NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Wednesday, February 26, 2020

விரட்டி அடி..! அக்கிரமம் வளர்!!



"காட்டிலிருந்து பழங்குடிகளை விரட்டு!

கடலிலிருந்து மீனவர்களை விரட்டு!

பெருநகர்களிலிருந்து குடிசைவாழ் மக்களை விரட்டு!

டெல்டாவிலிருந்து விவசாயிகளை விரட்டு!

சிறுநகரங்களிலிருந்து சிறுதொழில் சிறுவணிகரை விரட்டு!

மாநிலங்களிலிருந்து மண்ணின் மக்களை விரட்டு!

ஊர்தோறும் சேரிமக்களை ஓடஓட விரட்டு!

காட்டைக் கொளுத்து! கடலை நஞ்சாக்கு!

பூமியின் மறுபுறம் வரை துளையிடு!

வாயு, கரி, எண்ணெய் என எதையும் விடாதே!

அரசுடைமை அனைத்தையும் கார்ப்பரேட் உடைமையாக்கு!

பேச்சுரிமை பறி! எழுத்துரிமை பறி!

வாழ்வுரிமை பறி! போராட்ட உரிமை பறி!

ஜாதிவெறிக்கு சாம்பிராணி போடு!

மதவெறிக்கு ஊதுபத்தி கொளுத்து!

நாட்டையே கொள்ளையிடு! அதை வளர்ச்சி என்று சொல்!

காவிகள், கார்ப்பேட்டுகளின் கால்களை நக்கிக்குடி!

அதை "தேசபக்தி" என்று சொல்!

எதிர்த்துக் கேட்போரை இல்லாமல் ஆக்கு!

தீவிரவாதி, நக்சலைட் என்று பரப்பு!

ஊடகம் யாவையும் உண்மைக்கு ஊமையாக்கு!

உனக்கு மட்டும் ஊது குழலாக்கு!

எல்லா அக்கிரமங்களையும் சட்டப்படி செய்!

சட்டம் இல்லையெனில் புதுச்சட்டம் போடு!

அக்கிரமம் வளர்!

உன் ஃபாசிசக் கொடுமை தாளாமல் ஒப்பாரி

மரண ஓலமிடும் மக்கள் கூக்குரல்

உலகுக்குக் கேட்காமல் இருக்க

ஓவென்ற...

விமானப் பேரிரைச்சலையும் தாண்டி...

இன்னும் அதிகமாய்

வெறிப்பிடித்த மிருகம்போல்

கும்பலாகக் கத்து

#பாரத்_மாதாகீ_ஜெய் என்று...!"

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
- முனைவர் ஜீவா
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

இந்த பதிவு இனிய நண்பர் Bhaskarraja Rengarajan-ன் பின்னூட்டத் திலிருந்து எடுத்து கையாளப் பட்டுள்ளது. நன்றி பாஸ்.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Share:

Tuesday, February 25, 2020

இந்த மௌனம் கொல்கிறது நண்பர்களே!




உங்கள் மௌனம் என்னைக் கொல்கிறது நண்பர்களே!

உண்மைதான்!

உங்கள் மௌனம் எனது கொலைக்கு ஒப்பானதாய் நான் கருதுகிறேன் நண்பர்களே!

முகநூலில், ஐந்தாயிரம் நண்பர்கள். இதில் பின்பற்றாளர்கள் இன்னும் சில ஆயிரம். அப்படியிருந்தும் இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அராஜகம் குறித்து நீங்கள் மௌனமாக இருப்பது என்னை பெருத்த கேள்விகளால் துளைத்தெடுக்கிறது என்பதே உண்மை.

எனது பதிவுகளுக்கு நீங்கள் தெரிவிக்கும் விருப்புகள், வெறுப்புகள், அழகிய முறையில் விவாதிக்கும் பின்னூட்டங்கள், எனது ஒளிப்படங்களுக்கான உங்களது புகழுரைகள், விமர்சனங்கள் இவை எல்லாம் போலியானவை என்று உங்கள் மௌனத்தின் பொருளாய் நான் எடுத்து கொள்ளலாமா?

இன்னும் ஓரிரு மாதங்களில் பாட்டன், பூட்டன் என்று காலங்காலமாய் வாழ்ந்து வந்த ஒரு சமூகத்தின் அங்கத்தினரான எனது குடியுரிமை சம்பந்தமாக வளர்ந்து நிற்கும் கேள்விக்குறியும், அனுதினமும் நாட்டில் நடக்கும் பதட்டங்களுமாய் கழியும் பொழுதுகள் ஒருவேளை நீங்கள் உள்வாங்காமலிருக்கலாம்.

ஆனால், நானும் என்னைச் சார்ந்தோரும் இந்த நாட்டின் பூர்வகுடிகள் என்று உயிருடன் நெஞ்சை கிழித்து காட்டிகொண்டிருக்கும் முயற்சிகளை நான் எப்படி உங்களிடம் விவரிப்பேன் நண்பர்களே!

கோபம், வருத்தம், கவலை என்று என்னைச் சுற்றியும் படர்ந்து நிராசையுடன் ஒருவர் மற்றொருவரைப் பார்க்கும் நிலையில் உங்களது மௌனம் என்னை பெரிதும் கொல்கிறது தோழர்களே!

நாட்டின் அமைப்பு சட்டத்துக்கு எதிராக, அதன் பன்முகத்துக்கு எதிராக மனுவாதிகள் நடத்திவரும் அட்டூழியங்கள் எங்களுக்கு மட்டுமானவை அல்ல நண்பர்களே உங்களையும் பாதிப்படைய செய்ய இருப்பவை என்பதை காலங்கடந்துதான் உணரப் போகிறீர்களா? அன்று நான் இருப்பேனோ என்னவோ தெரியாது.

நாம் எல்லோரும் ஒன்று என்றால் இல்லை என்கிறார்கள் மனுவாதிகள்.

நீங்களோ யாருக்கோ ஆனதுபோல சம்பந்தமின்றி மௌனமாக இருக்கிறீர்கள்.

ஒரே ஒரு ஆறுதல் வார்த்தையும் சொல்ல மறுக்கிறீர்கள். இந்த மௌனம் என்னைக் கொல்கிறது நண்பர்களே
 
எங்கள் உணவுமுறையில் கைவைத்தார்கள் மனுவாதிகள்.

மாட்டுக்கு தரும் மரியாதையை மனித உயிருக்கு தராமல் உயிருடன் அடித்துக் கொன்றார்கள். வேதனைகளை அடக்கிக் கொண்டு அமைதி காத்தோம்.

உங்களை எவ்வகையிலும், பாதிக்காத எங்களது வாழ்வியல் சட்டங்களில் முத்தலாக்என்று கை வைத்தார்கள் மனுவாதிகள்.

அமைதி குலையக்கூடாதென்று அப்போதும் பொறுத்துக் கொண்டோம்.

எங்கள் வழிபாடு தலத்தை இடித்து தரைமட்டமாக்கினார்கள் மனுவாதிகள்.

நாட்டின் உயரிய நீதிபரிபாலனம் நடுநிலையாக நிற்கும் என்ற நப்பாசையில் பல்லாண்டுகள் காத்து கிடந்தோம்.

இடித்தவனுக்கே நிலம் சொந்தம் என்று ஒரு விசித்திரமான ஒரு தீர்ப்பு எழுதப்பட்டது. அதையும் பொறுத்துக் கொண்டோம்.

கடைசியில், குடியுரிமை என்ற பெயரில், எம் மண்ணிலிருந்து அப்புறப்படுத்த மனுவாதிகள் நினைக்கும்போது, மௌனமாக நிற்போம் என்றா நினைத்தீர் நண்பர்களே?

இறுதியாக ஒன்றே ஒன்றுதான் சொல்ல நினைக்கிறேன். அன்று வெள்ளையனை விரட்ட எழுந்த முதல்குரல் இங்கிருந்துதான் எழுந்தது.

இன்று நாட்டின் அமைதியை, அதன் பன்முகத்தன்மையை சூறையாட நினைக்கும் கொள்ளையரை, மனுவாதிகளை விரட்ட மீண்டும் ஒலித்திருக்கும் குரல் இங்கிருந்துதான்!

எங்கள் கொள்கையை ஒருவேளை வாசித்திருந்தால் ஒன்று உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் நண்பர்களே. "இறைவன் புறத்திலிருந்து வந்தோம்! மீண்டும் இறைவன் புறத்தில் திரும்பி செல்பவர்களாகவே இருக்கிறோம்!" - என்று ஒவ்வொரு கணமும் எங்களுக்கு எங்கள் முன்னோர்கள் ஊட்டி வளர்த்ததைப் போலவே எங்கள் பிள்ளைகளுக்கும் ஊட்டி வளர்க்கிறோம்.

அதனால், இழப்புகள் எதுவாயினும் அவை இறைவனுக்காகவே என்று உள்வாங்கி வளர்ந்தவர்கள் நாங்கள். எங்களை வாசித்திருந்தால் நண்பர்களே இந்த எஃகு உறுதியை உங்களால் புரிந்து கொண்டிருக்க முடியும்.

மனுவாதிகள், உங்கள் வீட்டு கதவுகளைத் தட்டும் முன் உங்களுக்கும் அரணாய் நின்று அவர்களைத் தடுத்திட நினைக்கிறோம் நண்பர்களே!

ஒருவேளை.. ஆம்.. ஒருவேளை, இந்த அஹிம்சை போராட்டத்தில் மரணமுற நேர்ந்தால் மண்ணறை அருகிலாவது உங்களது மௌனத்தை கலைப்பீரா நண்பர்களே!

 





Share:

Sunday, February 16, 2020

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Pages

Labels