NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Saturday, February 6, 2016

மாற்றான் தோட்டத்து மல்லிகை: இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்?


நான் ஒரு இந்து, முஸ்லிம், கிருத்துவன் ஏன் யூதனும்கூட என்று சொன்ன காந்தி கடைசிவரை இந்துவாகவே அடையாளப்படுத்திக் கொண்டவர். "ஹே.. ராம்.. ஹே.. ராம்..!” - என்று தான் நம்பிய கொள்கையை உச்சரித்தவாறே உயிர் நீத்தவர். அவர் சொன்ன ஒற்றைச் சொற்றொடரை மட்டும் தமது கட்டுரையில் மேற்கோளாய் இழையோடவிடும் சகோதரர் சமஸ் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை ஆழ்ந்து ஊடுருவ மறுக்கிறார். 

சங்பரிவார்கள் போல, முஸ்லிம்கள் இந்திய சமூக அமைப்பில் யாரையும் ஆதிக்கம் செலுத்த முயலவில்லை. மேலும், நடந்துமுடிந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடுகூட இஸ்லாமிய சமூக உள்ளீட்டு கட்டுமான மராமத்து பணிகளுக்கான ஒரு பிரயத்தனம். அது ஒரு அறிவு சம்பந்தமான விவாதகளம். ஒரு சீர்த்திருத்தத்துக்கான வழிமுறை. அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதில் சமூகத்திற்குள் கருத்துவேறுபாடுகள் உண்டு என்பது வேறு விஷயம். 

அடுத்ததாக, ஒரே கடவுள், ஒரே கலாச்சாரம், மூன்றாவது முழக்கம் அந்தரங்கமானது.. ஒரே அரசு - என்றும் சமஸ் குறிப்பிடுகிறார். அந்தரங்கமானது இதில் ஒன்றுமில்லை... சர்வதேச அளவில் ஒவ்வொரு நாளும், தனித்தும், கூட்டாகவும் முஸ்லிம் சமூகம், “வணக்கத்துக்குரியது பரம்பொருள் அன்றி வேறில்லை! முஹம்மது நபிகள் அப்பரம்பொருளின் இறுதித்தூதர் ஆவார்!” - என்று முழங்கும் பாங்கோசையின் ஒரு பகுதி பிரகடனமே அது. 

அந்த பாங்கோசையில், உட்பட்டிருக்கும் “இலாஹ்” என்ற சொல் பரம்பொருளான இறைவன் வெறும் வணக்கத்துக்குரியவன் மட்டும் அல்ல. சட்டங்களும் அருளியவன் என்பதும் அடங்கும். முழு பிரபஞ்சமும் இறைவனின் இந்த சட்டங்களின் அடிப்படையில் சீராக இயங்கிவருவதுபோல, மனிதனும் இந்த சட்டங்களுக்கு அடிபணிய வேண்டும் என்ற வாக்குறுதியைதான் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை ஒப்புக்கொள்ளும்போது முன்மொழிகின்றான். மனித சட்டங்களின் குளறுபடிகளிலிருந்து இறைச்சட்டங்களின் பக்கம் திரும்புவது ஒன்றுதான் மனிதர்களுக்கான ஈடேற்றம் என்று பகிங்கரமாக முன்மொழிகிறது இஸ்லாம். 

ஷிர்க் என்பது வெறும் வணக்க வழிமுறைகளில் செய்யும் இணைவைப்பு மட்டுமல்ல. அரசியல் அமைப்பில் செய்யும் இணைவைப்பும் உட்படுத்தியது.

முதலாளித்துவவாதி தன் கொள்கை, கோட்பாடுகளை முன்வைத்து முயல்வதுபோல, ஒரு பொதுவுடமைவாதி கம்யூனிஸ சித்தாந்தத்தை மேலோங்க செய்ய முன்வருவதுபோல, ஒரு முஸ்லிமும் இறைச்சட்டங்களை முன்நிறுத்தி அதற்கான அமைப்பை உருவாக்குவதில் என்ன ரகசியம் வேண்டி கிடக்கிறது சகோதரர் சமஸ்?

அதேபோல, வஹாபியிஸம் என்ற சொல்லாக்கத்திற்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது மேற்கத்தியவாதிகளின் திட்டமிட்ட சொல்லுருவாக்கம். சமூகத்திற்குள் சீர்த்திருத்தம் என்பது அவசியமாயினும், தங்கள் அடிப்படைத் தேவைகளுக்கே அனுதினமும் போராடிக்கொண்டிருக்கும் இந்த அமைப்பில் அது மெல்ல,  மெல்லதான் நடைபெறுவதற்கு சாத்தியமாகும். 

ஆக, சமஸ் இஸ்லாத்தை புரிந்துகொள்ள இன்னும் முன்னெடுக்க வேண்டும். 

சகோதரர் சமஸ்ஸின் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லையாயினும் பொதுவெளியில் அறிவுஜீவிகள் எப்படியெல்லாம் கருத்தாக்கம் செய்கிறார்கள் என்பதற்காக 04.02.2016 அன்று தி இந்துவில் வெளியான அவரது கட்டுரையை இங்கே மறுபிரசுரம் செய்கிறேன். 

ஆனால், அழகிய பதில் அளிக்க வேண்டிய முஸ்லிம் சமூகமோ உருப்படியாய் ஒரு கருத்தையும் (தி இந்து இணைய இதழில்) முன்வைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இனி சமஸ் சொல்வதை கேளுங்கள்...  - இக்வான் அமீர்.

““““““““““““““““

திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன?” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்?” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே?” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே!” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?” அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

காந்தி சொன்னார், “நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இதுவென்றால், இந்துத்துவம், இஸ்லாமியத்துவம், கிறிஸ்துவத்துவம், யூதத்துவம் என எந்த வடிவில் வந்தாலும் மத அடிப்படைவாதம் எதிர்க்கப்பட வேண்டும். அதுதான் மத அடிப்படைவாத எதிர்ப்புக்கான இலக்கணம், இல்லையா?

சென்னை வெள்ள நாட்களில் ‘தி இந்து’வில் வெளியான ஒரு படம் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டது. நண்பரும் பத்திரிகையாளருமான முஹம்மது அமீன், “காஷ்மீர் வரை இந்தப் படம் போயிருக்கிறது. எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்!” என்று கூறினார். வெள்ளத்தில் மூழ்கி சேறும் சகதியும் அப்பிக்கிடந்த ஒரு கோயிலை முஸ்லிம் இளைஞர்கள் சுத்தப்படுத்திய படம்தான் காஷ்மீரிலும் டெல்லியிலும் அப்படி ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்ட படம். அவரிடம் சொன்னேன். “உண்மையில், தேசிய அளவில் ஏனைய முஸ்லிம் சமூகங்களுக்குத் தமிழக முஸ்லிம்கள்தான் மத நல்லிணக்கத்தில் முன்னுதாரணங்களாக இருக்க முடியும். ஏன், சர்வதேச அளவில்கூட வழிகாட்ட முடியும். அதற்கான கலாச்சாரப் பலம் தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கிறது!”

வஹாபிஸ அச்சுறுத்தல்

சர்வதேச அளவில் சமகால முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் மிகப் பெரும் அச்சுறுத்தல் வஹாபியிஸம்.

1703-ல் பிறந்த முஹம்மது இபின் அப்த் அல் வஹாபியிடமிருந்து உருவானது. அதீதக் கட்டுப்பாடுகளுக்குப் பேர் போன வஹாபி, ஏக இறை தத்துவத்தின் பெயரில் ஒற்றைக் கலாச்சாரத்தை உருவாக்கியவர். அதே காலகட்டத்தைச் சேர்ந்தவரான முஹம்மது இபின் சவ்து நாடு பிடிக்கும் வேட்கையில் இருந்த போர் வீரர். இவர்கள் இருவரும் சேர்ந்த பின்னர், வஹாபியிஸம் வேகமாகப் பரப்பப்பட்டது. அரசுக்கு மதம் அரணாகவும் மதத்துக்கு அரசு அரணாகவும் நின்றது.

மிகை ஒழுக்கத்துடன் வளர்த்தெடுக்கப்பட்ட வஹாபியிஸம், தன்னுடைய வரலாறு நெடுகிலும் ரத்தக் குளியல் நடத்தியது. முஸ்லிம் அல்லாத ஏனைய சமூகங்களை மட்டும் அல்ல; முஸ்லிம் சமூகத்திலேயே பன்மைத்துவக் கலாச்சாரம் கொண்ட சமூகங்களையும் அது அழித்தொழித்தது. கூடவே, அவர்களுடைய வழிபாட்டுத்தலங்கள், தொன்மையான கலைப்படைப்புகள், தொல்லியல் சின்னங்கள் யாவும் உருவ வழிபாட்டு எதிர்ப்பின் பெயரால் அழிக்கப்பட்டன. ஏகத்துவம், ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றெல்லாம் விவரித்தாலும் அடிப்படையில் இன்றைய சவுதி கலாச்சாரத்தையே ‘தவ்ஹீது’ முன்னிறுத்துகிறது.

சவுதி அரேபிய அரச வம்சத்தை 1932-ல் நிறுவியவரான அப்துல் அஜீஸ் இபின் சவுத், வஹாபியிஸத்தை வரித்துக்கொண்டவர். உலகம் முழுக்க இன்றைக்கு வஹாபியிஸத்தைப் பரப்பியதில் அவர் வழிவந்தவர்களால் ஆளப்படும் சவுதி அரசுக்கும் பெட்ரோலிய வளம் தந்த பணத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. சுதந்திரப் பேச்சு, எழுத்துக்கு எதிராக சவுதி அரசு ஏன் கடும் கட்டுப்பாடுகளையும் தணிக்கைகளையும் தண்டனைகளையும் விதிக்கிறது? அரசை சின்ன அளவில் விமர்சித்துவிட்டால்கூட, கற்காலக் கசையடித் தண்டனையையும் கல்லடித் தண்டனையையும் ஏன் அளிக்கிறது? சவுதியில், இதுவரை கிட்டத்தட்ட 40,000 பேர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்; 3.5 லட்சம் பேர் உடல் உறுப்புகள் வெட்டி வீசப்பட்டிருக்கிறார்கள்; ஒரு மாதத்துக்கு முன்புகூட ஒரே நாளில் 47 பேர் பொதுவெளியில் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கின்றன மனித உரிமை அமைப்புகள். ஒரு அரச நிர்வாகம் நடத்தும் சவுதி அரசின் தண்டனைகளும் பயங்கரவாத அமைப்புகளான அல்-கொய்தா, தாலிபன், ஐஎஸ் ஆகியவற்றின் தண்டனைகளும் எப்படி ஒரே பாணியில் இருக்கின்றன? இதற்குப் பின்னணியில் வஹாபியிஸம் உண்டு!

வெற்றிடம் உருவாக்கும் செல்வாக்கு

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துடன் ஒப்பிடும்போது, கால் நூற்றாண்டுக்கு முன்புவரைகூட வஹாபியிஸம் பெரிய செல்வாக்கு இல்லாமலேயே இருந்தது. ஆனால், ஈராக், ஆப்கன் போர்களைத் தொடர்ந்து, முஸ்லிம் நாடுகள் மீது தொடரும் ஏகாதிபத்திய நாடுகளின் தொடர் தாக்குதல் வஹாபியிஸத்துக்குப் புது கவனத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. சர்வதேச அளவில், பொதுச்சமூகத்தின் புறக்கணிப்பையும் பாகுபாட்டையும் எதிர்கொள்ளும் முஸ்லிம் இளைய தலைமுறையினர், அரசியல் வெற்றிடத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் எல்லாம் வஹாபியிஸம் முன்னிறுத்தும் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி நகர்கின்றனர். வஹாபியிஸம் எந்த நாட்டில் நுழைந்தாலும் அது பொதுவெளியில் முன்வைக்கும் இரு முழக்கங்கள் - ஒரே கடவுள், ஒரே கலாச்சாரம். மூன்றாவது முழக்கம் அந்தரங்கமானது - ஒரே அரசு!

இஸ்லாத்தில் அடிப்படையில் மதம் என்பது கடவுளுக் கும் மனிதனுக்கும் இடையிலான ஒப்பந்தம். அது ஆன்மிக மயமானது. அதில் கட்டாயத்துக்கோ பலப் பிரயோகத்துக்கோ இடமே இல்லை. ஏனைய சமூகங்களுடனான உறவையும் சகிப்புத்தன்மையையும் தன் வாழ்நாள் நெடுகிலும் போதித்திருக்கிறார் முஹம்மது நபி. வஹாபியிஸமோ, எது ஒன்றையும் குறுகிய மதக் கண்ணோட்டத்தில் பார்ப்பதையும் இப்பார்வையைப் பரப்புவதையுமே அடிப்படையாகக்கொண்டிருக்கிறது என்கிறது வரலாறு.

இந்திய முஸ்லிம்களின் வரலாற்றுப் பலம்

இஸ்லாம் வெவ்வேறு நாடுகளில் அந்தந்த மண்ணின் இயல்புக்கு ஏற்ப வளர்ந்ததுபோல, இங்கே இந்தியாவுக்கே உரிய பன்மைத்துவக் கூறுகளோடு வளர்ந்தது. இந்தப் பன்மைத்துவக் கலாச்சாரத்தில் தமிழக முஸ்லிம்கள் கூடுதல் செழுமையானவர்கள். இந்தியாவில் இஸ்லாமின் தோற்றமும் வளர்ச்சியும் தென் முனைக் கடலோரத்திலிருந்தே தொடங்கியது என்பதோடு, ஏனைய பகுதிகளைப் போல படையெடுப்புகள் மூலமாக அல்லாமல், வாணிப - மண உறவு வாயிலாகவும் சூஃபி ஞானிகள் மூலமாகவும் இங்கு இஸ்லாம் பரவியது என்பதும் இதற்கான முக்கியமான காரணங்களில் அடிப்படையானது. இன்றைக்கும் தென் மாவட்டங்களில் சியான், அப்பு, சாச்சா-சாச்சி, மாமா-மச்சான் என்றெல்லாம் பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லிம்களும் அழைத்துக்கொள்ளும் உறவுகள் தமிழகத்தின் சமூக நல்லிணக்க மரபின் நீண்ட வேர்களை நமக்கு உணர்த்துபவை.

காவிரிப் படுகையில் பெரும்பாலான இந்துக்கள் வீடுகளில் பூஜையறையில் மூன்று படங்களைப் பார்க்க முடியும். தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் படம், வேளாங்கண்ணி மாதா தேவாலயப் படம், நாகூர் தர்கா படம். சமீபத்தில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஒரு நாளில், நாடக ஆசிரியர் பென்னேஸ்வரன் விசாரித்தார். “வைத்தியம் ஒருபக்கம் நடக்கட்டும். மூணு இடம் சொல்றேன். அவசியம் போய்ட்டு வாங்க. திருவொற்றியூர் பட்டினத்தார் சமாதி, திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் சமாதி, அண்ணா சாலை ஹஸ்ரத் சையத் மூசா ஷா தர்கா.” பென்னேஸ்வரன் ஒரு பிராமணர். டெல்லியில் வசிப்பவர். இந்திய மக்களிடம் கருத்தாக்கம் வழியாக அல்ல; வாழ்வியலின் ஒரு பகுதியாக ஊடுருவியிருக்கிறது மதச்சார்பின்மை.

தமிழகத்தில் பல கோயில்கள் - மசூதிகளில் இந்துக்கள் முஸ்லிம்களுக்குத் திருநாட்களில் முதல் மரியாதை முறை உண்டு. பெரும்பாலான தர்காக்களில் சந்தனக்கூடு திருவீதியுலா நிகழ்வில் இந்துக்களும் பங்குதாரர்கள். தர்காக்கள் வழிபாட்டுக்குரிய இடங்களோ, இல்லையோ; வெவ்வேறு சமூகங்களை இயல்பாக ஒன்று சேர்க்கும் இடங்கள். அந்த வகையில், தர்காக்கள் மீதான தாக்குதல் மதச்சார்பின்மை மீதான தாக்குதல்; சகிப்புத்தன்மை மீதான தாக்குதல்.

இந்துத்துவ அமைப்புகள் பல நீண்ட காலமாக இந்துக்கள் மத்தியில் தர்கா வழிபாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவந்திருக்கின்றன. இன்றைக்கு இஸ்லாமியத்துவ அமைப்புகளும் முஸ்லிம்களிடம் அதே காரியத்தில் இறங்கியிருக்கின்றன என்றால், நமக்கு உணர்த்தப்படும் செய்தி என்ன?

பிளவுகள் குடும்பத்தில் தொடங்குகின்றன

அதிர்ஷ்டவசமாக இந்துத்துவத்தை எப்படி பெரும்பான்மை இந்துக்கள் ஏற்கவில்லையோ, அவ்வாறே வஹாபியிஸத்தைப் பெரும்பான்மை முஸ்லிம்கள் ஏற்கவில்லை. எனினும், மாறும் சூழல்கள் இன்றைக்குக் குடும்பங்களில் அப்பா-மகன் உறவைப் பிளக்கும் அளவுக்கு உருவெடுத்திருக்கிறது என்கிறார்கள். நேற்று ஒரு முஸ்லிம் பெரியவர் பேசிக்கொண்டிருந்தார். “தெருவில் பொங்கல் விழா நடத்தினார்கள். கூப்பிட்டிருந்தார்கள் என்று போனேன். போன இடத்தில் பொங்கல் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்கள். மறுப்பது நம் கலாச்சாரம் அல்ல. சாப்பிட்டேன். வீட்டுக்கு வந்ததும், ‘காபிர்கள் படைத்த பொங்கலைச் சாப்பிட்டு வந்திருக்கிறாயே, நீயெல்லாம் ஒரு உண்மையான முஸ்லிமா?’ என்று கேட்டு ஏசுகிறான் பிள்ளை. நான் முஸ்லிம் மட்டும்தானா, இந்தச் சமூகத்தில் வேறு எதுவுமே இல்லையா?”

எனக்கு ஆதம் தீன் கட்டுரை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளரான இவர், தன்னுடைய இளம் வயதில் தீவிர இஸ்லாமிய அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு, பயங்கரவாதக் குழு ஒன்றுக்குள் சிக்கிக்கொண்டவர். நாளடைவில் அதன் குரூர முகத்தைப் பார்த்தவர் அதிலிருந்து வெளியேறி, இப்போது பயங்கரவாத எதிர்ப்புச் செயல்பாடுகளில் இறங்கியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் எப்படி இளைஞர்களை உள்ளே இழுக்கின்றன என்பதைத் தன்னுடைய அனுபவத்திலிருந்து அவர் சொல்லியிருந்தார்.

“பல இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத ஜனநாயகத்தையும் சகல உரிமைகளையும் முஸ்லிம்களுக்கும் தந்திருந்த நாடு பிரிட்டன். என்னுடைய இளம் வயதில் நான் பிரிட்டனில் எந்தக் கசப்பையும் உணர்ந்ததில்லை. உயர் கல்வி படிக்கச் சென்றபோது, ‘நீ ஒரு முஸ்லிம். ஆனால், ஏன் அந்த அடையாளத்தையே உணராதவனாக இருக்கிறாய்?’ என்று கேட்க ஆரம்பித்தார்கள் சில நண்பர்கள். அதுவரை நானோ, என் குடும்பமோ அறிந்திராத வகையில் இஸ்லாத்தை அவர்கள் புதிய கோணத்தில் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். கூடவே, வெவ்வேறு நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை என்னுடைய பிரச்சினைகளாக மாற்றினார்கள். சீக்கிரமே என் வாழ்க்கை முறை மாறியது.

ஒருகட்டத்தில் என்னுடைய பழைய நண்பர்கள், பெண்கள் எல்லோருடனான பழக்கத்தையும் நிறுத்திவிட்டேன். என் குடும்பத்தினரே நல்ல முஸ்லிம்கள் இல்லை என்று நினைத்தேன். பெற்றோரையே இழிவாகப் பார்த்தேன். பன்மைக் கலாச்சாரம், நெகிழ்வுத்தன்மை எல்லாம் இழிவாகத் தெரிந்தன. சொல்லப்போனால், என் புதிய நண்பர்கள் கொடுத்த கண்களாலேயே ஒட்டுமொத்த இந்த உலகத்தையும் பார்த்தேன். தீவிர அமெரிக்க எதிர்ப்பாளன் ஆனேன். கடைசியில், ‘பிரிட்டிஷ் முஸ்லிம்’ என்ற நிலையிலிருந்து, ‘பிரிட்டனில் வசிக்கும் ஒரு முஸ்லிம்’ என்ற நிலைக்கு மாறினேன். இஸ்லாமிய உலகுக்கு நான் நெருக்கமானவன் என்று நினைத்துக்கொண்டு, பிரிட்டிஷ் கலாச்சாரம், நடைமுறைகளிலிருந்து விலகினேன். ஆனால், மதத்தைத் தீவிரமாகப் புகட்டியவர்கள், எதிர்க் கேள்வி கேட்டால் ஆவேசமானார்கள். ‘நீ மார்க்கத்தைவிட்டு விலகுகிறாய்’ என்றார்கள்.

சுதந்திரத்தையும் ஏனைய சமூகங்களின் நம்பிக்கைகளையும் சகித்துக்கொள்ளும் இஸ்லாமே எனக்குப் பிடித்தமானது. எனக்கும் கடவுளுக்கும் நடுவே இவர்கள் யார் என்ற கேள்வி ஒரு நாள் எழுந்தது. வெளியேறிவிட்டேன். இன்றைய இளம் முஸ்லிம்கள் பலர் மத அடிப்படைவாதத்தை நோக்கி நகர அவர்களுடைய பொருளாதார, சமூகப் பின்னடைவுகளே அடிப்படைக் காரணம். அவர்களுக்கு ஆதரவான குரல் ஒரு திசையில் ஒலிக்கும்போது, அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி யோசிக்காமலேயே அந்தத் திசையில் அவர்கள் நகருகிறார்கள். இந்தக் கோபப் பயணம் கடைசியில் பயங்கரவாதத்தில் கொண்டுசேர்த்துவிடும்.”

புனிதம் எனும் கொடுஞ்சொல்!

உலகிலேயே முதல் முறையாக ஐஎஸ் அமைப்புக்கு எதிராக 1,050 இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டாக ஃபத்வா பிறப்பித்து ஐநா சபை பொதுச் செயலாளருக்கு அனுப்பிய முன்னுதாரணம், இந்திய முஸ்லிம் சமூகத்திடமிருந்து வெளிப்பட்ட வரலாற்றுப் பின்புலம் உண்டு. வஹாபியிஸத்தின் வயது அதிகபட்சம் மூன்று நூற்றாண்டுகள். இந்திய இஸ்லாம் குறைந்தபட்சம் வஹாபியிஸத்தைக் காட்டிலும் ஆயிரம் ஆண்டுகள் மூத்தது, பழமையானது. நம்மைப் பார்த்துதான் சர்வதேச முஸ்லிம் சமூகம் நெகிழ்வான பன்மைத்துவத்தைக் கற்க வேண்டும்.

இயற்கையின் அடிப்படை பன்மைத்துவம். வரலாற்றில் மனிதத்துக்கு எதிரான மிகக் கொடிய வன்முறைகள் அனைத்தும் புனிதம் எனும் தூய்மைவாத சொல்லின் பெயராலேயே நடந்திருக்கின்றன. இந்து மதத்தின் தூய்மைவாதப் புனிதம்தான் தம்முடைய சொந்த சகோதரர்கள் கோடிக்கணக்கானோர் மீது கொடுமையான பாகுபாட்டையும் உச்சபட்சமாகத் தீண்டாமையையும் திணித்தது.

அன்றைக்குக் கோயில்களில் உட்கார்ந்துகொண்டு தூய்மைவாதப் புனிதத்தைப் போதித்தவர்களுக்குத் தெரியாது, தம் போதனைகள் எத்தனை நூற்றாண்டுகளுக்கு சக சகோதரர்களை இழிவான சேரிகளில் புறக்கணிப்பிலும் அவமானத்திலும் தள்ளி, மனிதத்தை வதைத்து நசுக்கும் என்பது. ஒற்றைக் கலாச்சார புதிய மசூதிகளில் இன்றைக்குப் தூய்மைவாதப் புனிதத்தைப் போதிப்பவர்களும் அதற்கு இணையான பெரும் தவறை இழைக்கிறார்கள். கோயில்களின் ‘புனித போதனை’ வரலாற்றுக் கொடுமை என்றால், ஒற்றைக் கலாச்சார புதிய மசூதிகளின் ‘புனித போதனை’ வரலாற்றுத் துரோகம். வெறுமை உணர்ச்சியிலும் கொந்தளிப்புச் சூழலிலும் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கித் தள்ளப்படும் ஒரு சமூகம் அத்தனை சீக்கிரம் எழ முடியாத வெறுப்புப் பள்ளத்தில் தள்ளப்படும். பெரும்பான்மை அடிப்படைவாதம் இந்தத் தருணத்துக்காகத்தான் வெறியோடு காத்திருக்கிறது.

இந்தியாவில் சிறுபான்மை அடிப்படைவாதிகள் தங்களை அறியாமல் செய்யும் மாபெரும் பிழை பெரும்பான்மை அடிப்படைவாதிகளுக்கான நியாயத்தை உருவாக்குவது. தம் சொந்த மக்களுக்கு இதைவிடவும் ஒரு கொடுமையை அவர்கள் இழைக்க வேண்டியதில்லை. இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை!

நன்றி:  தி இந்து - தமிழ், 04.02.2016. 
Share:

Wednesday, February 3, 2016

வைகறை நினைவுகள் - 27: ஈந்து கசிந்த மனம்



உலகம் முழுக்க ஈகை திருநாள் எனப்படும் ரமளான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும் நேரத்தில் இந்த வரலாற்று சம்பவம் நெஞ்சில் எழுவதிலிருந்து தடுக்க முடியவில்லை.

மீண்டும்… மீண்டும் நெஞ்சில் நிழலாடும் அந்த சம்பவத்தை நீங்கள் காண என்னோடு கால எந்திரத்தில் ஏறி சற்றேறக் குறைய 14 நூற்றாண்டுகளுக்கு பின் செல்ல வேண்டியிருக்கும்.

குதுகலமும், உற்சாகமும், உணர்வுபூர்வமாய் இருக்கும் அந்த சம்பவத்தின் நாயகர் எத்தனை ஆளுமை பண்புக்குரியவராக வரலாற்றில் திகழ்கிறார் … ஆஹா…!! அன்னாரை தலைவராக ஏற்றுக் கொள்வபர் பேறு பெற்றவர்..! மலைப்பே ஏற்படுகிறது.

வாருங்கள் என் நினைவுகளோடு நீங்களும், ஒரு நடை மதீனா சென்றுவிட்டு வருவோம்.


கருக்கலின் பிடியிலிருந்து கீழ்வானம் விடுபட்டு செந்நிற சாயலை படரவிட்ட அந்த வைகறையிலேயே மதீனா விழித்துக் கொண்டது.

அன்று ரமளான் பண்டிகை. இறைவனின் கட்டளைகளை சிரமேற்று ஒரு மாதம் முழுக்க நோன்பு நோற்று இறைவனின் பேரன்பைப் பெற்ற நன்னாள் அல்லவா அது!

பெருநாள் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக மதீனாவாசிகளை உற்சாகம் தொற்றிக் கொண்டது. பெரியவர், சிறியவர் பேதமில்லாமல் அவரவர் வசதிக்கேற்ப புத்தாடைகளை அணிந்திருந்தனர். ஒருவர் மற்றொருவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதும், மகிழ்ச்சியைப் பறிமாறிக் கொள்வதுமாய் மதீனா நகரின் தெருக்கள் களைக்கட்டின.

நகரின் எல்லைப்புறத்தில் அமைந்திருந்தது ’ஈத்கா’ எனப்படும் சிறப்புத் தொழுகைகளுக்கான திடல்.

மக்கள் சாரிசாரியாக கிளம்பி தொழுகைத் திடலை அடைந்தார்கள். அதற்குரிய நேரத்தில், நபிகளாரின் தலைமையில் ரமளான் சிறப்புத் தொழுகையும் நடந்து முடிந்தது.

தொழுகைக்குப் பின்னர், ஒருவர் மற்றொருவரைக் கட்டியணைத்து வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டார்கள். வீட்டை நோக்கி நடந்தார்கள்.


எதிர்படுபவர்களுக்கு சலாம் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டே நபிகளார் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

வழியில், தெருவொன்றில் அமர்ந்திருந்த சிறுவனைக் கண்டார். முழங்கால்களுக்கு இடையே முகம் புதைத்து அவன் அழுதுகொண்டிருந்தான்.

அருகில் சென்ற நபிகளார் சிறுவனுக்கு சலாம் தெரிவித்தார்.

“மகனே! ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?” – என்று அவனது தோளைப் பிடித்து ஆறுதலாக விசாரிக்கவும் செய்தார்.

சிறுவனோ தலையைத் தூக்காமலேயே, “தயவுசெய்து என்னை யாரும் தொந்திரவு செய்யாதீர்கள்?” – என்றான் அழுகையுடன் குலுங்கிக் கொண்டே!

சிறுவனின் தலையை கோதியவாறு நபிகளார், “மகனே! சந்தோஷமான இந்த ரமளான் பண்டிகை நாளில் ஏனய்யா அழுது கொண்டிருக்கிறாய்?” – என்று அன்பொழுக கேட்டார்.

இதமான அந்த ஸ்பரிசம் சிறுவனை தலை நிமிராமலேயே பேச வைத்தது.

“எனது தந்தையார் போரில் கொல்லப்பட்டு விட்டார். தாயாரோ வேறொருவரை மணம் புரிந்து கொண்டார். எனது மாற்றான் தகப்பனாரோ என்னை சேர்த்துக் கொள்வதேயில்லை! ரமளான் பண்டிகை நாளும் அதுவுமாய் நான் போட்டிருக்கும் இந்த உடைகளைத் தவிர அணிந்து கொள்ள வேறு ஆடைகளும் என்னிடம் இல்லை!” – என்று கூறிவிட்டு சிறுவன் “ஓ” வென்று அழலானான்.


நபிகளாரின் கண்கள் பனித்துவிட்டன. துக்கத்தால் நெஞ்சடைத்துக் கொண்டது.

“மகனே! உன் நிலைமைப் புரிகிறது. நானும் உன்னைப் போலவே சிறுவயதிலேயே பெற்றோரைப் பறிக்கொடுத்த அநாதைதான். அழாதே..!” என்று ஆறுதல் சொன்னார்.

இதைக் கேட்டதும் அழுது கொண்டிருந்த சிறுவன் ‘ஜுஹைர் பின் ஸாஹிர்’ தலைநிமிர்ந்து பார்த்தான்.

கலங்கிய கண்களோடு, நின்றிருந்த நபிகளாரைக் கண்டான்.

“இறைவனின் திருத்தூதரே! தாங்கள்… தாங்களா?” – மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தெழுந்தான்.

ஜுஹைரை அணைத்துக் கொண்ட நபிகளார், “மகனே! இதோ பார்… இன்று முதல் நான்தான் உனது தந்தையார். எனது மனைவிதான் உனது தாயார்! எனது மகள் ஃபாத்திமாதான் உனது சகோதரி! என்ன சம்மதமா?” – என்றார் அன்பொழுக.

உலகின் மிகச் சிறந்த அரவணைப்பை வேண்டாம் என்றா சொல்வான் ஜுஹைர்?

அந்த அனாதைச் சிறுவனை தன்னுடன் அழைத்துச் சென்ற நபிகளார் அவனை குளிக்க வைத்து புத்தாடை அணிய வைத்தார். தன்னோடு இருத்தி சுவை மிகுந்த உணவைப் படைத்தார். ரமளான் பண்டிகையின் அத்தனை சந்தோஷத்தையும் அவனுக்குத் தந்தார்.

ஆம்..! ஏழைகளையும், அநாதைகளையும் அரவணைத்து ஈந்துதவும் நாளே ஈகைத் திருநாள் எனப்படும் ரமளான் பெருநாள்.


எவ்வளவு எதார்த்தமாக அன்பு நபிகளார் அதை செயலுருவில் காட்டினார்..!!

அன்பு அண்ணலே..! உங்களை தலைவராய் அடைந்தமைக்கு உள்ளம் மகிழ்கிறேன். உவகையால் பூரிக்கிறேன். இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்! இதயம் கனிந்த ரமளான் வாழ்த்துக்கள்!

- இறைவன் நாடினால்… மற்றொரு வைகறையில் நினைவுகள் தொடரும் 


இதற்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23:  மர்யம் ஏன் அழுதாள்?:  http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html
வைகறை நினைவுகள் பகுதி 24:  வேட்டைக்காரன்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/24.html
வைகறை நினைவுகள் பகுதி 25:  லென்ஸ் விழி வழியே..:  http://ikhwanameer.blogspot.in/2015/12/25.html
வைகறை நினைவுகள் பகுதி 26:  ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன்: http://ikhwanameer.blogspot.in/2016/02/26.html    

Share:

Monday, February 1, 2016

வைகறை நினைவுகள் 26: ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன்!


 1990-களின் ஒரு வெள்ளிக்கிழமை.

சென்னை அண்ணாசாலை மக்கா மஸ்ஜித்.

மக்கா சுடர் இதழ் ஆசிரியரும், மக்கா மஸ்ஜிதின் தலைமை இமாமுமான மௌலான சுலைமான பாகவி அனல் கக்க உரையாற்றிக் கொண்டிருந்தார். கையில் ஐ.எஃப்.டி வெளியீட்டு திருக்குர்ஆன் மொழியாக்கம்.

மௌலானாவின் உரை முழுவதும் திருக்குர்ஆன் வெளியீட்டுக்கு எதிராகவே இருந்தது. கூடவே, மொழியாக்க பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருந்த மௌலான குத்புத்தீன் பாகவிக்கும் அர்ச்சனை.

அப்போதுதான், ஐ.எஃப்டி. நிறுவனம் மூதறிஞர் ஜமீல் அஹ்மது சாஹெபின் தளராத முயற்சியால் தமிழ் கூறும் நல்லுலகு பயன்பெறும் விதமாக திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை வெளியிட்டிருந்தது. அதுவும், பெரும் அறிஞர்கள், தமிழ் மொழி வல்லுநர்கள், ஆர்வலர்கள் கொண்ட குழுவுடன் இணைந்து பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அது வெளியாகியிருந்தது.

திருக்குர்ஆன் மொழியாக்கம் வெளியீட்டு அறிமுகமாக வெள்ளிக்கிழமையில் முக்கிய பள்ளிகளுக்கு கொண்டு சேர்ப்பதென முடிவாகியிருந்தது.

அண்ணாசாலை மக்கா பள்ளிக்கு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த குழுவில் மௌலானா குத்புத்தீன் அஹ்மது பாகவி ஐ.எஃப்.டியைச் சேர்ந்த தம்பி அஷ்ரப் அலி மற்றும் பலர் இருந்தனர்.


இந்தத் தகவல், மௌலான சுலைமான் பாகவிக்கு தெரிந்து அவர் எங்களை வெள்ளிஉரையில் விளாசிக் கொண்டிருந்தார். கேட்போரை ஆக்ரோஷமாக்கி உணர்ச்சிவசப்பட வைக்கும் முறைமை அது! எதுவும் நடக்கலாம் என்ற நிலையில் திருக்குர்ஆன் பிரதிகளோடு பள்ளிக்கு வெளியில் நாங்கள்.

அந்தச் சூழலில்தான், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து (1979-1988) அந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த ரஷ்ய கரடி தனது படைகளை திரும்பப் பெற்று நாட்டைவிட்டு வெளியிருந்தது. ஈடு இணையற்ற முஜாஹிதீன்களின் கொரில்லாப் போராட்டத்தை தாக்கு பிடிக்க முடியாமல் பலத்த இழப்புக்கு ஆளாகி வெளியேறியிருந்தது. ஒருவிதத்தில் அது புறமுதுகு எனலாம்.

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து தனது இறைமறுப்பு கொள்கைகளை அந்த மக்கள் மீது திணித்திட முயன்ற ரஷ்ய ஏகாத்திபத்யம் படுதோல்வி அடைந்தது. வெறும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆப்கானின் சுதந்திரப் போராளிகள் ஒரு வல்லரசை வீழ்த்தியதற்கு பின்புலமாக இருந்தது இறைவேதமான திருக்குர்ஆன்தான்!

இறைநம்பிக்கையாளர்களை ஓரணியில், திரட்டி அவர்களை எஃகு நிகர் அரணாக்கி, சொற்ப ஆயுதங்களைக் கொண்டு சர்வ வல்லமையுள்ள செம்படையினரை ஓட ஓட விரட்டச் செய்த நவீன வரலாற்று நிகழ்வு அது.

20-ம், நூற்றாண்டில் வீரம் சொரிந்த அறப்போராட்டத்தின் மூலமாக ஆக்கிரமிப்பாளரை ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்கள் விரட்டியடித்தனர். அதற்காக அவர்கள் கொடுத்த விலையும் சாதாரணமானதல்ல. மனைவி, மக்கள், உற்றார், உறவுகள், வீடு. வாசல்கள் என்று அனைத்தையும் இழந்துதான் அந்த களத்தில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தார்கள்.

ஆக்கிரமிப்பாளர்களுடனான அந்த யுத்தத்தில் முஜாஹித் ஷஹீத் அப்துல்லாஹ் ஆஸம் மற்றும் அவரது இரண்டு மகன்கள் முன்னணியில் இருந்தனர். பயணித்த வாகனத்தில் அவர்கள் குண்டுவைத்து கொல்லப்பட்டபோது, துன்பகரமான அந்த செய்தியை அவரது மனைவியார், “எல்லா புகழும் இறைவனுக்கே!” – என்ற ஒற்றை வரியில் தாங்கிக் கொண்டார்.


ஆக்கிரமிப்புக்கும், அநீதிக்கும் எதிரான ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் மறுமையை முன்வைத்து நடந்த அந்த அறப்போரில் ஒவ்வொரு போராளியும், அவரது குடும்பத்தாரும் திருக்குர்ஆனின் வார்ப்பாகவே இருந்தார்கள்.

அப்துல்லாஹ் ஆஸம் வீர மரணம் அடைந்தபோது, அல் ஜிஹாத் என்ற பத்திரிகை அவரைப் பேட்டிக் கண்டது. அப்போது, அந்த முடிவு (தனது கணவரும், பிள்ளைகளும் கொல்லப்பட்டது) தான் எதிர்பார்த்ததுதான் என்கிறார். தனது எஞ்சிய பிள்ளைகளையும் இறைவழியில் அர்ப்பணிக்க தயாராகவே இருக்கிறேன் என்று கணல் கக்குகின்றார்.

அவரது ஐந்து வயது மகன் அந்த பேட்டியில் இப்படி சொல்கிறான்:

உன் வயதென்ன?

ஐந்து.

உன் தந்தை எங்கிருக்கிறார்?

சொர்க்கத்தில்.

தந்தையை கொலை செய்தது யார்?

இறைமறுப்பாளர்கள்.

எவ்வாறு கொன்றார்கள்?

வாகன இருக்கையின் கீழ் குண்டு வைத்து கொன்றார்கள்.

அவர்களோடு இருந்தவர்கள் யார்?

அண்ணன் முஹம்மதுவும், இப்ராஹீமும். இவர்களும் தந்தையாருடன் சொர்க்கத்தில் இருப்பார்கள்.

அவர்களிடம் செல்ல விருப்பமா?

ஆமாம்! நானும் ஷஹீதாகி (அறப்போரில் கொல்லப்பட்டு) என்னை கப்ரில் (மண்ணறையில்) வைத்தவுடன், வானவர் தலைவர் ஜிப்ரீயல் என்னை அவர்களிடம் (தந்தையார் மற்றும் சகோரர்கள்) அழைத்துச் செல்வார்.

ஆக, அக்கிரமத்துக்கும், அநீதிக்கும் எதிரான வலிமையான, சிதைக்க முடியாத மனப்போக்கை திருக்குர்ஆன் ஏற்படுத்தியதே செம்படையை ஆப்கானிஸ்தானிலிருந்து விரட்ட காரணமானது.

இந்த வரலாற்று சூழலில்தான், திருக்குர்அன் பல்வேறு சிரமங்களுக்கிடையே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது.

மொழியாக்க அறிமுகத்துக்காக, அண்ணாசாலை மக்கா மஸ்ஜித்துக்கும் சென்றிருந்தோம்.

உள்ளே மெளலானா சுலைமான் பாகவி எங்களை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார்.


இந்நிலையில், வெளியில் திருக்குர்ஆன் பிரதிகளை இருகைகளிலும் ஏந்தியவாறு, சற்று உயரமான இடத்தில் நின்றுகொண்டு நான் இப்படி முழங்கலானேன்:

“ரஷ்ய கரடியை ஆப்கானிஸ்தானிலிருந்து ஓட ஓட விரட்டிய வேதநூல் இது! ரஷ்ய கரடியை ஆப்கானிஸ்தானிலிருந்து ஓட ஓட விரட்டிய திருக்குர்ஆன் இது!”

மெளலான சுலைமான் பாகவியின் உரையால் உணர்ச்சிவசப்பட்டு எங்கள் மீது வன்முறையை பிரயோகம் செய்ய வந்தவர்கள் நாங்கள் கொண்டுவந்திருந்த நூற்றுக்கணக்கான திருக்குர்அன் பிரதிகள் மக்களிடம் சேர்ந்துவிட்டதை நேரில் கண்டு இயலாமையால் திரும்பி சென்றுவிட்டார்கள்.

வைகறை நினைவுகள் இறைவன் நாடினால்… தொடரும்.

 வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:

வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23:  மர்யம் ஏன் அழுதாள்?:  http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html
வைகறை நினைவுகள் பகுதி 24:  வேட்டைக்காரன்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/24.html
வைகறை நினைவுகள் பகுதி 25:  லென்ஸ் விழி வழியே..:  http://ikhwanameer.blogspot.in/2015/12/25.html      

Share:

Monday, January 18, 2016

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 16: உதவி சிறிது; பதவி பெரிது...!


வாடிய பயிர் கண்டு வாடியவர் வள்ளலார் பெருமானார். வாடிய உயிர்களைக் கண்டு வாடியதோடு மட்டுமில்லாமல் அவற்றின் வாட்டம் போக்க வழிமுறைக் கண்டவர் நபிகள் பெருமானார்.

சக உயிர்களுக்கு செய்யும் உதவியானது.. பெரும் பதவிகளைப் பெற்றுத் தரும் என்று அழுத்தம் திருத்தமாக போதித்தவர் அன்பு நபி.

நண்பர்களே, இன்றைய 'அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்..!' இரண்டு அற்புதமான சம்பவங்களைக் காட்டி தமது தோழர்களை சக உயிர்களிடம் இரக்கம் கொள்ளச் சொல்கிறார்கள் நபி பெருமானார். இத்தொடரின் இன்றைய பகுதியையும் வழக்கம் போல, உங்களது முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு எத்தி வைப்பதுதான் உங்களது பங்களிப்பு!

ஓர் ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அவள் ஒரு பூனையை வளர்த்து வந்தாள். அப்பூனைக்குக் கிழவி சரியாக உணவளிப்பதில்லை; நீரும் அளிப்பதில்லை. பூனையைக் கட்டிப் போட்டு அதை வருத்தி வந்தாள். இந்நிலையில் அவள் மரணமடைந்துவிட்டாள். அவளது செயலுக்காக அவள் நரகம் சென்றாள்.

பாலைவனம்.

உச்சிவேளையில் ஒரு மனிதன் நடந்து வந்தான். தீய்க்கும் வெய்யிலால் நீர்த்தாகம் அவனை வாட்டியது.

பாலையில் ஒரு கிணறு இருந்தது. அதில் இறங்கிய வழிப்போக்கன் போதிய மட்டும் நீர் அருந்தினான்.

கிணற்றுக்கு வெளியே தாகத்தால் ஒரு நாய் தவித்துக் கொண்டிருந்தது. கிணற்றைச் சுற்றி இருந்த ஈர மணலை தாகம் தாங்காமல் அது நக்கியது.

இதைக் கண்ட மனிதனின் உள்ளத்தில் இரக்கம் சுரந்தது. திரும்பவும் கிணற்றில் வழிப்போக்கன் இறங்கினான். தன் தோல் காலுறையில் நீர் மொண்டான். அதை பல்லில் கடித்து சிரமத்துடன் மேலே கொணர்ந்தான். தாகம் தீர நாய்க்கு உதவினான். இவனது செயலைக் கண்ட இறைவன் அவனுக்குச் சொர்க்கம் தந்தான்.

'உயிர்களிடம் இரங்குதல் வேண்டும்!' - என்பது சம்பந்தமாக முஹம்மது நபிகளார் (ஸல்) போதனை செய்யும்போது தம் தோழர்க்கு சொன்ன சம்பவங்கள் இவை.

சிறிய செயல்களானாலும் அவற்றின் முக்கியத்துவத்தையும், செயல் துடிப்பையும் வைத்து இறைவனிடம் அவை உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றன.

- இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.




முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:


1. அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html
2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html
3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html
5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html
6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html
7.ஓர் இறை.. ஓர் நிறை..  : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html
8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html
9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... : http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html
10. அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி : http://ikhwanameer.blogspot.in/2015/11/10.html
11. அவர்கள் எதிரிகள் குழந்தைகளாயினும்... : http://ikhwanameer.blogspot.in/2015/11/11.html
12. குற்றம் குற்றமே!:  http://ikhwanameer.blogspot.in/2015/11/blog-post_19.html
13 . பாவங்களின் பரிகாரம்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/13.html
14. அழுதபடியே தொழுத அண்ணல்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/14.html
15 இருளில் வந்த வெளிச்சம்: http://ikhwanameer.blogspot.in/2016/01/15.html
Share:

Friday, January 1, 2016

கருத்துப்படம் - பீஜிங்கில், காற்று மாசு எச்சரிக்கை!


சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இதுவரையிலும் வரலாறு காணாத அளவுக்கு காற்று மாசு அடைந்துள்ளது. இது சம்பந்தமாக ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக காற்று மாசு சம்பந்தமாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Share:

அண்ணல் நபியின் கன்னல் மொழி - 1, வணிகம் : 'சிறந்த சம்பாதியம் எதுவென்றால்...?'


"மோசடி செய்யாமலும், பொய்ப் பேசாமலும், உழைத்து ஒருவன் செய்யும் வணிகமே சிறந்த சம்பாதியமாகும்" - அண்ணல் நபி




Share:

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 15: இருளில் வந்த வெளிச்சம்..!


சில தலைவர்கள் பேசுவார்கள்! செயல்பட மாட்டார்கள். இன்னும் சிலரோ தத்துவங்களாய் சமைப்பார்கள்! அவை செயலுருவம் பெறாது.

ஆனால், இந்தத் தலைவரோ சொன்னார். சொன்னதை செய்தார். சொல்-செயல் இவற்றின் முன்மாதிரியாய் இருந்து அடுத்தவர் பின்பற்றிடவும் வழிவகுத்தார்.

தமக்குப் பின்னரும் ஓர் உன்னதமான சமூக அமைப்பு நிர்மாணத்துக்கான குழிகற்களாகவும் அவரது போதனைகள், கொள்கைகள் அமைந்தன.

வெறும் கற்பனை கதைகள் அல்ல அவை! நிஜங்கள் காலந்தோறும் .. வியப்பூட்டும் நிஜங்கள்..!

அந்த மாபெரும் தலைவர், உலக மக்கள் அனைவருக்கும் அருள் மழையாக வந்தவர்தான் நபிகள் நாயகம்!

இன்றையை 'அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடையில்..' உடல புல்லரிக்கச் செய்யும் ஒரு முன்மாதிரி இதோ!

  நள்ளிரவு உறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட மதீனா நகரம்.

சலசலக்கும் பேரீத்த மர ஓலைகளின் ஓசையைத் தவிர எங்கும் நிலவியது நிசப்தம்.

நெடிதுயர்ந்த உருவம் ஒன்று ஒவ்வொரு தெருவாய் நடந்து கொண்டிருந்தது. சற்றுத் தொலைவில் ஆளரவமற்ற பாலைவனத் திடலில் 'மினுக் மினுக்' கென்று விளக்கு எரிய அதை நோக்கி நடந்தது.

அங்கே ஒரு மனிதர் சோகத்துடன் அமர்ந்திருந்தார்.

விசாரித்ததில் கூடாரத்தில் பிரசவ வேதனையில் அவரது மனைவி துடிக்கும் விஷயம் தெரிந்தது. மருத்துவம் பார்க்க பணமுடை வேறு.

இதைக் கேள்விப்பட்டதும் தன் வீட்டுக்கு விரைந்தது அந்த உருவம். தனது மனைவியை உடனே தன்னுடன் கிளம்பும்படி பணித்தது.

"நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையே?"- மனைவி கேட்டார்.

"ஆமாம். அந்த உணவு இன்னொருவருக்குத் தேவைப்படுகிறது!"

"கொஞ்சம் பாலாவது சாப்பிடலாமே?"

"வேண்டாம்.. பிரசவ வேதனையிலிருக்கும் அந்தப் பெண்மணிக்கு அது தேவைப்படலாம். அவற்றை எடுத்துக் கொண்டு சீக்கிரம் கிளம்பு.. போகலாம்!"- என்றது அவ்வுருவம்.

சற்று நேரத்தில் அவர்கள் கூடாரத்தை அடைந்தார்கள்.

மனைவியை உள்ளே அனுப்பி வைத்த உருவம் கூடாரவாசியிடம் பேசிக் கொண்டிருந்தபோதே, கூடாரத்திலிருந்து.. "ஜனாதிபதி அவர்களே! உங்கள் நண்பருக்கு வாழ்த்துக் கூருங்கள். அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!" - என்று குரல் வந்தது.

ஜனாதிபதி என்ற சொல் கூடாரவாசியை நிலைகுலைய வைத்தது.

பதறியவாறு அவர், "இந்த நாட்டின் தலைவரான தாங்களா.. இப்படி..?" - என்றார்.

"இதில் வியப்படைய என்ன இருக்கிறது சகோதரரே? ஒரு நாட்டின் தலைவன் உண்மையில் மக்களின் தலையாய ஊழியனில்லையா?" - என்றார்கள் மாறு வேடத்தில் இருந்த ஜனாதிபதி உமர் (இறையருள் பொங்கட்டுமாக!) அவர்கள்.

பரந்து விரிந்த இஸ்லாமிய பேரரசின் தலைவர் ஒரு முதல்நிலை மக்கள் சேவகராக அங்கே விளங்குகிறார். அவரது துணைவியாரோ மகப்பேறு மருத்துவம் பார்க்கும் மருத்துவச்சியாக வரலாற்றில் பதிகிறார்.

இதே உமர் (இறையருள் பொழிவதாக!) அவர்களின் ஆட்சியைத்தான் இந்தியாவில் கனவு கண்டார் காந்தியடிகள்.


 - இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.

 

முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:

1. அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html
2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html
3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html
5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html 
6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html
7.ஓர் இறை.. ஓர் நிறை..  : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html
8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html
9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... : http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html
10. அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி : http://ikhwanameer.blogspot.in/2015/11/10.html
11. அவர்கள் எதிரிகள் குழந்தைகளாயினும்... : http://ikhwanameer.blogspot.in/2015/11/11.html 
12. குற்றம் குற்றமே!:  http://ikhwanameer.blogspot.in/2015/11/blog-post_19.html
13 . பாவங்களின் பரிகாரம்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/13.html
14. அழுதபடியே தொழுத அண்ணல்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/14.html
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive