NewsBlog

Wednesday, October 28, 2015

வைகறை நினைவுகள் 23: மர்யம் ஏன் அழுதாள்?



அது மறக்க முடியாத நாள். மெய் சிலிர்த்துப் போன நேரம். குழந்தை மர்யத்தின் கண்கள் குளமாகி தாரை தாரையாக கண்ணீர்.

விசும்பலும், கோபமுமாய் அவள் கேட்ட கேள்வியை வாழ்நாளில் மறக்கவே முடியாது!

அன்று இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் (எஸ்.ஐ.ஓ) ரமளான் நன்நாளையொட்டி ‘ஈத் மிலன் – பெருநாள்’ சந்திப்பு எண்ணூரில் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஒவ்வொரு சமயத்தினரும் பிற சமயத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு வேற்றுமையிலும் ஒற்றுமையாய் வாழ வேண்டும்; மனித நேயம் மலர வேண்டும் என்ற நோக்கத்தில் பிற சமயத்தினருக்காக அந்த சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறப்பு விருந்தினராய் உள்ளூர் தொழிலதிபர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார்.

வாழ்த்துரை, தலைமையுரைகளுக்குப் பின் சிறப்புரை ஆரம்பித்தது.

உரையின் இடையே சம்பந்தமேயில்லாமல் ஒரு கதையை அந்த தொழிலதிபர் சொல்ல ஆரம்பித்தார்:

“நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்தது. திடீரென விமானத்தில் கோளாறு. யாராவது மூவர் உடன் கீழே குதித்தாக வேண்டும். பைலட்டிடமிருந்து அறிவிப்பு வெளியானதும் அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த அமெரிக்கர் சட்டென்று எழுந்தார். “அமெரிக்கா… வாழ்க!” – என்று முழக்கமிட்டவாறு விமானத்திலிருந்து குதித்துவிட்டார்.

அடுத்ததாக, ரஷ்யர் எழுந்து, “ரஷ்யா.. வாழ்க!” – என்று முழங்கிக் கொண்டே விமானத்திலிருந்து குதித்தார்.

மூன்றாவதாக இந்தியர் எழுந்தார். “ஜெய் ஹிந்த்!” – என்று ஆக்ரோஷமாக முழக்கமிட்டவாறு பக்கத்திலிருந்து ஜப்பானிய பயணியை விமானத்திலிருந்து தள்ளிவிட்டார். இப்படிதான் இந்தியர்களின் மனோநிலை உள்ளது!” – என்று முடித்தார் அவர்.

- பெரும் வெடிச்சிரிப்பு அரங்கில் எழுந்தது.


ஆனால், என்னுடன் வந்திருந்த எட்டே வயதான என் மகள் மர்யத்தின் கண்கள் கலங்கிவிட்டன.

“ஓ” வென அழலானாள்.

காரணம் புரியாமல் தவித்த நான் மெதுவாய் அணைத்தவாறு அரங்கை விட்டு வெளியேறியதுதான் தாமதம்!

பொங்கி அவள் அழுதது இதுவரை காணாதது.

“அப்பா! அந்த ஆளூ… என் தாய் நாட்டை அவமதித்துப் பேசறாரு! நீங்களெல்லாம் சிரிச்சிட்டு ரசிக்கிறீங்களே! என் நாட்டு மக்களை அவமதித்துப் பேச அவரை யார் அனுமதிச்சது?”

ரோஷத்துடன் அவள் நின்ற கோலம் நெஞ்சைவிட்டு அகலாதது!

வீட்டை அடைந்ததும் மர்யம் தன் அழுகையை நிறுத்தவில்லை. அவளை அமைதிப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

மர்யத்தின் ஒவ்வொரு கண்ணீர் துளியிலும் உண்மையில் வழிந்தது தூய தேச பக்தி.

தேச பக்தியை யாருக்கும் யாரும் ஊட்ட வேண்டிய அவசியமில்லை. அது பிறந்த மண்ணோடும், அந்த மண்ணில் வீசும் காற்றோடும் இரண்டறக் கலந்து இந்த மண்ணில் தவழும் ஒவ்வொரு இந்தியனின் இரத்த நாளங்களில் ஓடிக் கொண்டிருப்பது. இதில், இந்து, முஸ்லிம், கிருத்துவர் என்ற சமய பேதங்கள் இல்லை. பேசும் மொழிகளில் வேறுபாடுகளோ, பின்பற்றும் கலாச்சார – பண்பாடுகளின் வேற்றுமைகளோ, வாழும் கொள்கைகளோ இதை பிரித்துவிடுவதில்லை.

தொன்மை வாய்ந்த ஆன்மிக பூமியான இந்தியத் திருநாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு இந்தியரும் பெருமைக் கொள்வர். அதற்காக இறைவனுக்கு நன்றியும் சொல்வர். “இது என் தாய் நாடு!” – என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவர்.

இறைநெறியின் அடிப்படையிலான ஒழுக்க விழுமியங்களை தம் வாழ்வின் உயிரூட்டமாக கருதி வாழும் முஸ்லிம்கள் தேச பக்தியில் யாருக்கும் ‘கிஞ்சித்தும்’ குறைந்தவர்களில்லை. இன்னும் சொல்லப் போனால் எல்லோரையும்விட மிகைத்தவர்களாகவே அவர்கள் இருப்பர்; மர்யத்தைப் போலவே!


90-களில் நடந்த சம்பவம் இது.

ஒவ்வொரு ரமளான் பெருநாள் வரும்போதெல்லாம் அந்த குட்டி மர்யத்தின் கனல் கக்கும் தேசபக்தி தீக்கங்குளாய் என்னுள் தெறித்துவிழும்.

இன்று அதே மர்யம் வளர்ந்து நாட்டின் மற்றொரு பகுதியில் குடும்பத்தோடு வசித்துக் கொண்டிருக்கிறாள்.

90 களை கடந்து, அவள் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

இந்த இடைப்பட்ட காலத்தில்தான் இந்திய வரலாற்றில் எத்தனை எத்தனை மாற்றங்கள். எத்தனை எத்தனை மனச் சிதைவுக்கு ஆளாக்கிய சம்பவங்கள்!

இருப்பினும்… இன்னும் ஆயிரமாயிரம் மர்யங்கள் இந்த நாட்டு ஒருமைப்பாட்டின் மீதும் அதன் பன்முகத்தன்மை மீதும் இன்னும் மலையளவு அழுத்தமான நம்பிக்கைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வகுப்புவாதம் என்னும் கருமேகம் விலகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

                   
இறைவன் நாடினால்… வைகறை நினைவுகள் தொடரும்.


''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html






 
Share:

1 comment:

  1. நிஜங்களின் நிதர்சனம் !

    ReplyDelete

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive