NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Friday, June 26, 2020

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!



இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள் ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்
 
'''''''''''''''''''''''''‘’
 இரவெல்லாம் தூக்கம் வரவில்லை எனக்கு!

அப்படி என்னதான் செய்துவிட்டார்கள் ஜெயராஜும், பென்னிஸீம்?

இந்தளவு கொடுமை இழைக்குமா சொந்த நாட்டின் சொந்த போலீஸ்?

நம்பவே முடியவில்லை!

ஒரேயடியாக சுட்டு கொன்றுவிட்டிருக்கலாம்!

அந்த சித்திரவதை வலியின் வேதனை தெரியாமலிருக்க.. கண நேரத்தில் பாயும் தோட்டாவின் வலியோடு எல்லாம் முடிந்திருக்கும்?

துடிக்க.. துடிக்க.. கதற.. கதற.. அண்டை. அயலாரின் காதுகள் செவிடாகி போனதேன்?

எல்லாம் அறியாமையும், சுயநலமும் ஒருசேர வாய்க்க பெற்ற சுயநல மக்களின் ஜனநாயக அமைப்பில் அவரவர் கால்களில் படும்போதுதான் வலி தெரியும் போலும்!

குற்றவாளிகளாயினும், தண்டனை அளவீடு மிஞ்சுவதில்லை எங்கும்!

அரசு பதக்கங்களும், பாராட்டுகளும், பதவி உயர்வுகளும், சாதீய அமைப்புமான அரசியல் சமூக அமைப்பில் இந்த அதிகார அத்துமீறல்கள் கட்டுக்கடங்காதவை!

தலைக்காய்ந்தவர்களும், சாமான்யர்களும் வாழ தகுதியற்றவர் என்கிறதா இந்த அதிகார அத்துமீறிய அரசியல் அமைப்பு? அல்லது ஒவ்வொரு கணமும் இருப்புகளுக்கான போராட்டமும், விழிப்புணர்வூட்டும் மக்களுக்கான தலைமையும் அவசியம் என்கிறனவா சாத்தான்குளம் படுகொலைகள்?

ஒரு ஜார்ஜ் பிளாய்ட் மூச்சுவிட திணறி இனவெறியனால் கொல்லப்பட்டதற்கு ஒட்டுமொத்த அமெரிக்க சமூகம் திரண்டு நின்றதே தெருக்களில்! நீதி கேட்டு நடந்த அந்த உக்கிர மக்கள் திரள்முன் மண்டியிட்டதே அதிகாரம்! நம்மால் ஏன் செய்ய முடியவில்லை! காரணங்களின் முடிவில் தீர்வாய் தடைபோட்டு நிற்பது அதே தன்னலம்தான்!

வலி பொறுக்க முடியாமல், ஓங்கி.. ஓங்கி ஒலிக்கின்றன பெரியவர் ஜெயராஜின், தம்பி பென்னிஸின் ஓலங்கள்! அதோ தெரித்து சுவர்களில் ஒட்டிக் கொள்கின்றன பிய்ந்தபோன அவர்களின் முன்பின் மறைவான அவையங்களின் நுண்ணிய ரத்தம் தோய்ந்த தசைகள்!

இதே வேதனை, இதே தண்டனை ஆட்சியாளர் முதற்கொண்டு கடைநிலை அதிகாரம்வரை பெற வேண்டாமா? அவர்களின் ஒவ்வொரு அணுத்துகள்களும் அதேஅளவு வேதனையை அனுபவிக்க வேண்டாமா? அதுதானே சமநீதி! அதுதானே பாதிக்கப்பட்டவரின் இழப்புக்கான முதல்நிலை இழப்பீடாக இருக்க முடியும்? மீண்டும் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்கும்?  

நாகரீக சமூகம் என்று சொல்லிக்  கொண்டு ஒரு காட்டுமிராண்டி சமூகத்தின் நுழைவாயிலில் நிற்கிறோமோ நாம்!

இந்த அதிகார வெறிப்பிடித்த கொடுமைக்கார்ரகளைவிட கொரோனோ எவ்வளவோ மேல்!

''''''''''''''''''''''''''''



Share:

சாத்தான்குளம் காவல்நிலைய கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர்
 '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இயக்குனர் சசியின் பிச்சைக்காரன் படத்தில் இறுதி காட்சியாக இப்படி வரும்: ‘மருத்துவமனையில் அமர்ந்திருக்கும் கதாநாயகனை தேடிவரும் போலீஸ் காவலர்கள், “எழுந்துர்டா!” – என்று அதிகார மிடுக்குடன் மேலதிகாரியிடம் அழைத்து செல்வார்கள். போலீஸ் அதிகாரியிடம், "என்ன காரணமாக கைது செய்கிறீர்கள்?” என்று கதாநாயகன் கேட்பான். “பிச்சைக்காரனுக்கெல்லாம் காரணம் சொல்லனுமா?” - என்று ஓங்கி அறைவார் அந்த அதிகாரி.

இந்த ஆணவத்தின் உச்சகட்ட வெளிப்பாடுதான் சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீஸ் ஆகிய இருவரின் காவல்நிலைய கொட்டடி கொலைகள். அதிலும் பென்னீஸ் எம்எஸ்டபிள்யூ (MSW)பட்டதாரி! மக்கள் சேவைக்காக இந்த பட்டப்படிப்பை முடித்திருக்கும் இளைஞர். இவருடைய முன்,பின் பகுதிகள் முற்றிலும் சிதைக்கப்பட்டிருப்பதாக அவருடன் பிறந்தவர்கள் சொல்லி அழுகிறார்கள். கொரோனோ காலத்தில் அதிக நேரம் கடை திறந்து வைத்திருந்ததற்காக சட்டத்திற்கு புறம்பாக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் இவை என்கிறார்கள் பொதுமக்கள்.

இத்தகைய மனித உரிமை மீறல்கள் நடைபெறும் போதெல்லாம். சம்பந்தப்பட்ட காவலர்களை இடமாற்றம் செய்வதும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பதும், பாதிக்கப்படும் குடும்பத்து உயிரிழப்புகளுக்கு நிவாரணம் என்ற பெயரில் சில லட்ச ரூபாய் சட்ட ரீதியான கையூட்டாக வழங்குவதும் அரசாங்கத்தின் அறிவிக்கப்படாத சட்ட சம்பிரதாயங்களாகிவிட்டது.

இதையும் மீறி போராட்டங்களின் விளைவாக எழும் மக்களின் அழுத்தம் காரணமாக கண்துடைப்புக்கு ஒரு விசாரணை கமிஷன் நியமிக்கப்படும். அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது.

இதற்கு அடுத்த சில மாதங்களில் காவல்நிலைய கொட்டடியில் அநியாயமாக துடிக்க.. துடிக்க கொலை செய்த அதே காவலர்களுக்கு விருதுகளோடு பதவி உயர்வுகளும் வழங்கப்படும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் சாமான்ய மக்களின் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!

“தற்போதுள்ள போலீஸ் சட்டங்களை எல்லாம் தூக்கி கடலில் வீசி எறிய வேண்டும்.  புத்தம் புதிய போலீஸ் சட்டத்தை உருவாக்க வேண்டும்!” – என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன். "நீதிமன்றம், காவல்துறை, சிறைத்துறை ஆகிய மூன்றும் இந்த அமைதி கூட்டுச்சதியில் பங்காளிகள்!" - என்கிறார் அவர் தொடர்ந்து தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளை மறைத்த காவலர்கள், மாவட்ட காவல்துறை அதிகாரிகள், ரிமாண்ட் செய்வதற்கு முன்பாக குற்றம் சுமத்தப்பட்டவர் தரப்பு நேரடி வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கு வாய்ப்பளிக்காத நீதித்துறை நடுவர், மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டிருந்தால் போலியான அத்தாட்சிகளை தந்த மருத்துவர் மற்றும் மருத்துவ சோதனை செய்யாமலேயே (செய்யப்பட்டதாக அதிகார பூர்வமற்ற ஒரு தகவல் உண்டு) சிறையிலடைத்த சிறைத்துறை ஆகிய அனைவருமே இந்த மரணங்களுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள். சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள்.

மக்கள் போராட்டம்  தீவிரமடைந்திருக்கும் நிலையில், நமது முதல்வரோ, மகன் மூச்சுத் திணறி இறந்ததாகவும், தந்தையோ நெஞ்சுவலியால் இறந்ததாகவும் அறிக்கை வெளியிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால், ஏதாவது விசாரணை கமிஷன் நியமித்தாலும் முதல்வரின் அறிக்கைக்கு எதிராக ஒரு அறிக்கை வெளியாவதற்கு வாய்ப்பேயில்லை!

அதே பிச்சைக்காரன் படத்தில், அதே கிளைமாக்ஸ் காட்சியில், கதாநாயகனை அடித்து தர தரவென்று இழுத்து செல்லும் காவல்துறை அதிகாரி, அவர் செல்வந்தர் என்று தெரிந்ததும், வேர்த்து, விறுவிறுத்து போவார். தட்டிவிட்ட அதே கையை இரு கையாலும் பவ்வியமாகப் பிடித்து மன்னிப்பும் கேட்பார்.

இந்த வேர்த்து விறுவிறுப்பும், தவறிழைத்தால் தண்டனைக்காளாக நேரிடும் என்ற நடுக்கமும் சாமான்யனைக் கண்டதும் காவல்துறைக்கு ஏற்படுத்தும் விதமான அரசும், அதற்கான அமைப்புமே தற்போதைய தேவை!

'''''''''''''''''''''''''


Share:

Friday, June 5, 2020

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive