பிறக்கப் போகும் குழந்தை ஆணாக இருந்தால்… அதை பத்திரமாய் வளர்த்து வா..! பிறப்பது பெண்ணாக இருந்தால்…. அவளைப் பள்ளத்தில் போட்டு மூடிவிடு!” – நிறைமாத கர்ப்பிணியான மனைவியிடம் வணிகம் நிமித்தம் விடைபெற்றுச் செல்லும் கணவன் சொன்னவை இவை.

குழந்தையும் பிறந்தது, கொழு கொழு பெண் சிசுவாய்! தாய்மைக்கு சிசுவைக் கொல்ல மனம் ஒப்பவில்லை. ஒரு திட்டம் போட்டாள். விளைவு, பெற்ற குழந்தை எதிர்வீட்டில் வளர்ந்தது.

செங்கீரைப் பருவம், தாலப்பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம் என்று குழந்தை வளர்கிறது. சொந்த வீட்டிற்கும் வருகிறது. அங்குள்ளவர்களிடம் ஒட்டிக் கொள்கிறது. ”மாமா..! மாமா..!” – என்று சதா சொந்தத் தந்தையின் மடியிலேயே கொஞ்சி குலாவுகிறது.

இதை மறைந்திருந்து பார்க்கும் பெற்றவளுக்குக் கண்கள் குளமாகின்றன. ”எப்படியோ.. நம் குழந்தை தகப்பனிடம் ஒட்டுதலாகிவிட்டதே!” – பெரு மூச்சு வெளிப்பட்டு மனம் சமாதானமடைகிறது.

ஒரு நாள்.

‘இவ்வளவு பாசத்துடன் குழந்தையிடம் பழகுகிறாரே! உண்மையைச் சொல்லிவிட்டாள் என்ன?’ - என்று யோசித்தாள். சொல்லவும் செய்தாள் அந்த அபலைத் தாய்.

உண்மைத் தொிந்ததும், கணவன் மகிழ்ச்சியால் குதிப்பான் என்று எதிர்பாா்த்திருந்தவளுக்கு அதிா்ச்சி! கண்கள் சிவக்க.. நெஞ்சு துடிக்க.. மனம் கொதிக்க.. ”எங்கே அவள்?” – என்று சீற, சிரித்தவாறு, ”மாமா..!” – என்று வந்தாள் யாழினும் இனிய மழலை மொழியுடன் பிஞ்சு அவள்.

ஓட்டமும், நடையுமாய் ஊருக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. தக்க இடம் தேடி கெல்லினார் பள்ளத்தை.

”ஓ..! மாமா.. புது விளையாட்டு கற்றுத் தருகிறார் போலும்..!” – என்று எண்ணிய குழந்தை தானும் கூடச் சேர்ந்து மண் எடுத்தாள்.

”மாமா! ஓ மாமா..! உங்க தாடி எல்லாம் மண்.. ஹி..ஹி..!” – பிஞ்சுக் கரங்களால்.. தாடியில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டுச் சிரித்தாள். கடைசியில், பள்ளத்தில் தான் இறக்கப்பட்டது ஏனென்று தொியாமல் விழித்தாள். மண் சரிய ஆரம்பித்ததும், கத்தினாள். கதறினாள். ”மாமா..! மாமா..! மா.. மா..!” – குரலோசை முனகலாய் மறைய, புதைகுழி மூடிக்கொண்டது.

முடிந்தது, ஒரு கொலை. தணிந்தது கோபம். பாலைப் பெருவெளியில் மழலையின் மரண ஓலம் கலந்து மறைந்தது.

முந்தைய அறியாமைக் காலத்து அரபு சமூகத்து உசிலம்பட்டிகள் இவை. வீடு தோறும் அரங்கேறிவந்த கொடூரங்கள். வறுமையின் அச்சமும், குலப்பெருமையும் பெண் சிசுக்களின் உயிர் பறிக்கும் காரணங்களாயின.

இதனை ஆணவம் என்பதா? அறியாமை என்பதா? பழகிப் போன முட்டாள்தனம் என்பதா? என்னவானாலும் இந்த அக்கிரமத்துக்கு ஒரு முடிவு வரத்தான் செய்தது!

”வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலைச் செய்யாதீர்கள். நாம்தாம் அவர்களுக்கு உணவளிக்கின்றோம். உங்களுக்கும் உணவளிக்கின்றோம். உண்மையில், அவர்களை கொல்வது பெரும் பாவமாகும்!” –

”எவர்கள் தம் குழந்தைகளை அறியாமையினாலும், மூடத்தனத்தினாலும் கொன்று விட்டார்களோ அவர்கள் நிச்சயமாக பேரிழப்புக்கு ஆளாகிவிட்டார்கள். உண்மையில் அவர்கள் வழித் தவறிப் போய் விட்டார்கள்”

சிசுக் கொலைக்கு முடிவு கட்டி திருக்குர்ஆன் வசனங்கள் இறக்கியருளப்பட்டன.

தோழர் ஒருவர், நபிகளாரிடம் எழுப்பிய வினா – விடை இவை:

”இறைனின் தூதரே! எல்லாவற்றையும்விட கொடிய பாவம் எது?”

”இறைவனுக்கு இணை வைப்பது!”

”அதற்கு அடுத்தது?”

”பெற்றோருக்கு மாறு செய்வது”

”அதற்கும் அடுத்தது?”

”உங்களுடன் அவர்களும் சாப்பிடுவார்கள் என்ற பயத்தில் குழந்தைகளைக் கொன்றுவிடுவது”

சிசுக்கொலை கொடும் பாவமானது என்று எச்சரிக்கிறார் நபிகளார். பெண் சிசுக்களை மனநிறைவோடு பேணி வளர்க்க வேண்டும். அது சுவனம் செல்வதற்கான நற்செயல் என்றும் ஊக்கம் தருகிறார்.

”யார் மூன்று பெண் மக்கள் அல்லது சகோதரிகளுக்குப் பொறுப்பேற்று அவர்களுக்குக் கல்வி, ஒழுக்கத்தைப் புகட்டி, அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரை கருணையுடனும், பரிவுடனும் அவர்களிடம் நடந்து கொள்கிறார்களோ அத்தகையோருக்கு இறைவன் சுவனத்தைக் கடமையாக்கிவிட்டான்” – என்று நபிகளார் கூறியபோது, அங்கிருந்தவர்களில் ஒருவர், ”ஒரு பெண் குழந்தை இருந்தபோதும் இந்த உயர் பதவி கிடைக்குமா?” – என்று விசாரிக்க ”ஆம்..!” – என்று ஆமோதிக்கிறார் நபிகளார்.

வீட்டில் ஏதுமில்லாத நிலையில், தம்மிடம் வந்த ஏழைப் பெண்ணொருத்தியிடம் இருந்த ஒரே ஒரு பேரீத்தம் தரப்பட்ட நிலையில், அவள் அதை இரண்டாக்கி தனது இரு பெண் குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்ட சம்பவத்தை ஆயிஷா நாச்சியார், நபிகளாரிடம் பகிர்ந்துகொண்டார்.

”யார் பெண் மக்களின் பிறப்பால் சோதனைக்குள்ளாகி, அச்சோதனையிலும், வெற்றி பெறுகிறாரோ அவருக்கு அக்குழந்தைகள் மறுமை நாளில் நரகத்திற்கு தடுப்பாய், கேடயமாய் மாறி நிற்பார்கள். பெற்றோர் நரகத்திலிருந்து காக்கப்படுவார்கள்!” – என்று தம் மனைவியார் ஆயிஷா நாச்சியாரிடம் அப்பெண் குறித்து உயர்வுடன் சொல்கிறார் நபிகளார்.

குழந்தைகளிடம் சம அன்பு காட்ட வேண்டும். பாராபட்சம் கூடாது என்று வலியுறுத்தும்விதமாக, ”யாருக்குப் பெண் குழந்தை பிறந்து அதை அவர் அறியாமைக் காலத்து முறைப்படி உயிரோடு புதைக்காமல், கேவலமாகவும் கருதாமல், அந்தப் பெண் குழந்தைக்கு எதிராக ஆண் குழந்தைக்கு எள்ளளவும் முக்கியத்துவம் தராமல் சமமாக நடத்துகிறாரோ அவரை இறைவன் சுவனத்தில் நுழையச் செய்வான்!” – என்றும் அறிவுறுத்துகிறார்.

”நான் உங்களுக்கு மிகச் சிறந்த தர்மம் ஒன்றைக் கூறட்டுமா? அது தனக்குப் பொருளீட்டி உணவளிக்கக் கூடியவர் வேறு எவருமில்லை என்ற இயலாத நிலையில் இருந்தபோதிலும், திருப்பி அனுப்பப்பட்ட மகளை பராமரிப்பதுதான்!”

அழகின்மை, உடல் ஊனம் போன்ற காரணங்களால் மணமாகாத பெண் அல்லது இன்னும் பல காரணங்களால் விவாகரத்துப் பெற்று தனது வாழ்வாதாரத்துக்காக பிறரை நம்பியிருக்கும் பெண் இவர்களைப் போஷிப்பது தர்மத்தில் மிகச் சிறந்த தர்மம் என்கிறார் நபிகளார்.

திருக்குர்ஆனின் கட்டளைகளும், திருநபிகளாரின் அருளுரைகளும், ஆண், பெண் இருவருக்கும் சம கல்வி அளித்தல், சொத்துக்களில், பெண் குழந்தைகளின் பங்கை முழு மனதோடு பிரித்து கொடுத்தல், சிசுக்களைப் பாதுகாத்தல், அவர்களைப் பாராபட்சம் காட்டாமல் போஷித்தல் இன்னும் பல்வேறு வாழ்வியல் கூறுகளை இறைநம்பிக்கையின் அங்கமாகவே ஆக்கியுள்ளன.


Share:

Thursday, September 28, 2017

ஹிஜ்ரத் புலம்பெயர்வில் எண்ணற்ற படிப்பினைகள்



உண்மையில் இறைத்தூதர்கள் யாரொருவரும், துன்பத்துயரங்களுக்கும், இன்னல், இடர்பாடுகளுக்கும் அஞ்சி தாய்மண்ணை விட்டு துறத்தல் என்பது அபத்தமானது. எல்லையற்ற அருளாளனின் வழிகாட்டுதல் பிரபஞ்சத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு மட்டுமானது என்ற கருத்தை தகர்த்தெறிந்து எங்கும் நிறைந்திருக்கும் அப்பரம்பொருளின் வழிகாட்டுதலை உலகின் யாராலும் பின்பற்ற இயலும் என்ற சாசுவதத்தின் காரணமிது ~இக்வான்  அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

1438 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவழிகாட்டுதலுக்கு ஏற்ப, நபிகளார் தமது தோழர் அபூபக்கருடன் மதீனா நகருக்கு புலம்பெயர்ந்து சென்றார். வீடு, வாசல், மனைவி, மக்கள், உற்றார், உறவுகள் என்று தாய்மண்ணை விட்டு நபிகளார் பிரிந்து சென்ற இந்நிகழ்வு வரலாற்றில் ஹிஜ்ரத் எனப்படுகிறது. இதுதான் இஸ்லாமிய நாட்காட்டியின் துவக்க ஆண்டாக கணக்கிடப்பட்டு முஹர்ரம் முதல் மாதமாக வழங்கப்படுகிறது. ஹிஜ்ரத் நிகழ்வின்போது, நபிகளாரின் கொள்கை வழி ஆதரவாளர்களாக மதீனா நகரில் இணைந்து நின்றவர் வெறும் 75 பேர் மட்டுமே! 

இஸ்லாத்தின் அரசியல், அதிகார தலைமையகமாக மதீனா தேர்வு செய்யப்படுவதற்கு காரணம் என்ன? இறைவனின் இல்லமான கஅபாவும், அதை கட்டியமைத்த நாயகரான இறைத்தூதர் இப்ராஹீம், அவரது மகனார் இஸ்மாயீலும் காலடி பதித்த இடங்கள் மக்காவாக இருக்கஅதிகார பீடமாக மக்கா ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்ற கேள்விகள் எழுவது சகஜம். இதற்கான மேலோட்டமான பதில், நபிகளார் மக்காவில் கடும் துன்புறுத்தலுக்கு ஆளானார். அவரது பரப்புரைகளுக்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதுதான். 

ஆனால், உண்மையில் இறைத்தூதர்கள் யாரொருவரும், துன்பத்துயரங்களுக்கும், இன்னல், இடர்பாடுகளுக்கும் அஞ்சி தாய்மண்ணை விட்டு துறத்தல் என்பது அபத்தமானது. எல்லையற்ற அருளாளனின் வழிகாட்டுதல் பிரபஞ்சத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு மட்டுமானது என்ற கருத்தை தகர்த்தெறிந்து எங்கும் நிறைந்திருக்கும் அப்பரம்பொருளின் வழிகாட்டுதலை உலகின் யாராலும் பின்பற்ற இயலும் என்ற சாசுவதத்தின் காரணமிது. 

நபிகளாரின் இந்த ஹிஜ்ரத் புலம்பெயர்தல் நிகழ்வு மனித இனத்தில் காலம் காலமாக பின்பற்றப்பட்டுவந்த அத்தனை பழக்கவழக்கங்களுக்கும் சம்மட்டி அடி கொடுத்தது. மனித இனம் அதுவரையில் இறைநம்பிக்கையாளர், இறைநம்பிக்கையற்றவர் என்று இருவேறு உலகங்களாக பிளவுப்பட்டிந்தது. இந்நிலையை மாற்றியமைத்து, எல்லா உலகிலும் அதிகாரம் செலுத்துபவன் இறைவன் என்றது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவையும் ஆக்கியாள்பவன், அவற்றின் மீது முழுமையான அதிகாரம் கொண்டவன் இறைவன் என்று நிரூபித்தது. குறைந்த எண்ணிக்கையினராக இருந்தாலும் தம் செய்தியை அடுத்தவர்க்கு பகிர முடியும் என்று அப்பட்டமாக்கியது.

ஹிஜ்ரத் நிகழ்வாக நபிகளார் மதீனா மாநகருக்கு மேற்கொண்ட பயணம் ஒவ்வொரு இனத்தாரும் பன்முகசமூகத்தில் இணந்து வாழ முடியும் என்று நிதர்ச்சனப்படுத்தியது. அதுவரையில் பல்வேறு கோத்திரங்களாக பிரிந்து, பிளவுப்பட்டுக் கிடந்தவர்களை நபிகளார் ஒருங்கிணைத்தார். அதற்காக பிரதானமாக செல்வாக்கு பெற்ற கோத்திரத் தலைவர்களை அழைத்து, ஒப்பந்தங்களையும் செய்து சமூகத்தில் அமைதி நிலவுவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார். இன, சமய பின்னணி எதுவானாலும் ஒவ்வொரு தனிமனிதனும் சுயசுதந்திரம் கொண்டவனாக மதீனாவில் நடமாடுவது அவனது பிறப்புரிமை என்பதை அரசியலமைப்பு சட்டமாகவே வடிவமைத்தார். அவரவர் கொள்கை, கோட்பாடுகளை பின்பற்றி வாழும் ஒரே நாட்டின் ஒரே மக்களாகவும், பன்முகசமூகத்தின் ஒரு முன்மாதிரி நகரமாகவும் மதீனாவை மாற்றியமைத்தார். 

மதீனா மாநகரின் பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும்விதமாக எல்லா தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து வலிமை வாய்ந்த ஒரு ராணுவத்தை கட்டமைப்பதற்கான அனைத்துவித முயற்சிகளையும் நபிகளார் மேற்கொண்டார். எல்லையில் நாட்டைக் காப்பதற்காக உயிர் துறக்கும் அமரர்களின் குடும்பத்தாரின் அத்தனை தேவைகளுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொண்டது. இதுதான் இன்றைய சொல்வழக்கில் இன்ஷீரன்ஸ் காப்பீடு என்றழைக்கப்படுகிறது. அதேபோல, ஒவ்வொரு இனத்தாரும், ஒவ்வொரு சமயத்தாரும் அவரவர் சட்டங்களை பின்பற்றி வாழ்வதற்கான அனைத்து சூழல்களும் உருவாக்கப்பட்டன. 

ஹிஜ்ரத் நிகழ்வின் விளைவாக பெண்ணுரிமைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்குமான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. அத்தோடு நபிகளாரின் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து நின்ற அவாஸ் கோத்திரத்தாரின் நான்கு உட்பிரிவினர் பாதுகாப்புக்கும் உத்திரவாதம் அளிக்கப்பட்டது. 

ஆக மொத்தத்தில் நபிகளார் மதீனா மாநகருக்கு மேற்கொண்ட ஹிஜ்ரத் புலம்பெயர்வு வரலாற்றில் ஜனநாயகத்தின் முன்மாதிரி வடிவம் பெற்ற நிகழ்வானது.

Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive