உலகம் முழுக்க ஈகை திருநாள் எனப்படும் ரமளான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும் நேரத்தில் இந்த வரலாற்று சம்பவம் நெஞ்சில் எழுவதிலிருந்து தடுக்க முடியவில்லை.
மீண்டும்… மீண்டும் நெஞ்சில் நிழலாடும் அந்த சம்பவத்தை நீங்கள் காண என்னோடு கால எந்திரத்தில் ஏறி சற்றேறக் குறைய 14 நூற்றாண்டுகளுக்கு பின் செல்ல வேண்டியிருக்கும்.
குதுகலமும், உற்சாகமும், உணர்வுபூர்வமாய் இருக்கும் அந்த சம்பவத்தின் நாயகர் எத்தனை ஆளுமை பண்புக்குரியவராக வரலாற்றில் திகழ்கிறார் … ஆஹா…!! அன்னாரை தலைவராக ஏற்றுக் கொள்வபர் பேறு பெற்றவர்..! மலைப்பே ஏற்படுகிறது.
வாருங்கள் என் நினைவுகளோடு நீங்களும், ஒரு நடை மதீனா சென்றுவிட்டு வருவோம்.
கருக்கலின் பிடியிலிருந்து கீழ்வானம் விடுபட்டு செந்நிற சாயலை படரவிட்ட அந்த வைகறையிலேயே மதீனா விழித்துக் கொண்டது.
அன்று ரமளான் பண்டிகை. இறைவனின் கட்டளைகளை சிரமேற்று ஒரு மாதம் முழுக்க நோன்பு நோற்று இறைவனின் பேரன்பைப் பெற்ற நன்னாள் அல்லவா அது!
பெருநாள் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக மதீனாவாசிகளை உற்சாகம் தொற்றிக் கொண்டது. பெரியவர், சிறியவர் பேதமில்லாமல் அவரவர் வசதிக்கேற்ப புத்தாடைகளை அணிந்திருந்தனர். ஒருவர் மற்றொருவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதும், மகிழ்ச்சியைப் பறிமாறிக் கொள்வதுமாய் மதீனா நகரின் தெருக்கள் களைக்கட்டின.
நகரின் எல்லைப்புறத்தில் அமைந்திருந்தது ’ஈத்கா’ எனப்படும் சிறப்புத் தொழுகைகளுக்கான திடல்.
மக்கள் சாரிசாரியாக கிளம்பி தொழுகைத் திடலை அடைந்தார்கள். அதற்குரிய நேரத்தில், நபிகளாரின் தலைமையில் ரமளான் சிறப்புத் தொழுகையும் நடந்து முடிந்தது.
தொழுகைக்குப் பின்னர், ஒருவர் மற்றொருவரைக் கட்டியணைத்து வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டார்கள். வீட்டை நோக்கி நடந்தார்கள்.
எதிர்படுபவர்களுக்கு சலாம் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டே நபிகளார் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வழியில், தெருவொன்றில் அமர்ந்திருந்த சிறுவனைக் கண்டார். முழங்கால்களுக்கு இடையே முகம் புதைத்து அவன் அழுதுகொண்டிருந்தான்.
அருகில் சென்ற நபிகளார் சிறுவனுக்கு சலாம் தெரிவித்தார்.
“மகனே! ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?” – என்று அவனது தோளைப் பிடித்து ஆறுதலாக விசாரிக்கவும் செய்தார்.
சிறுவனோ தலையைத் தூக்காமலேயே, “தயவுசெய்து என்னை யாரும் தொந்திரவு செய்யாதீர்கள்?” – என்றான் அழுகையுடன் குலுங்கிக் கொண்டே!
சிறுவனின் தலையை கோதியவாறு நபிகளார், “மகனே! சந்தோஷமான இந்த ரமளான் பண்டிகை நாளில் ஏனய்யா அழுது கொண்டிருக்கிறாய்?” – என்று அன்பொழுக கேட்டார்.
இதமான அந்த ஸ்பரிசம் சிறுவனை தலை நிமிராமலேயே பேச வைத்தது.
“எனது தந்தையார் போரில் கொல்லப்பட்டு விட்டார். தாயாரோ வேறொருவரை மணம் புரிந்து கொண்டார். எனது மாற்றான் தகப்பனாரோ என்னை சேர்த்துக் கொள்வதேயில்லை! ரமளான் பண்டிகை நாளும் அதுவுமாய் நான் போட்டிருக்கும் இந்த உடைகளைத் தவிர அணிந்து கொள்ள வேறு ஆடைகளும் என்னிடம் இல்லை!” – என்று கூறிவிட்டு சிறுவன் “ஓ” வென்று அழலானான்.
நபிகளாரின் கண்கள் பனித்துவிட்டன. துக்கத்தால் நெஞ்சடைத்துக் கொண்டது.
“மகனே! உன் நிலைமைப் புரிகிறது. நானும் உன்னைப் போலவே சிறுவயதிலேயே பெற்றோரைப் பறிக்கொடுத்த அநாதைதான். அழாதே..!” என்று ஆறுதல் சொன்னார்.
இதைக் கேட்டதும் அழுது கொண்டிருந்த சிறுவன் ‘ஜுஹைர் பின் ஸாஹிர்’ தலைநிமிர்ந்து பார்த்தான்.
கலங்கிய கண்களோடு, நின்றிருந்த நபிகளாரைக் கண்டான்.
“இறைவனின் திருத்தூதரே! தாங்கள்… தாங்களா?” – மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தெழுந்தான்.
ஜுஹைரை அணைத்துக் கொண்ட நபிகளார், “மகனே! இதோ பார்… இன்று முதல் நான்தான் உனது தந்தையார். எனது மனைவிதான் உனது தாயார்! எனது மகள் ஃபாத்திமாதான் உனது சகோதரி! என்ன சம்மதமா?” – என்றார் அன்பொழுக.
உலகின் மிகச் சிறந்த அரவணைப்பை வேண்டாம் என்றா சொல்வான் ஜுஹைர்?
அந்த அனாதைச் சிறுவனை தன்னுடன் அழைத்துச் சென்ற நபிகளார் அவனை குளிக்க வைத்து புத்தாடை அணிய வைத்தார். தன்னோடு இருத்தி சுவை மிகுந்த உணவைப் படைத்தார். ரமளான் பண்டிகையின் அத்தனை சந்தோஷத்தையும் அவனுக்குத் தந்தார்.
ஆம்..! ஏழைகளையும், அநாதைகளையும் அரவணைத்து ஈந்துதவும் நாளே ஈகைத் திருநாள் எனப்படும் ரமளான் பெருநாள்.
எவ்வளவு எதார்த்தமாக அன்பு நபிகளார் அதை செயலுருவில் காட்டினார்..!!
அன்பு அண்ணலே..! உங்களை தலைவராய் அடைந்தமைக்கு உள்ளம் மகிழ்கிறேன். உவகையால் பூரிக்கிறேன். இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்! இதயம் கனிந்த ரமளான் வாழ்த்துக்கள்!
- இறைவன் நாடினால்… மற்றொரு வைகறையில் நினைவுகள் தொடரும்
இதற்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக: - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23: மர்யம் ஏன் அழுதாள்?: http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html
வைகறை நினைவுகள் பகுதி 24: வேட்டைக்காரன்: http://ikhwanameer.blogspot.in/2015/12/24.html
வைகறை நினைவுகள் பகுதி 25: லென்ஸ் விழி வழியே..: http://ikhwanameer.blogspot.in/2015/12/25.html
வைகறை நினைவுகள் பகுதி 26: ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன்: http://ikhwanameer.blogspot.in/2016/02/26.html
மீண்டும்… மீண்டும் நெஞ்சில் நிழலாடும் அந்த சம்பவத்தை நீங்கள் காண என்னோடு கால எந்திரத்தில் ஏறி சற்றேறக் குறைய 14 நூற்றாண்டுகளுக்கு பின் செல்ல வேண்டியிருக்கும்.
குதுகலமும், உற்சாகமும், உணர்வுபூர்வமாய் இருக்கும் அந்த சம்பவத்தின் நாயகர் எத்தனை ஆளுமை பண்புக்குரியவராக வரலாற்றில் திகழ்கிறார் … ஆஹா…!! அன்னாரை தலைவராக ஏற்றுக் கொள்வபர் பேறு பெற்றவர்..! மலைப்பே ஏற்படுகிறது.
வாருங்கள் என் நினைவுகளோடு நீங்களும், ஒரு நடை மதீனா சென்றுவிட்டு வருவோம்.
கருக்கலின் பிடியிலிருந்து கீழ்வானம் விடுபட்டு செந்நிற சாயலை படரவிட்ட அந்த வைகறையிலேயே மதீனா விழித்துக் கொண்டது.
அன்று ரமளான் பண்டிகை. இறைவனின் கட்டளைகளை சிரமேற்று ஒரு மாதம் முழுக்க நோன்பு நோற்று இறைவனின் பேரன்பைப் பெற்ற நன்னாள் அல்லவா அது!
பெருநாள் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக மதீனாவாசிகளை உற்சாகம் தொற்றிக் கொண்டது. பெரியவர், சிறியவர் பேதமில்லாமல் அவரவர் வசதிக்கேற்ப புத்தாடைகளை அணிந்திருந்தனர். ஒருவர் மற்றொருவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதும், மகிழ்ச்சியைப் பறிமாறிக் கொள்வதுமாய் மதீனா நகரின் தெருக்கள் களைக்கட்டின.
நகரின் எல்லைப்புறத்தில் அமைந்திருந்தது ’ஈத்கா’ எனப்படும் சிறப்புத் தொழுகைகளுக்கான திடல்.
மக்கள் சாரிசாரியாக கிளம்பி தொழுகைத் திடலை அடைந்தார்கள். அதற்குரிய நேரத்தில், நபிகளாரின் தலைமையில் ரமளான் சிறப்புத் தொழுகையும் நடந்து முடிந்தது.
தொழுகைக்குப் பின்னர், ஒருவர் மற்றொருவரைக் கட்டியணைத்து வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டார்கள். வீட்டை நோக்கி நடந்தார்கள்.
எதிர்படுபவர்களுக்கு சலாம் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டே நபிகளார் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வழியில், தெருவொன்றில் அமர்ந்திருந்த சிறுவனைக் கண்டார். முழங்கால்களுக்கு இடையே முகம் புதைத்து அவன் அழுதுகொண்டிருந்தான்.
அருகில் சென்ற நபிகளார் சிறுவனுக்கு சலாம் தெரிவித்தார்.
“மகனே! ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?” – என்று அவனது தோளைப் பிடித்து ஆறுதலாக விசாரிக்கவும் செய்தார்.
சிறுவனோ தலையைத் தூக்காமலேயே, “தயவுசெய்து என்னை யாரும் தொந்திரவு செய்யாதீர்கள்?” – என்றான் அழுகையுடன் குலுங்கிக் கொண்டே!
சிறுவனின் தலையை கோதியவாறு நபிகளார், “மகனே! சந்தோஷமான இந்த ரமளான் பண்டிகை நாளில் ஏனய்யா அழுது கொண்டிருக்கிறாய்?” – என்று அன்பொழுக கேட்டார்.
இதமான அந்த ஸ்பரிசம் சிறுவனை தலை நிமிராமலேயே பேச வைத்தது.
“எனது தந்தையார் போரில் கொல்லப்பட்டு விட்டார். தாயாரோ வேறொருவரை மணம் புரிந்து கொண்டார். எனது மாற்றான் தகப்பனாரோ என்னை சேர்த்துக் கொள்வதேயில்லை! ரமளான் பண்டிகை நாளும் அதுவுமாய் நான் போட்டிருக்கும் இந்த உடைகளைத் தவிர அணிந்து கொள்ள வேறு ஆடைகளும் என்னிடம் இல்லை!” – என்று கூறிவிட்டு சிறுவன் “ஓ” வென்று அழலானான்.
நபிகளாரின் கண்கள் பனித்துவிட்டன. துக்கத்தால் நெஞ்சடைத்துக் கொண்டது.
“மகனே! உன் நிலைமைப் புரிகிறது. நானும் உன்னைப் போலவே சிறுவயதிலேயே பெற்றோரைப் பறிக்கொடுத்த அநாதைதான். அழாதே..!” என்று ஆறுதல் சொன்னார்.
இதைக் கேட்டதும் அழுது கொண்டிருந்த சிறுவன் ‘ஜுஹைர் பின் ஸாஹிர்’ தலைநிமிர்ந்து பார்த்தான்.
கலங்கிய கண்களோடு, நின்றிருந்த நபிகளாரைக் கண்டான்.
“இறைவனின் திருத்தூதரே! தாங்கள்… தாங்களா?” – மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தெழுந்தான்.
ஜுஹைரை அணைத்துக் கொண்ட நபிகளார், “மகனே! இதோ பார்… இன்று முதல் நான்தான் உனது தந்தையார். எனது மனைவிதான் உனது தாயார்! எனது மகள் ஃபாத்திமாதான் உனது சகோதரி! என்ன சம்மதமா?” – என்றார் அன்பொழுக.
உலகின் மிகச் சிறந்த அரவணைப்பை வேண்டாம் என்றா சொல்வான் ஜுஹைர்?
அந்த அனாதைச் சிறுவனை தன்னுடன் அழைத்துச் சென்ற நபிகளார் அவனை குளிக்க வைத்து புத்தாடை அணிய வைத்தார். தன்னோடு இருத்தி சுவை மிகுந்த உணவைப் படைத்தார். ரமளான் பண்டிகையின் அத்தனை சந்தோஷத்தையும் அவனுக்குத் தந்தார்.
ஆம்..! ஏழைகளையும், அநாதைகளையும் அரவணைத்து ஈந்துதவும் நாளே ஈகைத் திருநாள் எனப்படும் ரமளான் பெருநாள்.
எவ்வளவு எதார்த்தமாக அன்பு நபிகளார் அதை செயலுருவில் காட்டினார்..!!
அன்பு அண்ணலே..! உங்களை தலைவராய் அடைந்தமைக்கு உள்ளம் மகிழ்கிறேன். உவகையால் பூரிக்கிறேன். இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்! இதயம் கனிந்த ரமளான் வாழ்த்துக்கள்!
- இறைவன் நாடினால்… மற்றொரு வைகறையில் நினைவுகள் தொடரும்
இதற்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக: - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23: மர்யம் ஏன் அழுதாள்?: http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html
வைகறை நினைவுகள் பகுதி 24: வேட்டைக்காரன்: http://ikhwanameer.blogspot.in/2015/12/24.html
வைகறை நினைவுகள் பகுதி 25: லென்ஸ் விழி வழியே..: http://ikhwanameer.blogspot.in/2015/12/25.html
வைகறை நினைவுகள் பகுதி 26: ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன்: http://ikhwanameer.blogspot.in/2016/02/26.html
0 comments:
Post a Comment