NewsBlog

Thursday, August 20, 2015

லென்ஸ் கண்ணாலே – 007: ‘பிளாஷை’ பயன்படுத்துவது எப்படி?


உச்சி வெய்யில் நேரத்தில் படம் எடுக்கிறீர்கள்.

எடுக்க நினைத்த நபரின் முகத்தில் நிழல் விழும். அப்படி முகத்தில் நிழல் விழாமல் படம் எடுப்பது எப்படி?

இங்கு இரண்டு படங்களை எடுத்திருக்கிறேன்.



இரண்டு சிறுவர்கள். இரு சக்கர வாகனத்தின் பஞ்சரான டயர் ஒன்றை சைக்கிளில் எடுத்துக் கொண்டு செல்லும் அழகிய காட்சி அது.

சைக்கிளின் இரு டயர்களிலும் சுத்தமாக காற்று இல்லை.

அத்துடன், காட்டில் பறித்த முந்திரிப் பழங்களை எடுத்துச் செல்லும் காட்சி.

பின்னால் அமர்ந்திருக்கும் சிறுவன் வாயில் எதையோ அடுக்கிக் கொண்டு மென்று கொண்டு செல்கிறான்.

இந்த சிறார்களின் பெயர் வசந்த குமார் மற்றும் முத்து குமார். வடசென்னை எண்ணூர் காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

நிழல் படிந்த நிலையில், ஒரு படம். நிழல் மறைந்த நிலையில் ஒரு படம் என்று எடுத்துள்ளேன்.

இதை எப்படி எடுத்தேன் தெரியுமா?

பிளாஷை இயக்கி படம் பிடித்தேன்.


அதேபோல காட்டுயிர் ஆய்வுக்காக காட்டுப்பள்ளி வனப்பகுதிக்கு சென்றிருந்தபோது, அடர்ந்த முந்திரி காட்டுக்குள் மிதமான பிளாஷைப் பயன்படுத்தி எனது மாணவன் மெஹர் அலியை படம் பிடித்ததை இணைத்துள்ளேன்.

சுட்டெரிக்கும் வெய்யிலிலும் பிளாஷை பயன்படுத்தலாம் என்பதற்காகவே இதெல்லாம்!

இதன் மூலம் படத்தில் நிழல் விடுவதை தடுக்க முடியும். அத்துடன் படமும் தெளிவாக பளிச்சென்று இருக்கும்.

பிளாஷ்ஷை பயன்படுத்தும்போது அந்த வெளிச்சம் மிதமாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது. இல்லையென்றால் படத்தின் தரம் கெட்டுவிடும். பிளாஷ்ஷின் வெளிச்சம் எவ்வளவு என்பதை சூழலுக்கு ஏற்ப தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இது அனுபவத்தில் வருவது. பழகிக் கொள்ளலாம்.


சரி பிளாஷ் பொருத்தப்பட்ட காமிராக்கள் இல்லை என்று வைத்துக் கொள்வோம்.

கவலை வேண்டாம்.

சாதாரணமான ஒரு வெள்ளை டவல் இருந்தால் போதும்.

அதுவும் இல்லையென்றால் ஒரு வெள்ளை அட்டை இருந்தால் போதும்.

சரி அதுவும் இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம்.

ஒரு செய்தித்தாள் இருந்தால்கூட போதும் நிலைமையை சமாளித்துக் கொள்ளலாம்.

வெள்ளை டவலையோ, அட்டையையோ அல்லது செய்தித்தாளையோ பயன்படுத்தி அதன் மூலம் ஒளியைப் பாய்ச்சி படம் எடுக்கலாம். இதற்கு கொஞ்சம் பயிற்சி மட்டும் இருந்தால் போதும்.

சரி போட்டோகிராஃபி எனப்படும் இந்த புகைப்படக் கலையின் ஆரம்ப கதையை கொஞ்சம் பார்த்துவிட்டு தொடர்வோமே..!

இறைவன் நாடினால்… காமிராவில் கலைவண்ணங்கள் மிளிரும்

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
சென்ற அத்தியாயத்தின் சில பின்னூட்டங்களுக்கான பதில்கள்:

சகோதரர் Habeer Mohamed சில படங்களுக்கான கருத்து கேட்டிருந்தார்.

1. நீர் நிலையில் தென்னையும், வாழையுமான படம் அருமையான படம். கொஞ்சம் ஒளி கூட்டியிருக்கலாம்.


2. அடுத்தது இட்லி பூ என்று எங்கள் பக்கம் அழைப்பார்கள். இது மோசமான படம். உதிர்ந்து, ஒரு ஒழுங்கற்ற பூக்களை எடுக்க வேண்டிய தேவையில்லை. அவை பூத்திருக்கும் நிலையில் அற்புதமாக இருக்கும். நான் எடுத்த ஒரு படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.


3. மூன்றாவது படம் அற்புதமான காட்சிகள் கொண்ட படம். நண்பர் ஏனோ ஓடும் வண்டியிலிருந்து எடுத்திருக்கிறார்?

வாழ்த்துக்கள் Habeer Mohamed!

அடுத்தது, சகோ. Mohamed Fasil காரைக்கால் பீச்சில் எடுத்த படம். கடற்கரை என்று சொல்வதற்கான எந்த அடையாளமும் இல்லையே . Mohamed Fasil !


அடுத்தது Nazeem Bin Syed Meeran தனது சாம்சங் நோட் 2-ல் எடுத்த படங்களில் ஒன்று சுமாராகவும், மற்றொன்று சிறப்பாகவும் அமைந்துள்ளது.


வாழ்த்துக்கள் Nazeem Bin Syed Meeran இன்னும் கொஞ்சம் கம்போஸிங்கில் சரி பார்த்திருக்கலாம். ஆயினும் வாழ்த்துக்கள்.

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
001. அனுபவங்களின் பகிர்வன்றி.. அறிவின் ஊற்றல்ல - http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_21.html

002. உங்களுக்கான காமிரா எது? - http://ikhwanameer.blogspot.in/2015/07/2_22.html

003. கையாள்வது எளிது! ஆனாலும், கடினம்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/3_23.html

004. வாய்ப்பு என்பது ஒருமுறைதான்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/4_24.html

005. படமெடுக்க நினைப்பதை மட்டுமே படம் பிடியுங்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/07/5_30.html

006. என்கவுண்டர் செய்யாதீர்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/08/6.html
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive