2001-ம் ஆண்டு, பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து ரேபரேலி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.
இந்நிலையில் அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் அவர்கள் மீதான கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரியும் 2011-ல் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு செய்தது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் கடுமையாக்க உச்சநீதிமன்றம் இன்று, 19.04.2017, புதன்கிழமை ஒப்புக்கொண்டது.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முந்தைய நாள் நடந்த கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர் ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் பேசினார்கள் என்ற அளவிலான சட்ட விதிகளின் கீழ்தான் இதுவரையிலும் விசாரிக்கப்பட்டு வந்தார்கள். இவர்களை சதிக்குற்றம் பிரிவுகளின் கீழாத விசாரிக்க வேண்டும் என்று மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ), என்று கேட்டுக் கொண்டதை ஏற்கனவே அலகாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில், சிபிஐயின் மேல்முறையீட்டு கோரிக்கையை ஏற்று விசாரித்த உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டது. ஆத்திரமூட்டும் வகையில் பேசியது சம்பந்தமான குற்ற விதிகளை விடக் கடுமையான சதிக்குற்ற விதிகளின் கீழ் வழக்கை விசாரிக்க ஆணையிட்டது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து உமா பாரதி கூறும்போது, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எந்த சதியும் கிடையாது. எல்லாம் வெளிப்படையாக உள்ளது. நான் பெருமையுடனும் நம்பிக்கையுடனுமே ராமர் கோவில் பிரச்சாரத்தில் பங்கேற்றேன். ராமர் கோவில் கட்டப்பட்டே தீரும். இதனை யாராலும் தடுக்க முடியாது. ராமர் கோவில் கட்டப்படுவதற்காக என் உயிரையும் அளிப்பேன்" என்று கூறினார்.
பாபர மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் உயிர்ப்பளித்துள்ள நிலையில் இதன் பின்னணியில் பிரதமர் மோடியின் ராஜதந்திர அரசியல் இருப்பதாக லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
குடியரசுத்தலைவர் பதவிப் போட்டிக்கு அத்வானி பெயர் இடம் பெற்று விடக்கூடாது என்பதற்காக பிரதமர் மோடி சிந்தித்த ராஜதந்திர அரசியல் இது என்று லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆதிக்கத்தில் சிபிஐ உள்ளதால்தான் அது உச்ச நீதிமன்றத்தில் அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையை உயிர்ப்பித்துள்ளது.
பிரணாப் முகர்ஜிக்குப் பிறகு அத்வானி அடுத்த குடியரசுத் தலைவராகலாம் என்று பேசப்பட்டுவரும் நிலையில், மோடியின் ராஜதந்திர அரசியல் இந்த வழக்கின் பின்ணணியில் உள்ளது.
அரசு என்ன விரும்புகிறதோ அதைச் செய்வதுதான் சிபிஐயின் வேலை.
தனக்கு எதிரி யார் என்று தீர்மானித்துவிட்ட பிறகு, அவரை எதிர்கொள்ள அபாயகரமான அரசியல் தந்திரங்களில் ஈடுபடுவதில் பாஜக-வுக்கு நிகர் இல்லை!” – என்று விமர்சித்த லாலு, பாஜக தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலமின்றிப் போனது ஏன்? என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
“ஒரு புறம் காந்தியின் சிலைக்கு மாலையிடுவார்கள், மறுபுறம் அவரைக் கொன்ற நாதுராம் கோட்ஸேவுக்கும் சல்யூட் அடிப்பார்கள். இதுதான் பாஜக!” - என்றார் லாலு பிரசாத் யாதவ்.
இந்நிலையில் அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் அவர்கள் மீதான கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரியும் 2011-ல் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு செய்தது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் கடுமையாக்க உச்சநீதிமன்றம் இன்று, 19.04.2017, புதன்கிழமை ஒப்புக்கொண்டது.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முந்தைய நாள் நடந்த கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர் ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் பேசினார்கள் என்ற அளவிலான சட்ட விதிகளின் கீழ்தான் இதுவரையிலும் விசாரிக்கப்பட்டு வந்தார்கள். இவர்களை சதிக்குற்றம் பிரிவுகளின் கீழாத விசாரிக்க வேண்டும் என்று மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ), என்று கேட்டுக் கொண்டதை ஏற்கனவே அலகாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில், சிபிஐயின் மேல்முறையீட்டு கோரிக்கையை ஏற்று விசாரித்த உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டது. ஆத்திரமூட்டும் வகையில் பேசியது சம்பந்தமான குற்ற விதிகளை விடக் கடுமையான சதிக்குற்ற விதிகளின் கீழ் வழக்கை விசாரிக்க ஆணையிட்டது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து உமா பாரதி கூறும்போது, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எந்த சதியும் கிடையாது. எல்லாம் வெளிப்படையாக உள்ளது. நான் பெருமையுடனும் நம்பிக்கையுடனுமே ராமர் கோவில் பிரச்சாரத்தில் பங்கேற்றேன். ராமர் கோவில் கட்டப்பட்டே தீரும். இதனை யாராலும் தடுக்க முடியாது. ராமர் கோவில் கட்டப்படுவதற்காக என் உயிரையும் அளிப்பேன்" என்று கூறினார்.
பாபர மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் உயிர்ப்பளித்துள்ள நிலையில் இதன் பின்னணியில் பிரதமர் மோடியின் ராஜதந்திர அரசியல் இருப்பதாக லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
குடியரசுத்தலைவர் பதவிப் போட்டிக்கு அத்வானி பெயர் இடம் பெற்று விடக்கூடாது என்பதற்காக பிரதமர் மோடி சிந்தித்த ராஜதந்திர அரசியல் இது என்று லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆதிக்கத்தில் சிபிஐ உள்ளதால்தான் அது உச்ச நீதிமன்றத்தில் அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையை உயிர்ப்பித்துள்ளது.
பிரணாப் முகர்ஜிக்குப் பிறகு அத்வானி அடுத்த குடியரசுத் தலைவராகலாம் என்று பேசப்பட்டுவரும் நிலையில், மோடியின் ராஜதந்திர அரசியல் இந்த வழக்கின் பின்ணணியில் உள்ளது.
அரசு என்ன விரும்புகிறதோ அதைச் செய்வதுதான் சிபிஐயின் வேலை.
தனக்கு எதிரி யார் என்று தீர்மானித்துவிட்ட பிறகு, அவரை எதிர்கொள்ள அபாயகரமான அரசியல் தந்திரங்களில் ஈடுபடுவதில் பாஜக-வுக்கு நிகர் இல்லை!” – என்று விமர்சித்த லாலு, பாஜக தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலமின்றிப் போனது ஏன்? என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
“ஒரு புறம் காந்தியின் சிலைக்கு மாலையிடுவார்கள், மறுபுறம் அவரைக் கொன்ற நாதுராம் கோட்ஸேவுக்கும் சல்யூட் அடிப்பார்கள். இதுதான் பாஜக!” - என்றார் லாலு பிரசாத் யாதவ்.
0 comments:
Post a Comment