NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Thursday, March 30, 2017

Wednesday, March 29, 2017

மதசார்பின்மைப் போராட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல.. நான்கில் மூன்று பகுதி இந்துக்களையும் உள்ளடக்கியது..!


மதசார்பின்மைக்கான போராட்டம் முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான போராட்டம் மட்டுமல்ல. உண்மையில், அது இந்த நாட்டு குடிமக்களில் நான்கில் மூன்று பங்கு இந்துக்களையும் சேர்த்து பாதுகாப்பதற்கான போராட்டம் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது!

இந்த நாட்டின் மதச்சார்பின்மைக் கொள்கையை இந்துக்கள்தான் தேர்வு செய்தனர். ஆனால், இன்றைய ஊடகங்களோ முஸ்லிம்களை மட்டும் பாதுகாக்கும் கவசமாகவே அதை சித்தரிக்கின்றன.

இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த 299 மக்களவை உறுப்பினர்களில் 255 பேர் (அதாவது 85 விழுக்காடு பேர்) தங்களின் விருப்பப்படிதான் மதசார்பற்ற நாடாக இந்தியாவை வடிவமைத்தார்கள். ஆனால், 1980-ஆம், ஆண்டிலிருந்து இந்த மதச்சார்பின்மை சமூக நீதியிலிருந்து தனியாக பிரிக்கப்படுவதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இந்த இரண்டுக்கும் சேர்த்துதான் போராட்டங்கள் அமைய வேண்டும்.

அரசு புள்ளிவிவரங்களின்படி இந்திய நாட்டின் 52 விழுக்காடு பேர் அன்றாடங்காய்ச்சிகள் – தினக்கூலிகள். அவர்கள் எந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று யாரும் கவலைப்படுவதில்லை. அதேபோல, நாட்டின் 51 விழுக்காடு பேர் ஒதுங்க வீடில்லாதவர்கள். இந்தப் பட்டியலில் பிராமண சமுதாயத்தவரோ, தாக்கூர் சமூகமோ, பூமிஹார் சமுதாயத்தவரோ (பீகாரில் வசிக்கும் பிராமண சமுதாயம் போன்ற மேல்குடி மக்கள்)  ஓரிரு விலக்குகள் தவிர யாருமே இடம் பெறவில்லை

நாட்டில் சோறு போடும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நாள்தோறும் அதிகரித்துவருகிறது. வேலை வாய்ப்பின்மை பெருகிவருகிறது. நிலவிவகாரங்கள் சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பணவீக்கம் அதிகரித்துவருகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்னைகளை யாரும் ஏறெடுத்தும் பார்க்க தயாராக இல்லை. ஆனால், “ஆண்டி ரோமியோ“ படைகளை உருவாக்குவதில்தான் அதிக அக்கறை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சமூகம் தனது அடிப்படைப் பிரச்னைகளை புறக்கணிக்கும்போது, வெகு விரைவிலேயே அது நோய்த்தாக்கிய சமூகமாய் பலவீனப்பட்டு போய்விடும்.

Prof. Manoj Jha
சிறுபான்மை இன முஸ்லிம்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் அந்த படுகோரப் பசிக்கு பிற இனங்களும் இரையாவதைத் யாராலும் தடுக்கவே முடியாது.

சர்வாதிகாரி ஹிட்லர் முதன் முதலாய் தாக்கியது ஜனநாயக விரும்பிகளைத்தான். யூதர்களை அல்ல. அதன் பிறகு ஒவ்வொரு இனமாய் அந்த தாக்குதலுக்கு ஆளானதை யாராலும் தடுக்க முடியவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்தாவிட்டால் பிற இனங்கள் மீதான தாக்குதல்களையும் தடுக்கவே முடியாது. குருதியின் சுவையறிந்த கொலைஞன் அடுத்தடுத்து கொலைகளை செய்ய அச்சப்பட மாட்டான்.

இரத்த வெறிப்பிடித்தவன் தன்னை சைவ விரும்பி என்று சொல்லிக் கொள்வது விந்தையாக இருக்கிறது. இத்தகைய வெறிப்பிடித்தவனுக்கு தொடராய் அடுத்தடுத்து இரத்தம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். மக்கள் இது குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம்.

வாக்குரிமை பறிப்பு என்பது நாடு துண்டாடிய காலகட்டத்தில்கூட நடந்ததில்லை. இந்த கொடுமை சமீபத்தைய உ.பி. தேர்தல்களின் நிகழ்ந்துள்ளது. ஆனால், அது பெரிதாக பேசப்படவில்லை. செய்தியாக்கப்படவில்லை. இதற்கு பாஜக வை மட்டும் குறைச் சொல்லி பலனில்லை. இந்த பாவங்களுக்கு நாம் அனைவரும் சேர்ந்துதான் காரணம். தேர்தல்களில் பாஜக வெற்றிப் பெற்றதற்கு கவலைப்படுவதைவிட, இந்த வெற்றிகளில் பிரிவினையின் நெடி வீசியதுதான் அதிக கவலைக்குரியது. 1947-களில் கூட நாம் இப்படி பிளவுபட்டு நிற்கவில்லை.

இன்று நாம் உ.பியில் தோல்வியைத் தழுவி இருக்கலாம். நாளை நிச்சயம் வெற்றிப் பெறலாம். ஏன் குஜராத்தில்கூட நாம் வெற்றி முரசு கொட்டலாம்.

அதனால் வெற்றிகளுக்கான கொண்டாட்டங்களும் வேண்டாம். தோல்விக்கான விரக்தியும் வேண்டாம். எப்போதும், திட்டமிட்ட கருத்துக்களின் அடிப்படையில் வெற்றிப் பெறுவதில் கவனமாக இருங்கள்.

(25.03.2017 அன்று, தில்லியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், “இந்தியா இன்று மற்றும் நாளை“ - என்னும் தலைப்பில், பீகாரை ஆளும் ராஷ்ட்ரீய ஜனதா தள் கட்சியின் செய்தித் தொடர்பாளர், பேராசிரியர் மனோஜ் ஜா ஆற்றிய உரையிலிருந்து … இக்வான் அமீர்)


Share:

Monday, March 20, 2017

முதிர்ச்சியை நோக்கி முஸ்லிம் சமூகம்..

அவர்களிலிருந்தே சொல்ல வேண்டும். அவர்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்பதற்காகதான் காலந்தோறும் அந்தந்த சமூக மக்களிடையே இறைவன் பரப்புரையாளர்களை – தூதர்களை அனுப்பி வைத்தான். மண், மக்கள், மொழி, கலாச்சாரம் நம்பிக்கைகள், புரிந்துணர்வுகள் என்று எல்லாமுமாய் மாறி அந்த பரப்புரையை- இறைவனின் திருச் செய்தியை http://ikhwanameer.blogspot.in/2015/12/blog-post_25.html அந்த இறைத்தூதர்கள் சுமந்து நின்றார்கள். பிணைக்க முடியாத சொந்த, பந்த உணர்வுடன் அந்த சமூக மக்களிடையே பணியாற்றினார்கள். மக்கள் மனங்களை வென்றார்கள்.

இந்த பேருண்மையை பச்சைத் துணியில் கட்டி பரண் மீது வைத்துவிட்டது இந்த சமூகம் அல்லது வெள்ளி மேடைகளில் மட்டும் மெல்லிய உறக்கத்தினிடையே தாலாட்டும், தலையாட்டலுமாய் உள்ளது.

நபிகளாரின் திருச்செய்தியை புரிய வைத்தல், புரிதல் இல்லாமையாய் இந்த சமூகம் அதன் ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளாடிக் கொண்டிருக்கையில், உலகம் பல நூற்றாண்டுகளைக் கடந்து விண்வெளி யுகத்திற்கு வந்துவிட்டது.

அடுத்தது, கற்றறிந்தவர்கள், கொள்கைக் கோட்பாடுகளை நன்கு விளங்கிக் கொண்டவர்கள் எந்த நேரத்தில் எந்த பத்ஃவா வருமோ என்று அச்ச உணர்வுடன் தனது கொள்கையை பொதுவெளியில் சேர்க்க தேவையற்ற நேரத்தை வீணாக்கி சொற்களைத் தேடுவதும், அதிக பட்ச கவனத்துடனும் செயல்பட வேண்டியிருக்கிறது.

இந்த மனநிலையை சொற்களில் வடிக்க இயலாது. அதிலும் என்னைப் போல எழுத்துத் துறையில் இருப்போர் ஆளாகும் மன உளைச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல.

சுருக்கமாக சொல்ல போனால், எதை நோக்கி நாம் செல்கிறோமோ அதுவாக மாறி, உள்வாங்கி பொதுவெளியில் எந்த தட்டுத் தடங்கலும் இல்லாமல் நமது கருத்துக்களை சேர்க்கும் முதிர்ச்சிக்கு இந்த சமூகமும் கரங்கோர்க்க வேண்டும். பட்டங்களையும், பட்டயங்களையும் தர வேண்டாம். குறைந்தளவு அத்தகையவர்களை தட்டிக் கொடுக்க வேண்டும்.

காலத்திற்கேற்ற புரிதலும், அந்த புரிதலோடு அக்காலத்தில் நுழைந்து வெற்றிப் பெறுதலும்தான் தற்போதைய அதி தீவிரமான தேவைகள். பெரும்பகுதி பிரச்னைகளுக்கு தீர்வுகள்.
Share:

Tuesday, March 14, 2017

உபி தேர்தல்கள்: பாஜக வெற்றிக்கு அஸாதுத்தீன் உவைஸி காரணமா?

நடந்து  முடிந்த உ.பி. சட்டமன்ற தேர்தல்களில் அஸாதுத்தீன் உவைஸியின் அகில இந்திய மஜ்லிஸே முஸாவரத் இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி (AIMIM) கட்சி வெறும் 0.2 விழுக்காடு (அதாவது 2, 05,232 ) வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தது.

மஜ்லிஸே முஸாவரத் கட்சி போட்டியிட்ட 36 தொகுதிகளில், சமாஜ்வாதி கட்சி 13 இடங்களையும், சுயேச்சை ஒரு இடத்தையும், பாஜக 22 இடங்களையும் கைப்பற்றி வெற்றிப் பெற்றன. இக்கட்சியின் சம்பல் தொகுதி வேட்பாளர் மட்டும் 60,426 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

மஜ்லிஸே முஸாவரத், உபி தேர்தல்களில் பெரியளவு தாக்கத்தை உருவாக்கவில்லை. அத்தோடு, தேர்தல்களில் அந்தக் கட்சி மேற்கொண்ட நிலைபாடு காராணமாக வாக்குகள் சிதறி பாஜகவுக்கு சாதகமாகவில்லை என்றே கீழ்க்கண்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியினரின் மேலாண்மைச் சண்டைகளும், காங்கிரஸின் இயலாமையும் சேர்ந்துதான் மோடி சர்க்காரின் புத்தம் புதிய இந்தியாவுக்கு வழிகோலியுள்ளன என்கின்றன புள்ளிவிவரங்கள்.

Division of non-BJP votes among SP-Congress alliance and BSP helped BJP

Constituency
Votes Polled by AIMIM
Votes Polled by SP-Cong alliance
Votes Polled by BSP
Votes Polled by Winner BJP
1
Badaun
883
70847
32641
87314
2
Bikapur
3275
67422
49690
94074
3
Bilgram Mallanwan
2716
75380
51502
83405
4
Firozabad
11478
60927
51387
102654
5
Gainsari
3160
46378
53413
55716
6
Hasanpur
1235
83499
51930
111269
7
Kanth
22908
73959
43820
76307
8
Koil
463
42851+ 38623
37909
93814
9
Lucknow Central
2314
73306
24313
78400
10
Lucknow West
1770
79950
36247
93022
11
Moradabad Nagar
947
120274
24650
123467
12
Pharenda
1878
73958
35765
76312
13
Ram Nagar
1196
66210
53891
88937
14
Shrawasti
2933
78992
53014
79437
15
Tanda
2070
73043
49526
74768
16
Utraula
2966
56066
44799
85240

மஜ்லிஸே முஸாவரத் போட்டியிட்ட இடங்களும் பெற்ற வாக்குகளும்..
 
Performance of AIMIM in Uttar Pradesh Assembly election 2017


Constituency

Candidate
Votes Polled
Position
1
Agra South
Edarish
232
16
2
Allahabad South
Syed Afzaal Muzib
868
5
3
Amroha
Shameem Ahmad
2861
5
4
Arya Nagar
Rabiullah
1557
5
5
Badaun
Khalid Pervaiz
883
6
6
Barabanki
Mohd. Abul Kalam Qureshi
708
7
7
Bikapur
Juver Ahmad
3275
4
8
Bilgram Mallanwan
Abdul Aziz
2716
4
9
Firozabad
Ahtsham Ali (babar)
11478
4
10
Gainsari
Manjoor Alam Khan
3160
5
11
Hasanpur
Naushad Ali
1235
5
12
Isauli
Mohammad Daud Khan
3865
6
13
Kairana
Maseehulla
1365
5
14
Kanth
Faizulla Chaudhary
22908
4
15
Khadda
Nisar Ahmad
8903
4
16
Khalilabad
Tafsirullah
2578
7
17
Koil
Parvez Khan
463
7
18
Kundarki
Israr Husain
7025
4
19
Lucknow Central
Mohammad Irfan
2314
5
20
Lucknow West
Mohammad Tauheed Siddiqui
1770
4
21
Matera
Mohd Akiulla
1226
6
22
Moradabad Nagar
Shahbuddin
947
7
23
Moradabad Rural
Mohd Aslam
3503
5
24
Menhdawal
Mohd. Tabish Khan
19040
5
25
Nagina
Neelam
4385
4
26
Najibabad
Tazeem Siddiqui
2094
5
27
Nautanwa
Kamini Jaiswal
1797
7
28
Pathardeva
Zainul Abedin
1820
5
29
Pharenda
Reena
1878
6
30
Ram Nagar
Shahnawaz
1196
7
31
Saharanpur Nagar
Talat Khan
693
5
32
Sambhal
Ziyaurrahman
60426
2
33
Shrawasti
Kalim
2933
5
34
Tanda
Irfan
2070
4
35
Thakurdwara
Aizaz Ahmad
9444
4
36
Utraula
Mohd Nizamullah Khan
2966
4


Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive