NewsBlog

Wednesday, November 11, 2015

பீகார் தோ்தல்களும், முஸ்லிம்களின் மனோநிலையும்!


பீகார் சட்டமன்ற தோ்தல்களில் மதவாத சக்திகளுக்கு எதிராக அந்த மாநில மக்கள் ஒன்றுபட்டு பிஜேபியை தோற்கடித்தார்கள். அதேபோலவே பீகாா் மாநில முஸ்லிம்களும் ஒன்றுபட்டார்கள். அஸதுத்தீன் உவைஸியையும் அவரது அகில இந்திய மஜ்லிஸே இஹ்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியையும் தோற்கடித்தார்கள். இது அவா்களின் முதிர்ச்சியைத்தான் காட்டியது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆறு தொகுதிகளிலும் மஜ்லிஸ் போட்டியிட்டது. அந்த ஆறு தொகுதிகளிலும் அக்கட்சியின் வேட்பாளா்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அவா்களைத் தோற்கடித்த முஸ்லிம்கள், தங்கள் மதசா்பற்ற அசல் முகங்களை இந்தியாவுக்குக் காட்டினார்கள். தாங்கள் எப்போதுமே மதசார்பற்றவாதிகள்தான் என்றும் அதுதான் தேசத்தின் தேவையும் என்றும் அதன் மூலம் செய்தியை அழுத்தமாக சொன்னார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி போன்ற இயக்கங்கள் எப்போதும் மக்களை துண்டாடுவதில்லை. அனல் கக்கும் சொற்பொழிவுகளை ஆற்றி மக்களை உணா்ச்சிவபசப்படுத்துவதில்லை. சிவசேனை  மற்றும் பஜரங்தளம் போன்ற இனவாத கட்சிகளின் பிரதிபிம்பங்களாகவும் இருந்ததில்லை. சாத்வி, தொகாடியா போன்றவா்களின் ஆக்ரோஷ நச்சுக்கருத்துகள் போல மேடைகளில் முழங்குவதுமில்லை. 

சட்டமன்ற தோ்தல்களுக்கு முன்னர் ஊராட்சி ஒன்றிய தோ்தல்களில் இந்த அமைப்புகளின் தலைவா்கள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக மக்களிடையே தொடா்புகளை வலுப்படுத்தியிருந்தார்கள். சமூகத்தில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்களிடையே நல்லிணக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியிருந்தார்கள்.

ஹைதராபாத்தில் சமூகசேவைகள் மூலமாக பல்வேறு நற்பணிகளையாற்றி மக்களிடையே பெரும்செல்வாக்கைப் பெற்ற கட்சியான அகில இந்திய மஜ்லிஸே இஹ்திஹாதுல் முஸ்லிமீன் அந்த பார்முலாவை பீகாரில் கையாளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த பரிச்சயமின்மையும் அது கடைப்பிடித்த குறுகிய இனவாத கொள்கையும் பீகார், உ.பி மற்றும் மகாராட்டிரம் மாநில தோ்தல் தோல்விகளுக்குக் காரணமானது.

பிஜேபி வேட்பாளா்களை நேரிடையாக எதிர்த்து நிற்க வேண்டிய மஜ்லிஸ் வேட்பாளா்கள் அப்படி  செய்யவில்லை. மதசார்பற்ற கட்சிகளின் சார்பாக நின்ற சொந்த சமுதாய வேட்பாளா்களை எதிர்த்து நின்றார்கள். இதுவும் அதன் தோல்விக்குக் காரணமானது.

தொகாடியா, சாத்வி, அமித்ஷா போன்ற தலைவா்களை அந்த இனம் சார்ந்த சமுதாய மக்கள் புறக்கணிக்கும்போது, முஸ்லிம்கள் மட்டும் அதேசுவாபமுள்ள தங்கள் சமுதாய தலைவா்களை தோ்ந்தெடுக்க வேண்டும் என்று நினைப்பது சாத்தியமே இல்லை. ஏனென்றால், தங்கள் தலைவா்கள் போல முஸ்லிம்கள் எப்போதும் இரண்டு முகம் காட்டுபவா்கள் அல்ல.
Share:

2 comments:

  1. //ஏனென்றால், தங்கள் தலைவா்கள் போல முஸ்லிம்கள் எப்போதும் இரண்டு முகம் காட்டுபவா்கள் அல்ல//. சரியான பார்வை

    ReplyDelete
  2. நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள்

    ReplyDelete

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive