NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Sunday, December 27, 2015

வைகறை நினைவுகள்: 25, லென்ஸ் விழி வழியே..


அன்பு சகோதர, சகோதரிகளே, நண்பர்களே!

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக!

'லென்ஸ் விழி வழியே...!' - என்னும் இந்த ஒளிப்பட தொடர் மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

நான்காம் வகுப்பு படிக்கும்போது ஷேக்ஸ்பியரில் ஆரம்பித்த எனது வாசிப்பு, தினத்தந்தி சிந்துபாத் தொடர் என்று தொடர்ந்தது. அரசு கிளை நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும் வாசிக்க வைத்தது. அந்த அற்புதமான தருணங்களை கடந்து வந்த அனுபவத்தை வாழ்க்கை அளித்திருக்கிறது.

எனது பள்ளி தலைமை ஆசிரியை அவர்களின் வீட்டுப் பணிகளை செய்து தந்து, பள்ளி நூலகத்திலிருந்து சொற்ப தவணைக்குள் பெற்ற ஷேக்ஸ்பியருக்குள் நான் நுழைந்தது ஆச்சரியமாக உள்ளது.

சிந்துபாத் தொடரை படிக்க சிகை அலங்காரம் செய்யும் கடையில் நீண்ட நேரம் காத்திருந்து காத்திருந்து… ஒரு கட்டத்தில் ஆவலை அடக்க முடியாமல் படிப்பவரின் எதிரே தரையில் அமர்ந்து அந்த நான்கு படம், சில வரி வசனங்களை, வாசிக்க முயலும்போது, கழுத்தைப் பிடித்து வெளியே நெட்டித் தள்ளிய அந்த நாவித சகோதரர் இன்றும் மனக்கண்ணில் தெரிகிறார். இன்று சிகை அலங்காரம் செய்து கொள்ளும்போதெல்லாம் அந்த சம்பவம் நெஞ்சில் நிழலாடும்.

எத்தனைமுறை புத்தக அலமாரிகளுக்குள் பதுங்கிக் கொண்டு புத்தகம் வாசித்தாலும் அத்தனை முறையும் நூலகர் புத்தகங்களை நான் கலைத்துவிடுவேன் என்று மோப்பம் பிடித்து வந்து விடுவார். ஒருவித சிநேகித உணர்வுடன் “தம்பி, உனக்கு இன்னும் வயசாகலே!” – என்று என்னை நூலகத்தைவிட்டு வெளியே அனுப்பி விடுவார். இன்று இறையருளால் வீட்டில், ஒரு தனி நூலகம் அமைத்திருக்கும் நான் அதே நூலகத்தை கடந்து செல்லும்போதெல்லாம் முக மலர்ச்சியுடன் கடக்கிறேன்.

இந்த அனுபவங்களை, வாசிப்புகளை உள்வாங்கி வளர்ந்து ஒரு கட்டத்தில் அவற்றை அடுத்தவர் வாசிக்க எத்தி வைக்கும் அனுபவத்தை அளித்த இறைவனுக்கே புகழனைத்தும்.

1986 - களில் ஆரம்பித்து, இதுவரையிலும் ஓயாமல் அறப்போர் புரியும் எனது எழுத்தாணியின் பயணம் தமிழ் பேசும் நல்லுலகில் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருக்கும் என்பதால் ஓராயிரம் சங்கடங்களுடன்தான் அறிமுகத்துக்காக இந்த சில அனுபவங்களை மட்டுமே இங்கே பகிர்ந்து கொண்டேன்.

ஒவ்வொருவரும், ஒரு வாசகராய், எழுத்தாளராய், ஒளிப்பதிவாளராய் இருக்கும் சமூக ஊடகமான முகநூலில் நான் சொல்லவிருப்பது என்ன?

அனுபவங்கள் அன்றி வேறில்லை சகோதர, சகோதரிகளே!

அனுபவங்களே ஆசான்கள்!

உண்மை!

இது அனுபவங்களின் ஒரு பகிர்வின்றி அறிவின் ஊற்றல்ல.


‘சிறகுகள்’ குழுமத்தின் சகோதரர் அஹ்மது கபீரும், அருமை சகோதரி உம்மு உமரும்தான் இந்த தொடருக்கான பிரதான மூல கர்த்தாக்கள்! அவர்களுக்கு எனது நன்றி. அதிலும் குறிப்பாக அற்புதமான முகப்பை உருவாக்கி தந்த உம்மு உமரின் தோழி சகோதரி Sharmila Kasim - க்கும் எனது நன்றிகள் மற்றும் பிரார்த்தனைகள்.

அனுபவ எழுத்துக்களிலிருந்து ஒரு கட்டத்தில் அடைந்த பரிணாம வளர்ச்சிதான் எனது ஒளிப்பதிவுகள். நான் எடுத்துள்ள படங்கள் எல்லாம். இது எனது அறிவோட்டத்தை இன்னும் விசாலமாக்கியது.

கோடானு கோடி கோள்கள் துணைக்கோள்கள் கொண்ட இந்த அண்ட வெளியின் சிறு துகள்… அதுவும் கடற்கரை மணற்பரப்பின் ஒரு சிறு மணல் துகளாம், பூமியில் எனக்கு கிடைக்கும் வாய்ப்பு வசதிகளை கொண்டு நான் ஒளிப்படங்களாய் பதிவு செய்து வருகிறேன். படைப்பாளனின் அற்புத அழகியல் கண்டு வியக்கிறேன். அற்புதங்களும், வியப்புகளும் என்று வண்ண கலவையாய் உலகம்.

அழகியல், வாழ்வியல் கலந்த பார்வைதான் எனது சிறப்புக்குரிய களங்கள்.

சிறப்பான படங்கள் என்று முற்றே இல்லாத ஒரு மகா சமுத்திரத்தின் ஒரு துளியாய் நான் கற்றதை பறிமாறும் ஒரு வாய்ப்புதான் இது.

அறிவைப் பெற்று அதை பரப்புவர்தான் உங்களில் சிறந்தவர் என்று எனது ஒரே உன்னத தலைவர் அண்ணல் நபியின் ஒரு பொன்னுரையை நிறைவேற்றிய பாக்கியசாலியாக மட்டுமே என்னைப் பார்த்துக் கொள்கிறேன்.

இனி.. 'லென்ஸ் விழி வழியே..!' சிறகுகள் குழுமத்தைத் தாண்டி எனது முகநூல் பக்கத்திலும் இறைவன் நாடினால் வலம் வரும். இதற்கான அனுமதியையும் நான் அந்தக் குழுவிடம் பெற்றுவிட்டேன்.

மிகவும் எளிய முறையில், புகைப்படக் கலையை கற்றுத் தரும் முயற்சி இது.

அடுத்தவர்க்கு கற்பிக்க வேண்டும் என்று எப்படி தோன்றியது?

இது நல்ல கேள்வி.


சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் எனக்கு அலாதி பிரியம். இயற்கையின் மீது தீராத பாசம். மனித உணர்வுகளை மனக் கண்ணில் பதித்து வைப்பதில் வல்லவன். இதில் எந்த மிகைப்படத்தலும் இல்லை.

எனது அத்தனை பணிகளை முடித்துவிட்டு இரவில் இன்றும் நான் எனது தோட்டத்து செடிகளிடமும், மரங்களிடமும் பேசிவிட்டு உறங்கச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

இந்த உரையாடல் பல நேரங்களில் மௌன மொழியாக இருக்கும். சில நேரங்களில் வாய்விட்டு பேசுவதாகவும் இருக்கும்.

அதேபோல இறையருளால், கால் நூற்றாண்டை தாண்டி, பிரசுரமாகிக் கொண்டிருக்கும் எனது பெரும்பகுதி எழுத்துக்கள் எல்லாம் வாழ்க்கையில் நான் கண்டு, பாதிக்கப்பட்ட சக மனிதர்களின் உணர்வு பிரதிபலிப்புதான்.

பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த ஒரு சாமான்யனை மண்டியிட வைத்து எள்ளி நகையாடிய ரயில்வே பணியாளர்களின் செயலின் பாதிப்பு பிம்பமாய் படிந்து என்னை உறுத்தியது. அதற்கு அடுத்த சில நாட்களில், ‘தலைக்காய்ந்தவர்கள்’ என்று தினமணியில் கட்டுரையை வடிக்கும் வரை அந்த வலி குறையவில்லை.

அதேபோல, அன்றைய ஒன்றுபட்ட ஆந்திராவின் ‘காவலி’ என்னும் ஊருக்கு எனது நண்பர் நயீமின் திருமணத்துக்கு செல்ல வேண்டி வந்தது. அப்படி போகும் போது ரயிலில், பறிபோன எனது நண்பரின் கைக்கடிகாரம் குறித்த உணர்வுகளையும், அதை ஆசைப்பட்டு எடுத்தவரின் உணர்வுகளையும் சம்பவம் நடந்து முடிந்த சுமார் 10 ஆண்டுகள் கழித்து தினமணி குழந்தை இலக்கியத்தில் பதிவு செய்யும்வரை அந்த உறுத்தல் என்னைவிட்டு விலாகாமலே இருந்தது.

இப்படிதான் ஒளிப்படம் சம்பந்தமாக கற்றுக் கொள்வதற்கும், கற்றதை அடுத்தவர்க்கு கற்றுக் கொடுக்க வகுப்பெடுப்பதற்கும் ஒரு காரணம் இருந்தது.


இளம் வயதில், புலனாய்வு செய்திகளுக்காக எடுக்கும் படங்களின் பிலிம் சுருளைக் கழுவ ஒரு ஸ்டுடியோவுக்கு செல்வது வழக்கம். அந்த ஸ்டுடியோவில் வைத்திருக்கும் டிஜிட்டல் காமிராக்களை தொடும்போது, அதன் உரிமையாளர் ஏதோ தொடக்கூடாத பொருளை தொடுவதுபோல முகம் சுளித்ததை என்னால் மறக்க முடியவில்லை.

அடுத்தது, நான் டிஜிட்டல் காமிரா வாங்கிய புதிதில், அதன் நுணுக்கங்கள் சம்பந்தமான பல்வேறு குழப்பங்களுக்கு நான் ஆளானேன். அப்போது, எனது முகநூல் நண்பர்களில் ஒருவர் ஒளிப்படகாரர், அந்தக் கலையை கற்றுக் கொடுப்பவர். அவரிடம் எனது புரியாமையை வெளிப்படுத்தி கேட்டேன். அவர் இதுவரையிலும் எனக்கு பதில் அளிக்கவே இல்லை.

இதுவும் என்னை சிலுப்பிவிட்ட ஒரு அனுபவமாகும்.

காமிரா நுட்பங்கள் சம்பந்தமான எனது கற்றலின் துவக்கம் இதுதான்.

சிறகுகள் குழுமத்துக்காக நான் வகுப்பு எடுத்து வந்த லென்ஸ் விழி வழியே காமிரா நுட்பங்கள் இனி பொத்தாம் பொதுவாக எனது முகநூல் பக்கத்தில் இறைவன் நாடினால் திங்கள்தோறும் இடம் பெறும்.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல, இது அனுபவங்களின் ஒரு பகிர்வின்றி அறிவின் ஊற்றல்ல.

பாடங்களில் உண்டாகும் சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் தரப்படும்.

பயன்படுத்திக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் நான்.

இன்றைய வைகறை நினைவுகளில் இடம் பெற வேண்டிய ரஷ்ய கரடியை ஓட ஓட விரட்டிய குர்ஆன்.. இறைவன் நாடினால் நாளைய நினைவுகளில்…

  வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:


வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23:  மர்யம் ஏன் அழுதாள்?:  http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html
வைகறை நினைவுகள் பகுதி 24:  வேட்டைக்காரன்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/24.html

Share:

அழைப்பது நம் கடமை - 14: ' நம்புங்கள் .. இது இறைவனின் மார்க்கம்! '


பல நூற்றாண்டுகள் கழிந்தாலும், இனவாதிகளின் பண்புகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்! காலந்தோறும், அவர்கள் இரத்த வெறிப்பிடித்தாடுவார்கள். பிரபஞ்ச வாழ்வியல் திட்டமான இஸ்லாத்தையும் அதைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களையும் கொன்றொழிக்கவே முயல்வார்கள்.

உலகில் இஸ்லாத்தைப் போல பேரழிவுகளைச் சந்தித்த வாழ்க்கை நெறி வேறு இருக்க முடியாது! வரலாற்று அறிஞர்கள் வியக்கிறார்கள் இந்த உண்மையைக் கண்டு!

இதுவரை உலகில் லட்சக்கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அவர்களது உடமைகள் சூறையாடப்பட்டன. மனைவி, மக்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டனர். தப்பிப் பிழைத்தவர்கள் காலத்துக்கும் அச்சத்துடன் பல தலைமுறை  வரைக்கும் அந்த பீதியில் உறைந்திருந்தார்கள்.

''இனி அவ்வளவுதான்! இஸ்லாம் அழிந்துவிடும்! அது வளருவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை!''- என்று எதிரிகள் உறுதியுடனிருந்த நேரத்தில் அந்த அதிசயம் மீண்டும்.. மீண்டும் நிகழ்கிறது! இஸ்லாம் என்னும் விருட்சம் இன்னும் ஆழ வேர்ப்பரப்பி வானுயர கொப்பும், கிளைகளுமாக துளிர்விட்டு மகாவிருட்சமாக வளர்கிறது!

நேற்றைய 'அந்தலூசியா' என்றழைக்கப்படும் ஸ்பெயின் முதற்கொண்டு இன்றைய குஜராத் வரையிலான நிகழ்வுகள் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளை... அடக்குமுறைகளை...  கொன்றொழிப்புகளை இனத்துடைத்தெறிதலைதான் காட்டுகின்றன!

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றிய இறைவனின் பிரியத்துக்குரிய நல்லடியார்களின் அளப்பரிய தியாகங்களால் மீண்டும் மீண்டும் அந்த அற்புதம் நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக 13-ஆம், நூற்றாண்டை எடுத்துக் கொண்டால்.. பயத்தால் உடல் சிலிர்த்துவிடும். வரலாறு நெடுக இரத்த வாடை அடிக்கும் அந்த கொடுர சம்பவங்கள் இப்போதும் நம்மை சிலிர்க்க வைக்கும்.

ஒரு நகரைத் தொடர்ந்து மறு நகரம்.. ஒரு பகுதியைத் தொடர்ந்து மறு பகுதி... ஒரு நாட்டைத் தொடர்ந்து மறு நாடு... என்று உலக முஸ்லிம்கள்  கடும் சேதங்களை அடைந்து கொண்டிருந்த நேரம் அது. பகைமை உக்கிரத்தால்.. முஸ்லிம்களும் அவர்கள் பின்பற்றும்  மார்க்கமான இஸ்லாமும் இனி தீர்ந்துவிடும் என்று வரலாறு நடுங்கிக் கொண்டிருந்த நேரம்.

அந்த கோர கொலைப் பட்டியலின் குறைந்தளவு புள்ளிவிவரம் இது:





  • நிஷாபூர்             -   17 லட்சத்து 47 ஆயிரம் பேர் .
  • பாக்தாத்              -   16 லட்சம் பேர்.
  •  ஹீரட்                 -    10 லட்சம் பேர்.
  • சமர்கண்ட்         -    9 லட்சத்து 80 ஆயிரம் பேர்.
  • மெர்வ்                 -    7 லட்சம் பேர்.
  • அலெப்போ       -    80 ஆயிரம் பேர்.
  • பால்க்                  -    முற்றிலும் அழிந்து போனது.
  • கிஹ்வா             -    முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது.
  • ஹர்ரான்            -    முற்றிலும் அழிந்தது.

உலகின் பேராபரணம் என்று வர்ணிக்கப்படும் நகரம் பாக்தாத்! நீண்ட நெடிய சோதனை மிக்க அந்த ஆறு வாரங்களில் இந்த அழகான ஆபரணம் குரங்குக் கையில் கிடைத்த பூமாலையைப் போல பிய்த்து எறியப்பட்டது. யூப்ரட்டீஸ் நதி குருதியால் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. மென்மைக்கும் அழகுக்கும் பேர் போன நகரப் பெண்கள் கொடுரமாக கற்பழித்துக் கொல்லப்பட்டனர்.

ஐந்து நூற்றாண்டுகளுக்கு பொத்தி.. பொத்தி.. பாதுகாத்து வந்த அறிவு... பெரும் சிரமங்களுக்கிடையே சேர்த்து வைக்கப்பட்டிருந்த உலகின் தலைச் சிறந்த நூலகம், தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அரிய நூல்கள் சாம்பலாக்கப்பட்டன.

கல்வி-கேள்விகளுக்கும், அற்புதமான கலாச்சாரத்துக்கும், வணிகத்துறைக்கும் கேந்திரமாக விளங்கிய பாக்தாத் மயானக் காடானது. கலைநயத்தைப் பறைச்சாற்றும் பல அற்புதமான கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. ரத்த வெறிப்பிடித்த ஆட்சியாளன் செங்கிஸ்கான் நாற்பதாண்டு காலம் முஸ்லிம்களை நடுநடுங்க வைத்தான்.

அன்றைக்கு ஆட்சியிலிருந்த முஸ்லிம் அரசர் 'முஹம்மது குவாரிஷா' செய்த ஒரு சிறு தவறால் வந்த வினை இது. அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் சக்தியாக விளங்கியவர் இவர். அவருடைய நாட்டுக்கு வணிகம் நிமித்தமாக வந்த மங்கோலியக் குழுவினரை அனுமதி பெறாத காரணம் காட்டி அவர்களைக் கொலைச் செய்ய உத்திரவிட்டார். அதற்கு முறையாக தூதர்களை அனுப்பி எதிர்ப்புத் தெரிவித்த செங்கிஸ்கானின் தூதர்களையும் கொன்றார்.

மனித நேயமற்ற இந்த இரண்டு சம்பவங்கள்தான் செங்கிஸ்கானை பழி வாங்கும் உக்கிரத்தில் தள்ளியது. வரலாற்றில் எராளமான முஸ்லிம்கள் உயிரிழக்கக் காரணமானது.

மங்கோலியப் படைகள், மத்திய ஆசியா, பாரசீக வளைகுடா, புடா பெஸ்ட், மாஸ்கோ என்று புயல் வேகத்தில் இந்தியாவின் தில்லிவரை வந்து சேர்ந்தன.

உலகின் வேறொரு மூலையிலிருந்தவர்கள் சுவீடன் நாட்டவர். அவர்களுக்கு செங்கிஸ்கானால் எந்த ஆபத்தும் இல்லாவிட்டாலும்கூட மங்கோலியர் பெயரைக் கேட்டு நடு நடுங்கினார்கள் அவர்கள்.

வெறும் ஆட்சி - அதிகாரம், ஆடம்பர மோகங்களில் (இன்றைய அரபு ஆட்சியாளர்களைப் போல) திளைத்திருந்த முஸ்லிம்களை வெல்வதற்கு எந்த சிரமமும் இல்லை. ஒரு மங்கோலியன் நூறு முஸ்லிம்களை கொலை செய்யுமளவுக்கு கோழைகளாக இருந்தார்கள். தங்களது உயிர், உடமைகளைக் காத்துக் கொள்ள இயலாமல் அவர்கள் செத்து மடிந்தார்கள்.

'மங்கோலியப் படை தோற்றுவிட்டதென்று யாராவது சொன்னால்... நம்பவே நம்பாதீர்கள்!' - என்று அரபு பழமொழி வழக்கத்தில் ஏற்படுமளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.

மங்கோலியர் சாம்ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்தபோது, முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஒழுக்க வீழ்ச்சியில் மூழ்கித் திளைத்தார்கள். ஊழல், அதிகார வெறி அவர்களிடையே மிகைத்துப் போனது. உலகாயதப்போக்கே அவர்களிடம் பிரதானமாக காணப்பட்டது.

தலைமைத்துவ தகுதியின்மைக்கு 'குவாரிஜயம் ஷா' மட்டுமே உதாரணம் அல்ல. அப்பாஸிய கலீஃபா 'அல் முஸ்த அஸிமின்' நிலைமையும் அதுதான்! குவாரிஜம் ஷாவின் அரசாட்சி வீழ்ந்தது என்று கேள்விப்பட்டதும், தனிப்பட்ட வெறுப்பை பொது வெறுப்பாக்கி அகமகிழ்ந்தார் அப்பாஸிய கலீஃபா அல் முஸ்த அஸீம். மங்கோலியர்கள் பாக்தாத்தை அடையும் முன்னரே கலீஃபாவின் ஆலோசகர்கள் தமது படைவீரரை விலக்கிக் கொள்ளும்படி கலீஃபாவுக்கு அறிவுறுத்தினார்கள். இந்தக் கோழைத்தனம் அப்பாஸிய ஆட்சி வீழ்வதற்கு போதுமானதாக இருந்தது.


இந்தக் கொடுமைகளாலும் இஸ்லாம் அழிந்துவிடவில்லை.

'தான் இறைவனின் பேரழிவு!', 'இறைவனால் அனுப்பப்பட்ட வேதனை!'- என்று தன்னைத்தானே அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்திக் கொண்டான் செங்கிஸ்கான்! கைப்பற்றிய  நாட்டு முஸ்லிம் பெண்களின் கற்பைச் சூறையாடினான். கொலைக்காரர் குஜராத் மோடி செய்தது போலவே நிறைமாத கர்ப்பிணிப் பெண்களையும் கற்பழித்து ... வயிற்றைக் கிழித்து.. குழந்தைகளை வாளால் குத்திக் கொன்றான். ஒரு தலைமுறைக்கு முஸ்லிம்களைத் துன்பங்களும், துயரங்களும் சூழ்ந்து கொண்டன.

அதன் பிறகு இறைவனின் பேரருள் மீண்டும் முஸ்லிம் சமுதாயம் மீது பொழிந்தது. தனது அடியார்கள் சோதனைகளால் பெற்ற படிப்பினைகள் போதும்! என்று கருணை வாய்ந்த இறைவன் எண்ணினான் போலும்! மீண்டும் இஸ்லாத்துக்கு சாதகமாக காற்று வீச ஆரம்பித்தது.

பாக்தாத் செங்கிஸ்கான் பேரனால் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு செங்கிஸ்கானின் கொள்ளுப் பேரன் 'பெர்க்' இஸ்லாத்தைத் தழுவினார்.

மங்கோலியர்களின் கொடும் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வரலாற்று நிகழ்வுகளில் இரண்டு சாமான்யமானவர்களின் பங்கு முக்கியமானது!

'பெர்க்' அல்லது 'பரகா கான்' என்று அழைக்கப்படும் செங்கிஸ்கானின் கொள்ளுப் பேரனுக்கு இஸ்லாம் இரண்டு வணிகர்களால் பரிச்சயமானது. இந்த முயற்சியின் விளைவாக இஸ்லாம் ரஷ்யா, கிழக்கு ஐரோப்பா வரை சென்று சேரக் காரணமானது!

பாரசீகத்ததைச் சேர்ந்த வணிகரான ஜமாலுத்தீன் தனது வணிகப் பயணம் நிமித்தமாகச் செல்லும் போது, மங்கோலிய இளவரசன் துக்ளக்கின் உயர் பாதுகாப்புப் பகுதியான விளையாட்டுத் திடலுக்குள் நுழைந்துவிட்டார். தெரியாமல் நடந்துவிட்ட சம்பவத்துக்கு அவர் கைது செய்யப்பட்டு இளவரசன் முன்பாக நிறுத்தப்பட்டார்.

செங்கிஸ்கானின் பரம்பரையில் உதித்த துக்ளக்கிற்கு பாரசீக முஸ்லிம்கள் என்றால்... விலங்குகளைவிட மட்டமானவர்கள் என்று நினைப்பு! பௌத்தமும், கிருத்துவமும் அவரது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான மதங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது!

இந்த எண்ணத்தாலேயே துக்ளக் ஜமாலுத்தீனை ஏளனமாகப் பார்த்து கிண்டலாகச் சொன்னானர்: "பாரசீகர்களைவிட நாய்கள் எவ்வளவோ மேல்!"

கொஞ்சமும் அச்சப்படாமல் ஜமாலுத்தீன் பதிலளித்தார்:

"உண்மைதான் அரசே! நாங்கள் இஸ்லாத்தைத் தழுவியிருக்காவிட்டால்.. தெரு நாய்களைவிட கேவலமாக இருந்திருப்போம்!"

சலனமற்ற இதயத்திலிருந்து அச்சமற்று வெளிப்பட்ட இந்த பதில் துக்ளக்கை சிந்திக்க வைத்தது. இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள அதுவே திருப்புமுனையாக அமைந்தது!


ஜமாலுத்தீன் துக்ளக்குக்கு இஸ்லாம் குறித்து விரிவான முறையில் பரிச்சயம்  செய்தார். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்த துக்ளக் ராஜாங்க காரணங்களையொட்டி தனது முடிவை அறிவிக்க சிறிது அவகாசம் கேட்டார். சிறிதுநாள் கழித்து தன்னை வந்து பார்க்கும்படியும், தனது வாக்குறுதியை நினைவுறுத்தும்படியும் ஜமாலுத்தீனை அவர் கேட்டுக் கொண்டார்.

ஊர் திரும்பிய ஜமாலுத்தீன் சிறிது நாளிலேயே நோயுற்றார். மரண வேளையில் அவர் தனது மகனான ரஷீதை அழைத்தார். இளவரசர் துக்ளக் குறித்து நடந்தவற்றை விவரித்தார். இஸ்லாம் ஏற்றுக் கொள்வது சம்பந்தமான உறுதிமொழியை அவருக்கு நினைவுறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.

துக்ளக் அரியணையில் அமர்ந்திருந்த சமயம் அது.

அவரை சந்திப்பது அவ்வளவு எளிதாக இல்லை. கடைசியில் அரண்மனை அருகே தொழுகைக்கான அழைப்பை விடுத்து துக்ளக்கின் கவனத்தை ஈர்த்தார் ரஷீத். அதன் பின் துக்ளக் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு உதவினார். 'துக்ளக் தைமூர் கான்' என்ற பெரும் பிம்பம் வரலாற்றில் பதியக் காரணமானார்.

துன்பங்களும், துயரங்களும் சத்தியத்தை என்றென்றும் சூழ்ந்திருப்பவை! பெரும் மலையிலிருந்து உருண்டுவரும் நீர்வீழ்ச்சியைப் போன்றவை! பாக்தாத், ஆப்கான், நேற்றைய குஜராத் எல்லாமே இறைவனின் சோதனைகள்தான்!

இந்த துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் மறுபக்கம் உண்டு என்பதற்கு சாமானியர்களான ஜமாலுத்தீன் மற்றும் ரஷீத் போன்றோரின் அழைப்பியல் வரலாறே சாட்சி!

ஆமாம்! அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் உறுதியுடன் நம்புங்கள்... இது இறைவனின் மார்க்கம்!

வாள் வீச்சுகளையும், துப்பாக்கித் தோட்டாக்களையும், நவீன லேசர் ஆயுதங்களையும் தாண்டி வரலாற்றில் நிலைத்திருக்கும் மார்க்கம்!

கியூபாவின் குவாண்டனாமோ சிறைச்சாலைகளும், ஈராக்கின் அபூகாரிப் சிறைகளையும் தாண்டி மீண்டெழும் மார்க்கம்!

நம்புங்கள் தோழர்களே! இது இறைவனின் மார்க்கம்! படைத்தவனால் தனது படைப்புகளுக்காக அருளப்பட்ட பேரருள் மார்க்கம்!

- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.

அழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:

1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html

3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html

4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html

5. சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html

6. சான்று வழங்குதல் என்றால் என்ன? http://ikhwanameer.blogspot.in/2015/08/6_14.html

7. கடல் பிளந்தது. நெருப்பு குளிர்ந்தது : http://ikhwanameer.blogspot.in/2015/08/13_18.html

8. அந்த நாள் வரும்முன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/8.html

9. அழைப்பாளர்களின் இலக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/08/9_22.html

10 ஊடகங்களின் இரண்டு அளவுகோல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/10_24.html

11.அடிப்படை விஷயங்களும், அழைப்பாளர்களும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/11.html

12. கடைநிலைக் காவலராய் ஒரு ஜனாதிபதி : http://ikhwanameer.blogspot.in/2015/09/12.html

13. மக்கள் சேவையில் மனம் திளைத்த ஜனாதிபதி : http://ikhwanameer.blogspot.in/2015/10/13.html
Share:

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 14: அழுதபடியே தொழுத அண்ணல்..!

இந்த மண்ணுலகில் எத்தனை எத்தனையோ மகன்கள், நல்லவர்கள், பெரியோர்கள் தோன்றியிருக்கிறார்கள். மனிதன் ஈடேற்றம் பெறுவதற்கான போதனைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கும் நபிகளார் போதனைகளுக்கும் பெருத்த வித்யாசம் உண்டு.

மனிதனின் அகம்-புறம் சார்ந்த முழு வாழ்க்கைக்குமாய் நபிகளாரின் போதனைகள் காணக் கிடைக்கின்றன.

பொது வாழ்வானாலும் அந்தரங்க வாழ்வானாலும் வெள்ளை வெளேர் வானமாய் வரலாற்றில் அவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான போதனைகள் அவை.


ஓர் இரவு இறைத்தூதர் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

பாதி இரவு கழிந்திருக்கும்.

நபிகளார் திடீரென்று விழித்துக்கொண்டார்கள். வீட்டிலிருந்து வெளியில் சென்றார்கள்.

நானும் நபியவர்கள் பின்தொடர்ந்து சென்றேன்.அவர்கள் பக்கத்திலிருந்த பள்ளிவாசலில் நுழைந்தார்கள்.

பயபக்தியோடு ஒரு அடிமையைப் போல.. நின்று தொழ ஆரம்பித்தார்கள்.

நான் வியப்புடன் பார்த்தவாறு நின்றிருந்தேன்.

சற்று நேரத்துக்கெல்லாம் பெருமானார் தேம்பி.. தேம்பி அழ ஆரம்பித்தார்கள். தொழுகையின் ஒவ்வொரு நிலையிலும் அழுதவாறே இருந்தார்கள்.

வைகறையில், நபித்தோழர் பிலால் அவர்கள் தொழுகை அழைப்பை விடும் வரை இந்த நிலைமை தொடர்ந்தது. அதன் பின் காலை நேரத்துத் தொழுகைக்கு தலைமைத் தாங்கிவிட்டு.. வீட்டிற்கு வந்தார்கள்.

நபிகளாரின் கால்கள் தடித்து வீங்கி விட்டிருந்தன. பெரு விரல்கள் கிழிந்து நிண நீர் வழிந்து கொண்டிருந்தது.

அவர்களின் நிலையைக் கண்டு நான், “ஓ! இறைவனின் தூதரே, தங்களுக்கு ஏன் இந்த சிரமம்? தங்களின் முன்-பின் பாவங்கள்தான் மன்னிக்கப்பட்டு விட்டனவே!” – என்று அழுதவாறே கேட்டேன்.

அதற்கு நபியவர்கள், “ஆயிஷாவே, இறைவன் என் மீது பொழிந்துள்ள அருள்வளங்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நல்ல இறையடியானாக நான் இருக்க வேண்டாமா?” – என்றார்கள்.

முஹம்மது நபிகளாரின் (ஸல்) சொந்த வாழ்வைக் குறித்து அவர்களின் துணைவியாரிடம் நபித்தோழர் ஒருவர் கேட்டபோது, அவ்வம்மையார் சொல்லிக் காட்டிய சம்பவமே இது!


 - இறைவன் நாடினால் அருட்கொடைகள் தொடரும்.


 முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:

1. அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html

2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html

3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html

4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html

5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html

6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html

7.ஓர் இறை.. ஓர் நிறை..  : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html

8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html

9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... : http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html

10. அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி : http://ikhwanameer.blogspot.in/2015/11/10.html

11. அவர்கள் எதிரிகள் குழந்தைகளாயினும்... : http://ikhwanameer.blogspot.in/2015/11/11.html

12. குற்றம் குற்றமே!  http://ikhwanameer.blogspot.in/2015/11/blog-post_19.html

13 . பாவங்களின் பரிகாரம்  http://ikhwanameer.blogspot.in/2015/12/13.html 
Share:

கேலி சித்திரம்: எல்லாம் உனக்குதான்!


 "எனக்குப் பிறகு எல்லாம் உனக்குதான் செல்லம்!"
Share:

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 13: பாவங்களின் பரிகாரம்!


பாவங்களுக்குப் பரிகாரம் தேடிச் சென்றால்.. இவர்கள் பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிப்பார்கள்! பூஜை புனஸ்காரங்கள்தான் தீர்வு என்பார்கள். மீண்டும் மீண்டும் மடமையில் சிக்க வைப்பார்கள்.

அந்த மனிதர் பாவங்களுக்கான பரிகாரம் தேடி நபிகளாரை சந்திக்க வந்தார். அவருக்கு நபிகளார் எத்தகைய வழிமுறையைக் காட்டினார்கள்.

இதோ.. இன்றைய அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்..

அவர் சோகத்துடன் இருக்கிறார் என்பதைப் பார்த்தவுடனேயே சொல்லிவிடலாம்.

உண்மையிலேயே அந்த மனிதரின் உள்ளதில் மலைப்பாறையாய் சோகம் அழுத்திக் கொண்டிருந்தது. வேதனை கடலலையாய் ஆர்ப்பரித்தது. நபிகளாரிடம் அவர் பேசிய பேச்சு, அதை உறுதிப்படுத்தியது.துக்கம் தொண்டையை அடைத்ததால்.. மேற்கொண்டு பேச முடியவில்லை. தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவருக்கு சிறிது நேரம் பிடித்தது. மறுமையில் இறைவன் தன்னை தண்டிப்பான் என்ற இறையச்சம் அவரது உள்ளம் முழுக்க நிறைந்திருந்தது. அவர் துடியாய் துடித்தார். அழுது அரற்றினார்.அந்த மனிதரின் நிலைமை நபிகளாரை பெரிதும் பாதித்தது. "சகோதரரே, உங்கள் தாயார் உயிருடன் இருக்கிறார்களா?"ஆனால், நபிகளாரோ அப்படி நடந்து கொள்ளவில்லை. அந்த மனிதர் செய்த பாவம் என்ன என்பதைக் குறித்தும் கேட்கவில்லை. நபிகளாரின் கேள்விக்கு அவர் பதில் சொன்னார்:

நடையில் தள்ளாட்டம். முகத்திலோ பெரும் வாட்டம்.

உடைந்துவிடுவதுபோல தழுதழுத்த குரல். அவர் கவலையோடு நபிகளாரின் திருச்சமூகம் தேடி சென்று கொண்டிருந்தார்.

"இறைவனின் தூதரே, நான் பெரும் பாவம் ஒன்றை செய்துவிட்டேன்...."

"இறைவனின் தூதரே, நான் இறைவனின் கட்டளையை மீறிவிட்டேன். ஆமாம்! நான் இறைவனின் கட்டளையை மீறிவிட்டேன். அய்யகோ, எனது பாவமன்னிப்புக்கு நான் என்ன செய்வேன்? நான் எப்படி இறைவனின் மன்னிப்பைப் பெறுவேன்?"

"... எனக்கு மன்னிப்பு கிடைக்குமா? இறைவனின் தூதரே? பாவமன்னிப்பு கிடைக்குமா? நான் மன்னிக்கப்படுவேனா இறைவனின் தூதரே, மன்னிக்கப்படுவேனா?"

மனிதன் தவறிழைப்பது சகஜம்தான்! ஆனால், செய்த தவறை உணர்ந்து.. பாவமன்னிப்புக்காக இறைவனின் பக்கம் திரும்புவதல்லவா மனிதப் பண்பு!

நபிகளாரின் கண்களில் இரக்கம் சுரந்தது. அவரை அனுதாபத்துடன் பார்த்தார்கள். பரிவோடு சொன்னார்கள்:

இறைத்தூதர் தனது பாவச் செயல் குறித்து விசாரிப்பார். இறைவனின் கட்டளையை மீறியது குறித்துக் கோபப்படுவார் என்று வந்தவர் எதிர்பார்த்திருந்தார்.

செய்த தவறை உணர்ந்து பரிகாரம் தேடிவந்தவருக்கு வழி காட்டுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.

"இல்லை இறைவின் தூதரே, எனது தாயார் இறந்து பல ஆண்டுகளாகி விட்டன."

"சரி.. உமது சின்னம்மா அல்லது சித்தி இருக்கிறார்கள் அல்லவா?"

அதைக் கேட்டு அந்த மனிதரின் முகம் மலர்ந்தது.

"ஆமாம்... ஆமாம்.. இறைவனின் தூதரே, எனது சிறிய தாயார் உயிருடன்தான் இருக்கிறார்"

அந்த மனிதருக்கு உள்ளத்தில் நம்பிக்கைப் பிறந்தது. நபிகளார் தனது பிரச்சினைக்கு தீர்வு சொல்ல இருக்கிறார்கள் என அவர் ஆவலுடன் காத்திருந்தார்.

"...நீங்கள் உங்கள் சிறிய தாயார நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். அவரது எல்லா தேவைகளையும் தட்டாமல் நிறைவேற்றுங்கள். அவருக்குத் தேவையான பணிவிடைகளை முகம் கோணாமல் செய்து வாருங்கள்.!"

அதைக் கேட்டு பாவமன்னிப்புக்கான வழிதேடி வந்தவரின் மனச்சுமை, பெருமளவில் குறைந்து போனது. அந்த மனிதரின் பாவமன்னிப்புக்கான வழியும் பிறந்தது. நபிகளாரின் அறிவுரையால் அவரது மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது.

"நிச்சயமாக... நிச்சயமாக... தாங்கள் சொன்னபடி செய்வேன் இறைவனின் தூதரே!" – உற்சாகம் தாளாமல் அவர் வாய்விட்டே கத்தி விட்டார்.

"... உம்மால் முடிந்த எல்லா பணிவிடைகளையும் உமது சிறிய தாயாருக்கு சிறப்பாக செய்துவாருங்கள். இதன் மூலமாக உமது பாவங்களுக்கு மன்னிப்புக் கிடைக்கும். உமது நல்ல பணிகள் பாவக்கறைகளைப் போக்கிவிடும்!-" என்றார்கள் நபிகளார் கருணையோடு !

தாயின் சேவை இறைவனை மகிழ்விக்கும். பாவங்களைப் போக்கிவிடும் பாவமன்னிப்புக்கான நுழைவாயிலாகிவிடும் என்ற பரிகாரத்தை சமூகத்துக்குள்ளேயே, உறவுகளுக்கள்ளேயே தேடிக்கொள்ளும்படி நபிகளார் அறிவுறுத்துகிறார்கள்.

மிகச் சிறந்த இத்தகைய அறிவுரைகளும், அந்த அறிவுரைகளின் மூலமாக சமூகத்தின் அடித்தளங்களான உறவுமுறைகளை முற்படுத்தியதும் இஸ்லாத்தை எதிர்ப்போருக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ?


- இறைவன் நாடினால். அருட்கொடைகள் தொடரும்.




முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:


2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html

3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html

4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html

5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html

6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html

7.ஓர் இறை.. ஓர் நிறை..  : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html

8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html

9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... : http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html

10. அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி : http://ikhwanameer.blogspot.in/2015/11/10.html

11. அவர்கள் எதிரிகள் குழந்தைகளாயினும்... : http://ikhwanameer.blogspot.in/2015/11/11.html

12. குற்றம் குற்றமே! : http://ikhwanameer.blogspot.in/2015/11/blog-post_19.html 
Share:

Friday, December 25, 2015

வைகறை நினைவுகள் 24: வேட்டைக்காரன்!


சனி, ஞாயிறு விடுமுறைகளைத் தொடர்ந்து இரண்டாம் வகுப்பு படிக்கும் பேரன் அனஸ், வயிற்றுவலி என்று ஒரு காரணம் சொல்லி பள்ளிக்கு போகாமலிருக்க அடம் பிடித்துக் கொண்டிருந்தான்.

அவனது அம்மா அதாவது எனது மூன்றாவது மகள், ஆயிஷா அவனைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

அவனது காரணங்கள் செல்லுப்படியாகாது! இன்னும் சற்று நேரத்தில், வன்முறை பிரயோகத்தில் அவன் பரிதாபமாக என்னை பார்த்துக் கொண்டே பள்ளிக்குப் புறப்பட்டுச் செல்வான்.

“நானாஜீ..! நீங்களாகவது எனக்கு உதவக்கூடாதா?” – என்று அவன் விழியாலே பேசுவது எனக்குப் புரியும். விவரிக்க முடியாத மன வலியோடு நான் மௌனமாகிவிடுவேன்.

அழுது கொண்டே பிள்ளைகள் பள்ளிக்கு போவதை நான் விரும்பாதவன். அவர்களை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அனுப்புவதையும் எதிர்ப்பவன். அதனால், பெரும் சங்கடத்துடன் எனது அலுவலக அறைக்குள் நுழைந்துவிட்டேன்.

எவ்வளவு கால மாற்றங்கள்!

ஆந்திரத்தை பூர்வீகமாகக் கொண்ட எனது தந்தையார் வேளாண் குடும்பத்தைச் சார்ந்தவர். அவரது ஜீவனத்துக்காக தையல் தொழிலைத் தேர்ந்தெடுத்திருந்தார். தாயார் மன்னர் காலத்து இராணுவ வீரர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று எனது அம்மாவின் அம்மா அதாவது எனது பாட்டி பெருமையாக சொல்லிக் கொள்வார்.

இந்த இரண்டு ஜமீன்களும், நெற்றி வியர்வைச் சிந்த உழைத்தால்தான் எங்கள் வாழ்வாதாரம் என்ற நிலையில் எனது கல்விப் பயணம் தொடர்ந்தது.

எனது தந்தையார் பெரிய படிப்பெல்லாம் படிக்கவில்லை. தெலுங்கில் கையெழுத்துப் போட மட்டும் தெரியும். ஆனாலும், அவர் என்னைப் படிக்க வைப்பதில் பேரார்வம் காட்டினார்.

அதேநேரத்தில், அவரோ அல்லது எனது தாயாரோ ஒரே ஒருநாள்கூட என்னை பள்ளிச் செல்ல நிர்பந்தப்படுத்தியதே இல்லை. போகமாட்டேன் என்று நான் ஒருநாளும் பொய்க்காரணங்களை, சாக்குப் போக்குகளையும் சொன்னதில்லை.

வீட்டுப் பாடங்கள் எல்லாம், ‘காடா’ விளக்கு வெளிச்சத்தில் செய்ய வேண்டும் அல்லது காய்ந்த சருகுகள், இலைத்தழைகள் எரித்து விடியற்காலையில் கனப்போடு அந்த வெளிச்சத்தில் படிப்பும் தொடரும். உயர் நிலைப்பள்ளி என்று கொஞ்சம் வளர்ந்த நிலையில், ரயில்வே ஸ்டேஷன் மின்விளக்கு வெளிச்சம் பயனாகும்.

எங்கள் வீட்டில், மின்விளக்கு வசதிகள் எல்லாம் இல்லாத காலம் அது. பள்ளி வாழ்க்கை முடிக்கும்வரை இதேநிலைதான்!

அதேபோல, கட்டணம் செலுத்தி டியூஷன் படிக்கும் வசதி இல்லை. அப்போது, கல்வியும் வணிகமயமாகவில்லை.

இந்நிலையில் தலைப்பாகை, முறுக்கு மீசை என்று பாரதியார் தோற்றத்தில், இருகால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான அய்யா ஆசிர்வாதம் பிள்ளைகளுக்கு மாலையில் இலவச டியூஷன் நடத்திக் கொண்டிருந்தார். அதுவும் ஒரு செய்தித்தாள் விற்பனைச் செய்யும் ஒரு பங்குக்கு அடியில். வசிப்பிடம் அதுதான். டியூஷன் சென்டரும் அதுதான். அவரிடம் சில காலம் டியூஷன் படித்திருக்கிறேன்.

அப்போது, எண்ணூரில் காமராஜர் நகர் பகுதியில் (அப்போது நில அளவீட்டு எண்ணால் - 21 என்று அழைப்பார்கள்) இந்தப் பகுதியில் தாமரைக் குளம் ஒன்று இருந்தது. உண்மையில், அது மழை நீர் சேகரிப்புக்கான ஏரி என்று இப்போது புாிந்துகொள்ள முடிகிறது. அந்த குளம் முழுக்க தாமரை படர்ந்து பூத்து குலுங்கும். மீன்கள் உட்பட ஏராளமான நீர் வாழ் உயிரினங்களின் வசிப்பிபடமாக அது இருந்தது. கழிவுநீர் குட்டையாகவும், ஆக்கிரமிப்பில் சுருங்கிப்போயும் இன்றும் அந்த குளம் இருக்கிறது.

ஒரு மாலை நேரம்.

பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தால் எனது மாமா தாமரைக் குளத்தில் மீன் பிடிக்க சென்றிருப்பதாக தகவல்.

வீட்டிலிருந்து தண்டவாளத்தைக் கடந்து சற்று சிரமப்பட்டு செல்ல வேண்டிய தொலைவில்தான் குளம் இருந்தது.

அன்றைக்கு டியூஷனுக்கு மட்டம் போட்டுவிட்டு குளத்தை நோக்கி நடந்தேன்.

குளத்துக் கரையில் அமர்ந்து எனது மாமா (அம்மாவின் உடன்பிறப்பு) தூண்டில் போட்டுக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்து அவ்வளவு தூரம் ஏன் வந்தேன் என்று கடிந்து கொண்டு பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்.

சிறிது நேரம் சென்றிருக்கும்.

நான் டியூஷனுக்கு செல்லாததை எப்படியோ தெரிந்து கொண்டு குளக்கரைக்கு வந்துவிட்டார் எனது தந்தையார்.

பிறகு?

பிறகென்ன? கையும் களவுமாய் சிக்கிய திருடனைப் போல என்னை பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு டியூஷன் நடக்கும் இடத்துக்கு சென்றார்.

அடியா அது?

நடுரோட்டில், பொது ஜனங்கள் முன்பாக, டியூஷனில், பெண் மாணவிகளின் முன்பாக மிதி மிதி என்று மிதித்து, அடித்து துவைத்துவிட்டார்.

கோபம் வந்தால் அம்மா எனது உடைகளின் ‘தூசு’ தட்டுவார். மற்றபடி சொல்லிக் கொள்வதைப் போல, எனது பெற்றோரிடம் நான் அடிவாங்கியது இல்லை.

என் நினைவில் மறவாமல் பதிந்திருக்கும் அடி, உதை சம்பவம் இது. என்னை நெறிப்படுத்த உதவிய சம்பவம். அடிப்பட்ட அந்த இடங்களை இப்போதும் மென்மையாக நான் வருடி விடுகிறேன். எனது தந்தையாரின் மெல்லிய தேகத்தின் ஸ்பரிசம் தெரிகிறது.

அதன் பின் இத்தகைய ஒழுக்க மீறல்களை நான் செய்ததேயில்லை. மிகச் சிறந்த மாணவனாகவே பெயர் எடுத்திருக்கிறேன். ஆரம்ப பள்ளி நாட்களில், சபாநாயகராக செயல்பட்டிருக்கிறேன். நாடகங்களில் அலெக்ஸாண்டராக நடித்திருக்கிறேன். உயர்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற செயலாளர் என்று பெரும் பொருப்புகளை சுமந்திருக்கிறேன். எனது உயர்வின் அந்தப் பெருமைகளை என் தந்தையாரின் கண்களில் வெளிப்படச் செய்திருக்கிறேன்.

எந்த மீன் பிடி சம்பவத்தால், எனக்கு அடி, உதை கிடைத்ததோ பின்னாளில் நிலைமை அப்படியே மாறி போனது. நான் வளர்ந்த போது எனது தந்தையாரின் மிகச் சிறந்த மீன் பிடி கூட்டாளியாக விளங்கினேன்.

வளையாத மெல்லிய மூங்கில் கழிகளை வாங்கி, நன்றாக சீவி எண்ணெய் தடவி சூட்டில் பதப்படுத்தி குடிசையின் உத்திரத்தில் கல் கட்டி தொங்கவிடுவது. கொடுவா போன்ற மீன் வேட்டைக்காக தடித்த மூங்கில்களை வாங்கி நன்றாக சீவி, நெருப்பில் பதப்படுத்தி பூமியில் பரப்பி பெரிய பாறைகளை வைப்பது. தூண்டில், முள் மற்றும் தக்கைகள், தக்கை எடைக்கான ஈயக் கற்கள் என்று சகலமும் தயாரிக்க கற்றுக் கொடுத்தார் என் தந்தையார்.

ஓய்வு நேரங்களில் தந்தையாரோடு எண்ணூர் கடற்கழிக்கு செல்வேன். எங்கள் வீட்டுக்கு இரவு உணவுக்காக தேவையான மீன்களோடு திரும்புவோம்.

நாளாக… நாளாக.. திறம்பட மீன் பிடிக்கும் கலையையும் கற்றுக் கொண்டேன் என்பதெல்லாம் உபரி செய்திகளாகும்.
 
மீன்பிடித்தலுக்கான இந்த வேட்டைத் திறன் மற்றும் காத்திருப்பு பிற்பாடு எனது வாழ்க்கையின் பல துறைகளில் உதவியது.

இறைவன் நாடினால் அடுத்த வைகறை நினைவுகளில் சோவியத் கரடியை கிடுகிடுக்க வைத்த குர்ஆன்

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
 வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23:  மர்யம் ஏன் அழுதாள்?:  http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html
Share:

மிலாது சிறப்புக் கட்டுரை: நபிகளாரின் திருச்செய்தி


நபிகளார் இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கத்தரிசி என்பது தெரியும். அது சரி… நபிகளார் கொண்டு வந்த செய்திதான் என்ன?

ரோமப் பேரரசர் ஹெர்குலஸ். அவர் ‘பைத்துல் முகத்தஸ்’ எனப்படும் ஜெருசலேத்தில் இருந்தபோது, நபிகளார் அவருக்கு எழுதியிருந்த கடிதம் கிடைத்தது. யாராவது ஒரு அரபியர் கிடைத்தால். அவரிடம் நபிகளார் பற்றிய தகவல்களை விசாரிக்கலாம் என்று அவர் காத்திருந்தார். அப்போது மக்கத்து குறைஷி பிரமுகர் அபூ சுப்யானையும், அவரது தோழர் சிலரையும் தற்செயலாகச் சந்தித்தார்.

அபூ சுப்யானை நோக்கி ஹெர்குலஸ் இப்படி கேட்டார்: “முஹம்மது உங்களிடம் அப்படி என்னதான் கூறுகின்றார்?’

நபிகளாரிடம் கடும் விரோதம் பாராட்டி வந்தார் அபூ சுப்யான். ஆனாலும், நபிகளார் குறித்து நேர்மையான முறையில்தான் அவரால் பதிலளிக்க முடிந்தது. அவர் இப்படி சொன்னார்:

  •  “ஒரே இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள். வானங்களிலும், பூமியிலும் இறைவனின் ஆட்சியே நடக்கிறது. சர்வலோகங்களிலும் அவனுடைய ராஜாங்கமே நடக்கிறது. இந்த அதிகாரத்திலும், நிர்வாக அமைப்பிலும் அவன் யாரையும் இணை, துணையாக வைத்துக் கொள்ளவில்லை.
  •     இறைவனின் சக்திக்கு நிகர் வேறு சக்தியில்லை. யதார்த்தம் இதுவாக இருக்கும்போது, மனிதர்கள் இறைவனுக்கு மட்டுமே தலை தாழ்த்தி வணங்கிட வேண்டும். அவன் மீதே அன்பு வைக்க வேண்டும்.
  •     இறைவனுக்கு அடிபணிவதிலும், இறைவனை வணங்குவதிலும், இறைவனின் மேலாதிக்கத்திலும் எவரையும் இணை வைக்கக் கூடாது. எல்லாவற்றுக்காகவும் அவனிடமே உதவி கேட்க வேண்டும்.
  •     முன்னோர்களின் கோட்பாடுகளையும், இணைவைப்புச் செயல்களையும் விட்டுவிட வேண்டும்.
  •     தொழ வேண்டும்.
  •     சொல்லாலும், செயலாலும் வாய்மையுடன் வாழ வேண்டும்.
  •     ஆணும் – பெண்ணும் ஒழுக்கத்தையும், கற்பையும் பேணி வாழ வேண்டும்.
  •     சக மனிதர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
  •     மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே! ஒருவருக்கொருவர் சகோதரர்களே! ரத்த உறவு முறைகளே!”
நபிகளாரின் அழைப்பு, அன்னார் கொண்டு வந்த திருச் செய்தியின் உள்ளடக்கம் இதுதான்!

‘அம்ரு இப்னு அபஸா’ என்பது அந்த நபித்தோழரின் பெயர். இவர் நபிகளாருக்கு நபித்துவம் கிடைத்த தொடக்கக் காலத்தில் நபிகளாரை மக்கா நகரில் சந்தித்தார். அப்போது அவருக்கும் நபிகளாருக்கும் நடந்த உரையாடல் இது:

“நீங்கள் யார்?”

“நான் இறைவனின் தூதராவேன்!”

“… இறைத்தூதர் என்றால்…?”

“இறைவன் என்னைத் தனது தூதராக.. அனுப்பியுள்ளான்!”

“என்ன செய்தியுடன் இறைவன் உங்களை அனுப்பியுள்ளான்?”

    மக்கள் தம் உறவினருடன் இணைந்து வாழ அறிவுறுத்த வேண்டும்!
    இறைவன் ஒருவன் என்ற ஏகத்துவக் கொள்கை பரப்ப வேண்டும்!
    இறைவனுடன் வேறு எவரையும், எதையும் இணை வைக்கக் கூடாது!

இது போன்ற நோக்கங்களுடன் இறைவன் என்னை அனுப்பியுள்ளான்!”

நபிகளார் தமது வருகையின் நோக்கத்தை வாய்ப்பட ரத்தினச் சுருக்கமாக சொன்னது இது:

"இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையிலான உறவை சீர்ப்படுத்த வேண்டும். அந்த உறவு சரியான அடிப்படைகள் மீது நிறுவ வேண்டும். அதற்கான அடிப்படை …. ‘இறைவன் ஒருவன்’ – என்ற ஏகத்துவமாகும். இறைவனின் அதிகாரத்தில் வேறு எவரது தலையீட்டையும் அனுமதிக்கக் கூடாது! இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். இறைவனின் கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும்.

மனிதர்களுக்கிடையிலான சரியான தொடர்பின் அடிப்படைகள் பரஸ்பர அனுதாபமும், பரிவும், இரக்கமுமேயாகும். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள். ரத்த பந்த உறவு முறையினர். அதனால், ஒருவர் மற்றொருவரிடம் பரிவுடனும், இரக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் அநீதிக்கு ஆளாகும்போது, அனைவரும் அநீதி இழைக்கப்படுபவருக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழ வேண்டும். ஆபத்தில் சிக்கிக்  கொண்டோரை ஓடோடிச் சென்று காக்க வேண்டும்"


நபிகளாருக்கு முன் எல்லா இறைத்தூதர்களும் இந்த அடிப்படைச் செய்திகளைத்தான் சொன்னார்கள். அதாவது, ஏகத்துவம் எனப்படும் ஓரிறைக் கொள்கையும், மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும் … முதல் இறைத்தூதருமான ஆதிபிதா ஆதம் அவர்களின் சந்ததிகள். சகோதர உறவுமுறை கொண்டவர்கள் என்பதுதான் அனைத்து இறைத்தூதர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியின் சாராம்சம்.

முகீரா பின் ஷீஃபா மற்றொரு நபித்தோழர்.

ஒருமுறை, பாரசீகத்து தளபதி ருஸ்தூமுடன் நடந்த உரையாடலில் சொன்னார்:

“அய்யா! நாங்கள் வணிகர்கள் அல்ல. வணிகத்துக்கான புதிய புதிய சந்தைகளைத் தேடிக் கொண்டிருப்பதற்கு! அது எங்கள் நோக்கமும் அல்ல; எங்கள் இலக்கும் அல்ல. எங்களது நோக்கமும், குறிக்கோளும் மறு உலகம்தான்!

நாங்கள் இறைவனின் கட்டளைகளான இஸ்லாத்தின் கொடியை தோளில் சுமந்து நிற்பவர்கள். அந்த வாழ்க்கையின் பக்கம் மக்களை அழைப்பதே எங்கள் குறிக்கோள். வணக்கத்துக்குரியவன் ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதும், முஹம்மது நபிகளார் இறைவனின் திருத்தூதர் என்று சான்று பகர்வதும் இந்த மார்க்கத்தின் அடிப்படை. மனிதன் தன்னைப் போன்ற சக மனிதனுக்கு அடிபணிவதிலிருந்து அவனை விடுத்து இறைவனுக்கு அடிபணிந்து வாழச் செய்ய வேண்டும் என்பதும் இந்த வாழ்க்கை நெறியின் அறிவுரையாகும்!”

இதைக் கேட்ட பாராசீக தளபதி வியந்து சொன்னார்:

“நல்ல அறிவுரைதான்! இன்னும் என்ன சொல்கிறது உங்கள் மார்க்கம்?”

அதற்கு நபித்தோழர் முகீரா பதிலளித்தார்:

“மனிதர்கள் அனைவரும் ஆதமின் வழித்தோன்றல்களே! அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்பதும் அந்த அறநெறியின் போதனைகளாகும்”

 இவை நபிகளார் கொண்டு வந்த இஸ்லாம் என்னும் இறைநெறியின் அடிப்படை செய்திகளில் சில. எவர் விரும்புகின்றாரோ அவரை மனிதர்களின் அடிமைப்படும் தளைகளிலிருந்து விடுவித்து இறைவனுக்கு, எங்கும் வியாப்பித்திருக்கும் அந்த பரம்பொருளுக்கு அடிபணியும் வாழ்க்கை நெறிக்கு அழைத்துச் செல்லும் திருப்பணி இது.

படைத்தவனின் கட்டளைப்படி மனித குலத்தை வாழ அழைப்பதே நபிகளாரின் திருச் செய்தியாகும்.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில், 24.12.2015 - மீலாதுன் நபி சிறப்புக் கட்டுரையாக வெளியான எனது ஆக்கம்)

------------------



Share:

Saturday, December 19, 2015

இஸ்லாம் வாழ்வியல்: ஆட்டுக்கு உணவில்லையென்றாலும்


ஜனாதிபதி உமர், சிரியாவிலிருந்து தலைநகர் மதீனாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு குடிசை கண்ணில் பட்டது. காட்டுப்பகுதியில் அமைந்திருந்த அந்தக் குடிசையைக் கண்டதும் அவருக்கு வியப்பு ஏற்பட்டது.

குடிசையின் எதிரே ஒரு மூதாட்டி, சோகமே உருவாக அமர்ந்திருந்தாள். குழிவிழுந்த கண்களும், ஒட்டிய கன்னங்களும் அவளது ஏழ்மையை பறைச்சாற்றின.

உமர் மூதாட்டிக்கு சலாம் சொன்னார். பேச்சு கொடுத்தார்.

“பாட்டி ஜனாதிபதி உமரை நீங்கள் அறிவீர்களா?”

“எனக்கு உமரையும் தெரியாது! யாரையும் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. என்னுடைய பிழைப்பே மிக மோசமாக இருக்கும்போது, நான் அவரைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப்போகிறது?”

மூதாட்டியின் பேச்சில் விரக்தியும், கோபமும் வெளிப்பட்டன.

ஜனாதிபதி சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு கேட்டார்.

“பாட்டி! உமர் மீது உங்களுக்கு இவ்வளவு கோபம் ஏன்?”

“வந்ததிலிருந்து உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் பேச்சு உமரையே சுற்றிச் சுற்றி வந்துக் கொண்டிருப்பது ஏன் என்று புரியவில்லை. நான் நீண்ட நாட்களாக இப்படி பசி, பட்டினியோடு செத்துக் கொண்டிருக்கிறேன். உமர் என்னைக் குறித்து கவலைப்பட்டதாகவோ, என் துயர் களைய முயன்றதாகவோ தெரியவில்லை. அப்படியிருக்கும்போது, அவர் மீது கோபமும், வெறுப்பும் வராமல் என்ன செய்யும்? மறுமை நாளில் எனக்கு உமருக்கும் இடையில் நடைபெறவிருக்கும் வழக்கை எதிர்நோக்கி நான் காத்திருக்கிறேன்!”

அதிர்ச்சியடைந்த ஜனாதிபதி உமர், “பாட்டி, நீங்கள் சிரமப்படுவதையும், உதவி தேவைப்படுவதையும் ஜனாதிபதிக்குத் தகவலாவது தந்தீர்களா?” என்று கேட்டார்.

“என்ன சொல்கிறாய் நீ? என்னுடைய நிலையை நான் தெரிவிக்க வேண்டும் என்றால், ஜனாதிபதியாய் அவர் எதற்கு? இந்தப் பகுதி அவரது ஆளுகைக்கு உட்டதில்லையா? மக்களின் குறைகள் அறிவதும், அவற்றை களைவதும் ஆட்சியாளரின் பொறுப்பல்லவா?” மூதாட்டி கோபத்தில் கத்த ஆரம்பித்தாள்.

“பாட்டி! ஏன் கோபப்படுகிறீர்கள்? நீங்கள் ஊரைவிட்டு இப்படி காட்டில் தனிமையில் வசித்தால் பாவம் ஜனாதிபதி என்னதான் செய்வார்? பிரச்னை என்னவென்று தெரிவிப்பது உங்கள் பொறுப்புதானே?”

“உனக்கு புத்தி பேதலித்துவிட்டது போலும்! அதுதான் இப்படி பேசுகிறாய்! ஊரைவிட்டு ஒதுங்கிய பகுதி என்றால், உமர் இதை தமது ஆட்சி, அதிகாரத்தில் ஏன் சேர்த்துக் கொள்ள வேண்டும்?”

இதுவரை மூதாட்டியின் கோபமான பேச்சை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி உமரின் விழிகள் குளமாயின. முத்துமுத்தாய் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தமது அதிகாரத்துக்கு உட்பட்ட மக்களின் நலன்கள் குறித்து மறுமையில் இறைவன் கேட்கும் கேள்விக்கு தாம் பதில் சொல்ல வேண்டியிருக்குமே என்ற அச்ச உணர்வு அவரை நடுங்கச் செய்தது.

நீண்ட நேரம் அழுதவாறு நின்ற ஜனாதிபதி உமர், “பாட்டி நீங்கள் சொன்னது சரிதான்!” என்று கரகரத்த குரலில் சொல்லிவிட்டு குதிரையேறி புறப்பட்டார்.

அழுகையும், புலம்பலுமாய் அந்தப் பயணம் தொடர்ந்தது.

தலைநகர் மதீனாவை அடைந்ததும் உமரின் முதல் அரசாணை மூதாட்டியின் நிவாரணத்துக்கானதாக இருந்தது. அதன் பிறகுதான் அவரது மனம் சமாதானம் அடைந்தது.

தனது ஆளுகைக்கு உட்பட்ட யூப்ரடீஸ் நதிக்கரையோரம் இருக்கும் ஓர் ஆட்டுக்குட்டிக்கு உணவு கிடைக்கவில்லையெறால்கூட, மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டியிருக்குமென்று நள்ளிரவுகளில் ஜனாதிபதி உமர் அழுது புலம்பிக் கொண்டிருப்பாராம்.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 10.12.2015 அன்று பிரசுரமான எனது கட்டுரை)
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive